யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/12/18

சிறப்பு வகுப்பில் பங்கேற்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு1.69 கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க முடிவு

பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் சென்னை  மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ₹1.69 கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சென்னை மாநகராட்சி பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள்  பொதுத் தேர்விற்கு தயாராக மாலையில் 4 மணி முதல் 6 மணி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் கருப்புக் கடலை, வெள்ளை கடலை, பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, வேர் கடலை, கருப்புக் கடலை என்று 6 வகையான  சுண்டல் வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ₹1.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு 10 ம் வகுப்பில் 6267 மாணவர்களும், 11 ம் வகுப்பில் 5201 மாணவர்களும், 12 ம் வகுப்பில் 5077 மாணவர்களும் படித்து வருகின்றனர்.


இதன்படி பார்த்தால் மொத்தம் 16 ஆயிரத்து 545 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். அந்த மாணவர்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களுக்கு ஆறு வகையான சுண்டல் வழங்கப்படும். இதன்படி  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 142 நாட்களுக்கும், 11  மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 119 நாட்களுக்கும் சுண்டல் வழங்கப்படும்.இதற்காக ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு ₹8 செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் மார்ச் மாதம் வரையில் 16,545 மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ₹1.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களது தேவையான பொருட்களை அவர்களே திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு நகர்புற கூட்டுறவு சங்கத்தில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளிலேயே சுண்டல் தயாரித்து  வழங்குவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக