யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/6/18

MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், 
 பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில்கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடைபெற்றது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.1,000-க்கானகேட்பு வரைவோலை (டிடி) கொடுத்தும் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் வாங்கினர்.
அரசு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழ் நகல் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றனர். 8 நாட்கள் நடந்த விண்ணப்ப விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 விண்ணப்பங்கள் என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
இவைதவிர www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத்துறையின் இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை மாணவ, மாணவிகள் பதிவிறக்கம் செய்தனர். மொத்தம் 43,935 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது?

சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர்.
தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்படவில்லை. வழக்கமாக உத்தேச விடைகள் வெளியிடப்பட்டதும் அடுத்த சில நாட்களிலேயே தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிடும்.
ஆனால், முதல்முறையாக நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில், உத்தேச விடைகள் வெளியிட்டு 8 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவு வெளியிடப்படாத நிலையில், தேர்வெழுதியவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், பள்ளிக் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிடுவது என தொடர்ந்து பல்வேறு நிலைகளில் போராடி வந்தனர்.
ஆன்லைனில் விடைத்தாள் நகல்
இந்த தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கடந்த ஜூன் 14-ம் தேதி மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் நகலை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்க்கலாம் என்றிருந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வில், அதுபோன்று இல்லாமல் அவரவர் தங்களின் விடைத்தாள் நகலை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து கணினியில் பார்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஆன்லைனில் பார்க்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்துவருவதாக தேர்வெழுதியவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டால் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் விரைவில் வரும் என்று சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் என்று தேர்வர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.
பொதுவாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் 3 மாதங்கள் அல்லது 5 மாதங்களில் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், தேர்வு முடிவடைந்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தேர்வர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’
சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு ‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட வேண்டும்.
அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு ஏற்ப மதிப்பெண் (அதிகபட்சம் 5) அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுபட்டியல் வெளியிடப்படும்.
மதிப்பெண் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்கள் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் எப்போது இறுதி தேர்வுபட்டியல் வெளியிட்டு பணிநியமனம் வழங்கப்போகிறார்களோ? என்று தேர்வெழுதியவர்கள் அச்சத்தில் உள்ளனர். இனியும், காலதாமதம் செய்யாமல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியம் வழங்கும் திட்டம் - ஜூன் 30-ம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி!

வீடுகளில் சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக,
மானிய விலையில் மேற்கூரை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 வரும் 30-ம் தேதி விண்ணப்பிப் பதற்கு கடைசி தேதியாகும்.இதுகுறித்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்பில்,மின்கட்டமைப்புடன் கூடிய சோலார் மேற்கூரை திட்டத்தின்கீழ், வீடுகளில் சோலார் மேற்கூரை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. வீடுகள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், என்ஜிஓ-க்கள் ஆகியோருக்கும் இச்சலுகை பொருந்தும். ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க ரூ.60,000 செலவாகும்.
இதில், ரூ.18,000 மானியமாக வழங்கப்படும்.ஒரு கிலோவாட் சூரியஒளி மின்சாரம் தயாரிக்க தேவையான சோலார் மேற்கூரை அமைக்க குறைந்தபட்சம் 100 சதுர அடி இடம் தேவைப்படும். ஒருகிலோ வாட் மேற்கூரை அமைத்தால் மாதம் ஒன்றுக்கு 250 யூனிட் வரை சோலார் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும்.5 ஆண்டு இலவச பராமரிப்புஇந்த சூரியஒளி மின்சாரத்தைக் கணக்கீடு செய்வதற்காக இருவழி பயன்பாடு மீட்டர் பொருத்தப்படும். சோலார் மேற்கூரை மின் கட்டமைப்புகள் கிரிட்டுடன் இணைக்கப்படும். மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வரை மின்சார கட்டணம் மிச்சமாகும். அத்துடன், சோலார் மேற்கூரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் 5 ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், கடந்த 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 1,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 12 மெகாவாட் அளவுக்கு சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கு, வரும் 30-ம் கடைசி தேதியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.

இப்பள்ளிகளில் 2003 பிப்., வரை இடைநிலை ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அதன்பின் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர் போராட்டத்தையடுத்து தமிழ் பாடத்திற்கு 66.6 சதவீதம், மற்ற பாடங்களுக்கு 50 சதவீதம் என, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 21 ல் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை என கூறி, கலந்தாய்வை நிறுத்திவிட்டனர்.தவறான விதிமுறை மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததால் இப்பிரச்னை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கனவாகிவிட்டது. இதன்மூலம் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
தொகுப்பூதியத்தில் நியமனமான 42 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 2006 ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.அப்போதே 50 சதவீத இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.இதேபோல் அரசுஉதவி பெறும் பள்ளிகளிலும் பதவி உயர்வின்றி 13 ஆயிரம் பேர் தவிக்கின்றனர், என்றார்.

கூடுதலாக வசூலிக்கும் இன்ஜி., கல்லூரிகள் : நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

பள்ளிகளை போல், கல்லுாரிகளின் கட்டண விபரங்களை, இணைய தளத்தில் வெளியிட வேண்டும்; அதிகமாக வசூலிக்கும் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உயர் கல்வித் துறைக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழக அரசின் கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்துள்ளது. கட்டண விபரங்களை, அந்தந்த பள்ளி களின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக கட்டணம் வசூல்அதுபோல, இன்ஜினி யரிங் சுயநிதி கல்லுாரிகளின் கட்டணத்தை நிர்ண யிக்கும் பணியை, உயர்கல்வி கட்டண நிர்ணய கமிட்டி மேற்கொள்கிறது. ஆனால், இந்த கமிட்டி, எந்தெந்த கல்லுாரிக்கு எவ்வளவு கட்டணம் நிர்ண யித்துள்ளது, அதற்கான உத்தரவுகள் என்ன என்ற விபரம், மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ தெரிவது இல்லை.இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி, பல கல்லுாரிகள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங் வழியாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறும் மாணவர்களிடம், எவ்வளவு கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என, இன்ஜி., கவுன்சிலிங் குழு, குறிப்புகளை வழங்குகிறது.ஆனால், பெரும்பாலான கல்லுாரிகள், கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. சில கல்லுாரிகள், மாணவர்களிடம் வசூலிக்கும் வைப்பு தொகையை, மாணவர்கள் படித்து முடிக்கும் போது, திருப்பிவழங்குவதில்லை எனவும், புகார்கள் எழுந்துள்ளன.புகார்மேலும், பொருளாதார சூழல், குடும்ப பிரச்னை, தனிப்பட்ட பிரச்னைகள் காரணமாக, படிப்பை சிலர் பாதியில் கைவிடுகின்றனர். சிலர் வேறு கல்லுாரிகளுக்கு மாறுகின்றனர். இவர்களிடம், முழுமை யாக, நான்கு ஆண்டுகளுக்கான கட்டணத்தை கட்டாய மாக வசூலிப்பதாகவும், கட்டணத்தை செலுத்தும் வரை, தற்காலிக சான்றிதழை நிறுத்தி வைப்பதாகவும், புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மாணவர்கள் கூறியதாவது:கவுன்சிலிங் வழியே, இன்ஜி., கல்லுாரிகளில்மாணவர்களை சேர்க்கும், உயர் கல்வித்துறை, தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். மாணவர்களிடம் அத்துமீறி வசூலிக்கும் கல்லுாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க ேண்டும்.கட்டண பிரச்னையால் பல மாணவர்கள், உரிய நேரத்தில் தேர்வை எழுத முடியாமல், நிறுத்தி வைக்கப்படுகின்றனர். பல மாணவர்கள், தங்களின் மாற்று சான்றிதழ்களை கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.எனவே, கட்டண பிரச்னைக்கு, தமிழக உயர் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

B.Ed - , கல்லூரிகள் திறப்பு எப்போது?

ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளான, பி.எட்., கல்லுாரிகள், ஜூலை, 9ல் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில்,

650க்கும் மேற்பட்ட, கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டாண்டு படிப்புகள் நடத்தப்படுகின்றன. பி.எட்., கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, ஜூன்இரண்டாவது வாரத்தில் விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து, ஜூலை, 9ல், அனைத்து, பி.எட்., கல்லுாரிகளையும் திறக்க வேண்டும் என, கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூலையில் வகுப்புகள் துவங்கும் என்றும், வேலைநாட்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பி.எட்., முதலாம் ஆண்டை பொறுத்தவரை, தற்போது விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன. ஜூலையில், கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகளை துவக்க, கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது.

காலை, மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள்வருகையை உறுதிப்படுத்தி வருகைப்பதிவேடு பராமரிக்க வேண்டும் - CEO

மாநிலம் முழுவதும் "சூப்பர்- 30' சிறப்பு வகுப்புகள்: கல்வியாளர்கள் கோரிக்கை!



பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சூப்பர்- 30 சிறப்பு வகுப்புகளை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவம்- 30, சிறப்பு பொறியியல்- 30 ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, "சூப்பர்- 30' என்னும் பெயரில் சிறப்பு வகுப்புகள் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன.
இதற்காக, பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 425 மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், 450 மதிப்பெண் பெற்ற பிற மாணவர்களும் நுழைவுத் தேர்வெழுத தகுதியானவர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வகுப்புகளில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பாடத்துடன் கூடிய தன்னம்பிக்கையூட்டும் மனவளப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பிரதான சுற்றுலா இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த சிறப்பு வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 1,100 மதிப்பெண்களுக்கும் அதிகமாகப் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர். இதனால் இந்த வகுப்புகள் பெற்றோரிடமும், கல்வியாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இதையடுத்து, இத்திட்டத்தை கொண்டுவந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது முயற்சியால், பாடாலூர், குரும்பலூர், சு.ஆடுதுறை ஆகிய அரசுப் பள்ளிகளிலும் சூப்பர்- 30 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த சிறப்பு வகுப்பில் சேர்ந்து பயின்ற 259 மாணவ, மாணவிகளில் இதுவரை 8 பேர் மருத்துவம், 5 பேர் செவிலியர், 2 பேர் கால்நடை மருத்துவம், அண்ணா பல்கலைக் கழகம் உள்பட அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 104 பேரும், 70-க்கும் மேற்பட்டோர் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பயில்கின்றனர். மேலும், அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் சிறப்பு வகுப்பில் பயின்ற 20 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் பணியிடை மாற்றம், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பின்மை, நிதி பற்றாக்குறையால் குரும்பலூர், பாடாலூர், சு.ஆடுதுறை ஆகிய பள்ளிகளில் செயல்பட்டு வந்த சிறப்பு வகுப்புகள் முடங்கின.
இதேபோல, பெரம்பலூரில் சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சூப்பர்- 30 சிறப்பு வகுப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என். ஜெயராமன் கூறியது:
பிகார் மாநிலம் பாட்னாவில் ஆனந்த்குமார் என்பவர் தனது ஐ.ஐ.டி. படிக்கும் ஆசை நிறைவேறாததால், ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக சூப்பர்- 30 என்னும் பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதையறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தரேஸ் அகமது, சூப்பர்- 30 என்னும் உறைவிட சிறப்பு பயிற்சி வகுப்புகளை பெரம்பலூரில் தொடங்கினார்.
தமிழகத்தில் பெரம்பலூரில் சூப்பர்- 30, ராமநாதபுரத்தில் எலைட் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பலர் பயனடைந்துள்ளனர். பெரம்பலூரில், ஒருசில நடைமுறை பிரச்னைகளால் இத்திட்டம் தொய்வடைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்துக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கினால் கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு, கிராமப்புற ஏழை மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பாக அமையும். தமிழக அரசின் நிதியும், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பும் இருந்தாலே இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்றார் அவர்.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது குறித்த கருத்துரு பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.
- கே. தர்மராஜ்

Flash News : உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் அரசுக் கலை கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகளை துவக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

DEE PROCEEDINGS-புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்தது-அலுவலர்களின் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கோருதல் சார்பு

How to use Tamilnadu school students Attendance Mobile App - Teachers Handling Video :

மகப்பேறு விடுப்பு அரசு புது உத்தரவு

இரட்டைக் குழந்தை பெற்ற, அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, 270 நாட்கள், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான அரசாணை, 2016 நவம்பரில் வெளியானது. அதில், திருமணமான அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பாக, தலா, 270 நாட்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.ஆனால், முதல் பிரசவத்திலேயே இரட்டை குழந்தைகள் பெற்றால், அவர்களுக்கு, இரண்டாவது மகப்பேறுக்கு விடுப்பு அளிக்க அதிகாரிகள் மறுத்தனர்.

இந்நிலையில், முதலாவது மகப்பேறில் எத்தனை குழந்தைகள் பெற்றாலும், அவர்களுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும், 270 நாட்கள் விடுமுறை அனுமதிக்கலாம் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, பணியாளர் நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது

25/6/18

ஆசிரியர்களின் பணியை கண்காணிக்க வந்துவிட்டது அலைபேசி செயலி

பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது. பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.

அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம்.

ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.

தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்.

பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு திடீரென நிறுத்தப்பட்டதால், ஏமாற்றமடைந்தனர்.

இப்பள்ளிகளில் 2003 பிப்., வரை இடைநிலை ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர். அதன்பின் பட்டதாரி ஆசிரியர்களே நியமிக்கப்படுகின்றனர். இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதலுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர் போராட்டத்தையடுத்து தமிழ் பாடத்திற்கு 66.6 சதவீதம், மற்ற பாடங்களுக்கு 50 சதவீதம் என, இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 21 ல் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்த நிலையில், திடீரென நிறுத்தப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்கள் கொதிப்படைந்தனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் காலிப்பணியிடம் இல்லை என கூறி, கலந்தாய்வை நிறுத்திவிட்டனர்.தவறான விதிமுறை மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததால் இப்பிரச்னை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கனவாகிவிட்டது. இதன்மூலம் 5 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.

தொகுப்பூதியத்தில் நியமனமான 42 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் 2006 ல் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.அப்போதே 50 சதவீத இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திருந்தால், இந்த குழப்பம் வந்திருக்காது.இதேபோல் அரசுஉதவி பெறும் பள்ளிகளிலும் பதவி உயர்வின்றி 13 ஆயிரம் பேர் தவிக்கின்றனர், என்றார்.

'பயோமெட்ரிக்" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance

பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது.
பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.
அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்.

மேலும் பாடப்புத்தகத்தில் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்து பாடம் எடுக்க வேண்டும். இதன்மூலம் அவர் எந்தந்த பாடங்களை அன்றைய தினம் கற்பித்தார் என்பதை கண்காணிக்கலாம். அவர் 'கியூ.ஆர்., கோடை' 'ஸ்கேன்' செய்யவில்லை எனில் பாடம் எடுக்கவில்லை என, கருதப்படும்.
தரவுகள் அனைத்தும் அதிகாரிகள் பார்வைக்கு செல்வதால் ஆசிரியர்கள் வருகை பதிவு, பாடம் நடத்தியது போன்ற விபரங்களை உடனுக்குடன் அறியலாம்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'ஏற்கனேவே 'எமிஸ்,' 'டீச்சர் புரைபைலில்' சேகரிக்கப்பட்ட மாணவர், ஆசிரியர்கள் விபரங்கள் உள்ளன. மேலும் ஆசிரியர்களின் அலைபேசி எண் விபரம் சேகரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் முறையாக பணிக்கு செல்லாத ஆசிரியர்கள் சிக்குவர்,' என்றார்a

24/6/18

1,200 அரசு பள்ளிகளை இணைக்க திட்டம்:தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்!!!

மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது

. அத்துடன்,, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை,, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்.

இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.

செப்டம்பருக்குள், 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கt, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யவுள்ளனர். இதில், சேலத்தில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், ரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில், 2,800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது.

இதனால், அந்த எட்டு மாவட்டங்களில், கடந்த, 21ல் நடந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில், மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

குழப்பத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா?

இந்த கல்வி ஆண்டில் புதிய கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது குறித்து தெளிவான பயிற்சியோ, வழிகாட்டுதலோ, குறிப்புகளோ தரப்படவில்லை.
                      பழைய முறை தொடர்கிறதா, கல்வி இணை செயல்பாடுகள் தொடர்கிறதா, cce பதிவேடுகள் பராமரிப்பதா என்பதைக் குறித்து எந்தவித தெளிவான குறிப்புகளும் இல்லை.                                          மாவட்டத்திற்குடாரத்திற்கு வட்டாரம் ,ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பயிற்றுனர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி ஆசிரியர்களை கட்டாயப்படுத்துகின்றனர் .   புதிய கற்பித்தல் முறையில் பாட குறிப்பு( notes of lesson )எழுதுவதா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் தாங்கள் அறிந்த கருத்துக்களை சொல்லி வருவது ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. வரும் ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தற்போது பார்வைக்கு செல்லும் அதிகாரிகளும், ஆசிரிய பயிற்றுனர்கள் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முறையான வகையில்      ஆசிரியர்களுக்கு    வழிகாட்டுதல்கள் தரப்படும்போது மட்டும்தான் தெளிவான முறையில் கற்பித்தலை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள இயலும்.       கடந்த ஆண்டு பரிசோதனை முறையில் புதிய கற்பித்தல் முறை தெரிவு செய்யப்பட்ட ஒரு சில பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது அதில் உள்ள நிறை குறைகளை ஆராய்ந்து ஒரு சில மாற்றங்களுடன் கற்பித்தல் முறை      அறிமுகப்படுத்தப்படலாம். தெளிவான வழிகாட்டுதல்கள், பயிற்சிகள் தரப்படும் வகையில் சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் வந்துள்ளது என கூறி பதிவேடுகளை பராமரிக்க சொல்லி  கட்டாயப்படுத்தி வருவது  ஆசிரியர்களுக்கு மன உளைச்சலையும், நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே ஆசிரிய நண்பர்களே தெளிவான பயிற்சிகள் தரப்படும் வரையில் சுய கருத்துக்களை யூகமாக சொல்லி ஆசிரியர்களிடம் குழப்பத்தை உண்டாக்காமல் இருப்பதே ஆசிரியர்களுக்கு நல்லது

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு!

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை ஜூன் 30ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லை என்றால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

 பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் மேல் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் உங்களது ஐடிஆர் எனப்படும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். அவ்வாறு இணைத்துவிட்டால் வருமான வரிக் கணக்கை எளிதாக தாக்கல் செய்து விடலாம். இல்லை என்றால் மிகவும் கஷ்டம் என்று மத்திய நேரடி வரி வருவாய்த் துறை மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி என முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிறகு இது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுவரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஜூன் 30ம் தேதிக்குள் நிச்சயமாக இணைத்து விடுங்கள். இதன் மூலம் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாது.
இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இவ்விரண்டு எண்களையும் இணைக்காமல் ஒருவர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இயலாது. மத்திய நேரடி வரி வருவாய்த் துறையின் அறிக்கை இதனை தெளிவுபடுத்துகிறது. எனவே அனைவரும் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் ஜூன் 30ம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும். அப்போதுதான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
என்ஆர்ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவு

கோவை: 'அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில்,விண்ணப்ப வினியோகப்பணி தாமதமாக துவங்கியதால் நடப்பாண்டிலும், 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை' என, முதல்வர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

ரூ.2,000 கட்டணம் : மாநிலத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இதில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவை முக்கிய துறைகளாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கலாம். அரசு கல்லுாரிகளில் ஆண்டுக்கு, 2000 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச லேப்டாப், பாடபுத்தகங்கள், பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் ஆண்டுக்கு, 8,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருவதற்கு, 10 நாட்களுக்கு முன்பிருந்தே, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி, 10 நாட்களுக்கு பிறகே விண்ணப்ப பணி துவக்கப்படுகிறது.நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வு, இதுவரை துவங்கவில்லை. கல்லுாரிகளிலுள்ள இடங்களை காட்டிலும், குறைவான விண்ணப்பங்களே பெரும்பாலான கல்லுாரிகளில் பெறப்பட்டுள்ளன.இதனால், இந்தாண்டு, 40 சதவீத இடங்கள் நிரம்ப வாய்ப்பில்லை.
கலந்தாய்வு : கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:ஊட்டி கல்லுாரியில், 520 இடங்களுக்கு, 400 விண்ணப்பங்களும், கோவையில், 380 இடங்களுக்கு, 340 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்நிலைதான், 95 சதவீத கல்லுாரிகளில் ஏற்பட்டு உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை இதை விட குறையும் என்பதால்,மாணவர்கள் சேர்க்கை மொத்தமாக சரிந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தொழில்நுட்ப கல்வி இயக்கக முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பொறுப்பாளர் லாவண்யா கூறுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிதாக கல்லுாரிகள் துவக்கப்பட்டுள்ளன. இக்கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்க தாமதம் ஆகியது. ''அக்கல்லுாரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என்பதால், விண்ணப்ப வினியோக பணி தாமதம் ஆனது,'' என்றார்.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் போலிகளை தடுக்க புதிய விதிமுறைகள்

சென்னை:எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.


மருத்துவ, படிப்பு ,மாணவர்,சேர்க்கையில்,போலிகளை,தடுக்க புதிய,விதிமுறைகள்


தமிழகத்தில், 2017ல் நடைபெற்ற, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஒன்பது மாணவர்கள் போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்ததாக, புகார் எழுந்தது. இதனால், நடப்பாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், மருத்துவ கல்வி இயக்ககம், விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.


அதன் விபரம்: * தமிழக ஒதுக்கீட்டு 

இடங்களுக்கான, கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள், 'தமிழர்' என, இடம் கோரமுடியாது


* 'நீட்' நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தில், வேறுமாநிலத்தை, தன் சொந்த மாநிலமாக குறிப் பிட்டவர்கள், தமிழக இடங்களுக்கு, உரிமை கோர முடியாது


* தமிழகத்தில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள், இருப்பிட சான்றிதழ் சமர்பிக்க வேண்டாம். ஆனால், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, வேறு மாநிலங்களில் படித்திருந்தால், கட்டாயம் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்


* அந்த மாணவரின் பெற்றோர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிவிக்க, அவர்களது பிறப்பு சான்றிதழ், 10ம் வகுப்பு சான்றிதழ்,பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமா அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். 


சரியான ஆவணங்களை சமர்ப்பிக்காதவர்கள், 


பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்.


* வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்து, தமிழகத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்திருந்தால், நீட் தேர்வுக்கான விண்ணப்பத் தில், தமிழகத்தை சொந்த மாநிலமாக குறிப் பிட்டாலும், அவர்கள், பொது பிரிவினருக்கான பட்டியலில் தான் இடம் பெறுவர்

* போலியான சான்றிதழ்கள் கொடுத்து, படிப் பில் சேர்ந்தது தெரிய வந்தால், மாணவர்கள், கல்லுாரிகளில் இருந்து உடனே நீக்கப்படுவர். மேலும், மாணவர் மீதும், பெற்றோர் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு: 25, 26 -இல் அறிவியல் செய்முறை தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பங்கேற்காத தேர்வர்கள் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வில் பங்கேற்கலாம் எனஅரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர்  வெளியிட்ட அறிவிப்பு


கடந்த மார்ச் -ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அறிவியல் பாட பயிற்சி வகுப்புக்கு 80 சதவீதம் வருகை புரிந்து, ஆனால் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளத் தவறிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோர் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்புப் துணைப் பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ளலாம் - இதுகுறித்த முழு விவரங்களையும் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் தேர்வர்களின் முகவரிக்கு இது குறித்து அறிவிப்பு ஏதும் அனுப்பப்படமாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது

பிளஸ் 1ல் 1,002 பக்கத்துக்கு உயிரியல் பாடம்: தலைசுற்றுவதால் வேறு பிரிவுக்கு மாணவர்கள் ஓட்டம்

நீட்' தேர்வுக்கு, உயிரியல் பாடப்பிரிவில், கூடுதல்
பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், 1,002 பக்கங்கள் உள்ளதால், பலரும், வேறு பிரிவுகளுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர்.



தமிழகத்தில், இரு ஆண்டுகளாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

 நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பாடத்துக்கு, புது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரியலில், இதுவரை இருந்ததை விட, இரு மடங்கு பாடம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. தாவரவியல், 545, விலங்கியல், 457 என, 1,002 பக்கங்கள் கொண்ட, பாடமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, சிந்திக்கும் திறன் வினாக்களுக்கு பதிலளிக்க முடியும். மனப்பாட முறை ஒழிக்கப்பட்டுள்ளதால், இப்பாடம் பெரும் சுமை என மாணவர்கள் கருதுகின்றனர்.

 இதனால், ஏற்கனவே உயிரியல் பாடத்தை தேர்வு செய்த மாணவர்கள், வேறு பிரிவுகளுக்கு ஓட்டம் எடுக்கின்றனர்.இதுகுறித்து, உயிரியல் ஆசிரியர்கள் கூறியதாவது:

 உயிரியல் பாடம், கணித பாடப்பிரிவு, பியூர் சயின்ஸ் எனும் அறிவியல் பாடப்பிரிவில் இடம்பெறுகிறது. மருத்துவம், இன்ஜினியரிங் பிரிவு செல்ல விரும்புவோர், உயிரியல் பாடமுள்ள கணிதப்பிரிவை தேர்வு செய்வர்.

மருத்துவத்தை மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள், அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வர். தற்போது, புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள உயிரியல் பாடத்திட்டம் மிகச்சிறப்பானது.


 ஆனால், அவற்றை, ஒரே ஆண்டில் முழுமையாக நடத்தவோ, புரிந்துகொள்வதோ சிரமம். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, இது சாத்தியம்.

பல பள்ளிகளில், தங்கள் பணியிடத்தை தக்க வைத்துக்கொள்ள, உயிரியல் பாட ஆசிரியர்கள், சராசரி மாணவர்களை, இப்பிரிவுகளில் சேர்த்துவந்தனர். இப்போது, அப்படி சேர்க்கும் போது, தேர்ச்சி விகிதம் சரியும்.

 புது பாடப்புத்தகத்தை பார்த்த பின், பல மாணவர்களை, ஆசிரியர்களே, வேறு பாடப்பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. உயிரியல் பாடம் எடுத்து படிப்பவர்களில், 40 சதவீதம் பேர் கூட, நீட் எழுதுவதில்லை.

ஆனால், அனைவருக்குமான பாடத்திட்டத்தில், சுமையை ஏற்றியுள்ளதால், மாணவர்களின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் கூடுதலாக 17 ஆயிரம் ஆசிரியர்கள்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையானதை விட, 17 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், ஒரு வாரமாக நடந்தது. இந்த முறை, மாணவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு, ஆசிரியர்களின் தேவையை அறிந்து கொள்ள, கல்வித்துறை திட்டமிட்டது.இதற்காக, கல்வி மேலாண்மை தகவல் தொழில்நுட்ப திட்டமான, 'எமிஸ்' வாயிலாக, ஆதார் விபரங்களுடன் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை; 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், ஆசிரியர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இதில், 5.64 லட்சம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 16 ஆயிரத்து, 114 ஆசிரியர்களே தேவை. ஆனால், 33 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அதனால், கூடுதலாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களின் விபரங்கள், மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டன. அவர்கள் அனைவரையும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் நியமிக்க, பணி நிரவல் கவுன்சிலிங், சமீபத்தில் நடந்தது. ஆனால், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, போதுமான அளவுக்கு பள்ளிகளில் காலியிடங்கள் இல்லை.இதனால், காலை, 9:00க்கு வரவழைக்கப்பட்ட ஆசிரியர்கள், இரவு, 10:00 மணி வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் காத்திருந்தனர். மாநிலம் முழுவதும், 2,500 காலியிடங்களின் விபரம் சேகரிக்கப்பட்டு, நள்ளிரவில், உபரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.அதிலும், 2,500 ஆசிரியர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட்டது. மீதமுள்ள, 14 ஆயிரத்து, 500 ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் வழங்க முடியாததால், தற்போது அவரவர் பணியாற்றும் பள்ளிகளிலேயே, பணியை தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 17 ஆயிரம் ஆசிரியர்களுக்கும், ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.'இந்த சிக்கலுக்கு தீர்வு காண, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது எத்தனை நாட்கள் EL எடுக்கலாம்...??? (EL பற்றிய முழுவிபரம்)



* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

* தகுதிகாண் பருவம் முடிக்கும் முன்பு (பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள்) மகப்பேறு விடுப்பு எடுத்தால் அந்த வருடத்திற்கான EL -ஐ ஒப்படைக்க முடியாது. EL நாட்கள் மகப்பேறு விடுப்புடன் சேர்த்துக்கொள்ளப்படும் (உதாரணமாக - அவரது கணக்கில் 10 நாட்கள் EL உள்ளது என்றால் மகப்பேறு விடுப்பில் அந்த 10 நாட்களை கழித்துவிட்டு (180-10= 170) மீதம் உள்ள 170 நாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும் முன்பே கணக்கில் உள்ள EL-ஐ எடுத்துவிடுவது பயனளிக்கும்)

* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் . *
மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.

* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.

* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.

* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.

* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.

* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.

* அரசு ஊழியர்களுக்கு மட்டும் வருடத்திற்கு 30 நாட்கள் EL (ஆசிரியர்களுக்கு 17 நாட்கள் மட்டுமே). அதில் 15 நாட்களை ஒப்படைக்கலாம். மீதம் உள்ள 15 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச மாக 240 நாட்களைச் சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம். அதற்கு மேல் சேருபவை எந்தவிதத்திலும் பயனில்லை.

*மாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது 8 கி.மீ (ரேடியஸ்) இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் EL கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 90 நாட்களுக்குள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். (குறைந்தது 5 நாட்கள். 160 கி.மீ க்கு மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)

*ஒருமுறை சரண்டர் செய்த அதே தேதியில் தான் ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கணக்கீட்டிற்கு வசதியாக இருக்கவும் Pay Rollல் விவரம் குறிக்க எளிமையாக அமையவும் ஒரே தேதியில் ஆண்டுதோறும் அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை சரண் செய்வது சிறந்தது. எவ்வாறாயினும் ஒரு ஒப்படைப்பு நாளுக்கும் அடுத்த ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15 நாட்கள் ஒப்படைப்பெனில் ஓராண்டு / 30 நாட்கள் ஒப்படைப்பெனில் இரண்டாண்டு இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒப்படைப்பு நாள் தான் முக்கியமே தவிர விண்ணப்பிக்கும் தேதியோ, அலுவலர் சேங்க்ஷன் செய்யும் தேதியோ, ECS ஆகும் தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட வேண்டியதில்லை.

* EL ஒப்படைப்பு நாளின் போது குறைந்த அளவு அகவிலைப்படியும் பின்னர் முன்தேதியிட்டு DA உயர்த்தப்படும் போது ஒப்படைப்பு நாளில் அதிக அகவிலைப்படியும் இருந்தால் DA நிலுவையுடன் சரண்டருக்குரிய நிலுவையையும் சேர்த்து சுதந்தரித்துக் கொள்ளலாம். ஊக்க ஊதியம் முன்தேதியிட்டுப் பெற்றாலும் நிலுவைக் கணக்கீட்டுக் காலத்தில் ஒப்படைப்பு தேதி வந்தால் சரண்டர் நிலுவையும் பெறத் தகுதியுண்டு.

* பணிநிறைவு / இறப்பின் போது இருப்பிலுள்ள EL நாட்களுக்குரிய (அதிகபட்சம் 240) அப்போதைய சம்பளம் மற்றும் அகவிலைப்படி வீதத்தில் கணக்கிடப்பட்டு திரள்தொகையாக ஒப்பளிக்கப்படும்.

* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள் ஈட்டிய விடுப்பு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுக்கலாம். 180 நாட்களுக்குமேற்பட்ட விடுப்புக்கு வீட்டுவாடகைப்படி கிடைக்காது

Jun 24, 2018 QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் ஆசிரியர் பாடம் போதிக்க வில்லை என கணக்கிடப்படும் - கல்வித்துறையில் அடுத்தடுத்த அதிரடி!

                                                           
அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை


ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

 ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை

EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது...
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே...
 அதாவது...

 ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.


அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர்
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

 இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.


அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

 அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

  இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

 நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

 உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

 ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.


இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை...

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை



 அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

 ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை
EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது...
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே...
 அதாவது...
 ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.

அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர் 
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

 இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.

அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

 அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

  இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். 

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

 நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

 உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

 ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை...

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

WAIT AND SEE..🤔🤔🤔

புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் பயிற்சி தொடங்க உள்ளது.


கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது.

1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பகுதி வாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க திட்டம்

பள்ளிக் கல்வித்துறையை 6 மண்டலமாக பிரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. 12 இணை இயக்குநர்கள் மண்டல அதிகாரிகளாக  பணி அமர்த்தப்பட உள்ளனர்


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக, நிர்வாக சீர்திருத்த குழுவும் அமைக்கப்பட்டுள்ளது

இந்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது

இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்

அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது.

அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது.

அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்.

அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.

பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள்


இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அதிகாரிகள் கொண்ட சீர்திருத்தக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Diksha app,YOUTUBE போன்றவற்றை வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை-ஆசிரியர்களின் கவனத்திற்கு

இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக  
Smartphones பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது cam scanner,  Diksa,  Mx videoplayer,  Es file manager போன்ற Android அப்ளிகேஷன்களையும் You tube யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த   விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும்  வரலாம்.

எனவே 

முன்னச்செரிக்கையாக

phone ல் செய்ய வேண்டியது 

1) play store சென்று settings ல் parent control optionஐ on செய்யவும்.

2) அதன் கீழே உள்ள Apps and Gamesஐ கிளிக் செய்து 12+ ல் டிக் செய்யவும். 

3) அடுத்ததாக  Films ஐ கிளிக் செய்து  U என்பதை டிக் செய்யவும்.

இப்போது  உங்கள் Smartphone  தேவையற்ற விளம்பரங்கள், Videoக்கள்  குறுக்கிடாமல்  பயன்படுத்துவதற்கு  பாதுகாப்பானதாக இருக்கும். 

4)அதேபோல் YOU TUBE  settings ல் Restriction  modeஐ on செய்யவும்,

 இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்.

வேளாண் படிப்பு தரவரிச வெளியீடு திண்டுக்கல் மாணவி ஆர்த்தி முதலிடம்

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியலில், திண்டுக்கல் மாணவி ஆர்த்தி, 'கட் ஆப்' மதிப்பெண், 200 பெற்று முதலிடம் பிடித்துஉள்ளார். 


முதல், 10 இடங்களில், மாணவியர் எட்டு இடங்களை பிடித்துள்ளனர். 'ஆன்லைன்' முறைகோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின்கீழ், 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் வழங்கப்படும், 13 இளநிலை வேளாண் படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' முறையிலான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், மே, 18 முதல் ஜூன், 17 வரை பெறப்பட்டன.அதன்படி, 2018 - 19ம் கல்வியாண்டு ஒதுக்கப்பட்ட, 3,422 இடங்களுக்கு, 48 ஆயிரத்து, 676 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கலந்தாய்வுஜூலை, 7ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கவுள்ள நிலையில், பல்கலை துணைவேந்தர் ராமசாமி நேற்று, தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 

இதில், திண்டுக்கல் மாணவி ஆர்த்தி, கட் ஆப் மதிப்பெண், 200 பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.கொடுமுடி மாணவி ஸ்ரீகார்த்திகா, 199.67 பெற்று இரண்டாம் இடத்தையும், கோவை மாணவி மேகனா, 199.5 பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துஉள்ளனர். துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஜூலை, 7ல் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. தொடர்ந்து, 9 முதல், 13ம் தேதி வரை முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட ஆன்லைன் கலந்தாய்வு, 23 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது. கல்லுாரிகள் ஆக., 1ம் தேதி துவங்குகின்றன. ஆக., 31க்குள் மாணவர் சேர்க்கை முடிக்கப்படுகிறது.இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள, 'ஸ்லைடிங்' முறையில் தேவையான பாடப்பிரிவையும், கல்லுாரியையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டமிட்டு படித்ததால் வெற்றி!இரண்டாம் இடம் பிடித்த கொடுமுடியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீகார்த்திகா கூறுகையில், ''பள்ளியில் ஆரம்பம் முதலே நன்கு படித்தேன். வீட்டிலும், பள்ளியிலும் திட்டமிட்டு படித்ததால் நல்ல மதிப்பெண் எடுக்க முடிந்தது. இளநிலை வேளாண் படிப்பை தேர்வு செய்யவுள்ளேன்,'' என்றார்.மூன்றாம் இடம் பிடித்த கோவை மாணவி மேகனா கூறுகையில், ''நான், 'டியூஷன்' செல்லாமல் வீட்டிலும், பள்ளியிலும் நன்கு படித்தேன். குறிப்பாக பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்றுவித்தனர். பயிற்சிக்கு கிடைத்த பலன் தான் இது. இளநிலை தோட்டக்கலை பாடத்தை தேர்வு செய்யவுள்ளேன்,'' என்றார்.

தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்' - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.தற்போது, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் அமலாகிய பின், பிளஸ் 2 முடித்து, வெளியே வருவோருக்கு, வேலை கிடைக்கும் நிலை உருவாக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், ''பள்ளிகளுக்கு போதிய வசதிகள் ஏற்படுத்த, நடப்பாண்டு, 1,800 கோடி ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுஉள்ளது. ''கட்டடம் இல்லாத பள்ளிகளுக்கு, தேவையான புதிய கட்டடங்கள், நபார்டு திட்டத்தின் கீழ் ஜூலை இறுதிக்குள் கட்டப்படும். காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு அரசாணை வெளியீடு

பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள்சேருவதை விட என்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது.


அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த வருடம் வழக்கம் போல பி.காம். படிப்பில் சேர கடும்போட்டி நிலவியது.
கடந்த 18-ந்தேதி பெரும்பாலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகள் பல ஆன்லைனில் மாணவர் சேர்க்கையை முடித்தன. கல்லூரிகளின் வாசலில் மாணவர்களுடன் பெற்றோர்களும் காத்துக் கிடந்தனர். கல்லூரிகளில் மகள் அல்லது மகனுக்கு இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. இடம் கிடைத்துவிட்டால் ஏதோ பணப்புதையல் கிடைத்தது என்று நினைக்கும் நிலையும் உருவானது.
இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையொட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலிவால் உத்தரவிட்டார்.
இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்

கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது. 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களுக்கும் இதுவரை அனுமதி இல்லை. இந்நிலையில் டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியங்கள், இடம் பெற்ற பள்ளிகள் விவரம் குறித்த எல்லை வரையறைக்கான அரசு உத்தரவும் வெளியாகவில்லை.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வி ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதை மாவட்ட, உதவி கருவூலங்கள், சம்பள கணக்கு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் ஆசிரியர், அலுவலருக்கான சம்பளம் வழங்கப்படும். வரையறை உத்தரவு பிறப்பிக்கப்படாததால் இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும், என்றார்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மெட்ரோ ரயில்வே சார்பில் இலவச கல்வி சுற்றுலா

                                          


சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சென்ட்ரல்- விமான நிலையம், டி.எம்.எஸ் விமான நிலையம் வரையில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் கட்டமைப்பு, வசதிகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் அரசு பள்ளி மற்றும் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகளை இலவசமாக கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இதை மெட்ரோ ரயில் நிர்வாகமே ஏற்பாடு செய்யும்.

இந்நிலையில், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான கல்வி சுற்றுலா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கல்வி சுற்றுலாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்ட்ரல்-விமான நிலையம், டி.எம்.எஸ்-விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மெட்ரோ ரயில் அதிகாரிகள், மாணவர்களுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் மெட்ரோ ரயிலின் அமைப்பு, சிறப்பம்சம், மெட்ரோ ரயில் செல்லும் வேகம் ஆகியவற்றை தெளிவாக எடுத்துக்கூறினர்

ஆசிய கண்டமே திரும்பி பார்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்:

ஆசிய கண்டமே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரிகளில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 12ஆம் வகுப்பு முடித்தவுடனே வேலைவாய்ப்பு வழங்கவும், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், க்யூ.ஆர். கோடுடன் கூடிய பாடபுத்தகங்கள், 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வைஃபை வசதி ஆகியவை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகள் மாற்றியமைக்கப்படும் எனவும்

Attendance App இல் மாணவர் வருகையை பதிவு செய்யும் முறை....

பழங்குடியினர் நல பள்ளிகள் /விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2018-2019 பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு


சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
     
சமூக வலைத்தளங்கள் மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதனால், இதனை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் படி,  வருடத்தின் 365 நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இயங்கும் 'சமூக ஊடக கண்காணிப்பு கேந்திரத்தை' உருவாக்க, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிட்டுள்ளது,

இதன் படி, டெல்லியில் 20 பேரை கொண்ட, தலைமையகம் அமைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள 716 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு ஆப்ரேட்டர் என்ற விதத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த உறுப்பினர்கள், ஒரு பகுதியில் மிக அதிகம் பேசப்படும் விவகாரம் குறித்த , தகவல்களையும் அதன் தாக்கங்களையும் சேகரித்து, அறிக்கைகளாக்க திட்டமிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியானால், அவற்றையும் உடனடியாக கண்டுபிடித்து அரசுக்கு இந்த ஆப்ரேட்டர்கள், தெரிவிப்பார்கள்.

பொய் செய்திகள், வதந்திகளை பரப்பவர்கள் மீது ஐ.பி.சி 153 மற்றும் 295ஆம் பிரிவிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதன் படி, வாட்ஸப் மூலம் கலவரங்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்

16/6/18

நடுநிலைப்பள்ளிகளில் புவியியல், அறிவியல் மற்றும் கணிதபாடங்களுக்கு டேப்லெட்



சேலம்: நடுநிலைப்பள்ளிகளில் புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு டேப் பயன்படுத்துவது குறித்த பயிற்சிக்கு, ஆசிரியர்களை அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டு, 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் முறைகளில், பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள உயர்வகுப்புகளுக்கு, மின்னணு வடிவில் பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளது. புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கென, பிரத்யேக வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை கற்பிக்க மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்படவுள்ளது.

டேப்லெட் மூலம் வகுப்பெடுக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரத்யேக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட அளவில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னையில் வரும் 19ம் தேதி, மாநில அளவிலான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை அனுப்புவதுடன், கட்டாயம் அவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் முதன்மை கல்வி tஅலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 


ரம்ஜான் கொண்டாடும் உறவுகளுக்கும். நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்


ஆகஸ்ட் 15: மத்திய அரசு ஊழியர்களுக்குக் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..! சம்பள உயர்வு, ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62

மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் அளவுகளைத் தாண்டி பல நன்மைகள் செய்துள்ள நிலையில், 2019 பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு
மத்திய அரசுப் பணியில் இருக்கும் 1 கோடி வாக்குகளைப் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மோடி முக்கியமான அறிவிப்பை அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுதந்திர தினம்


பிரதமர் மோடி 2019 பொதுத் தேர்தலில் பிஜேபி கட்சியின் வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.
ஏற்கனவே 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் ஏகப்பட்ட சம்பள உயர்வை அளித்துள்ள நிலையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது போதுமானதாக இல்லை என்ற கருத்து வலிமையாக உள்ளது. இதனைத் தகர்த்து இவர்களின் வாக்குகளைப் பிஜேபி கட்சிக்குக் கொண்டு வர மோடி திட்டமிட்டுள்ளார்.

அப்படி என்ன அறிவிப்பு..?
ஆகஸ்ட் 15ஆம் தேதி 7வது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட பரிந்துரைகளைத் தாண்டில் சம்பள உயர்வும், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒய்வு பெறும் வயது 55இல் இருந்து 62ஆக உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.



சம்பள உயர்வு
ஜனவரி 2016இல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவர்கள் குறைந்தபட்ச சம்பள அளவில் மாற்றத்தையும், தகுதி அடிப்படையிலான சம்பளத்தையும் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த 4 வருடத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அறிவித்த சலுகைகள்.



தபால் துறை ஊழியர்கள்
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இந்திய தபால் துறையில் இருக்கும் கிராமபுற ஊழியர்கள் மற்றும் பகுதிநேர ஊழியர்களுக்கு 56 சதவீத சம்பள உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இவர்களுக்கான அரியர் தொகை ஜனவரி 1, 2016 முதல் அளிக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


இரட்டிப்புக் கொடுப்பனவு
மத்திய அரசு ஊழியர்கள் பல துறையில் பல காரணங்களுக்காகப் பதிலாயனுப்பப்படுகிறார்கள் (deputation), இவர்களுக்கு அளிக்கப்படும் தொகையை இரட்டிப்புச் செய்து 2,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை அளிக்க மோடி அரசு அளித்துள்ளது.


8 லட்சம் ஆசிரியர்கள்
அக்டோபர் 2017இல் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் UGC மற்றும் UCH உதவி பெறும் கல்லூரியில் பணியாற்றும் சுமார் 8 லட்சம் ஆசிரியர்களுக்கு அதிரடியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவர்களது சம்பளம் தற்போது 10,400 ரூபாய் முதல் 49,800 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

குறைந்தபட்ச சம்பளம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச சம்பள அளவை 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் தற்போது குறைந்தபட்ச சம்பளம் என்பது 18,000 ரூபாயில் முதல் 21,000 ரூபாயாக வரையில் உள்ளது.

25,000 ஓய்வூதியதாரர்கள்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைகழங்கள் கல்லூரிகள் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய தொகை தற்போத 25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது

படித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்: அமைச்சர் செங்கோட்டையன்

எதிர்காலத்தில் தமிழகத்தில் பிளஸ் 2 முடித்தாலே மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்களின் மெட்ரோ மாநாட்டில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சி.ஏ படிப்பு குறித்து இரண்டு நாள் கருத்தரங்குக்கு அழைத்தமைக்கு நன்றி. சி.ஏ. பயிற்சிக்காக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர்கள் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிக்க உள்ளனர். பட்டய கணக்காகளர் படிப்புக்கு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 25 நாட்களில் 75 இடங்களில் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்காக பட்டய கணக்காளர் நிறுனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சி.ஏ. என்று சொல்லப்படும் ஆடிட்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், தமிழகத்தில் பொறியியல் படிப்பு முடித்து 1.60 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். எனவே, படித்துவிட்டு வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். 12 ஆம் வகுப்பு முடித்தாலே வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலகத்தை தர வேண்டும் என்ற முறையில் அனைத்து மாவட்டங்களுக்கு நடமாடும் நூலகங்கள் மிக விரைவிலேயே ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் 15 பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஓட்டல் மேலாண்மை, மருத்துவமனை மேலாண்மைக்கு பயிற்சி வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு. அந்தந்த ஊர்களில் உள்ள தொழில்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாணவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி, ஆடை வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும், 412 மையங்களில் ஜூலை மாதம் முதல் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழகத்தில் 10 ஆயிரம் மாணவர்கள் பயிற்சிபெறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஜூலை 2 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

ஜூலை 2 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூலை 2-ஆம் தேதியில் இருந்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லிடப்பேசி செயலியில் வருகைப் பதிவு செய்யும் முறை அமலுக்கு வருவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்யாறில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய புதிய செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை(முதல் மற்றும் இரண்டாமாண்டு)/SSLC தேர்வெழுதும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் வினாத்தாள் குறித்த தெளிவுரை: அரசு தேர்வுகள் இயக்கம் சுற்றறிக்கை:


இனி தூங்கும்போது ஸ்மார்ட்போன பக்கத்துல வைக்காதிங்க..! அதிர்ச்சி தகவல் ..!

இரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்கத்திற்கு தடையாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தலையணைக்குப் பதிலாக ஸ்மார்ட்போனை அணைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலர் மார்பில் வைத்துக்கொண்டும், தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும் தூங்குகிறார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் செல்போனில் வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவை குறைத்து வைப்பது அவசியமானது.
இந்த நீல நிற ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இரவு நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிரிப்த் பல்கலைக்கழகமும், முர்டேக் பல்கலைக் கழகமும் இணைந்து 29 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 முதல் 11 வயது நிரம்பிய 1100 மாணவ-மாணவிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரியவந்திருக்கிறது. ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள்t தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் PG ALL SUBJECT காலி பணியிடம் 32

Tamil

1. GHSS AVUDAIYAPURAM
2. TPNM VIRUDHUNAGAR
3. GHSS Seithur
4.MUNICIPAL Ammankovilpatti

5.GHSS Pappaiyanaicknpatti


ENGLISH

1. GHSS MUSTAKURICHI
2. GHSS Mallanginaru
3. GHSS seithur
4.GHSS G chatrapatti
5.GHSS MARANERI
6. GHSS papaiyanaickenpatti

MATHS 

1.GHSS SOOLAKARAI
2. GHSS sangaralingapuram

PHYSICS

1. GHSS A.MUKULAM

2. GHSS SEITHUR

3. GHSS veeracholan

CHEMISTRY
1.. GHSS MEESALUR
2.MUNICIPAL  AMMANKOILPATTI
3. GHSS ( G) KARIYAPATTI
4. GHSS Melagopalapuram
  
Biology 

1. GHSS JOHILPATTI
2. Ghss Mustakurichi

Zoolohy
1. SSN GHSS  VIRUDHUNAGAR

History 

1.GHSS B chatrapatti
2.GHSS JOHILPATTI

Political science
1.GHSS B Thirutangal

Economics

1. GHSS B chatrapatti
2.GHSS Maharajapuram
3.GHSS S. ammapatti
4.GHSS Thailapuram
5.GHSS Melagopalapuram
6. GHSS Mettukundu


 இறுதிப்பட்டியல்

BRIDGE COURSE SYLLABUS- 6th TAMIL இணைப்பு பயிற்சி பாடத்திட்டம் :