யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/8/18

போலீஸ் தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில், இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இரண்டாம் நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, 2017ல், அறிவிப்பு வெளியானது.இதற்கான எழுத்து தேர்வு, இந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது; 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.தேர்ச்சி பெற்றோரின் விபரமும், இட ஒதுக்கீடு ரீதியிலான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரமும், மாவட்ட வாரியாக, www.tnusrb.com என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியோர், தங்களுக்குரிய ரகசிய எண்களை பதிவேற்றம் செய்து, மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக