யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/4/17

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். 
இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர்.

இந்நிலையில்,இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு புறக்கணிப்பு : முதுநிலை ஆசிரியர்கள் முடிவு.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஏப்.,29 அன்றும், 2ம்தாள்தேர்வு ஏப்.,30ம் தேதியும் நடக்கிறது.இத்தேர்வு பணியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல முதுநிலை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமனம் செய்யப்படுவதால், பல ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்கள், பணியில் இளையோரான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், துறை அலுவலர்களாக பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் துறை அலுவலர்களான பட்டதாரி ஆசிரியர்களின் கீழ் அறைக் கண்கணிப்பாளராகவும் செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆசிரியர் தகுதி தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், என மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

சங்க மண்டலச் செயலாளர் கதிரேசன், மாவட்டத் தலைவர் சலேத்ராஜா கூறியதாவது: அனுபவத்திலும், தகுதியிலும் குறைந்தவர்களுக்கு கீழ் பணி செய்ய அறிவுறுத்துவது எந்த நிலையிலும் ஏற்பதற்குஇல்லை. அதனால் சங்க கூட்டத்தில் 'டெட்' தேர்வை புறக்கணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல்- கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
(நாள்: 20.04.2017) ||தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

Lab Asst Appointment - Chennai District Selected Candidates List

DEE - Elementary Education Teachers Transfer Form - 2017 -18 (New)

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும்புதிய விண்ணப்பம்.


பள்ளிகளுக்கு விடுமுறை பயறு வாங்க அவசரம் ஏன்?

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு, பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சத்துணவு மையங்கள் உள்ளன. இவற்றில், வாரத்துக்கு ஒரு நாள், ஒரு மாணவருக்கு, தலா, 20 கிராம் கருப்பு கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, பயறு வகைகளை வாங்கி, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணிபக் கழகம், 600 டன் கருப்பு கடலை; 500 டன் பச்சை பயறு வாங்க அவசரம் காட்டி வருகிறது.

இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளிகள் துவங்கும் சமயத்தில், பயறு வாங்கினால், சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே, தற்போது, ஐந்து கோடி ரூபாய்க்கு, இரு வகையான பயறு வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, மே, 19 கடைசி நாள். அடுத்த மாத இறுதிக்குள் பயறு வாங்கப்பட்டு, ஜூனில் பள்ளி திறக்கும் முன் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன்' கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.

ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள் சேர்க்கப்படும்,'' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

'ஸ்வயம்' திட்டத்தில், தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற, அனில் சஹஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:

சில கல்வி நிறுவனங்கள், 15 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றிஅமைக்காமல் இருப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சவாலாக அமைகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப, கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., வரையறை செய்யும் பாடத்திட்டத்தை, 70 முதல், 80 சதவீதம் பயன்படுத்தி, மற்றதை, பல்கலைகளே நிர்ணயிக்கலாம். நாடு முழுவதும், 275 இன்ஜி., மற்றும் தொழில்
நுட்பக் கல்வி நிறுவனங்கள், தானாக முன்வந்து மூட விண்ணப்பங்கள் அளித்து உள்ளன.
'ஆன்லைன்' மூலம் கல்வி கற்பதற்காக, அமைக்கப்பட்ட, 'ஸ்வயம்' திட்டத்தில், 280 பொறியியல் பாடப்பிரிவுகள் மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளன.

மேலும், 350 பாடங்களுக்கான வரையறைகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மருத்துவம், சட்டம் என, பல்வேறு துறைகளில், 2,000 பாடங்கள், 'ஸ்வயம்'
திட்டத்தில் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு.

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல
ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், உறுப்பினர்கள் இடம் பெறுவர். மாணவர்களின் பெற்றோர் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், செய-லர், பொருளாளர் போன்றோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், அரசியல்வாதிகள், செல்வாக்கான அதிகாரிகள், உள்ளூர் அரசியல் செல்வாக்கு கொண்ட தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பிடியில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சிக்கியுள்ளது.

எது நடக்கிறதோ இல்லையோ, பெற்றோர் - ஆசிரியர் கழகம் பெயரில், ரசீது அச்சடித்து, மாணவர்களிடம் வசூல் நடக்கிறது. வெளியில், நன்கொடையும் வசூலிக்கின்றனர்.இந்த தொகைக்கு, தணிக்கையும் இல்லை; கண்காணிப்பும் இல்லை. தலைமை ஆசிரியரும், பி.டி.ஏ., தலைவரும் என்ன கணக்கு சொல்கின்றனரோ, அதை பெற்றோர் நம்ப வேண்டும்.

அதேபோல், உள்ளூர் அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்கவர்கள், கவுரவ பதவிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை பயன்படுத்துகின்றனர்.விதிகளின்படி, அந்த பள்ளியில், தங்கள் பிள்ளை கள் படித்தால் மட்டுமே பதவி உண்டு. பேரன், பேத்தி பெற்ற பிறகும், பலர் பதவியை விடாமல் உள்ளனர்.

பெற்றோர் கூறுகையில்,'அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவதற்கு,பெற்றோர்- ஆசிரியர் கழகம் சரியாக இயங்காதது தான், முதல் காரணம். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்
படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகம், 'கவனிப்பதால்' அவர்களும் கண்டு கொள்வதில்லை' என்றனர்.

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்

புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

தனியார் தொழில் பள்ளிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத, 54 நீண்ட கால தொழில் பிரிவுகள்; 36 குறுகிய கால பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன.புதிதாக தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும், ஜன., 2 முதல் ஏப்., 30 வரை, விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த ஆண்டு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், விண்ணப்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை RTGS, NEFT ,IMPS , UPI பற்றி தெரிந்து கொள்வோம்!!!

வங்கிகளில் பணம் அனுப்பும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

RTGS : Real Time Gross Settlement.

வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் RTGS மூலம் பணம் அனுப்பலாம். (வங்கிக் கிளைகளின் வேலை நேரத்தைப் பொறுத்து இது மாறுபடும்).

குறைந்தபட்சம் 2 லட்ச ரூபாய் அனுப்ப வேண்டும்.

தொகை அனுப்பிய உடனேயே பெறுநரின் வங்கிக்கு தகவல் தரப்படும். அடுத்த 30 நிமிடங்களுக்குள் தொகையை பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். எதுவும் பிரச்னை என்றால் உடனடியாக அனுப்புநரின் வங்கிக்கு பெறுநரின் வங்கி தொகையைத் திருப்பி அனுப்பி விட வேண்டும்.
_____

NEFT : National Electronic Fund Transfer

வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை. சனிக்கிழமை வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை.

இதில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு தடவை அனுப்பும் வங்கியிலிருந்து மும்பையில் உள்ள NEFT சர்வீஸ் செண்டருக்கு தகவல் அனுப்பும். அங்கிருந்து பெறுநரின் வங்கிக்கு தகவல் அனுப்பப்பட்டு பணம் பெறுநரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். Core banking சிஸ்டத்தில் செயல்படுவதால் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை செயல்பட்டாலும், இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை. உள்ளூர் விடுமுறை தினங்களிலும் கூட பாதிப்பு இருக்காது.

NEFT-ல் அனுப்பப்படும் தொகையை அடுத்த 2 மணி நேரத்துக்குள் பெறுநரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்காவிட்டால் அனுப்புநரின் வங்கிக் கணக்கிற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் திருப்பி அனுப்பப்பட்டு விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
_______

மேலே உள்ள இரண்டுமே வங்கி வேலை நாட்களில், வேலை நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.


IMPS : Immediate Payment Service

24x7 எந்த நேரத்திலும் உடனடியாக பணம் அனுப்பும் முறை. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஏ.டி.எம். ஆகிய வழிகளில் IMPS சர்வீஸ் வசதி உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அடுத்த நொடியில் பெறுநரின் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்.

UPI : Unified Payments Interface

இதுவும் IMPS போல தான். ஆனால் NEFT, RTGS, IMPS போன்றவற்றையெல்லாம் ஆன்லைனில் நான் உபயோகிக்கும் போது பெறுநரின் வங்கிக் கணக்கு விபரங்களை நாம் முதலில் பதிவு செய்து அதன் பிறகே தொகை அனுப்ப இயலும். புதிதாக பெறுநரைப் பதிவு செய்தால் சில வங்கிகளில் 30 நிமிடங்களில் தொகை அனுப்பும் வசதி செயல்படுத்தப்படும். சில வங்கிகளில் 24 மணி நேரமாகும். UPI-ஐயைப் பொறுத்தவரை பதிவு செய்து காத்திருக்கத் தேவையில்லை. நேரடியாக பெறுநரின் மொபைல் எண் (அவரும் upi-யில் பதிவு செய்திருக்க வேண்டும்), அல்லது ஆதார் எண், அல்லது வங்கிக் கணக்கு எண் + IFS கோடு (IFSC) ஆகியவற்றைக் கொண்டு உடனடியாக எப்போது வேண்டுமானாலும் தொகை மாற்ற முடியும். இதில் இன்னும் சில வங்கிகள் இணையவில்லை.

அந்தந்த வங்கியின் இண்டர்நெட் பேங்கிங்கிலும், மொபைல் செயலியிலும் UPI என்ற ஆப்ஷன் இருக்கும். அல்லது BHIM என்ற மொபைல் செயலியைத் தரவிறக்கிக் கொண்டும் இதனை உபயோகித்துக் கொள்ளலாம்.

பள்ளிக்கல்வி - கோடை விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கூடாது என அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகள் / தனியார் பள்ளிகள் / மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் இதர வாரிய பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கால அட்டவணை

தொடக்கக் கல்வி 2017-18ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

22/4/17

ஊழியர் நலனில் அக்கறையில்லாத அரசு: ஊழியர்கள்சங்கம் புகார்

தற்போதைய தமிழக அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மதுரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மத்தியில், ஆதரவு திரட்டிய, அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் கூறியதாவது:காலவரையற்ற வேலை நிறுத்தம் குறித்து, மார்ச்சில் அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி விட்டோம். இதுவரை, சங்க நிர்வாகிகளை அழைத்து பேசவில்லை. இடைக்கால நிவாரணம் குறித்து, புதிய ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும்.

 சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, காலமுறை சம்பளம் வழங்குவதும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போதைய அரசு, ஊழியர்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே, 61 துறை ஊழியர்கள், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், உள்ளாட்சி தேர்தல் உட்பட, பல்வேறு பணிகள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது - பள்ளிக்கல்வி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இன்று தேர்வுகள் முடிந்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, ஏப்., 28ல், புதிய கல்வி ஆண்டுக்கான கோடை வகுப்புகள் முடிந்து, 29 முதல் விடுமுறை விடப்படுகிறது. 
இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், கோடையில் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளன. சில பள்ளிகள், மதம் சார்ந்த வகுப்புகளும், சில பள்ளிகள், பிளஸ் 2 மற்றும் பத்தாம்வகுப்புகளுக்கு, சிறப்பு வகுப்பும் நடத்துகின்றன.இதையடுத்து, 'எந்த பள்ளியும் கோடை விடுமுறையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, பள்ளிக்கல்விஇயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் 5 தேர்வுகளில் தேர்ச்சி வேண்டும்

'ஐந்து துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமே, உதவி தொடக்க கல்வி அலுவலர் பணிமாறுதல் பெற முடியும்' என, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் 'சீனியாரிட்டி' படி உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் வழங்கப்படுகிறது.தற்போது 2017 க்கான உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில சீனியாரிட்டி பட்டியலை கல்வித்துறை தயாரித்து வருகிறது.

இதில், 2010 டிச.31 வரை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோர் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான பரிந்துரைகளை அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இயக்குனரகத்திற்கு அனுப்ப உள்ளனர்.பட்டியலில் இடம் பெறுவோர் 2016 டிச.31க்குள் பள்ளி துணை ஆய்வாளர், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு, மாவட்ட அலுவலக நடைமுறை உள்ளிட்ட 5 துறை மற்றும் சிறப்புத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அன்றைய தேதியில் 57 வயது பூர்த்தி அடைந்தோராக இருக்க கூடாது. குற்றவழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்க கூடாது என தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.இந்த 5 தேர்வுகளில் தேர்ச்சி பெறாதோரை பரிந்துரை செய்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும்?- மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆலோசனை

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும் அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

*பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதை முன்னி லைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப் படுத்த வேண்டியது அவசியம்.

*அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்துவது தொடர்பாக உதவி மற்றும் கூடு தல் தொடக்கக் கல்வி அதிகாரி களுடன் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் கலந்தாலோசனை செய்ய வேண்டும்.

*அங்கன்வாடிகளில் படிக்கும் குழந் தைகளைக் கண்டறிந்து அவர் களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, வீடு வீடாகச் சென்று, பள்ளி செல்லக்கூடிய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

*பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

*அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா நலத்திட்டங்களான புத்தகம், பாடக் குறிப்பேடு, சீருடை, காலணி, கணித உபகரணப் பெட்டி, கிரையான், வண்ண பென்சில்கள், அட்லஸ், ஸ்கூல் பேக் ஆகிய அனைத்தும் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்ற விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

*அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களின் உதவியுடன் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

*மாணவர்களுக்கு வசதியான, காற்றோட்டமான கட்டிடங்கள், மதிய உணவு, பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி, தகுதி படைத்த நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இருப்பதை பெற்றோருக்கு எடுத்துக்கூற வேண்டும்.

*குழந்தை தொழிலாளர்களைக் கண்டறிந்து அவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கப்படுகிறது என்றும், அந்த வகுப்புகளில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான ஆங்கிலவழிக் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் மற்று மாணவர்கள் மூலம் பேரணி நடத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

*இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணிக்கு கணினி வழி தேர்வு.

ஆசிரியர் நியமனத்தின் போது, அவர்களின் ஆங்கில மொழி மற்றும் பாட திறனை சோதிக்கும் வகையில், கணினி வழி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி உள்ளது. அரசு பள்ளிகளில், ஒரு சிலரை தவிர, மற்ற ஆசிரியர்கள், ஆங்கில மொழி திறனின்றி உள்ளனர்.இதற்காக, ஆங்கில மொழி அறிவு உடைய ஆசிரியர்களை, புதிதாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, ஆங்கில திறன் கொண்டவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு முறை மாற்றப்பட உள்ளது. முதலில் போட்டி தேர்வுகளுக்கான, விண்ணப்ப பதிவு, 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.

அதேபோல், வரும் காலங்களில் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வையும், கணினி வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, மற்ற துறைகளுக்கான ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளை, கணினி வழி தேர்வாக மாற்ற, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.