யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

30/8/17

FLASH NEWS : CPS-ஐ இரத்து செய்யும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது.*

*செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும்* 

செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும்.*

*9&10 சனி ஞாயிறு விடுமுறை.*


*செப்டம்பர் 11 முதல் வேலைநிறுத்தம் தொடரும். மறியல் குறித்து
சனிக்கிழமை அன்று அறிவிக்கப்படும்.*

அரசுப் பள்ளிகளில் 'மாணவர் கலைத் திருவிழா': 150 பிரிவுகளில் போட்டி நடத்த அரசாணை வெளியீடு

தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களின் கலை, இலக்கிய, தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் கலைத்திருவிழா என்ற
தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 பிரிவுகளில் பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் கொண்ட மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.4 கோடி செலவிடப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:
4 பிரிவுகளில் போட்டிகள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி அடுத்தடுத்த நிலைகளான கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில அளவில் நடைபெறும். ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெற்றவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் பிரிவு 1-ன் கீழ் நடைபெறும் போட்டிகள் ஒன்றிய நிலையிலும், 2-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் கல்வி மற்றும் வருவாய் மாவட்ட அளவிலும், பிரிவு 3-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் மாநில அளவிலும் நிறைவு பெறும்.
வெற்றி பெற்றால் மதிப்பெண்: போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு தரமதிப்பு (கிரேடு) வழங்கப்படும். 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ஏ கிரேடு மற்றும் 5 புள்ளிகள், 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பி கிரேடு மற்றும் 3 புள்ளிகள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் சி கிரேடு மற்றும் 1 புள்ளி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறும் 3 போட்டியாளர்களுக்கு ஒரு போட்டிக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இது தவிர அந்தந்தப் பிரிவுகளுக்கு உரிய பரிசுகளும் வழங்கப்படும். இததற்குத் தேவைப்படும் ரூ.4 கோடி நிதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பெறுவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பள்ளிக் கல்வி நிறுவன இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி வாரம் அல்லது பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கு ஏற்றவாறு போட்டிகள் நடத்த வேண்டும். போட்டிகளின் முடிவுகள் குறித்து மேல்முறையீட்டு மன்றம், மலர் தயாரிப்பு, பரிசுப் பொருள்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்! - நிதிஆயோக் பரிந்துரை

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம்
என்று மத்திய அரசுக்கு நிதிஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
தனியார்-பொதுத்துறை கூட்டு (PPP) என்ற திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறைந்த மற்றும் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கூறியிருக்கிறது நிதிஆயோக். இதுதொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்ட மூன்றாண்டு செயல்திட்டத்தின் கீழ் இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ’கடந்த 2010-2014-ம் ஆண்டு இடைவெளியில் 13,500 அரசுப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டன. ஆனால், இதே காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.3 கோடி அளவுக்கு குறைந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.85 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 3.7 லட்சம் அரசுப் பள்ளிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். இது மொத்த அரசுப் பள்ளிகளில் 36 சதவிகிதம் ஆகும்.

ஆசியர்கள் வருகைப் பதிவு குறைவு, பயிற்றுவித்தலில் குறைவான நேரமே செலவிடுவது, தரமில்லாத கற்றல் முறைகள் ஆகியவைகளே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய முக்கிய காரணங்கள். இதனால் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையை மாற்ற ஈடுபாடு கொண்ட மாநிலங்கள் உதவியுடன் பணிக்குழு ஒன்றை உருவாக்கி அனைத்து சாதகமான சூழல்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

* தினேஷ் ராமையா

DEE PROCEEDINGS- CPS -ல் பணி ஓய்வு /இறந்த ஆசிரியர்களுக்கு- CPS தொகை பெற்று வழங்கப்பட்ட விவரம் கோருதல் சார்பு

ஆசிரியர் தினப் போட்டிகள் 2017-தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவிப்பு..

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரைப்
போட்டிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்  நடைபெற்று வருகின்றன..

இந்தஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..

பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி :
*கனவு ஆசிரியர்*

ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி :
*என்னைச் செதுக்கிய புத்தகம்*

ஆர்வலர்கள் & பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டி :
*எங்க ஊரு.. எங்க பள்ளி..*

*குறிப்பு :*

👉 படைப்புகள்  A4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்..

👉🏼ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்..

👉🏼படைப்புகள் புதியதாகவும் பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..

👉🏼போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்..

👉🏼சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விஞ்ஞானச் சிறகு, துளிர், விழுது போன்ற இதழ்களில் பிரசுரிக்கப்படும்..

👉🏼 படைப்புகள் செப்.10 க்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்..

👉🏼ஒவ்வொரு மாவட்ட வாரியாக பங்கேற்பாளர்கள் பட்டியலையும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற படைப்புகளையும் ஆசிரியர் தின போட்டிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு செப்.15 க்கு முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்..

*மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் விபரம் செப்.24 ல் நடைபெறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழுவில் அறிவிக்கப்படும்..

*www.tnsf.co.in என்ற இணைய தளத்திலும் வெளியிடப்படும்..

📞மேலும் விபரங்களுக்கு…
சாஸ்தா சுந்தரம்
மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் தின போட்டிகள் 2017
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

அலைபேசி: 9942190845

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் - அரசுக்கு பரிந்துரை :

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து தனியார் பள்ளிகளை நடத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதிய வசதிகள் இல்லாத காரணங்களால் கடந்த 2010- 2014 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.13 கோடியாக குறைந்து விட்டதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில் தனியார்
பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 1.85 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ அறிவிப்பு:

திட்டமிட்டபடி 7.9.17 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு.
7ஆம் தேதி வட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்
8ஆம் தேதி ஆட்சியர் அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டம்
10ஆம் தேதி உயர்மட்டக்குழு கூட்டம்.

29/8/17

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு... ஆகஸ்ட் 31 கெடு

 பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தக் கெடு தேதி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைய உள்ளது. 

 நம் நாட்டில் வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டைப் பெறலாம்.இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்தக் காலக்கெடுவுக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழுமை பெறவில்லை. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நேரடி வரிவிதிப்பு கழகமும் நீட்டித்தது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கானகால அவகாசம் ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், உங்களுடைய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது மட்டுமல்லை, அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது.

21/8/17

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

அரசுபள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.மத்திய அரசின், அனைவருக்கும்
கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், 2012ல், தமிழக அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

முதலில், 5,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்பட்டது. பின், 2014ல், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, 700 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்க, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குனர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர், எஸ்.ஏ.ராஜ்குமார் கூறியதாவது:பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு, 9,200 ரூபாய் மாத ஊதியம் நிர்ணயித்துள்ளது. அந்த தொகையை, தமிழக அரசு முறையாக பெற்று, அதை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

FLASH NEWS : JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்



மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த
வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வருகிற 22-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தவேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திட நேற்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்தவேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

12 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண்பதற்கு தயாராக இல்லாத அரசின் நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும். வருகிற 22-ந் தேதி திட்டமிட்டபடி அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இம்மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதுடன் தமிழகம் முழுவதும்  சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒரு நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்த 3-வது கட்டப் போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளோம்.


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம், மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை' என்றார்.

முதல்வருடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: செங்கோட்டையன்

ஈரோடு: வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ந் தேதியன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஆனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:

வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ஆண்டு 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

அந்தமாணவர்கள் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.’

சி.பி.எஸ். என்றால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அலறியடித்து
ஓடுகிறார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது சி.பி.எஸ்.சில்.
.பி.எஸ். என்றதும் ஏதோ ஒரு கல்வித்திட்டம் என்று நினைக்க வேண்டாம். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய ஓய்வூதிய திட்டம்தான் சி.பி.எஸ்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ‘கான்ட்ரிபியூட்டரி பென்சன் ஸ்கீம்’ என்ற பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

சி.பி.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தாலும், இதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே அமல்படுத்திக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் இந்த புதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லை.

சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்து உள்ளது. கடந்த ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியபோது இந்த கோரிக்கை முதலிடத்தை பிடித்து இருந்தது. தற்போது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த போராட்டமும், 22-ந் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நடத்த இருக்கும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திலும் புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம் என்பதே முக்கிய கோரிக்கையாக கூறப்பட்டு உள்ளது.

தொடக்கத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்த சில விமர்சனங்கள் இருந்தாலும், ஊழியர்களிடம் அதற்கான எதிர்ப்பு எதுவும் இல்லை.

இந்தநிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து, பணியில் இருந்தபோது உயிரிழந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணிக்கொடைகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதே முதல் அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது.

விபத்தில் இறக்கும் அரசு ஊழியர்-ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று யாருக்கும் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டபோது அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.

எனவேஜேக்டோ-ஜியா போன்ற அமைப்புகள் இதுபற்றிய ஆய்வினை நடத்தியபோது, 2004-ம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் செலுத்திய தொகைக்கான கணக்கு என்னவானது என்றே தெரியவில்லை என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி பழைய ஓய்வூதிய திட்டம் அளித்த பல்வேறு கொடைகள், பண பலன்கள் எதுவும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை என்பதும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

முன்பு அரசு பணியில் சேர்ந்துவிட்டால் ஓய்வுக்குப்பிறகு வாழ்நாள் முழுவதும் ஒரு வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தற்போது ஓய்வுக்கு பின்னர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் மட்டுமே ஒரு அரசு ஊழியரின் வாழ்க்கையை ஓட்டுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறது. அதுவே இல்லை என்கிறபோது பணியில் பிடிப்பு இல்லாத நிலையில் இருப்பதாகவே பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தெரிவிக்கிறார்கள்.


எத்தனையோ போராட்டத்துக்கு பின்னரும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படாமல், ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கும்போதும் சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்வதை பார்த்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அலறுகிறார்கள்.

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடுமுழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை
மத்திய அரசு கேட்டுள்ளது.
மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.


இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளது. இணைப்பு அடிப்படையில் மாற்றம் பெறுகின்ற பள்ளிகள் பின்னர் மாதிரி பள்ளிகளாக செயல்படும். பள்ளிக்கு தேவையான இட வசதிகளை ஏற்படுத்துதல், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அதற்கு ேதவையான அளவு ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்துதல், கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல் போன்றவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் மசோதாவிற்கு இறுதிவடிவம் கொடுக்கப்படும்.

CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்  21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் 
கருத்துகளை கேட்க உள்ளது.

தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில், அரசும், ஊழியர்களும், ஓய்வூதிய தொகையை பங்கிட்டுச் செலுத்த வேண்டும்.ஆனால், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, 14 ஆண்டுகளான நிலையில், ஊழியர்களின் பங்களிப்பு தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஊழியருக்கான முழுப் பலன் வழங்கப்படவில்லை.

'இது, பாதுகாப்பில்லாத திட்டம்' எனக் கூறி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இதை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2016 பிப்ரவரியில், தொடர் போராட்டமும் நடத்தினர். அதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, வல்லுனர் குழுவை அரசு அமைத்தது.இக்குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது தலைமையில், வல்லுனர் குழுவினர், 21ம் தேதி முதல், மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினரின் கருத்துக்களை கேட்க உள்ளனர்.

தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ( GRAFF ) பத்திரிக்கை செய்தி!

JACTO - GEO | 22.08.2017 ONE DAY STRIKE - REG NEW PRESS RELEASE




JACTO-GEO ASSOCIATION -NEW LIST....