யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/18

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துஉள்ளது.'ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பாக, தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டங்களுக்கு பலன் இல்லாததால், நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. ஆனால், சங்க நிர்வாகிகள் இடையே, கருத்து ஒற்றுமை ஏற்படாததால், போராட்ட தேதி மாற்றப்பட்டது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நவ., 16ல் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், நவ., 27க்கு பதில், டிச., 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதற்காக, மாநில அளவில், 20 ஒருங்கிணைப்பாளர்கள் இடம் பெறும் குழுவும், மாவட்ட வாரியாக, ஆறு பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட உள்ளது. இன்றும், நாளையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது; 25ல், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது.வரும், 26 முதல், 30ம் தேதி வரை, மாவட்ட அளவில் போராட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பின், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக, ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக