யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/1/19

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க மக்களின் தலைவர் ஆவதற்கு முன்பு, அரசு அதிகாரி ஒருவரால் சில அதிகாரிகளின் முன்னிலையில் "குரங்கு மூஞ்சி" என்று அவமான படுத்த பட்டார்...

சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆப்ரஹாம் லிங்கன், அமெரிக்க மக்களின் தலைவர் ஆவதற்கு முன்பு, அரசு அதிகாரி ஒருவரால் சில அதிகாரிகளின் முன்னிலையில்  "குரங்கு மூஞ்சி" என்று அவமான படுத்த பட்டார்...



அப்போது அதை பெரிதாக எடுத்து கொள்ளாத லிங்கன் தான், குடியரசு தலைவர் ஆன உடனேயே, தன்னை திட்டிய அந்த அதிகாரிக்கு, மிக முக்கியமான பொறுப்பினையும் பதவி உயர்வையும் வழங்கி கௌரவித்தார்...

அவரிடம் காரணம் கேட்கப்பட்டது...

" அவர் என்னை அவமான படுத்தினாலும், அதனை என் நெஞ்சுக்குள் கொண்டு செல்லவில்லை.

ஆனால் காயம் பட்டது நிஜம்தான்.

அந்த காயத்திற்கான ஒரே மருந்து என்னை மேலும் தகுதி படுத்தி கொள்வதே என்று நினைத்து, என் முயற்சியாலும் உழைப்பாலும், இந்த நிலைக்கு நான் வந்தேன்.

இதற்கு காரணம் அவரின் அந்த அவமான படுத்திய செயலே.

அதன் நன்றி கடனாக அவருக்கு இந்த பரிசினை வழங்கியுள்ளேன் " என்று கூறினார்...

லிங்கன் மட்டுமல்ல, வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் தன் வாழ்வில், பல நேரங்களில் அவமான படுத்த பட்டவர்களே...

ஆனால் அவைகளை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்வதே இல்லை...

நம்மை அவமானபடுத்தியவரை பழி வாங்குதல் என்பது அறிவீனம்...

தம்மை அவமானபடுத்தியவரே, வருந்தும்படி வாழ்ந்து காட்டுதலே, நம் வாழ்வின் மூலதனம்...

முட்கள் நிறைந்த ரோஜா தான், மலர்களின் ராஜாவாக கருத படுகிறது...

வாங்க...

அவமானங்களை உரமாக்கி,
நம் வாழ்க்கையை வரமாக்கி,
வளமாக வாழ்ந்து தான்
பார்ப்போமே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக