யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/18

பள்ளிகளில் 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தற்போது அரையாண்டு தேர்வு(இரண்டாம்பருவம்) நடந்து வருகிறது. இதன் பின் 3ம் பருவம் துவங்க உள்ளதால் அதற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்திலேயே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை வநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக