யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/8/18

வாட்ஸ்அப்பில் இதெல்லாம் நடக்குதா? அதிர்ச்சிக்கே அதிர்ச்சி!!

இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியான வாட்ஸ் அப்பில் ஹேக் செய்ய முடியும் என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்திகள் பரவி, பல அப்பாவிகள் அடித்தே கொல்லப்பட்டனர். இதனை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாட்ஸ்அப் நிறுவனமும், இதனை தடுக்கும் விதமாக, போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில், ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் வசதி அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றி அமைக்க முடியும் என்று, செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
இதனை அவர்கள் ஒரே ஒரு கிளிக்கில் செய்து முடித்து விடுவார்களாம், அதாவது நாம் அனுப்பும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க முடியுமாம், மேலும், தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவைக்களிலும், நீங்கள் அனுப்பியதாக ஒருவருக்கு குறுந்தகவல்களை அனுப்ப இயலுமாம்.
என்ன சொல்லி என்ன பண்ண., ''முதலை வாயில் தலையை விட்ட கதை தான் இன்றய இணைய பயன்பாடு'', நாம் நம் இரகசியங்களை நேரில் வைத்துக்கொள்வதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது என்று சமூக ஆர்வலர்களை கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக