யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/1/16

பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த, 2015 நவ., டிச., மாதங்களில் நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் நேற்று மாலை, 5:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், www.b-u.ac.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மேலும், மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கு, விண்ணப்பிக்க, பிப்., முதல் தேதி, இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாடி ரீமா ரோஸ் தெரிவித்துள்ளார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி

அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குருப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (Aeronautical Quality Assurance) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க், ஓட்டுநர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Stenographer-GradeII
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்தில் 10 நிமிடங்களுக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk(LDC)
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Civilian Motor Transport Driver (Ordinary Grade)(CMTD (OG)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTaskingStaff:(MTS)
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgaeroqa.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் ஏதாவதொரு மண்டலங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
லக்னோ மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA, DGAQA,
Min of Defence,
C/OHAL, LUCKNOW, PIN:226016.
கொல்கத்தா மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
6, Esplande East, Kolkata-700069.
பெங்களூரு மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
Vimanapura Post, C/OHAL, Bengalauru-560017.
ஹைதராபாத் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
HALPost, Hyderabad-500058.
நாசிக் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
DDG, (Nasik),
DGAQA, Min of Defence,
C/OHAL, Ojhar-422207.
ஜபல்பூர் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
CO, AQAW(A),
DGAQA, Min of Defence,
Khamaria, Jabalpur-482005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016

பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு

அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,068 தொடக்கப் பள்ளிகள்; 302 நடுநிலைப் பள்ளிகள், 162 உயர்நிலைப் பள்ளிகள்; 146 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,678 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகங்களை,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள துாய்மைக் காவலர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, ஊரகப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை, மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க, மாவட்ட நிர்வாகம்,ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.அதன்படி, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளான மகளிர் குழுக்களிடம், பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.

வழிகாட்டி நெறிமுறை:

ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் இருப்பினும், புதிய ஆட்களை கல்வி குழுவினர் நியமிக்க வேண்டும் பள்ளியின் கிராமக் கல்விக் குழு கணக்கில், வட்டார வளர்ச்சி அலுவலரால் ஊதியப் பணம் விடுவிக்கப்படும்பள்ளி தலைமை ஆசிரியரால், சம்பந்தப்பட்ட மகளிர் குழுக்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்முதற்கட்டமாக, ஒன்றிய பொது நிதியில், மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கல்வி குழு வங்கி கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அவர்களுக்கு மாத ஊதியத்துடன் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தேவைப்படும் பணமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தக்க பணியாளர்களின் ஊதியம், துப்புரவுக்குத் தேவைப்படும் பொருட்கள் கொள்முதல் செய்ய வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார். 

13/1/16

B.Ed., 2 ஆண்டு பயிற்சி :பணி புரியும் பள்ளியில் விடுப்பு ஏதும் எடுக்காமல் பயிற்சி எடுக்கலாம்.



3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க, 'தினமலர் ' செய்தி எதிரொலியாக கல்வித்துறை சார்பில், நேற்று திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பட்டதாரி ஆயிரம் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதில், 2002--2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை.இதனால் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.'தினமலர் ' செய்திஇதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பணிமூப்பு பட்டியல் தயாரிக்க திருத்தப்பட்ட உத்தரவை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த உத்தரவில் '31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலையில் இருந்து பட்டதாரியாக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக்கல்விக்கு மாற்றமானவர் களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில் 2000--2001 என குறிப்பிட்டதை 2001--2002 என திருத்தம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நிம்மதிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன், துணைத் தலைவர் முகிலன் ஆகியோர் கூறுகையில், 'கல்வி இயக்குனர் கண்ணப்பன்மேற்கொண்ட இந்நடவடிக்கையால் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. 

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையே ஜனவரி மற்றும் ஜூலை 1 தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது.இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5மாநில தேர்தலுக்கு பின்னரே இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில் கொடுக்க வேண்டிய அகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி 125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.இது 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு முரணாக இருக்கும் என்பதால் ஜனவரி அகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.


இதனால் பள்ளிச் செயலர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள்கவலையில் உள்ளனர்.முறையாக கல்வித்துறையினரிடம் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு அடிப்படைஊதியத்துடன் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.தற்போது பள்ளி செயலர்களிடம் மட்டுமே முன் அனுமதி பெற்று உயர்க்கல்வி முடித்தபட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

மாநில தலைவர் இளங்கோ, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது:அரசு பள்ளிகளில் ஒரு கல்வி தகுதிக்கு 6 சதவீத ஊக்க ஊதியம், இரண்டு கல்வி தகுதிக்கு (முதுநிலைபடிப்பு) 12 சதவீத ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.பள்ளிச் செயலரிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். அதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம், என்றனர்.

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை ...

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் டி.ராமராஜ் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் 812 தொடக்கப் பள்ளிகள், 209 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,021 பள்ளிகள் உள்ளன. இதில் 1,05,705 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 


இந் நிலையில் தமிழர்களின் வாழ்வினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஓர் உன்னத பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி துவங்குகிறது. அப்பண்டிகை நாளின் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை. அன்றைய தினம் தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளைச் சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி, காப்பு கட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போகிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். மேலும், பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்வர். பெரும்பாலான ஆசிரியர்கள், நகர்ப்புறங்களில் இருந்து, தங்கள் சொந்த கிராமத்துக்கு சென்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியரும் சொந்த ஊருக்கு சென்று தங்கள் பெற்றேர் மற்றும் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
இந் நிலையில், ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் இந்த இரண்டு நாட்களும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் வேலைநாளாக செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை சார்பில் வழங்கியுள்ள நாட்காட்டியில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொருட்டு அவரவர் மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது விடுமுறை இல்லாததால், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் பல மாணவ, மாணவியர் வெளி மாவட்டங்களில் உள்ள அவரவர் சொந்த ஊருக்கு பண்டிகை நேரத்தில் பயணம் மேற்கொள்வதில் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மாணவ, மாணவியர் பொங்கல் பண்டிகையினை மனமகிழ்வுடன் சிறப்புடன் கொண்டாடவும், விடுப்புநாள் இல்லாது பேருந்துகளில் செல்வதால் ஏற்படும் சிரமங்களினாலும் அத்தகைய சூழ்நிலையை தவிர்க்க ஜனவரி 14ஆம் தேதி நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, அதனை ஈடுசெய்யும் வகையில் வேறொரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கும் ஆவன செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை: மத்திய, மாநில அரசு தரப்பு வாதங்களின் விவரம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசின் புதிய அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே இருக்கும் அறிவிக்கையை மீற முடியாது என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டுக்கான அறிவிக்கையில் காளை வதை பற்றி கவனத்தில்கொள்ப்பட்டுள்ளது என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது.மத்திய அரசின் வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதிக்கலாம். ஜல்லிக்கட்டு ஸ்பெயினில் நடைபெறுவது போன்று காளை வதை சண்டையல்ல என்று ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக வாதாடியது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல் எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.

தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!

15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின்தொடர் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்டபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களின்குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளபள்ளிகளுக்கும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவலால்தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதிசெய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும், அனைத்துநாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்விஇணையதளங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் வேண்டுகோள்வைக்கவும் வேண்டுகிறேன்.

அனைவருக்காகவும்
கடலூர் செந்தில் (எ)சி.செந்தில்குமார்,
(9487257203),
கலியமலை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி,
கடலூர் மாவட்டம்.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா: அரசு நிதி ஒதுக்கீடு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழுவினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரவும், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு விழா நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்காக, அந்தந்தப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை.ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவே இருந்ததால் அங்கு ஆண்டு விழா நடத்தப்படவில்லை.எனவே, நிகழாண்டு தொடக்கப் பள்ளிகளில் 100 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 150 பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5,000-மும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.6,000-மும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால், பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

11/1/16

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.
 சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
 இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.

சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது

: மாவட்டத்தில் உள்ள, 21 ஒன்றியங்களில் குழுக்கள் அமைத்து, 12 ஆயிரம் ஆசிரியர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், மூன்று நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, விடுமுறை எடுத்துள்ள ஆசிரியர்கள், சான்றுகள் சமர்ப்பிக்காதவர்களிடம், அதற்குரிய காரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணை குழு குறைகள் கண்டறிந்தால், மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

CPS :சர்வதேச ஓய்வூதிய சந்தையில் இந்தியா

"என்சிசி-யில் இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்பு'

தேசிய மாணவர் படையில் (என்சிசி) தங்கள் மாணவர்களை இணைத்துக் கொள்ள 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளன.
 இதுகுறித்து என்சிசி இயக்கத்தின் தலைமை இயக்குநர் அனிருத்தா சக்ரவர்த்தி தெரிவித்ததாவது: 
என்சிசி அமைப்பை அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரிவுபடுத்த 5 கட்டங்களாக திட்டங்கள் வகுத்திருந்தோம். 

 ஒவ்வோர் ஆண்டும் 40,000 மாணவர்களை எங்கள் அமைப்பில் இணைத்துக் கொண்டு வருகிறோம்.
 என்சிசியில் தற்போது 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மேலும் கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் மாணவர்களையும் இணைக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
 அதன்படி, 5 கட்ட மாணவர் சேர்ப்பின் முடிவில், அதாவது எதிர்வரும் 2018-ஆம் ஆண்டில், என்சிசி-யின் பலம் 15 லட்சமாக அதிகரிக்கும். அந்தந்தப் பள்ளி, கல்லூரி வளாகங்களில் என்சிசி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து 7,859 கல்வி நிறுவனங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளன. என்சிசியில் 28 சதவீதமாக உள்ள மாணவிகளின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டம் உள்ளது.
 குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள என்சிசி முகாமில் பங்கேற்க நாடு முழுவதும் 2,069 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த 6-ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
 நற்பண்புகள், ஒழுக்கம், தலைமைப் பண்பு, தோழமைப் பண்பு, மதச்சார்பற்ற தன்மை, மனப்பான்மை, தன்னலம் இல்லா சேவைகள், சாகச உணர்வு ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும் என்பதே என்சிசியின் நோக்கமாகும் என்றார் அனிருத்தா சக்ரவர்த்தி.

சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு சென்னையில் தொடங்கியது. இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடக்கிறது தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக தமிழகத்தில் பல்வேறு அளவில் உள்ள 15 அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி டிசம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 14ம் ேததி வரை நடந்தது. இந்த பயிற்சி முடித்த மாநில அளவிலான பயிற்றுனர்கள், மாவட்ட அளவில் உள்ள பயிற்றுனர்களுக்கு கடந்த 21, 22ம் தேதிகளில் பயிற்சி அளித்தனர். அடுத்தக் கட்டமாக 16 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு சென்னை, மதுரை, சேலம், திருச்சியில் மாவட்ட அளவிலான பயிற்றுநர்களுக்கு கடந்த 28ம் தேதி முதல் ஜனவரி 8ம் தேதி வரை பயிற்சி அளித்தனர். 

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று நடந்தது. இதில் மாநில அளவிலான பயிற்றுனர்கள், மாவட்ட அளவிலான பயிற்றுநர்கள், சட்டப்பேரவை அளவிலான பயிற்றுநர்கள் கலந்து கொண்டு தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். முதல் கட்ட பயிற்சியில் 94 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வருகிற 13ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது கட்டமாக வருகிற 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில், 49 தேர்தல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

1,330 அடி நீள திருக்குறள் பதாகை வெளியீடு திருவள்ளுவர் தினத்தையொட்டி, 1,330 அடி நீளம் கொண்ட திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது.

சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் இதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

திருவள்ளூர் தமிழ் ஆன்றோர் அவையும், தமிழர் பண்பாட்டு நடுவமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு, ராஜ்குமார் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
4 அடி அகலமும், இரண்டரை அடி நீளமும் கொண்ட பெரிய புத்தகப் பதிப்பை தமிழர் ஆன்றோர் பேரவையைச் சேர்ந்த வெற்றியரசன் பாலாஜி பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடற்கரைச் சாலையில் 1,330 அடி நீளம் கொண்ட பதாகை வெளியிடப்பட்டது. 

அதில், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், 1,330 திருக்குறள்கள், அதற்கான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. 1 கி.மீ. தூரத்துக்கு இடம் பெற்றிருந்த பதாகையை பலரும் ஆர்வமுடம் பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் மொழி கூறியதாவது:
உலகின் மிகச் சிறந்த மெய்யியல், நீதி சமூகவியல், அரசியல், இல்லறம், வாழ்வியல் நூலான திருக்குறளை சர்வதேச அளவில் அனைவரும் படித்துப் பயனடைய வேண்டும். குறளின் நெறிப்படி அரசுகளும் பின்பற்றி நல்லதோர் உலகத்தை படைக்க உறுதி ஏற்க வேண்டும். திருக்குறளால் தமிழர்கள் பெருமைப்படுவதோடு நில்லாமல், தங்களது சந்ததியினருக்கும் போதிக்க முன்வர வேண்டும். திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் பயிற்றுவிக்க வேண்டும், திருவள்ளுவருக்கு தமிழில் அஞ்சல் நாணயம் வெளியிட வேண்டும்.
மக்களவை வளாகத்தில் அவரது உருவச் சிலை அமைக்க வேண்டும். தமிழை நாட்டின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 1,330 அடி பதாகையை வெளியிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டு 400 அடி நீளமுள்ள திருக்குறளை வெளியிட்டோம் என்றார்.
கின்னஸில் இடம் பெற...!
கின்னஸில் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 1,330 அடி நீளமுள்ள திருக்குறள் பதாகை வெளியிடப்பட்டது. மேலும் 4 அடி நீளத்திலும், இரண்டரை அடி அகலத்திலும் 142 பக்கம் கொண்ட பெரிய புத்தகப் பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பதாகையும், அதில் இடம் பெற்றுள்ள குறளுக்கான புகைப்படமும் தேர்வு செய்து தயாரிப்பதற்கு 42 நாள்கள் பிடித்துள்ளது. இதை மாநில அளவில் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவ, மாணவிகளிடம் குறள் ஆர்வத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்

தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருந்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் மாதம் 1ம் தேதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பள்ளி, வணிக வளாகம், தொழிற்சாலைகள்,
குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்து வீதிக்கு  வந்தனர்.

இந்த பெரும் சேதத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட பாடப்புத்தகங்களும் சேதமானது. பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டதால் தொடர்ந்து ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டிசம்பர் மாதம் நடக்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி மாதம் நடக்கும் என்று அரசு அறிவித்தது. இதன்படி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று தொடங்கி 27ம் தேதி வரை நடக்கிறது. கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளும் இத்துடன் நடத்தப்பட உள்ளது