யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/12/18

உழைப்போம் நேர்மையாக , பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ! கடமையைத் துணிவோடு செய்வோம் பாரபட்சம் இல்லாமல் ! நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும் !

அந்தக் காலத்தில்   TVS  பஸ் நிறுவனம்  தான்  தமிழகமெங்கும்    பஸ்  போக்குவரத்தை   நடத்தி  வந்தார்கள்  என்று   கேள்விப்பட்டதோடு    TVS   பஸ்  முதலாளியைப்  பற்றி   கடந்த   வாரம்   எனது  மரியாதைக்குரியவர்   மூலம்   மிகவும்    அற்புதமான   விஷயம்  ஒன்றைக்  கேட்டேன்  !
அந்த  நிறுவனம்   இத்தனை  நூற்றாண்டுகளாகப்   புகழ்  வாய்ந்து    பெரிய  அளவில்   உயர்ந்து  நிற்க  அது  தான்  காரணம்  !

ஒரு  முறை   TVS   பஸ்   முதலாளியின்   மகன்    அந்த  பஸ்ஸில்   பயணம்   செய்தபோது    அவரிடம்    டிக்கெட்   எடுக்க   அந்த   பஸ்ஸின்   கண்டக்டர்    வந்த  போது    TVS  முதலாளியின்  மகன்   மிகவும்   கோபப்பட்டாராம்  !

நான்   இந்த  பஸ்   முதலாளியின்   மகன்   என்பது   உனக்குத்  தெரியுமா  ?  என்று  கேட்டவரிடம்   அந்தச்  சாதாரண    கண்டக்டர்    சொன்னாராம்   மிகவும்   அமைதியாக  "   தெரியும்   அய்யா  !   ஆனால்    பஸ்ஸில்   பயணம்  செய்யும்   அனைவரிடமும்   டிக்கெட்   வாங்க  வேண்டும்   என்பது   எனக்கு   வழங்கப்பட்ட   சட்டம்  !

டிக்கெட்  வாங்காவிட்டால்    தங்களை   இங்கேயே  இறக்கி  விட  வேண்டியிருக்கும்  "  ,      என்ற  கண்டக்டரிடம்    கோபமாக  டிக்கெட்   வாங்கி  விட்டு    பயணம்  செய்தாராம்   அந்த  பஸ்  கம்பெனியின்   முதலாளி  மகன் !

நடந்த   விஷயங்களைக்  கேள்விப்பட்ட    TVS  முதலாளி   மிகுந்த   கோபத்தோடு   அந்த  கண்டக்டரை   நாளை   அலுவலகத்தில்   வந்து  என்னைப்  பார்க்கச்  சொல்லுங்கள்   என்று   உத்தரவிட்டிருக்கிறார் !

அன்று  இரவு    மிகவும்   கவலையோடு   வீட்டுக்கு   வந்த  அந்தக்  கண்டக்டர்   தனது   ஏழைத்  தாயின்  மடியில்  தலை  சாய்த்துக்  கொண்டு   "  நாளை  முதல்  எனக்கு   இந்த   வேலையும்  போய்விடும்  !  என்ற  மகனிடம்   அந்த  ஏழைத்  தாய்  சொன்னார்கள்  "  மகனே   எந்த  நிலை  வந்தாலும்   கடமையை  நேர்மையாகச்  செய்  ,    என்று  !

மறுநாள்   மிகுந்த  பயத்தோடு    முதலாளியின்   அறைக்கு  சென்றவரை   மிகவும்   அன்பாகத்   தன்னோடு  அணைத்துக்  கொண்ட  TVS  முதலாளி  "   இன்றிலிருந்து   என்  பஸ்  கம்பெனியின்   Checking Inspector  ஆக  (  செக்கிங்  இன்ஸ்பெக்டர்  )  உன்னை  நியமிக்கிறேன்  !  முதலாளியின்   மகன்  என்று  கூட  பயப்படாமல்    உனது  கடமையைச்  சரியாகச்  செய்த  உன்னைப்  போன்றவர்கள்  தான்   இங்கே  அதிகாரியாக  இருக்க வேண்டும்  "   என்ற  போது   தனது  தாயின்   வார்த்தைகள்  எத்தனைப்பெரியது என்று  மகிழ்ந்த   அவர்  பின்னாளில்   பல   பஸ்  கம்பெனிகளுக்கு   முதலாளியானார்  !

           " ஆளைப்  பார்த்து   வேலை  செய்வதும்  ,   அதிகாரங்களைக்  கண்டு   நேர்மையைக்   கைவிடுவதும்  ,  அல்லது  கண்டு  கொள்ளாமல்    நமக்கென்ன    நம்ம   குடும்பம்   வாழ்ந்தால்   போதும்   என்று   அவர்களுக்குக்  கும்பிடு   போட்டு       வேலை  செய்கிறவர்கள்    சுயநலவாதிகள்  !

நேர்மையாகத்  தங்களது   பணியைச்  செய்பவர்களை   பணிசெய்ய  விடாமல்   தங்களது   அதிகாரத்தை   பயன்படுத்தி   ஆணவம்   கொள்பவர்கள்    உயிரோடு   நடமாடும்   பிணங்கள்  !

கோடிகோடியாக    பணம்  இருந்தாலும்    வனளாவிய  அதிகாரங்கள்   இருந்தாலும்    உள்ளுக்குள்   நிம்மதியை   இழந்து   வாழும்   பரிதாபத்துக்குரியவர்கள்  !

 தங்கள்   கடமையை  நேர்மையாகச்   செய்பவர்கள்   கெட்டுப்  போனதாக  வரலாறுகள்   இல்லை  !

உழைப்போம்  நேர்மையாக  ,    பிறர்  பொருளுக்கு   ஆசைப்படாமல்  !
கடமையைத்  துணிவோடு   செய்வோம்    பாரபட்சம்   இல்லாமல்  !
நிச்சயமாக     மன நிறைவான   வாழ்க்கை   அமைந்தே  தீரும்  !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக