யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/18

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம் :

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம்.பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 14 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது குறைவாக உள்ள மாணவர்கள், தடை ஆணை பெற்றால் தான் தேர்வு எழுத முடியும். இதற்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
இத்தடை ஆணையை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் என, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அமுதவல்லி அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வு எழுதும் நாளில், 14 வயது கொண்டவர்கள், ஓரிரு மாதங்கள் குறைவாக உள்ளவர்கள், தடை ஆணை பெறலாம். இதற்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக