யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/18

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?
அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு)  ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார். 
ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும். பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி  அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

குடைக்குள் சண்டை: பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!

பருவ மழைக்காலங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் இடர்பாடு மற்றும் விபத்துகளைத் தடுப்பது தொடர்பாக ஆய்வு அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாகப் பள்ளி கல்வித்துறை நேற்று (ஆகஸ்ட் 28) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் மிதிவண்டிகளில் வரும்போது சகதிகளில் சிக்கி வழுக்கி விழக்கூடிய அபாயம் மற்றும் குடை, மழைக் கோட்டு கொண்டு வருவது குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவ்வாறு குடையைக் கொண்டு வரும் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைத் தவிர்க்க ஆலோசனை கூறவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, மழையால் பாதிக்கப்படும் வகுப்பறையை மூடுவதுடன், மாணவர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழையால் பள்ளிச் சுற்றுச்சுவர் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து 20 அடி தொலைவுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி வளாகங்களில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள் மற்றும் நீர்தேக்கத் தொட்டிகளை மூடி பராமரிப்பதுடன், மாணவ, மாணவிகள் அருகில் செல்லாமல் பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் நீர் தேங்காதவண்ணம் அடிக்கடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் போது மாணவ, மாணவிகள் மழை மற்றும் கழிவுநீர்க் கால்வாய்கள் உள்ள இடங்களில் பாதுகாப்பாக கவனமாகச் செல்லவும் அறிவுரை வழங்க அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இடி, மின்னல் வரும்போது மரத்தின் கீழ் நிற்கக் கூடாது என அறிவுறுத்தவும் அதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பருவ கால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள், அவற்றுக்குக் காலதாமதமின்றி சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான
 கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

'பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! இந்த குரலைத் தெரியும்... ஆளைத் தெரியுமா?

ரயில்வே ஸ்டேஷன் போனதும் நம்மையுமறியாமல்
ஒரு குரல் நம்மை ஈர்த்துக்கொள்ளும்..
                                  


சரளா சவுத்ரி குரல்:
"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..." இந்த குரலை கேட்டதும் ஸ்பீக்கரை திரும்பி பார்க்காத நபர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த குரல் நமது அன்றாட வாழ்வில் கலந்து விட்ட ஒன்று. ரயில் நிலையத்தில் பணிப்புரிபவர்களிடம் கேட்டு பாருங்கள் இந்த குரல் தான் எங்களுக்கு தாலாட்டு என்பார்கள்.
அப்படியொரு மென்மை, கம்பீரம் இரண்டுமே இருக்கும் அந்த குரலில். வெறும் 30 வினாடிகள் மட்டுமே அந்த குரலை அவ்வளவு எளிதாக பயணிகள் மறந்து விடமாட்கள்.நாள் ஒன்றுக்கு ஆயிரம் முறை ஒலிக்கும் "இந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..?
சரளா சவுத்ரி. 53 வயதாகும் இவர் 1982-ல் சென்ட்ரல் ரயில்வேக்கு அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதெல்லாம் மேனுவல் தான். கம்ப்யூட்டர் கிடையாது. தற்செயலாய் இன்ஸ்பெக்சனுக்கு சென்றிருந்த ரயில்வே பொது மேலாளர் அட்ஸோத் பேனட்ஜி , இந்த குரலை கேட்டுவிட்டு உடனடியாக அதனை பதிவு செய்ய ஏற்பாடு செய்தார். மராத்தியில் ஒலிக்கு இவரது குரல் கணினி மூலம் எல்லா ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கடந்த 20 வருடங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆரம்பக காலத்தில் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து வந்த சரளா சவுத்ரி, மாருதி ட்ராபிக் தகவல்களை தினமும் காலையில் மக்களுக்கு அறிவிப்பார்.அதன் பின்பு தான், தனது தந்தையில் ஆசைப்படி ரயில்வே நிர்வாகத்தில் பணிப்புரிய தொடங்கினார்.
இவரின் குரலை பதிவு செய்த அன்று, அவருடன் பணிப்புரிந்த ஒட்டு மொத்த ஊழியர்களும் உன் குரலுக்கு நீ கண்டிபாக சுத்தி போட வேண்டும், கலாய்த்தார்களாம். சரளா தனது 49 ஆவது வயதில் சொந்த காரணங்களுக்காக ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு வேறு துறைக்கு சென்றுவிட்டார்.
ஆனால், அவரின் குரல் இன்னமும் ரயில்வேக்கு பணியாற்றிக்கொண்டு தான் இருக்கிறது.

01.09.2018 அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது!!!

புதிதாக பெயர் சேர்த்தல் (31.12.2000 மற்றும் அதற்கு 

முன் பிறந்திருக்க வேண்டும்). பெயர் நீக்கம்,திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த வாக்குச்சாவடியில்  நடைபெறவுள்ளது.
* காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெறும்
* பெயர் சேர்க்க - படிவம் 6
* பெயர் நீக்க - படிவம் 7
* வாக்காளர் அட்டையில் திருத்தம் - படிவம் 8
* முகவரி மாற்றம் - படிவம் 8A.

"கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ?

கிராஜூவிட்டி"என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் "பணிக்கொடை" பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? "கொடை"என்றால் அன்பளிப்பு என்று பொருள்.குறிப்பிட்ட காலம் பணிசெய்து ஓய்வு
பெறும்போது, இவ்வளவு காலம் அவர் பணி செய்ததற்காக அவருக்கு அளிக்கப்படும் அன்பளிப்பே "பணிக்கொடை" எனப்படுகிறது.இதை அளிப்பதற்காக அவர் பணி செய்யும் காலங்களில் இதற்கென்று எந்த ஒரு தொகையும் அவரிடம் பிடித்தம் செய்யப்படுவதில்லை.

இது முழுவதுமே நிர்வாகத்தால் வழங்கப்படும் "கொடை"தான்.

    பழங்காலத்தில் பணிக்கொடை என்பதெல்லாம் கிடையாது.சில தனியார் முதலாளிகள் தங்களிடம் ஓய்வு பெறும் ஊழியருக்கு இந்த மாதிரி ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கி அனுப்பும் வழக்கம் இருந்தது.

நாளாவட்டத்தில் இது எல்லா இடத்திலும் பரவி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு பணிக்கொடை கொடுத்தே ஆகவேண்டுமென்று சட்டமும் ஆகிவிட்டது.

 கிராஜூவிட்டி கணக்கிடும் முறையைப் பார்ப்போம்.

ஒரு ஆண்டு சர்வீஸூக்கு 15 நாட்கள் சம்பளம் கிராஜூவிட்டி என்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளாரோ அதற்குறிய தொகையை கிராஜிவிட்டியாக வழங்கவேண்டும்.

   உதாரணமாக ஒருவர் 25ஆண்டுகள் பணி செய்திருந்தால் அவருக்கு 25×15=375நாட்கள் சம்பளமும்
30ஆண்டுகள்பணி செய்திருந்தால்30×15=450நாட்கள் சம்பளமும் கிராஜூவிட்டியாக வழங்கப்படவேண்டும்.

   கிராஜூவிட்டியில் சீலிங் உண்டு.அதிகப்பட்சம் 2000000(இருபது லட்சம்)மட்டுமே வழங்கப்படும்.

  பனிஷ்மென்ட் இருந்தால் சர்வீஸ் ஆண்டுகள் குறைத்துக் கணக்கிடப்படும்.

உதாரணமாக 30ஆண்டுகள் பணி செய்தவருக்கு இரண்டாண்டு இன்க்ரிமென்ட் கட் ஆகி இருந்தால் 28ஆண்டுகள் மட்டுமே சர்வீஸ் என கணக்கிடப்படும்.

    கடைசியாக வாங்கிய பேசிக்கையும் DAவையும் கூட்டி அதை 26ஆல் வகுத்து வருவதுதான் ஒருநாள் சம்பளமாகும்.

    இப்பொழுது கடைசிமாத பேசிக் 40000ரூபாய் வாங்கிய 35ஆண்டுகள் சர்வீஸ் முடித்த பனிஷ்மென்ண்ட் ஏதும் இல்லாத ஒருவரின் கிராஜூவிட்டியைக் கணக்கிடுவோம்.(இப்போதைய DA 7%.)

  பேசிக்....................................40000
 DA7%(40000×7÷100)..............2800
மொத்தம்(40000+2800)........42800
26ஆல் வகுக்க=42800/26=1646ரூபாய்.

   இந்த1646தான் ஒருநாள் சம்பளம்.

15நாள் சம்பளம்=1646×15=24690ரூபாய்

35ஆண்டுசர்வீசுக்கு=24690×35=864150ரூபாய் கிராஜூவிட்டியாகக் கிடைக்கும்.

சுருக்கமாகச்சொன்னால்

(Basic+DA)÷26×15×சர்வீஸ் செய்தஆண்டுகள்.இதுவே கிராஜூவிட்டி ஆகும்

சிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தினம் ஒரு விளையாட்டு-31 "நகரும் சிலை" (30.08.2018) :



SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year


13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ராமதாஸ் அறிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன்30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில்200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களைத் திருத்திப் பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்களைப் பட்டியலிடும் போது, கூடுதலாக சில மதிப்பெண்களை சேர்த்துப் பதிவு செய்ததன் மூலம் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களுக்குப் பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில் உள்ளீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போட்டித்தேர்வுகளைப் பொறுத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை.ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது. ஆனால், அவ்வாறு செய்யப்படாததை எதேச்சையாக நடந்த, சாதாரண விஷயமாகக் கருதமுடியாது.
தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொறுத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதைய தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர்.
ஆனால், இவர்களைத் தாண்டிஇந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாக செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும். இது குற்றவாளிகளை ஊக்குவிக்கும்.அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும்அவசியமாகும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களை தமிழக அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகளின் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்பிய அவலம்: பொதுப்பணித்துறையில் சர்ச்சை:

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை அரசு கருவூத்திற்கு திருப்பி அனுப்பியிருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அனைவருக்கும் இடை நிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1289 உயர்நிலை பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு ேதவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை, சுற்றுச்சுவர் கட்டுதல், குடிநீர் வசதிஉள்ளிட்ட பணிகளை 1257 கோடி செலவில் ேமற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக, நிதி நபார்டு வங்கியின் கடனுதவியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், முதற்கட்டமாக 100 கோடி மதிப்பிலான பணிகளுக்கு மட்டுமே டெண்டர் விட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு சில பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அதே போன்று மற்ற 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடிப்படை வசதி கட்டமைப்பு டெண்டர் விட வேண்டிய நிலையில் இருந்தது.இதற்கிடையே ஜிஎஸ்டி காரணமாக மீண்டும் திட்ட அறிக்கை தயாரிப்பது மற்றும் ஏற்கனவே டெண்டர் விட்ட பணிகளுக்கு ஜிஎஸ்டியால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதால் பணிகள் நிறுத்தி வைப்பு, ஆளும் கட்சியின் வற்புறுத்தலின் பேரில் கான்ட்ராக்டர்கள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு காரணங்களால் 150 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.kaninikkalvi அந்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் மேற்கொள்ளாததால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் கோட்ட செயற்பொறியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அரசு ஒதுக்கீடு செய்த ₹150 கோடி நிதியை சரண்டர் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதாவது, நடப்பாணடில் நிதியை பயன்படுத்த தவறியதால், அந்த நிதியை அரசு கருவூலத்திற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. வரும் நிதியாண்டில் மீண்டும் திட்ட அறிக்கை தயார் செய்து இதற்கான நிதியை பெற இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது

வேலைவாய்ப்பு: பெசில் நிறுவனத்தில் பணி! Click Here To Download PDF Notification :

சென்னையில் உள்ள Broadcasting Engineering Consultants India Limited என்ற நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி: தரவுப் பதிவு அதிகாரி காலியிடங்கள்: 20 
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் நிமிடத்திற்குள் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன். 
சம்பளம்: ரூ.17,498 வயது: 21 - 30 
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14/9/2018
அனுப்ப வேண்டிய முகவரி: Assistant General Manager (HR) BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 மேலும் விவரங்களுக்கு 
 CLICK HERE TO VIEW&DOWNLOAD THE NOTIFICATION 

நெஞ்செரிச்சலுக்கு மருந்து!

நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக

இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகக் கார உணவு, துரித உணவை அடிக்கடி சாப்பிடுவது, காலை உணவைத் தவிர்ப்பது மற்றும் சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

இததகைய நெஞ்செரிச்சலில் இருந்து தப்பிக்க மருந்து மாத்திரை உபயோகிப்பதை தவிர்த்து இயற்கையாகவே எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

நெஞ்செரிச்சலை குணப்படுத்த

நெஞ்சு எரிச்சலின் போது ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனனில் ஆப்பிளில் கார்போஹைட்ரேட்கள் அதிகம் உள்ளதால் இது நெஞ்சு எரிச்சலை குணப்படுத்தும்.
நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால் துளசி இலை சாறை அருந்தினால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
சோம்பு ஜீரண சக்தி அதிக அளவு கொண்டது. நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் போட்டு சிறிது நேரம் மென்று தின்று வந்தால் உடனே சரியாகும்.
நன்கு அரைத்த பட்டையின் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று எரிச்சல் முற்றிலும் அடங்கும்.

மோர் மிகவும் குளிர்ச்சியானது என்பதால் மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.மேலும் கிராம்பு பொடியை நீரில் கலந்து குடித்தால், வாயு தொல்லை நீங்கும்.
நெஞ்சு எரிச்சல் ஏற்படும் பொழுது அதிக அளவு தண்ணீர் அருந்துவதின் மூலம் சரி செய்யலாம்.
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவை

வயிற்றில் அதிக அளவு உணவு இருக்கும் போது அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அதிக உணவு உண்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
அவசரம் அவசரமாக உணவை மென்று விழுங்கும் போது வயிற்றிற்கு வேலை அதிகமாவதால் அதுவும் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்குவது மிகவும் நல்லது.
சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.எனவே புகைபழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதிரடியாக விலை குறைக்கப்பட்ட விவோ மொபைல்கள்

இந்தியாவில் விவோ ஸ்மார்ட் போன்களின் விலைகள் அதிரிடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற பெரிய ஸ்மார்ட் போன்களுக்கு இணையாக விவோ நிறுவனத்தின் மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களான விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 ஆகியோ மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 27ம் தேதி முதல் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ரூ.22,990, ரூ.14,990 மற்றும் ரூ. 35,990 ஆக இருந்த விவோ வி9, விவோ ஒய்83 மற்றும் விவோ எக்ஸ்21 மாடல்களின் விலை தற்போது ரூ.18,990, ரூ. 13,990 மற்றும் ரூ.31,990 ஆக குறைந்துள்ளது.

எக்ஸ்சேஞ் ஆஃபரில் உங்களுக்கு இன்னும் குறைவான விலையிலும் கூட கிடைக்கும். பொதுவாக சொன்னால் இது செம்ம ஜாக்பாட்.

30/8/18

ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது



நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது


 இந்த நாளில், மத்திய அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு, மாநிலம் முழுவதும், 369 பேருக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது


இந்த விருதை பெற, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின், கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி நேரத்தில், 'கட்' அடித்து விட்டு, வகுப்பு நடத்தாதவர்கள்


பள்ளி கல்வி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் உள்ளிட்ட, பல்வேறு பிரிவினரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன


இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கானோரை தேர்வு செய்யும் இறுதிகட்ட பணியில், மாநில கமிட்டி ஈடுபட்டுள்ளது


பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் ஆலோசனைப்படி, திறமையான, மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஒழுக்கமாக திகழும் ஆசிரியர்களை மட்டுமே, விருதுக்கு தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது


தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக, அவர்களின் வீடு, பணியாற்றும் பள்ளி உள்ள பகுதி போலீசாரிடம், கட்டாயம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது


 மேலும், ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள், புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என்பதை, எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்


விசாரணை நடத்தப்படாத ஆசிரியர்களின் பெயர், விருது பட்டியலில் இருக்கக் கூடாது என, விருது தேர்வு கமிட்டிக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்

57 ஆயிரம் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை - செங்கோட்டையன்

தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளின் விருப்பத்தை பொறுத்து இன்சூரன்ஸ் :

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி இறப்பவர்களுக்கும், படுகாயமடைபவர்களுக்கும் உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இதற்காக ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ரூ.1 மட்டும் காப்பீடு தொகையாக வசூலித்து வருகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் இ-டிக்கெட்டுகளுக்கு மட்டும் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்வே கவுண்ட்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு கட்டண திட்டம் நடைமுறையில் இல்லை.

இந்தநிலையில் வருகிற 1-ந்தேதி முதல் இணையதளம் மூலம் இ-டிக்கெட்டுகள் பெறுபவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் பேரிலேயே காப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்காக காப்பீடு வேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு பகுதி இடம்பெற்றிருக்கும். அதில் பயணிகள் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

காப்பீடு செய்தவர்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் இறக்க நேரிட்டால் ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தால் ரூ.7.50 லட்சமும் இழப்பீடு தொகையாக வழங்கப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியாளர்கள் சங்கமம் நடத்தும் கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும் நிகழ்ச்சி அழைப்பு!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல்:
கல்வியாளர்கள் சங்கம ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் பேட்டி.

புதுக்கோட்டை,ஆக.29:  தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வ மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஆசிரியர்களை ஒன்று திரட்டி *கனவு ஆசிரியர்களும் கலாம் மாணவர்களும்* என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 1 அன்று காரைக்குடியில் மாநிலம் தழுவிய ஆசிரியர்களின் கூடல் நிகழ்வானது நடைபெற உள்ளது.
இது குறித்து கல்வியாளர் சங்கம மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தங்களுடைய தன்னார்வமிக்க பணிகளால் பள்ளிகளையும், மாணவர்களையும் ,
பள்ளிகளுடன் சேர்த்து சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள் வெளியில் தெரியாத விண்மீன்கள்போல எண்ணற்ற ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் சங்கமிக்க செய்து அவர்களுடைய அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை கல்வியாளர்கள் சங்கமம்  தொடர்ந்து ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது..
அந்த வகையில் எதிர்வரும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 1 அன்று காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர்களின் சங்கமத்தினை ஏற்பாடு செய்துள்ளது..
இதில் ஆசிரியர்களுடன் மாணவர்களும் இணைந்து சிறப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வருமானவரித்துறை கூடுதல்  ஆணையர் V. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் அவர்களும்,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
பொ. பொன்னையா அவர்களும்,தமிழ்நாடு மைக்ரோசாப்ட் நிறுவன மேலாளர்  ஆர்.ஹரிஹரன் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்..
இந்நிகழ்வில் ஆளுமைத்திறன் மிக்க ஆசிரியர்களது கலந்துரையாடலும்,  தனித்திறன் மிக்க மாணவர்களது பங்கேற்பும் அரங்கேற உள்ளது..
அத்துடன் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி, இலக்குகளை தீரமானிப்பது எப்படி, திட்டமிட்டு அவற்றை அடைவது எப்படி  என்பது சார்ந்த வழிகாட்டல் கருத்தாடல்களும்,
ஆசிரியர்கள் குழுவாக இணைந்து செயல்படுவது எப்படி, தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்துவது, தன்னார்வலர்களை எவ்வாறு பள்ளியின் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்வது என்பது குறித்த கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து தன்னார்வமிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் என கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
ஆசிரியர்கள் அனைவரும் இலவசமாக
பங்கேற்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்வியாளர் சங்கம மாநில அமைப்பும் காரைக்குடி ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
மேலும்  இது போன்ற நிகழ்வுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதோடு,ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மையோடு ஒன்று சேர்ந்து நிற்கும் இது போன்ற நிகழ்வுகள் கல்வித்துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்றார்..

அரசுத்துறைகளில் கறுப்பு ஆடுகள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்,' என அதிருப்தியை வெளிப்படுத்திய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'துாத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்டவிரோதமாக ஒப்படைக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடி சண்முகராஜ் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணி தேர்வுக்கு அழைப்பு கடிதம் வந்தது. 2013 நவ.,7 ல் நேர்காணல் தேர்வில் பங்கேற்றேன். பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் என்னை பணியில் சேர அனுமதிக்கவில்லை. துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். 
இவ்வாறு சண்முகராஜ் மனு செய்தார்.நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.துாத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கமிஷனர்,'மனுதாரரை 2013 நவ.,7 ல் டிரைவர் பணிக்கு தேர்வு செய்தோம். அன்று நியமன உத்தரவு தயாரிக்கும்போதுதான், பணிக்குரிய குறிப்பிட்ட வயது வரம்பை மனுதாரர் கடந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் அவரது நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆனால், 2013 நவ.,7 ல் தேர்வு செய்யப்பட்ட உத்தரவு நகலை எங்கள் அலுவலக கோப்புகளிலிருந்து மனுதாரர் சட்டவிரோதமாக பெற்றுள்ளார்,'என பதில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி: அரசுத்துறையின் ஒவ்வொரு அலுவலகத்திலும் சில கறுப்பு ஆடுகள் உள்ளன. அரசாணைகள் மற்றும் இதர நகல்களை பிறருக்கு வழங்குவதே அவர்களின் முக்கிய வேலை என்பதற்கு இவ்வழக்கு சரியான முன்னுதாரணம்.பணி நியமன உத்தரவு நகல் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படாதபட்சத்தில், தன்னிடம் உள்ள நியமன உத்தரவு நகல் அடிப்படையில் மனுதாரர் பணி உரிமை கோர முடியாது. பயணிகளை பாதுகாப்பாக அழைத்துவரும் முக்கியத்துவம் வாய்ந்தது டிரைவர் பணி. மனுதாரரை தேர்வுக்கு அழைத்தது, அவர் நேர்காணலில் பங்கேற்றது உண்மை. 
தேர்வு முடிந்து, பணி நியமன உத்தரவு தயாரிக்கும் போதுதான் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மனுதாரர் வயது வரம்பை கடந்துவிட்டார் என கண்டறிந்துள்ளனர்.
பணிக்குரிய தகுதியை இழந்ததால், மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. ஆனால், சில தவறான நபர்கள் மூலம் பணி நியமன உத்தரவு நகலை மனுதாரர் கைப்பற்றியுள்ளார்.இதுபோல் அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரசு ஆவணத்தை ஒப்படைப்பது சமூகத்திற்கு ஆபத்து. சம்பவத்தின் போது நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் யார்? பணி நியமன உத்தரவு நகலை மனுதாரரிடம் சட்ட விரோதமாக ஒப்படைக்கக் காரணமானவர்கள் யார்? என்பதை கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கமிஷனர் விசாரிக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

M.Ed படிப்பு - செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி
 வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், எம்.எட்., படிப்பிற்கு மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் வாயிலாக பதிவு நடந்து வருகிறது.
இந்த பதிவு, கடந்த வாரம் முடிவதாக இருந்தது. ஆனால், பல்வேறு விடுமுறை, மழை வெள்ள பாதிப்பு போன்றவற்றால், வரும், 3ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை :

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் 
தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
 பிறந்த தேதி, தவறாக, இருந்தால், பணி நீக்கம்
மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு திட்டங் கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்த தேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஆதாரம்
இந்த விஷயத்தில், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை ஆதாரமாகபயன்படுத்தி,
பிறந்த தேதி நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியை திருத்தம் செய்வதற்கு, புதிய கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழக அரசின்தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜி., கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தாவது:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக, திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக, சம்பந்தப்பட்டவர்களின், 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்யவேண்டும்.
பள்ளி சான்றிதழ்
பத்தாம் வகுப்பு முடிக்க, 1977 வரை, 15 வயதும்; 1978 முதல், 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும். வயது மாற்றமாக இருந்தால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இறுதி விசாரணைக்கு பின், வயதில் தவறு இருந்தால், பணி நீக்கம் செய்வதுடன், அவருக் கான அரசு பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பாரத ஸ்டேட் வங்கி : 1295 கிளைகளின் IFSC கோடு எண்கள் மாற்றம்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி
தனது 1295 கிளைகளின் IFSC கோடு எண்களை மாற்றி உள்ளது.

வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக ஒவ்வொரு வங்கியின் கிளைகளுக்கும் அடையாள எண்ணான ஐ எஃப் எஸ் சி கோட் எண் கொடுக்கப்படுகிறது. முக்கியமாக இணைய தள பரிவர்த்தனைகள் இதன் மூலமே நடைபெறுகின்றன. நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகள் கடந்த வருடம் இணைக்கப்பட்டன. அத்துடன் பாரத பெண்கள் வங்கியும் இணைக்கப்பட்டதால் நாட்டின் மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளது.


அதை ஒட்டி தற்போது 1295 கிளைகளின் அடையாள எண்ணை பாரத ஸ்டேட் வங்கி மாற்றி உள்ளது. இந்த மாறுதல் குறித்த அறிவிப்பு வங்கியின் இணய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அந்த இணைய தளத்தினுள் சென்று தங்கள் வங்கியின் கிளையின் பெயரை பதிந்தால் புதிய எண்கள் தெரியவரும் என வங்கி அறிவித்துள்ளது.

10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பதை இனிமேல் ஒவ்வொரு வருடமும் விலைவாசி உயர்வு அடிப்படையில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு?

TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத பி.எட் கணினி அறிவியல் பட்டதரிகளுக்கு அனுமதி கோரிக்கை மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது..

இனி TN SCHOOL ATTENDANCE APP மூலம் வருகை பதிவு - தலைமை ஆசிரியர்கள் App Download செய்ய உத்தரவு - CEO செயல்முறைகள் (27.08.2018)

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதில், ஆங்கில வழி மாணவர்களுக்கே, அதிக உதவித்தொகை கிடைத்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்களும், தமிழ் வழி மாணவர்களும் பின்தங்கினர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆர்வமும், படிப்பின் மீது குறைந்தது.இதை மாற்றும் வகையில், தமிழ் வழியில் படித்து, நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழ் வழியில் படித்து, முன்னிலை இடம் பெற்ற திறமையான மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், தலா, 15 மாணவர்கள் என, ஒவ்வொரு மாவட்டத்திலும், 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு, காமராஜர் பெயரில் விருது மற்றும் சான்றிதழ்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; பிளஸ் 2வுக்கு, 20 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி நடக்கும் ஆசிரியர் தின விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு 1,550 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் 1,550 இடங்கள் கூடுதலாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 11 தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1,450 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டுக்கு 881 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 569 இடங்களும் அடங்கும். இதனிடையே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் வழங்க கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இதனிடையே மதுரையைச் சேர்ந்த சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கும், கோவையை சேர்ந்த கோவை மெடிக்கல் சென்டருக்கும் தடையில்லாச் சான்று வழங்கப்பட்டுள்ளது. இரு சுயநிதிக் கல்லூரிகளிலும் தலா 150 இடங்கள் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோன்று பனிமலர் மருத்துவக் கல்லூரிக்கும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கும் தலா 150 இடங்களை அதிகரிக்க மருத்துவ கல்வி இயக்குனரகம் பரிந்துரை செய்துள்ளது. இதுதவிர மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாணவர்களுக்காக மட்டுமில்லாமல், ஊராட்சிக்கும் நல்லதை செய்த நல்லாசிரியை!

இந்தாண்டு தமிழகத்திலிருந்து நல்லாசியர் விருதை கோவை, மலுமிச்சம்பட்டி தொடக்கப்பள்ளை தலைமை ஆசிரியை ஆர் ஸதி பெறுகிறார்.

கடந்தாண்டு தமிழகம் சார்பாக 22 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்தாண்டு மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருது எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பாக 6 ஆசிரியர்கள் மட்டும் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் ஆசிரியை ஆர் ஸதிக்கு விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆர் ஸதி கூறியதாவது:
23 ஆண்டுகளாக வாரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். கடந்த 2009ல் பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றேன்.
நான் பணியில் சேர்ந்த போது 146 மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு வீடு வீடாக சென்று பெற்றோர்களிடம் பேசினேன். அரசு வழங்கும் உதவிகள், சலுகைகள் குறித்தும், படிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசி மாணவர்களை சேர்க்கைக்கு முயற்சித்தேன். தற்போது 270 மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்கள் பாடத்தை நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் டேப்லெட் முறையில் பாடத்தை நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியை செயல்படுத்தி வருகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்தவெளி மலம்கழிப்பிடமற்ற ஊராட்சி’ ஆக மாற்ற மாணவர்கள் பெரும் பங்காற்றினர். இதற்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் எனக்கும், மாணவர்களுக்கும் விருது வழங்கி பாராட்டினார்.
2016ம் ஆண்டு கோவையில் சிறந்த பள்ளியாக ஆட்சியர் விருது பெற்றேன். 2017ல் , தமிழகத்தில் சிறந்த பள்ளி என டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அளிக்கப்பட்டது என நெகிழ்ச்சியாக ஆசிரியை ஆர் ஸதி தெரிவித்துள்ளார்.

பயனர்களுக்கு வாட்ஸ் அப்(WhatsApp) விடுத்த எச்சரிக்கை!

பயனர்களுக்கு வாட்ஸ் அப் விடுத்த எச்சரிக்கை! வாட்ஸ் செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளின் பாதுகாப்பு குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனர்களுக்குப் புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களின் முக்கிய அம்சங்களுள் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனம், அடிக்கடி தனது புதிய அப்டேட்களை வெளியிட்டுப் பயனர்களைக் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் பயனர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற கூகுள் க்ளவுடில் சேமித்து வைக்கப்படும் பேக்கப்களுக்கு, ஸ்டோரேஜ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று வாட்ஸ் அப் புதிய அறிவிப்பு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வாட்ஸ் அப் அதில் உள்ள சிக்கலையும் வெளியிட்டுள்ளது.
இந்தச் சேவை குறித்து தற்போது வாட்ஸ் அப் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் வாட்ஸ் அப்பின் மீடியா மற்றும் மெசேஜ்கள், இனி end-to-end encryption செய்யப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளது. அதாவது கூகுள் டிரைவில் சேமித்து வைக்கப்படும் எந்தவொரு பதிவுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்பதே இதன் பொருளாகும். வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்பின் இந்த அறிவிப்பு குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சாய் கிருஷ்ணா கொத்தப்பள்ளி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "வாட்ஸ் அப்பின் மெசேஜ்களை கூகுள் டிரைவில் சேமித்து வைப்பது என்பது பயனர்களாகிய உங்களுடைய விருப்பம்தான். வாட்ஸ் அப் இதனைக் கட்டாயப்படுத்தவில்லை. இது ஒரு புதிய அம்சம் அவ்வளவுதான். கூகுள் நிறுவனத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதனை நீங்கள் பயன்படுத்தலாம். தேவையில்லை என்று விரும்பினால் அதனைத் தவிர்த்து விடலாம்" என்று தெரிவித்துள்ளார்.
End-To-End Encryption என்றால் என்ன?
வாட்ஸ் அப்பில் பயனர்கள் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்களும் End-To-End Encryption செய்யப்பட்டே அனுப்புநருக்கு அனுப்பப்படும். அதாவது நாம் அனுப்பும் மெசேஜ்கள் அனைத்தும் ஒரு சிப் வடிவிற்கு மாற்றப்பட்டு லாக் செய்யப்பட்டு போனிலிருந்து நம் சர்வருக்கு அனுப்பப்படும். பின்னர் லாக் செய்யப்பட்ட அந்த சிப்பானது, பெறுநரின் சர்வரை அடைந்து, அவர்களின் போனைச் சென்றடையும் வரை யாராலும் அந்த மெசேஜை படிக்கவோ, மாற்றம் செய்யவோ முடியாது. இதுவே End-To-End Encryption வசதியின் முக்கிய சிறப்பம்சமாகும். இந்த விதிமுறை வாட்ஸ் அப் நிறுவனத்துக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது

29/8/18

பயமில்லா கற்றல்' சுவரொட்டிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வெளியிட்டார் :

அரசு பள்ளிகளை தத்தெடுக்க, பலர் ஆர்வமாக முன்வந்துள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.மாணவர்கள், தயக்கமில்லாமல், தடுமாறாமல், பாலியல் வன்முறைகளுக்கு இடம் தராமல், கல்வி கற்பது தொடர்பாக, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பயமில்லா கற்றல்' என்ற பெயரில், சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.

தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை :

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
இணையதளம் : இதைப் பெற, மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, நவம்பர், 4ல் நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.இந்த தேர்வுக்கு, அரசு தேர்வுத் துறையின், www.dge.tn.gov.in, என்ற இணையதளம் வழியாக, ஆக., 23 முதல் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது; செப்., 5 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 50 ரூபாய். மாணவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக, விண்ணப்பிக்க வேண்டும்.இந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்த தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
குற்றச்சாட்டு : நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், இந்த தேர்வு பற்றிய தகவல்களை, ஆசிரியர்கள் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தின் வாயிலாக, இதை தெரியப்படுத்தி, அனைத்து மாணவர்களும், திறனாய்வு தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

38 படிப்புகளுக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் : TNOU துணைவேந்தர் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்வியில், 38 படிப்புகளை நடத்துவதற்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அங்கீகாரம் அளித்துள்ளதாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்து உள்ளது. 


இதுதொடர்பாக, பல்கலையின் துணை வேந்தர், எம்.பாஸ்கரன் நேற்று அளித்த பேட்டி:அடிப்படை பள்ளி கல்வியை முடிக்காதவர்கள், உயர் கல்வியை பெறாதவர்கள், இந்த பல்கலை வழியாக, உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு தரப்படுகிறது.இதற்கு, மத்திய அரசின், யு.ஜி.சி., சார்பில், உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த கல்வி ஆண்டில், யு.ஜி.சி., அனுமதியுடன், 83 படிப்புகள் நடத்தப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் என, 38 படிப்புகளுக்கு, அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.இதற்கான கடிதம், 14ல், யு.ஜி.சி.,யிடம் இருந்து, பல்கலைக்கு கிடைத்துள்ளது.மேலும், மத்திய மனித வள அமைச்சக அனுமதியுடன், 'ஆன்லைனில்' சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், பி.எட்., என்ற, ஆசிரியர் கல்வியியல் படிப்பும் நடத்தப்படுகிறது.நடப்பு ஆண்டில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தில் அனுமதி கேட்டு, விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியை நடத்தும் பல்கலைகளில், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை தான், அதிகளவிலான படிப்புகளுக்கு, யு.ஜி.சி.,யிடம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை தவிர, 'டிப்ளமா' மற்றும் சான்றிதழ் படிப்புகளையும், தொழில்சார் படிப்புகளையும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை நடத்துகிறது. இதற்கான அங்கீகாரத்தை, உரிய அமைப்புகளிடம் இருந்து பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும், அனைத்து பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியில், ஒரே வகையான பாடத்திட்டம், அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, பொது பாடத்திட்ட தயாரிப்பு பணி, தமிழக அரசிடம் இருந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையிடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பல்கலையில், இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து, பட்டம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சம் பேர் படித்து வருகின்றனர்.எந்த பல்கலையில் வேண்டுமானாலும், மாணவர்கள் சேரலாம். ஆனால், அந்த பல்கலை நடத்தும் படிப்புக்கு, உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதை, ஆய்வு செய்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் சார்பில் 960 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மற்றும், சி.ஏ., தேர்வுக்கு பயிற்சி வழங்குவது, அடுத்த மாதம் துவங்கஉள்ளது. இதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில், இந்த வகுப்பறைகள் திறக்கப்படும்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, செப்., 5ல், தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பள்ளிகளில் சிறப்பாக பணி புரிந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அதேபோல, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2வில், தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெற்ற, 960 மாணவர்களுக்கு, அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை :

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும்
ஊக்கத் தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.


அமைச்சர் செங்கோட்டையன்

வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகளுக்கு ஐக்யூ திறன் அதிகமாகும்.!!!!

பிறந்த நாட்டைவிட்டு வேறுநாடுகளில் வாழ்பவர்கள்,
குழந்தைகளுக்கு தங்களின் தாய்மொழியைக் கற்றுக்கொடுத்து வளர்த்தால் அவர்களின் ஐக்யூ திறன் அதிகமாகும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் ரீடிங் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், 7முதல் 11 வயது வரையான 100 துருக்கி நாட்டுக் குழந்தைகளை ஆராய்ச்சிக்காக தேர்ந்தெடுத்தனர்.


பள்ளியில் ஆங்கிலமும், வீட்டில் துருக்கி மொழி பேசிய குழந்தைகளுக்கும், வீடு பள்ளியென இரண்டு இடங்களிலும் ஆங்கிலம் மட்டும் பேசும் குழந்தைகளுக்கு இடையே ஐக்யூ திறன் குறித்து சோதனை செய்யப்பட்டது.
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டார்கள்.எந்தவொரு இக்கட்டான சூழலிலும் புத்திசாலித்தனமாக செயல்படுவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.
குழந்தைகள் இளம் வயதிலேயே மொழியைக் கற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமங்களைப் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளால் வேறு மொழிகளில் எளிதாகவும், அர்த்தமுள்ள உரையாடல்களை அவர்களால் மேற்கொள்ளவும் முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வீட்டில் தாய்மொழி பேசும் குழந்தைகள், ஒரு மொழியின் அடிப்படை கட்டமைப்பை தன் தாய்மொழியின் மூலம் கற்றுக்கொள்வதால் பிற மொழிகளைப் படிப்பது எளிமையாகிவிடுகிறது. முதல் முறை படிக்கும்போது பிற மொழிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு மொழி குறித்த குழப்பங்கள் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்று ஆய்வு கூறுகிறது.
பள்ளி கற்றுக்கொடுக்காத மொழியை பெற்றோர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு மொழியை முறையான புத்தக வாசிப்பின் மூலம் கற்றுக்கொடுத்தால் அறிவுத்திறன் அதிகரிக்கும் என்பதை ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.

5G இந்தியாவில் சாத்தியமா? இந்தியா முன் இருக்கும் சவால்கள்! இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்தியாவில் 5G

அறிமுகமாகிவிடும் எனச் சொல்கிறது அரசு; அது சாத்தியமானால் 2022-க்குள் நம் எல்லோர் கையிலும் 5G இருப்பது நிச்சயம். தற்போது இருப்பதை விடவும் அதிவேக இணையம், கிராமப்புறங்களில்கூட தரமான வாய்ஸ் குவாலிட்டி, மெஷின் டு மெஷின் இடையேயான அதிவேகத் தகவல் பரிமாற்றம் என நம் தகவல்தொடர்பு முறையை நிச்சயம் 5G அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாக 5G-யைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவது அவ்வளவு சுலபமில்லை. அரசுக்கும், டெலிகாம் நிறுவனங்களுக்கும் இடையேயே தற்போது நிறைய முட்டல் மோதல்கள் நடந்துவருகின்றன; தற்போதைய 4G சந்தையிலேயே இன்னும் கடும்போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கையில் எப்படி 2020-க்குள் 5G-யை கொண்டுவரப்போகிறது மத்திய அரசு? தற்போது தொலைத்தொடர்புத் துறையில் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன?
தரநிர்ணயம்
2G, 3G,4G என எதுவாக இருந்தாலும் அவை எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சர்வதேச அமைப்புகள்தான் முடிவுசெய்யும். அப்படி 5G-க்கான தரத்தை 3GPP எனும் அமைப்பே நிர்ணயம் செய்யும். அதன்பிறகே தொழில்நுட்ப நிறுவனங்கள் அதனைப் பின்பற்றும். தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் 4G-யின் தரநிர்ணயமானது 2008-ம் ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. பின்னர் முதன்முதலாக ஸ்வீடனில் 4G அறிமுகமானது; அதன்பின்பு 2012-ல் 4G இந்தியாவிற்கு வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நாம் காணும் 4G-யின் வளர்ச்சி இப்படித்தான் தொடங்கியது. இதேபோலத்தான் 5G-யும் இந்தியாவுக்கு வரும்.
5G-க்கான முதல்கட்ட தர்நிர்ணயமானது இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் இறுதிசெய்யப்பட்டு வெளியானது. இனி இந்த தரத்தில் செயல்படவேண்டிய கருவிகளை உற்பத்தி செய்யவேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு. இதுதவிர இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னொரு கடமையும் உண்டு. அது, இந்தியாவிற்கேற்றபடி 5G நெட்வொர்க்கை அமைப்பது; உதாரணமாக, கிராமப்புறங்களில் குறைவான நபர்களே இருப்பார்கள்; எனவே அவர்களுக்காகக் குறைவான டவர்களே வைப்பார்கள். இதனால் அங்கே கால் குவாலிட்டியில் தரம் குறைவாக இருக்கும். இதுதான் தற்போதைய நிலை. ஆனால், 5G நெட்வொர்க்கில் இது இருக்கக்கூடாது என்பதும் ஒரு விதி. இதனை இந்திய விஞ்ஞானிகள் 3GPP-யிடம் பரிந்துரைத்து, அதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியாவில் 5G நெட்வொர்க்கை அமைக்கும் நிறுவனங்கள், கிராமப்புறங்களிலும் தரமான சேவை கிடைக்க வழிவகை செய்யவேண்டும். இந்த விதிக்கு டெக்னிக்கலாக Low Mobility High Coverage எனப்பெயர். இப்படி 5G தரத்திற்கான தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கவேண்டியது முதல் சவால்.
5G அலைக்கற்றைகள்
மற்ற விஷயங்களை விடவும் அரசின் பங்கு அதிகம் இருப்பது இந்த அலைக்கற்றை விஷயத்தில்தான். 5G நெட்வொர்க்கிற்கான பணிகளை டெலிகாம் நிறுவனங்கள் தொடங்க வேண்டுமென்றால், முதல் பணியே அலைக்கற்றைகளுக்கான உரிமம் பெறுவதுதான். ஆனால், இந்த விஷயத்தில் டெலிகாம் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே வர்த்தக ரீதியிலான சிக்கல்கள் எழுந்துள்ளன. இரண்டு வருடமாக ஜியோவானது டெலிகாம் துறையில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, பிறடெலிகாம் நிறுவனங்களின் வருவாய் பலத்த அடி வாங்கியுள்ளது. 4G சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக இன்னும் அதிகளவில் முதலீடு செய்தும் வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 5G-க்கான முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்பது டெலிகாம் நிறுவனங்களுக்குச் சவாலான காரியம். எனவே 5G அலைக்கற்றைகளின் விலை ஓரளவுக்கேனும் கட்டுபடியாகும் அளவில் இருந்தால்தான் அவர்களும் லாபமீட்ட முடியும். ஆனால், தற்போது அரசு நிர்ணயித்துள்ள அலைக்கற்றை கட்டணம் மிகவும் அதிகம் எனக் குற்றம் சாட்டுகின்றன இந்நிறுவனங்கள். சீனாவில் 5G அலைக்கற்றைகளுக்கான கட்டணத்தோடு ஒப்பிட்டால் இங்கே 10 மடங்கு அதிகம் என்கின்றனர் அவர்கள்.
அலைக்கற்றையை அதிக விலை வைத்து விற்பதன்மூலம், அரசு நல்ல வருவாய் பார்க்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால், டெலிகாம் துறையில் அசாதரணமான சூழ்நிலை நிலவும் இந்தச் சமயத்தில் அரசுதான் நிச்சயம் கைகொடுக்கவேண்டும் என்று டெலிகாம் துறை. இந்த விஷயத்தில் அரசு எவ்வளவு விரைவில் முடிவெடுக்கிறதோ, அதைப் பொறுத்தே 5G-க்கான பணிகளும் வேகமெடுக்கும்.

தொழில்நுட்பம்
தற்போது நாம் பயன்படுத்தும் 4G-யை விடவும், 5G 100 மடங்கு வேகம் அதிகமாக இருக்கும். இப்போது இருக்கும் 4G-யே போதுமான அளவு வேகமாக இருக்கும்போது, நமக்கு எதற்கு 5G எனத் தோன்றலாம். ஆனால், இவ்வளவு வேகம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு தேவைப்படும் என்பதுதான் டெலிகாம் கணக்கு. தற்போது இருக்கும் 4G வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அதன் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்படும். அதுவும் இந்தியா போன்ற மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது நிச்சயம் நடக்கும் என்கின்றனர் நிபுணர்கள்; மேலும், எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தப்போகும் விர்ச்சுவல் ரியாலிட்டி, மெஷின் டு மெஷின் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்திற்கும் அதிவேக இணையம் நிச்சயம் அவசியம்; கேட்ஜெட்களின் எண்ணிக்கையும், வாடிக்கையாளர்களின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும். இவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு ஒரேவழி 5G-தான். தற்போது இருக்கும் 4G-யானது 20 MHz அலைக்கற்றைக்குள் இயங்குபவை. ஆனால், 5G-யானது 100 MHz வரை இயங்கக்கூடியவை. 4G-யை விடவும் 5 மடங்கு இவை திறன்மிகுந்தவை. எனவே, அவற்றால் மட்டுமே நம் எதிர்கால இணையத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியும்.
இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை நாடு முழுவதிலும் ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் நம்மால் முழுமையான 5G அனுபவத்தைப் பெறமுடியும். இதற்கான சாத்தியங்கள், முதலீடு என இதிலும் சவால்கள் இருக்கின்றன.
மொபைல் போன்கள்
புதிதாக 5G நெட்வொர்க் இருந்தால் மட்டும் போதுமா? அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் மொபைல் போன்கள் வேண்டாமா? அதுதான் அடுத்த சவால். இன்று இருக்கும் 4G போன்கள் எதுவுமே 5G-யை சப்போர்ட் செய்யாது. 4G வந்தபோது 3G-யின் நிலையும் இப்படித்தான் இருந்தது. ஆனால், 4G-க்கு நடந்த ஒரே நல்லவிஷயம், 2012-18-க்கு இடைப்பட்ட காலத்தில் அதிவேகமாக வளர்ந்த மொபைல் சந்தை. பட்ஜெட் மொபைல்களே இந்தியாவில் 4G வசதியோடு வர, மிக எளிதாக 4G-யின் பயன்பாடு அதிகரித்தது. இதே அதிர்ஷ்டம் 5G-க்கும் இருக்கும் எனச் சொல்லமுடியாது. ஹூவாவே, நோக்கியா, சாம்சங், ஆப்பிள் உள்பட இப்போதே பல மொபைல் போன் உற்பத்தியாளர்களும் 5G-க்கு ஏற்ப தயாராகி வருகின்றனர். இந்த வேகம் இன்னும் அதிகரிக்க வேண்டுமென்றால், மொபைலின் எலெக்ட்ரானிக் பாகங்களை உற்பத்தி செய்யும் எல்லா நிறுவனங்களுமே முனைப்பு காட்டவேண்டும். சமீபத்தில்தான் மொபைல் சிப் நிறுவனமான குவால்காம் 5G-க்கான சிப்பை வெளியிட்டது. இதேபோல பிறநிறுவனங்களும் அப்டேட் ஆகவேண்டும். அப்போதுதான் 5G சந்தை சீராக வளர்ச்சியடையும். இல்லையெனில் டெலிகாம் நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் தள்ளாடவே செய்யும்.

வாடிக்கையாளர்கள்
டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்வதால் நிச்சயம் 5G தொடக்கத்தில் விலை அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ற மொபைல்களும் உடனே தயாராகிவிடாது; எனவே ஜியோ வருவதற்கு முன்புவரைக்கும், 4G எப்படி எலைட்டான சர்வீஸாக மட்டுமே பார்க்கப்பட்டதோ, அதேபோலத்தான் 5G-யும் பார்க்கப்படும். ஜியோ போல 5G-க்காக புதிய டிஸ்ரப்டர் வரவும் வாய்ப்பில்லை. ஈனவே, இந்தப் பிரச்னையை தற்போது களத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் எப்படி கையாளப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதுதவிர டெலிகாம் நிறுவனங்களுக்கு 5G மூலம் இன்னொரு நன்மையையும் உண்டு . அது வெவ்வேறு துறைசார்ந்த வாடிக்கையாளர்கள். 4G-யைப் பொறுத்தவரை தனிநபர்கள் மட்டும்தான் முதன்மை வாடிக்கையாளர்கள். ஆனால், 5G அப்படியல்ல; மருத்துவம், விவசாயம், உற்பத்தி தொழிற்சாலைகள் என இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் 5G-யின் தேவை இருக்கும். இது டெலிகாம் நிறுவனங்களுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.இப்படி நிறைய பிரச்னைகளும், நன்மைகளும் கலந்துதான் நமக்கான 5G உருவாகிக்கொண்டிருக்கிறது. எல்லா தொழில்நுட்பங்களும் இப்படியொரு காலகட்டத்தைக் கடந்து வந்துதான், இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. 5G-க்கும் அது பொருந்தும்!

28/8/18

பின் புறம் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்: விற்பனை 20 சதவீதம் அதிகரிப்பு

இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், சென்னையில் தலைக்கவசம் (ஹெல்மெட்) விற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
 இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
 இதையடுத்து இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள் மீது போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.
 இந்த நடவடிக்கையின் விளைவாக, இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணியத் தொடங்கியிருக்கின்றனர். இதில் தலைக்கவசம் இல்லாதவர்கள், கடைகளை தேடிச் சென்று தலைக்கவசம் வாங்கி வருகின்றனர். இதனால் தலைக்கவசம் விற்பனை விறு,விறுப்பு அடைந்துள்ளது.
 சென்னையில் உள்நாட்டு தயாரிப்பு தலைக்கவசங்களை தவிர்த்து, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தலைக்கவசங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
 விலை ரூ.600 முதல் ரூ.20,000: சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள கடைகளில் சாதாரண தலைக்கவசம் முதல் அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.100 வகையான தலைக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ரூ.600 முதல் ரூ. 20,000 விற்கப்படுகிறது. தலைக்கவசங்களின் விலைக்கு ஏற்றார்போல, அதில் நவீன வசதிகளும், அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளன. அதேவேளையில் ஆர்டரின்பேரில் பல அதிநவீன வசதிகளுடன் கூடிய தலைக்கவசங்கள் செய்தும் கொடுக்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தலைக்கவசம் விற்பûயாளர் ஃபைசுதீன் கூறியது:
 இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருப்பவரும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவினால், ஆயிரம் விளக்கு பகுதிகளில் உள்ள தலைக்கவசம் விற்பனை கடைகளில், தலைக்கவசம் வாங்க வருபவர்கள் எண்ணிக்கை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
 இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சரக்கு சேவை வரியில் (ஜி.எஸ்.டி) தலைக்கவசத்துக்கு விதிக்கப்படும் 18 சதவீதம் வரியில் இருந்து இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் தலைக்கவசங்களுக்கு வரியில் விலக்கு அளித்தால், அது மக்களை இன்னும் வேகமாக சென்றடையும் என்றார் அவர்.
 சாலையோர தலைக்கவசம் வேண்டாம்: இதேபோல தலைக்கவசம் விற்பனையாளர் ரேயான் கூறியது:
 சென்னையில் சாலையோர நடை மேடைகளில் தரக்குறைவான, ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தலைக்கவசங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த தலைக்கவசங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்குவதை காண முடிகிறது. இந்த தலைக்கவசங்கள், எளிதில் உடையக் கூடியதாகும். இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது. எனவே இத்தகைய தலைக்கவசங்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார் ரேயான்

தொலைநிலைக் கல்வி வழி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் செல்லுமா?

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ஏஐசிடிஇ நடைமுறைகளைப் பின்பற்றாமல் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளன.
 நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளால் வழங்கப்படும் கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் அனைத்தையும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்படுத்துகிறது.

 பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக். போன்ற பொறியியல் படிப்புகளையும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. போன்ற தொழில் படிப்புகளையும் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) கட்டுப்படுத்தி வருகிறது.
 நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளையும் யுஜிசி கட்டுப்படுத்தி வருகிறது என்றபோதும், தொலைநிலைக் கல்வி நிறுவங்கள் மூலம் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும் ஏஐசிடிஇ நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது விதியாகும்.
 ஏனெனில், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்த பின்னர் தொலைநிலைக் கல்வி வழியாக பெறும் இளநிலை பட்டப் படிப்பும், அதன் பிறகு பெறப்படும் முதுநிலைப் படிப்புகளும், கல்லூரிக்குச் சென்று பெறப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையானது. அரசுப் பணிகளுக்கும் இந்த தொலைநிலைக் கல்வித் தகுதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது.
 எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படப்புக்கான நடைமுறை என்ன? அந்த வகையில், ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளில் ஏதாவது ஒரு நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். தொலைநிலைக் கல்வி வழியில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளுக்கும் இது பொருந்தும். அது மட்டுமின்றி ஏஐசிடிஇ.யின் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
 அவ்வாறு நடைமுறைகளைப் பின்பற்றப்படாமல் வழங்கப்படும் படிப்புகள் அங்கீகரிக்கப்படாது. இதனால், மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர் என்கின்றனர் பேராசிரியர்கள்.
 நடைமுறைகளைப் பின்பற்றாத பல்கலைக்கழகங்கள்: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடைமுறையை முறையாகப் பின்பற்றுகிறது. தொலைநிலை கல்வி முறையில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் நுழைவுத் தேர்வு மூலமே மாணவர்களைச் சேர்க்கிறது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் எந்தவொரு நுழைவுத் தேர்வும் நடத்தாமலேயே, வெறும் இளநிலை பட்டப் படிப்பு தகுதியின் அடிப்படையில் தொலைநிலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.
 செல்லுமா? இவ்வாறு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் படிப்புகளால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுவர் என்கின்றனர் பேராசிரியர்கள். இது குறித்து யுஜிசி முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறியது:
 தொலைநிலைக் கல்வி முறையில் நடத்தப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு ஏஐசிடிஇ நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பாக யுஜிசி சார்பில் பல்கலைக்கழகங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக்கழகத்துக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது என்றனர்.
 இது குறித்து ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே "தினமணி'-க்கு அளித்த பேட்டி: மத்திய மற்றும் மாநில அரசுகளின் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்களும், உயர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களும் அவர்களாகவே தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை தொடங்கி நடத்திக்கொள்ள அனுமதி உள்ளது.
 ஆனால், அந்தக் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ நடைமுறைகளையும், தர நிர்ணயத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதாவது அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஒரே சீரான நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
 அது மட்டுமின்றி, இந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் யுஜிசி அனுமதியைப் பெறுவதற்கு முன்பாக, ஏஐசிடிஇ நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை ("அஃபிடவிட்') யுஜிசி-யிடம் தாக்கல் செய்வதும் கட்டாயம்.
 நடைமுறைகளை பின்பற்றாவிட்டால்... அவ்வாறு, ஏஐசிடிஇ நடைமுறைகள் பின்பற்றப்படாமல் தொலைநிலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் வழங்கப்படுவது தெரிய வந்தால், அதுதொடர்பாக ஆய்வு நடத்தி அனுமதியை ரத்து செய்யுமாறு யுஜிசி கேட்டுக்கொள்ளும்

புதிய பாடத் திட்டம் மூலம் கல்வி மேம்படும்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாடத் திட்டம் மூலம் தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்படும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
 கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் துறை, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் விளையாட்டுத் துறை மற்றும் பள்ளி கல்வித் துறை இணைந்து ஒசூரில் நடத்திய அம்மா விளையாட்டுப் போட்டிகளை ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியுடன் இணைந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்தார்.
 போட்டிகளைத் தொடக்கிவைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது:

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2004-இல் விளையாட்டுத் துறைக்காக தனியாக பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் புதிய பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 7 துணைவேந்தர்களைக் கொண்டு 8 மாதங்களில் புதிய பாடத் திட்டதை உருவாக்கியிருக்கிறோம்.
 9 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு 1 முதல் 5 வரையும், 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றி வழங்கப்படும். நிகழாண்டு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
 நிகழாண்டு 11 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார். அதன்படி, மாணவர்களுக்கு விரைவாக மிதிவண்டிகள் வழங்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், பிளஸ் 2 பாடத் திட்டத்தில் தனித்திறன் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 நிகழாண்டு 412 நீட் தேர்வு மையங்கள் மூலம் 3600 ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 25 ஆயிரம் மாணவர்களைத் தேர்வு செய்து 500 பட்டயத் தணிக்கையாளர்கள் மூலம் பயிற்சி அளித்து, அதிக எண்ணிக்கையில் பட்டயத் தணிக்கையாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் :

திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையினர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படவுள்ளது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்குப் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்குத் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு மத்திய அரசின் ‌w‌w‌w.‌s​c‌h‌o‌l​a‌r‌s‌h‌i‌p‌s.‌g‌o‌v.‌i‌n என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களைசேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்:

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்அரசு தொடக்க பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களைசேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் ஸதி பேட்டியளித்துள்ளார்.


நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வழங்கி கவுர வித்து வருகிறது.கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்தது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர்கள் இணையதளம் மூலம் நல்லாசிரியர் விருதுக்கு விணப்பித்தனர். அவர்களின் சேவை அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 6 பேர் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கான நேர்காணலுக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.

இதில் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும்ஆர்.ஸதி என்பவர் மட்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.விருதுகுறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:-நான் 23 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணி புரிகிறேன். கடந்த 2009-ம் ஆண்டு பணி உயர்வு பெற்று மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் இங்கு வந்த போது 146 மாணவ, மாணவிகள் மட்டும் படித்து வந்தனர். எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெரு தெருவாக சென்று பெற்றோர்களை சந்தித்து அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி கற்பதன் பயன் ஆகியவற்றை எடுத்துக் கூறினேன்.இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.

தற்போது எங்கள்பள்ளியில் 270 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் டேப்லெட் மூலம் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்படுகிறது. தனியார்பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளியில் பல்வேறு வசதிகளை செய்து, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறேன்.இந்த பள்ளி கோவை மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டரிடம் விருது பெற்றேன். இதே பள்ளிக்கு தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவித்தது.மலுமிச்சம்பட்டி ஊராட்சியை ‘திறந்த வெளியில் மலம் கழிப்பிடமற்ற ஊராட்சியாக’ மாற்ற இப்பள்ளி மாணவர்கள் பெரும் பங்காற்றினர்.

இதற்காக 10 மாணவர்களுக்கும், எனக்கும் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் விருது வழங்கி பாராட்டினார். இது போன்ற பல்வேறு அம்சங்களை பார்த்து தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இது போன்ற விருதுகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமையும்.

இந்த விருதை அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முக்கியம். ஆரம்ப கல்வியுடன் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்றுத் தருகிறோம். நாங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறோம். அனைத்து தரப்பினரும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நல்லாசிரியர் விருதுக்கு கடும் கட்டுப்பாடு சிபாரிசுக்கு அடிபணியாதீர் என அறிவுரை!

தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அரசின் சார்பில்,ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் மற்றும் பணபலம் உள்ளிட்ட செல்வாக்கு பெற்றவர்களுக்கே விருதுகள் கிடைத்தன. தகுதியான ஆசிரியர்களுக்கு விருது கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால், 2017 - 18ம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு, ஓரளவு தகுதியானவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்துக்கு, ஆறு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், மத்திய அரசின் தேர்வுக்குழு, கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை பின்பற்றியதால், ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

இதேபோல, தமிழக நல்லாசிரியர் விருதுதேர்விலும், கவனமாக செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம், 369 விருதுகள் வழங்க முடிவு செய்தாலும், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக, நிபந்தனைகளை தளர்த்தி, தகுதி இல்லாதவர்களை தேர்வு செய்யக்கூடாது என, கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளின்சிபாரிசுகளை ஏற்க கூடாது. குற்ற வழக்கு, குற்றச்சாட்டு, மாணவர்களின் அதிருப்திக்கு உள்ளானோர், கல்வி தரத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டாதோரையும் தேர்வு செய்யக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சிப் அடிப்படையிலான புதிய ATM கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு SBI அறிவித்துள்ளது.

ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ அழைப்பு

இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, 'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு பாரத் ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.
இதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள வங்கி அட்டைகள் காந்தப் பட்டை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை 'ஸ்கிம்மர்' கருவி மூலம் நகல் எடுத்து மோசடியாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த 'சிப்' அடிப்படையில் கார்டுகளை வழங்குமாறு ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனால், வங்கி அட்டை முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும்.

இந்நிலையில் இந்த பாதுகாப்பு அம்சத்தை முழுமையாக செயல்படுத்த எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் எஸ்பிஐ வெளியிட்டுள்ள பதிவில், 'அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி நமது வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் அட்டைகளை 'சிப்' தொழில்நுட்பத்தில் மாற்ற இருக்கிறோம். வாடிக்கையாளார்கள் தங்கள் அட்டைகளுக்கு பதிலாக புதிய அட்டைகளை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. இதற்கு இந்த ஆண்டு இறுதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கிளைக்கு நேரில் சென்றும், நெட் பாங்கிங் மூலமும் புதிய அட்டையை பெற விண்ணப்பிக்கலாம்.

எஸ்பிஐ சார்பில் இதுவரை 28.9 கோடி டெபிட், ஏடிஎம் கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பகுதி ஏற்கெனவே சிப் தொழில்நுட்பத்தில் உள்ளது. இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப் தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ மட்டுமல்லாது அனைத்து வங்கிகளுமே, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

மாணவர்கள் விளையாட்டு சார்பாக செல்லும்போது அவர்களுக்கு உணவுப்படி ரூபாய் 125+பயணப்படி வழங்க வேண்டும் ஆணை.

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, மாணவர் வருகை அடிப்படையில், அரசின் கல்வி உபகரண பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 1ம் வகுப்பு துவங்கி, பிளஸ் 2 வரை படிக்கும், 72 லட்சத்து, 55 ஆயிரம் மாணவ - மாணவி யருக்கு புத்தகப்பை; 1 - 10ம் வகுப்பு படிக்கும், 58 லட்சம் பேருக்கு காலணி; 3 - 5ம் வகுப்பு படிக்கும், 15 லட்சத்து, 15 ஆயிரம் பேருக்கு, கலர் பென்சில்; 6 - 10 வரை படிக்கும், 16 லட்சத்து, 16 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, ஜியாமெட்ரி பாக்ஸ் வழங்க, கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'அரசு, உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவி யருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி, அடுத்த இரு மாதங்களில் துவங்கும்' என்றனர்

IGNOU பல்கலையில் ஆக,31 வரை சேர்க்கை

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில், பட்டம், முதுநிலை பட்டப்படிப்பு, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகள், தொலைநிலை கல்வியில் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும், 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், சென்னை, வேப்பேரியில் உள்ள, இக்னோ மண்டல அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், https://onlineadmission.ignou.ac.in/admission என்ற இணையதளம் வழியாகவும், விண்ணப்பம் அனுப்பலாம் என, இக்னோ தெரிவித்துள்ளது.

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி வாரியாக மாணவர்களின் விபரங்கள், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை திட்டத்தில் சேகரிக்கப்படுகின்றன.

அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின், எமிஸ் மாணவர் சேர்க்கை விபரங்கள், பள்ளிக்கல்வி நிர்வாக இணையதளத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் விபரங்களை, வரும், 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, பள்ளி கல்வித்துறை கெடு விதித்துள்ளது.குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், மாணவர்களின் விபரங்கள், எமிஸ் பதிவு வழியாகவே எடுக்கப்படும் என்பதால், விபரங்களை தவறின்றி பதிவு செய்ய வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

25/8/18

உதயச்சந்திரன் அவர்களுக்கு கிடைத்த பரிசா ??

உதயச்சந்திரன் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார்.

 உதயச்சந்திரன் ஒரு சாதாரண கல்வி அதிகாரி கிடையாது. தமிழ் இலக்கியத்தின் மீது தனி காதல் உடையவர். பள்ளி கல்வி மீது அளவு கடந்த அக்கறையும் ஆர்வமும் நிறைந்தவர். அதனால்தான் அவர் தமிழக பள்ளிக்கல்வி செயலாளராக நியமித்தபோதுகூட சாமான்ய மக்களும் சந்தோஷப்பட்டார்கள்.

ஒளிர்ந்த அண்ணா நூற்றாண்டு
அவர் பணியில் அமர்ந்தவுடன் பள்ளிக்கல்விதுறை செப்பனிடப்பட்டு, சீரமைக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு, பிரகாசமாக மிளிரும் என எதிர்பார்ப்பு மேலோங்கி எழுந்தது. அதற்கேற்றாற்போல், ஆள், அரவம் இல்லாமல், இருண்டுபோய் கவனிப்பாரற்று கிடந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ஒளி ஊட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் உதயச்சந்திரன்.

அன்பை வாரிகொண்டார்
காலங்காலமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், மதிப்பெண்கள்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் ஒன்று என்ற மாயையைம் உடைத்தெறிந்தார். புதிய புதிய அணுகுமுறைகள், வழிமுறைகள், எளிய நடை உரைநடைகளை உதயச்சந்திரன் பாடத்திட்டத்தில் புகுத்தினார். இதனால் அரசியல் பேதமின்றி ஒட்டுமொத்த தமிழக தலைவர்கள், பெரியவர்கள், குழந்தைகளின் ஆதரவையும் அன்பையும் வாரிக்கொண்டார்.

வெளிப்படைத்தன்மை
ஆனால் நல்லது என்று நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாத நலம் விரும்பிகள் புராண காலத்திலிருந்தே உண்டு. அப்படி இருக்கும்போது உதயச்சந்திரனுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வராதா என்ன? சிலருக்கு உதயச்சந்திரனின் செயல்பாடுகள் எரிச்சலை தந்தன. வெளிப்படைத்தன்மை நடவடிக்கைகள் சிலருக்கு ஆத்திரத்தை மூட்டின.

நீதிமன்றத்தில் வழக்கு
அதனால் எந்நேரமும் இடமாற்றம், பணி மாற்றம் செய்யப்படலாம் என்ற கருத்தும் ஆழமாக வேரூன்றியே நிலவியது. அதற்கேற்றாற்போல் நீதிமன்றத்திலும் இது சம்பந்தமாக வழக்கு நடைபெற்றும் வந்தது. ஒத்திவைப்பு, விசாரணை என சம்பிரதாயங்களும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுதான் இருந்தன.

EMIS - Staff Information Form - PDF

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி :

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநில மக்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்குவதற்காக அமைக்கப்பட்ட சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
 இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 கேரள வெள்ள பாதிப்புக்கு சைதன்யா டெக்னோ பள்ளி சார்பில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் 4 கண்டெய்னர்கள் மூலமாகவும், ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய ரூ.1 கோடி நிதி காசோலையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் கேரள மாநிலத்துக்கான நிவாரணப் பொருள்கள் விரைவில் மாவட்டந்தோறும் பெறப்பட்டு அனுப்பப்படும்.
 மாதிரிப் பள்ளி: தற்போது சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாதிரிப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அதில் எல்.கே ஜி., யூ.கே ஜி. வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதைத்தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் 412 மையங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அதற்காக தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து வரும் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்.
 இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

EMIS - அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம் :ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:இஎம்ஐஎஸ் 18 - 19ம் ஆண்டிற்கான இணையதள பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மைய பிஇஒக்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் இஎம்ஐஎஸ் மூலம் எடுக்க இருப்பதால் எஸ்எஸ்எல்சி, பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும். ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

நடப்பாண்டு, பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். 

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், 437.86 கோடி ரூபாய் செலவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 5.06 லட்சம் மாணவர்கள், 6.49 லட்சம் மாணவியர்; அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும், 18 ஆயிரத்து, 506 மாணவர்; 4,394 மாணவியர் என, மொத்தம், 11.78 லட்சம் பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் பழனிசாமி, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், நிலோபர் கபில், ராஜலட்சுமி, வளர்மதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

24/8/18

சிபிஎஸ்இ பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 ம் வகுப்பில் மொழிப்பாடம், சுற்றுச்சூழல், அறிவியல், கணினி மட்டுமே கற்பிக்க வேண்டும் என்று நீதிபதி கிரூபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
பாடச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்
1.10.1979 முதல் 30.6.1996 முடிய அரசு பணியிலிருந்துஓய்வு பெற்றவர்கள் 33 வருடம் பணி முடித்தால்தான் முழு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1.7.1996 முதல் 30 வருடம் பணி முடித்தாலே முழு ஓய்வூதியம் வழங்க ஆணை வழங்கப்பட்டது. 1.7.1996 க்கு பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு30 வருடம்பணிமுடித்தால் முழு ஓய்வூதியம் வழங்குவது போல் 30.6.1996க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் அவ்வாறே வழங்கவேண்டும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில் 1.7.1996 க்கு முன்னர்30 வருடம் பணி முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் வழங்க. கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் அரசாணை எண். 245 வழங்கப்பட்டுள்ளது. 

63 இன்ஜி., கல்லூரிகள் நடப்பாண்டில் மூடல்?

மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரண மாக, தமிழகத்தில், 63 இன்ஜினியரிங் கல்லுாரி கள் மூடும் நிலையில் உள்ளதாக, அண்ணா பல்கலை தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
63, இன௠ஜி., கல௠லூரிகள௠ , நடப௠பாண௠டில௠, மூடல௠?

63, இன்ஜி., கல்லூரிகள் , நடப்பாண்டில், மூடல்?


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, அண்ணா பல்கலை வழியாக, பொது கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, மாணவர்களை, சென்னைக்கு வரவழைக்காமல், 'ஆன்லைன்' முறையில், அவர்கள் விரும்பிய கல்லுாரியில், இடங்களை தேர்வு செய்ய, வசதி செய்யப் 

பட்டது.இதற்காக, மாநிலம் முழுவதும், 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. 


கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' வழியாக நடத்து வதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், பெரிய சர்ச்சையின்றி, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உட்பட, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளையும் சேர்த்து, 74 ஆயிரத்து, 601 இடங்களே நிரம்பியுள்ளன. 97 ஆயிரத்து, 980 இடங்கள், மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன.


மொத்தம், 136 கல்லுாரி கள் மட்டுமே, 50 சதவீத இடங்களை, கவுன்சிலிங் வழியாக நிரப்பியுள்ளன. மற்ற கல்லுாரிகளில், சேர்க்கை அளவு சரிந்து உள்ளது. எனவே இனி, கல்லுாரிகளை தொடர்ந்து நடத்த முடியுமா என, தனியார் கல்லுாரி நிர்வாகங் கள், ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கவுன்சிலிங்கின் போது, 550 இன்ஜினியரிங் கல்லுாரிகள் இருப்பதாக,அண்ணா

பல்கலை கூறியிருந்தது. -தற்போது, 487 கல்லுாரிகள் மட்டும் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து, 63 கல்லுாரிகள் மூடப் படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.


மேலும்,இந்த ஆண்டு,47 கல்லுாரிகளில், வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே, மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எனவே, இந்த கல்லுாரிகளும், இந்த ஆண்டு மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலையில் தேங்கும் பைல்கள் மாணவர்கள் தவிப்பு

மதுரை, மதுரை காமராஜ் பல்கலையில் கன்வீனர் கமிட்டி கூடுவதில் இழுபறி நீடிப்பதால் நுாற்றுக்கணக்கான பைல்கள் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இப்பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டபின், பல்கலை நிர்வாகத்தை நடத்த சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் தலைமையில் உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், ராமகிருஷ்ணன் கொண்ட கமிட்டியை உயர்கல்வித்துறை நியமித்தது.துணைவேந்தர் இல்லாத நிலையில் இக்கமிட்டியின் 3 பேருமே பைலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் பூவலிங்கம், சந்தோஷ்குமார் சென்னையில் பெரும்பாலும் இருப்பதால் மூவரின் கையெழுத்தும் ஒருசேர கிடைப்பதில்லை. இதனால் ஏராளமான பைல்கள் தேங்கிக் கிடக்கின்றன. துறைகள், புலங்கள் வாரியாக மாணவர் சார்ந்த திட்டங்கள், முடிவுகள் மேற்கொள்ள முடியாமல் சிக்கல்கள் ஏற்படுகின்றன.பேராசிரியர்கள் கூறியதாவது:கன்வீனர் குழு அமைக்கப்பட்டாலும் அது இல்லாதது போன்ற நிலை தான் உள்ளது. கமிட்டி கூடாததால் மூவரின் கையெழுத்துக்களும் பைலில் பெறுவது அரிதாக உள்ளது. குறிப்பாக, எம்.பில்., பி.எச்.டி., படிப்பிற்கான நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் பலர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வழிகாட்டிகள் (கைடு) இல்லை. துணைவேந்தர் இருந்திருந்தால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் கமிட்டி இதுகுறித்து அக்கறை காட்டவில்லை. இதுபோல் ஒவ்வொரு துறைகளிலும் ஏராளமான பைல்கள் தேங்கிக்கிடக்கின்றன, என்றனர்.