யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/7/18

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தினால் இவ்வளவு சேமிக்கலாம்...!

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுர்வோர் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையிலும் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மேலும் மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்தும் மின்கட்டணத்தில் இருந்து 1% தள்ளுபடி வழங்க போவதாக அறிவித்துள்ளது. இதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஒப்புதல் அளித்ததும் சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரியவருகிறது. இந்த புதிய திட்டம் மூலம் மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்காக நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுழலும், ஊழியர்களின் பணிச் சுமையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வழியாக மின்கட்டணம் செலுத்துவதன் மூலம், மின்வாரிய அலுவலகங்களில், நுகர்வோர் நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

ஊழியர்களுக்கு பணிச்சுமை குறையும். ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக