யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/11/18

ஷாலாசித்தி' திட்டத்தில் பள்ளிகள் 'சென்டம்

மத்திய அரசின், 'ஷாலாசித்தி' இணையதளத்தில்,
அனைத்து பள்ளிகளும், தகவல்களை பதிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்



மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நாடு முழுக்க, பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்த, 'ஷாலாஷித்தி' திட்டம், கடந்த 2016ல் கொண்டு வரப்பட்டது


*தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம் (நியூபா) சார்பில், திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் (www.shaalasiddhi.nuebha.org) உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி சார்ந்த தகவல்களை உள்ளீடு செய்யும் பட்சத்தில், நிதியுதவி அளிக்கப்படுகிறது

*பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, தேவையான அனைத்து வகை பயிற்சிகளும், தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் சேர, அக்.,31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது


*கோவையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் இந்த இணையதளத்தில் தகவல்களை பதிவேற்றியுள்ளன


*பள்ளியின் பெயர், மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு பணிகள், கால அவகாசம் குறித்து, தெளிவாக குறிப்பிட்டு நிதி ஒதுக்குவதால், அரசுப்பள்ளிகள் இத்திட்டத்தில் பயனடைவதாக, ஒருங்கிணைந்த கல்வி உதவித்திட்ட அலுவலர் கண்ணன் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக