யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/18

மாணவர்களை துன்புறுத்தியதாக கூறி ஆசிரியரிடம் ரூ1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 2 பேர் கைது

பிரவுசிங்' மையங்களை தவிர்க்க வேண்டும் : இன்ஜி., கவுன்சிலிங் செயலர் எச்சரிக்கை

இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கிற்கு, தனியார் இணையதள மையங்களை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்,''


என, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தும்முறை, மாணவர்கள் அவற்றில் பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து, தமிழ்நாடு இன்ஜி., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ், நேற்று நிருபர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விண்ணப்ப பதிவு மற்றும், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை முடிந்துள்ளன. மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், ஐந்து பிரிவுகளாக, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. தரவரிசையில் முன்னிலை இடம் பெறும், 15 ஆயிரம் பேர், முதல் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்பர்.அடுத்த, 15 ஆயிரம் பேர் இரண்டாம் பிரிவிலும், மீதம் உள்ளவர்கள், அடுத்தடுத்த மூன்று பிரிவுகளிலும் பிரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும்.கவுன்சிலிங்கில், ஆன்லைனில் விருப்பமான பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை பதிவு செய்ய, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். மூன்றாம் நாள் மாலை, 5:00 மணிக்கு விருப்ப பதிவுக்கான, 'போர்டல் லாக்' செய்யப்படும்.அதற்குள், மாணவர்கள் தங்கள் விருப்ப பதிவை பதிவு செய்து விட வேண்டும். ஒரு மாணவர் எத்தனை கல்லுாரிகள், பாடப்பிரிவை வேண்டுமானாலும், பதிவு செய்யலாம்.தரவரிசைக்கு ஏற்ப, அவருக்கான பொது ஒதுக்கீடு அல்லது இன ரீதியான ஒதுக்கீடு அடிப்படையில், இடம் உள்ள கல்லுாரிகளில், ஆன்லைன் வழியே, தானாகவே தோராயமான இட ஒதுக்கீடு வழங்கப்படும்.அதை மாணவர்கள் உறுதி செய்வது கட்டாயம். மாணவர்கள் அளித்துள்ள விருப்ப பதிவில், முன் வரிசையில் எந்த இடம் காலியாக உள்ளதோ, அதையே கணினி வழி, 'சாப்ட்வேர்' மேற்கொள்ளும்.எனவே, மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் கல்லுாரி, பாடப்பிரிவு எது என்பதை, முன்னுரிமை அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும்.அடுத்தடுத்த விருப்பங்களை, அடுத்தடுத்த வரிசையில் பதிவு செய்ய வேண்டும். முதலில் உள்ள கல்லுாரியில் இடம் இல்லாவிட்டால், அடுத்த இடம் தேர்வாகும்.அதுவும் இல்லாவிட்டால், அதற்கு அடுத்த இடம் தேர்வாகும். இந்த முறையை அறிந்து, மாணவர்கள் விருப்பமான பாடம், கல்லுாரி வரிசையை மேலிருந்து கீழாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.தனியார் பிரவுசிங் மையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் உதவி மையங்கள் வழியாக, கவுன்சிலிங் பதிவுகள் மேற்கொள்வதை, மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.மாறாக, மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்கள், அரசின் சார்பில் செயல்படுகின்றன. அவற்றுக்கு சென்று, பதிவுகளை மேற்கொண்டால், பாதுகாப்பானதாகவும், யாருடைய குறுக்கீடும் இன்றி இருக்கும்.பெரும்பாலும், வீட்டில் உள்ள கணினிகளில் தாங்களாகவே சுய முடிவு எடுத்து, பதிவு செய்வது சிறந்தது. உதவி மையங்களை பொறுத்தவரை, அவற்றில் தனியார் நிறுவனங்களின் குறுக்கீடுகள் கிடையாது.அண்ணா பல்கலையால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், இணையதளத்தில் பதிவு செய்யும் போது, மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவர்.
இவ்வாறு ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். 

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இருக்காது: CBSE

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. 
தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி., தரும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்தக்கோரி வழக்கு தொடப்பட்டது. 
இதுகுறித்த விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., உத்திரவாதம் அளித்தது. தொடர்ந்து இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்தது.

பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வரும், 16ம் தேதி வினியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 16ம் தேதி, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

 'மார்ச்சில், பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய அனைவருக்கும், ஜூலை, 16ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். 'மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி, சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

309 டெக்னிக்கல் எஸ்.ஐ., பணி ஆக.10 க்குள் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமம் சார்பில், 309 டெக்னிக்கல் எஸ்.ஐ.,
பணியிடங்களுக்கு இன்று (ஜூலை 11) முதல் இருபாலரும் ஆன்லைனில் (tnusrbonline.org) விண்ணப்பிக்கலாம். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உண்டு. ஆக.,10ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.


விண்ணப்பிப்பவர்கள் 2018 ஜூலை 1 ல் 20 வயது நிரம்பியவராகவும், 28 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். (1990 ஜூலை 1 அல்லது அதற்கு பின் பிறந்தவர், 1998 ஜூலை 1 அல்லது அதற்கு முன் பிறந்தவர்). பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது உச்ச வரம்பு 30 வயது. ஆதிதிராவிடருக்கு 33 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் போலீஸ் துறையில் உள்ளவர்களுக்கு 45 வயது இருக்கலாம்.தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி வாரியத்தால் வழங்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டய படிப்பில் குறைந்தபட்சம் 2ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தொழில்நுட்ப கல்வி குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியியல் பட்டம் ( பி.டெக்.,- பி.இ.,) பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம் 500 ரூபாய். மேலும் விபரங்களை சீருடை தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்

PGTRB விரைவில் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு
பாடப்பொருள்மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால்தெரியப்படுத்துங்கள். பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம்நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும். அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக விழாவின் போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமி, மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர்ச.கண்ணப்பன், இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் தீக்ஷா மற்றும் மின்னணு மதிப்பீடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடமேற்கு வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்பதால் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 3 வாரங்களுக்குப் பின் மீண்டும் வலுவடைந்துள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கிய பருவமழையால், ஜூன் மாதம் முதல் 2 வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதிகளில் அதிக மழை கிடைத்தது. ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழகத்தில் 64 மி.மீ மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால் இயல்பைவிட 28 சதவீதம் அதிகரித்து, 81.9 மி.மீ நேற்று வரை பதிவாகியுள்ளது.கடந்த 3 வாரங்களாக பருவமழை வலுவிழந்து காணப்பட்டது.
 தற்போது மீண்டும் பருவக்காற்று வலுவடைவதால் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. அதன்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கோவை பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் கடந்த 3 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சம் கோவை சின்னக்கல்லாரில் 110 மி.மீ, வால்பாறையில் 90 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 80 மி.மீ, பொள்ளாச்சியில் 60 மி.மீ, நீலகிரி தேவலாவில் 40 மி.மீ, தேனி பெரியார் பகுதியில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து நேற்றும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில்,  வடமேற்கு வங்க கடலில் ஆந்திரா கடல் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி நிலவி வருகிறது. இது வரும் 13ம் தேதி வலுப்பெறும் என்று இந்திய  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் திடீர் மழைசென்னையில் நேற்று மாலை 6.15 மணி அளவில் திடீரென மழை பெய்தது.
 தேனாம்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், திருவான்மியூர், மெரினா காமராஜர்  சாலை உள்ளிட்ட பல இடங்களில் மாலை லேசான மழை பெய்தது. பின்னர் இரவு 8 மணி  அளவில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாசாலை, அண்ணாநகர்,  ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், கிண்டி உள்ளிட்ட பல இடங்களில்  விட்டு, விட்டு சில நிமிடங்கள் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பச் சலனத்தால் நேற்று மழை பெய்துள்ளது.

ஒன்றாம்வகுப்பு புதிய பாடநூல் சார்ந்த கருத்தாளர்களுக்கான பயிற்சியின் போது வழங்கப்பட்ட சில தகவல்கள்:

1.புதிய கற்பித்தல் முறையில் 1-3 வகுப்புகளுக்கு
Lesson plan எழுத தேவையில்லை.

2.Work done register தேவையில்லை, விரும்பினால் ஆசிரியர் எழுதி பராமரிக்கலாம் .

 3.கம்பிப்பந்தல்,கீழ்மட்ட கரும்பலகை, காலநிலை அட்டவணை, ஆரோக்கிய சக்கரம், சுயவருகைப்பதிவேடு ஆகியன பயன்படுத்த வேண்டும்

4.CCE RECORD உண்டு

5.இந்த ஆண்டுமுதல்  SKILLS ACHIEVEMENT RECORD or CHART என்ற ஒன்றை உருவாக்கி பயன்படுத்தவேண்டும்

 6. புதிய கற்பித்தலுக்கென எந்தவொரு குழு அட்டைகளும் பயன்படுத்த  தேவையில்லை.

 7.நான்கு & ஐந்து வகுப்புகளுக்கு SALM முறையில் கற்பித்து Lesson plan எழுதவேண்டும் 💐💐💐💐💐💐 மற்ற பிற செய்திகள், பயிற்சிகள், நிகழ்வுகள் வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியில் BRT & கருத்தாளர்கள் மூலம் தெரிவிக்கப்படும்.. அதுவரை ஆவலுடன் காத்திருங்கள் 💐காத்திருப்போம்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடி..!

தமிழகத்தில் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்காண தேர்வில்
45 மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை, 81 மதிப்பெண் பெற்றதாக கூறி பணிக்கு தேர்வு செய்து முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை உருவாகி உள்ளது. தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடி

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான தேர்வில் நிகழ்ந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண் பெற்றதாக கூறி தவறாக தேர்வு முடிவுகளை வெளியிட்ட மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 1ந்தேதி நடந்த 3375 காலிபணியிடங்களுக்காண முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது வெளியிடப்பட்ட தகுதி பட்டியல் மூலம் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த தேர்வில் கணித பிரிவில் பங்கேற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு எழுதிய ஹேமாலட்சுமி 45 மதிப்பெண்கள் பெற்றதாகவும் அவர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்ளும் தகுதியை கூட பெற வில்லை என்றும் ஆன்லைனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மெரிட் அடைப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலில் 45 மதிப்பெண் பெற்ற ஹேமாலட்சுமியின் பெயர் முதலாவதாக இடம் பெற்று இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் 45 மதிப்பெண் மட்டுமே பெற்ற ஹேமாலட்சுமி தேர்வில் 81 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்டு இருப்பதை பார்த்த மற்ற தேர்வர்கள், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வில் எந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தேர்வு தாள் திருத்தும் பொறுப்பை வழங்கி இருந்தனரோ அதே தனியார் நிறுவனத்திடம் தான் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு தாளை திருத்தும் பொறுப்பையும் ஒப்படைத்ததால் இந்த முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனி தனியாரிடம் தேர்வு தாள் திருத்தும் பணியை ஒப்படைக்க கூடாது என்கின்றனர் கல்வியாளர்கள்

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஜெயந்தி, இதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்றும், தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஏற்பட்ட குளறுபடியால் வேறு ஒரு மாணவியின் மதிப்பெண் தவறுதலாக வெளியானதாகவும், 81 மதிப்பெண்களுக்கு சொந்தகாரர் பொதுப்பிரிவில் தேர்வு எழுதிய டெல்லிராணி என்றும் அவருக்கு தான் மெரிட் அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் பொதுப்பிரிவு மாணவர்கள் பணியில் சேரவேண்டுமானால் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருக்க 81 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற பொதுப்பிரிவு மாணவி டெல்லி ராணி எந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

எனவே பணம் பெற்றுக்கொண்டு குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், இவரை போல இன்னும் எத்தனை பேர் பணிக்கு தேர்வாகி உள்ளனர் என்பதை பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

12th History - MLM Centum Marks - Study Material - Mr A.Arivazhagan:

                                                  

Click here to read more

'ஜியோ' கல்வி மையத்துக்கு சிறப்பு அந்தஸ்து ஏன்?

துவக்கப்படாத, ஜியோ இன்ஸ்டிடியூட்டிற்கு, 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நிபந்தனை அடிப்படையில்
அந்த அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு துறையைச் சேர்ந்த மூன்று கல்வி மையங்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மூன்று கல்வி மையங்களுக்கு, மேன்மை பொருந்திய கல்வி மையம் என்ற அந்தஸ்து வழங்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. சிறப்பு அந்தஸ்து பெற்ற இந்த கல்வி மையங்களுக்கு, பிற கல்வி மையங்களை போல் அல்லாமல், அதிகளவு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்படும். அவை, புதிய பிரிவு பாடங்களை துவக்கவும், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சேர்க்கவும், வெளிநாடுகளை சேர்ந்த கல்வி மையங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் அதிகாரம் தரப்படும்; இதற்கு, மத்திய அரசின் ஒப்புதலை பெறத் தேவையில்லை.

மேன்மை பொருந்திய கல்வி மைய அந்தஸ்து பெற்ற தனியார் கல்வி மையங்களில் ஒன்று, ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த, ஜியோ இன்ஸ்டிடியூட். இந்த மையம், இன்னும் துவக்கப்படாத நிலையில், அதற்கு, மேன்மை பொருந்திய கல்வி மைய அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு, பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செயலர், சுப்ரமணியம், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மேன்மை பொருந்திய கல்வி மையமாக தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில், 11 தனியார் கல்வி மையங்கள் இடம் பெற்றன. அவற்றில், ஒன்றான, ஜியோ இன்ஸ்டிடியூட், நிலம் கையிருப்பு, உயர் திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், போதிய நிதி, எதிர்காலம் குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வை, செயல் திட்டங்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது.

ஜியோ இன்ஸ்டிடியூட், பசுமைக்கள கல்வி மையம் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, நிபந்தனைகளுடன், 'மேன்மை பொருந்திய கல்வி மையம்' அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு பற்றி 13-ந்தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் 3 விதமான சிறப்பு கலந்தாய்வும் நிறைவு பெற்றுள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான 
கவுன்சிலிங்கில் 117 இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 76 இடங்கள் காலியாக இருக்கிறது. 230 பேருக்கு மட்டுமே அழைப்பாணை விடுக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். விளையாட்டு பிரிவு 282 பேர் அழைக்கப்பட்டு, அதில் 213 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களும் கூடிய விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கவுன்சிலிங் காரணமாக, கல்லூரியை காலதாமதமாக தொடங்க நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். அந்த வழக்கு வருகிற 13-ந்தேதி வருகிறது. எனவே உரிய உத்தரவை பெற்று, மாணவர்களின் கல்வியும் பாதிக்காத அளவு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் அன்பழகனிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- என்ஜினீயரிங் கவுன்சிலிங் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- 13-ந்தேதி வழக்கு வரட்டும். அதன்பிறகு என்ஜினீயரிங் கவுன்சிலிங் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

கேள்வி:- மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை என்ன?

பதில்:- என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தவர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 850 பேர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பொறியியல் படிப்புக்காக அனுமதி பெற்ற 509 கல்லூரிகள். அதன் அடிப்படையில் 1,78,139 இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தோர் எண்ணிக்கை விவரம் தற்போது இல்லை.

கேள்வி:- என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?

பதில்:- அந்தந்த சூழ்நிலையில் பொறியியல், கலை பாடம் என்று ஆர்வம் காணப்படும். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அதிகமானதே தவிர மாணவர் சேர்க்கை குறையவில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகம்தான்.

கேள்வி:- மாணவர்களின் வேலைவாய்ப்புக்காக என்ன திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது?

பதில்:- சீமன்ஸ் கம்பெனியுடன் அரசு தொழிலாளர் நலத்துறை இணைந்து ரூ.546.84 கோடியில், 6 கல்லூரிகளில் தொழில் கட்டமைப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அப்பணிகள் இன்று தொடங்கப்பட்டு உள்ளன. இதில் அரசு சார்பில் ரூ.54.68 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் எல்லா முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:- பெரும்பாலான என்ஜினீயரிங் கல்லூரிகளில் டெபாசிட் தொகை செலுத்தப்படுவது கிடையாதே?

பதில்:- அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கேள்வி:- பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், அதிகாரி சந்தானம் குழுவின் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லையே?

பதில்:- நிர்மலாதேவியிடம் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு. முழுமையான அறிக்கை விரைவில் வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். 

தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு

தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள குறைபாடுகளை திருத்தி வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாகரீதியிலான அதிகாரம் வழங்கி தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மே மாதம் அரசாணை பிறப்பித்தது.
விதிகளை மீறி: இந்த அரசாணையின்படி அனைத்துப் பள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை நிர்வகிக்க ஏற்கெனவே போதுமான சட்டங்கள் உள்ள நிலையில், விதிகளை மீறி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பு வாதம்: இந்த அரசாணை தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தை கண்காணிக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவுமே பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மத்தியில் நிர்வாக வசதிக்காக ஒரே மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த அரசாணையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான திருத்தங்களைச் செய்து, புதிய அரசாணையை இரண்டு மாத காலத்துக்குள் வெளியிட வேண்டும். மனுதாரர்கள் தங்களது தரப்புக் குறைகளை அரசிடம் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

அரசுப் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ஜெர்மன் வாகனங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஜெர்மன் நாட்டிலிருந்து 1000 வாகனங்கள் பெறப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பள்ளிக் 
கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி தொடக்க விழா, கனவு ஆசிரியர் விருது, புதுமைப் பள்ளி விருது வழங்கும் விழா, கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா ஆகியவை திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிகளில் பங்கேற்று அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியது:
தமிழக அரசானது வேறு எந்தத் துறைக்கும் இல்லாத வகையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.26 ஆயிரத்து 932 கோடியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது. இருப்பினும் 33 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லாத நிலை உள்ளது. 848 பள்ளிகளில் 5 முதல் 10 மாணவர்கள் மட்டுமே பயிலும் நிலை உள்ளது. இந்நிலை மாற மக்களிடம் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம், கட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
நிகழாண்டு கூடுதலாக ஒரு லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கை பெறச் செய்தது பாரட்டுக்குரியது. அடுத்தாண்டு 3 லட்சம் மாணவர்களை கூடுதலாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியை மட்டும் கற்றுத் தராமல் உடலைப் பேணவும், உற்சாகத்துடன் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாலையில் தினந்தோறும் 45 நிமிடங்கள் விளையாட்டுப் பயிற்சியும், காலையில் 20 நிமிடம் யோகா பயிற்சியும் அளிக்கப்படும். இதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானங்கள் ஏற்படுத்தப்படும். மைதானம் அமைக்க இட வசதியில்லாத பள்ளிகளில் மாற்று இடத்தில் மைதானம் அமைத்து தரப்படும்.
துப்பரவுப் பணியாளர் இல்லாத பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஜெர்மன் நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆயிரம் சிறப்பு வாகனங்களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளளது.
இந்த வாகனத்தில் கழிப்பறை துப்புரவுக்கான அனைத்து வசதிகளும் இருக்கும். 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் வழங்கி சுத்தம் செய்யப்படும். இதற்கு சேவை அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளன என்றார் அவர்.

அங்கன்வாடியிலிருந்து ஆங்கிலம்

அரசுப் பள்ளிகளின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கன்வாடியிலிருந்து புதுமைகளை தொடங்கவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆங்கிலமும், தமிழும் கற்றுக் கொடுத்து ஒன்றாம் வகுப்பு சேரும்போதே அரசுப் பள்ளியில் ஆங்கில வழியிலோ, தமிழ் வழியிலோ கற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பெற்றோர்களே தனியார் பள்ளிகளைப் புறக்கணித்து அரசுப் பள்ளிகளைத் தேடி வரும் நிலை உருவாகும் என்றார் அவர்.

1,6,9 &11 NEW TEXT BOOK TRAINING - VISITING OFFICER NAME LIST- SPD PROCEEDINGS

11/7/18

Primary  teacher  training
I'st  batch- 13.07.2018 & 14.07.2018.
2'nd batch - 16.07.2018 & 17.07.2018.
3'rd batch - 18.07.2018 &19.07.2018.
4'th batch -20.07.2018 &21.07.2018.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்



லோக் ஆயுக்தா என்றால் என்ன?

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.

எத்தனை உறுப்பினர்கள்?
ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.

யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?

பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி 
(அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
(அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்

வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?
எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாது
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாது
அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாது
வேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது
45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது

உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்.

லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?
லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்

லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?
இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்
இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்
இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
மாநில அரசு ஊழியர்கள்
அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்
இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.

வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?

எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லை
விசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்
யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்
எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்

எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?

இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்
பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வு
வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்
உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்
லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்
துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.
தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா? 
சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?

புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 

விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?

அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுந்தாது.

விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?

விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். 

நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

அரசு ஊழியருக்கு தமிழக அரசு, 
சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர்,
அமைச்சர்களுக்கு முதலமைச்சர்,
முதலமைச்சருக்கு ஆளுநர்.

புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?
தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்
போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்
நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது

லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?
அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அது என்ன விதிகள்?
நீதிபதிகளை பணிநீக்கம் செய்வது போன்ற நீண்ட நடைமுறை :
45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும். 
ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.
நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

"தனியார் பள்ளிகளை மிஞ்ச ப்ளான் ரெடி..." செம்மயா செக் வைத்த செங்கோட்டையன்!

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத் திட்டங்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளிகளை விஞ்சும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் +2 புதிய பாட மாற்றம் ஒரு வரலாற்றைப் படைக்கும் பாட மாற்றமாக அமையும். இந்தியாவில் 80 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தின் இந்த எண்ணிக்கை 1.60 லட்சமாக உள்ளது.



இதை மாற்றும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத்திட்டத்தை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 பாடத் திட்டங்கள் இணைக்கப்படும். இதனால், படித்து முடித்தவுடனேயே அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வியாக அது மாற்றப்படும்.

மாணவர்களுக்கு 500 இடங்களில் சிஏ பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அந்தவகையில், தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும்.



நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக 412 நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் இருந்து பயிற்சிகள் தொடங்கும். சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 80 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

ம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: நீட் கட்-ஆஃப் என்ன?