யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/11/18

5th std Maths- Video Lesson - Numbers and Place Value -Part 1

CLASS ROOM VIDEOS- Writing Alphabets

CLASS ROOM VIDEOS- Writing Alphabets

CLASS ROOM VIDEOS- 4th std -Science- Special Sense of Animals- Video Lesson

7th Std - Term 1 - English - Bat ( Unit 1 Poem ) - Video Lesson

6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 64

(47) Tamil Rhymes for Children பச்சைக்கிளி - தாயெனப்படுவது தமிழ் -


6th Std - Term 2 - QR Videos - Tamil - Page 56

6 ஆம் வகுப்பு தமிழ் எழுத்துகளின் வகை தொகை


(47) +1 தமிழ் 11-TA-U1-பேச்சு மொழியும் கவிதை மொழியும் - YouTube


B.com/M.com & B.ed முடித்தால் ஊக்க ஊதியம் பணிநியமனம் பெற்ற நாள் அல்லது மேற்கண்ட படிப்பு படித்து முடித்த நாள் - இரண்டில் எது முந்தையதோ அந்நாள் முதல் அனைத்து சட்டப்பூர்வமான பலன்களையும்/பயன்களையும் பெறத்தகுதி உடையவர் ஆவார்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது




டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் 9 கருணை மதிப்பெண் வழங்க வல்லுநர் குழுவுக்கு உத்தரவு

TNPSC குரூப் 2 தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள்! தவறை ஒப்புக்கொண்டது
கடந்த 11ம் தேதி தமிழகம் முழுவதும் 6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு வினாத்தாளில் தவறான விடைகள் இருப்பதாக புகார் எழுந்தது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடைகள் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதனை அடுத்து ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டியும் என கோரிக்கை எழுந்திருந்தது. TNPSC இது எங்கள் தவறு இல்லை என்றும் வினாத்தாள் தயாரித்த வல்லுநர் குழுவின் தவறு எனவும் கூறி வந்தது.

இந்நிலையில் ஆறு கேள்விகளுக்கும் 9 மதிப்பெண்களை கருணை மதிப்பெண்ணாக வழங்க வல்லுநர் குழுவிற்கு TNPSC உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது

How to Apply Aadhar Card?

ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்தைத் அணுகுங்கள். பின்னர், பதிவு படிவத்தை நிரப்பவும் (படிவம் ஆன்லைனில் கிடைக்கும்)

அடையாள சான்று மற்றும் முகவரியின் ஆதாரம் போன்ற அடையாள ஆவணங்களுடன்
சேர்ந்து சமர்ப்பிக்கவும்
அனைத்து ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு,
உங்கள் கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி ஸ்கேன் அடங்கிய
உங்கள் பயோமெட்ரிக் தரவை சமர்ப்பிக்கவும்
உங்கள் புகைப்படத்தையும் ஆதார் எடுத்துச்செல்கிறது
14-இலக்க பதிவு எண் கொண்ட அடையாளம் சேகரிக்கவும்,உங்கள் ஆதார் அட்டையைப் பெறும் வரை ஒப்புதல் சீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.
பின்னர் உங்கள் ஆதார் கார்டு உங்கள் இருப்பிட முகவரிக்கு அனுப்பப்படும்

SSA - 1Day Workshop on Technology for Teachers | by British council*

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் வரும் சனி(24/11/18)) வேலைநாள்: CEO PROCEEDINGS

இந்தியாவின் 9 மொழிகளுக்கு பாதுகாப்பு நிலையத்தை வழங்கும் கூகுள்

ஆன்லைனில் பாதுகாப்பாக பயனாளிகல் பயன்படுத்தும் அதிகாரம் அளிப்பதற்கான நோக்கத்துடன், இந்தியாவில் புதிதாக விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தை கூகுள் உருவெடுத்துள்ளது, பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிப்பதன் மூலம் இணையத்தை சிறப்பான முறையில் நிர்வகிக்க உதவும் வகையில் கூகுள் வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் அமைக்கப்படும் புதிய பாதுகாப்பு மையம் இங்குள்ள பயனர்கள் பல்வேறு பாதுகாப்பு கருவிகளையும், அடிப்படை பாதுகாப்பு வழிகாட்டல்களில் இருந்து, தரவு பாதுகாப்பு, தனியுரிமை கட்டுப்பாடுகள், மற்றும் இணையத்தில் குடும்ப மற்றும் நட்பு வட்டாரத்தினை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான உதவிக்குறிப்புகள் போன்ற முக்கியமான விஷயங்களைப் பற்றிய தகவல்களுக்கு பரந்த அளவிலான கருவிகள் மற்றும் ஆதாரங்களை கூகுள் தற்போது வழங்கியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் புரொடக்ட் மேனேஜ்மெண்ட் டைரக்டர் மார்க் ரிஷர் இதுகுறித்து கூறியபோது, "கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் பல டூல்ஸ்களை பயனர்களுக்காக உருவாக்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். அந்த வகையில் தற்போது கூகுளின் பாதுகாப்பு அமைப்பு, கூகுள் சேவைகளில் அவற்றின் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும், ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு அவற்றிற்கு அதிகாரம் அளிப்பதாகவும் உள்ளது.
இந்த புதிய சேவை இந்தியாவில் உள்ள மேலும் ஒன்பது மொழிகளுக்கு வழங்கப்படவுள்ளது. அவை இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகள் ஆகும்.

இன்றைய இந்தியா உலகில் இண்டர்நெட் அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இதுபோன்ற ஒருசில வசதிகள் கொடுத்து ஸ்மார்ட்பொன்களில் டேட்டா பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்த முடியும் என கூகுள் நிறுவனத்தின் டிரஸ்ட் அண்ட் சேஃப்டி இயக்குனர் சுனிதா மொஹந்தி அவர்கள் கூறியுள்ளார்.

மொஹந்தி இதுகுறித்து மேலும் கூறுகையில், "இணையம் எல்லோருக்கும் வாழ்க்கையை எளிதாகவும் சுலபமாகவும் மாற்றுவதோடு அனைத்து வயதினர்களுக்கும் உதவும் வகையில் உள்ளது. ஆன்லைன் பயனர்கள் அல்லது முதல் தடவையாக ஆன்லைனில் வருபவர்களிடையே ஆராய்ந்து, உருவாக்குவதற்கும், ஒத்துழைப்பதற்கும் பல வாய்ப்புகளை வழங்குகிறது, சாத்தியமான எதிர்மறை அனுபவங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் இணையத்தில் அவை பாதிக்கப்படுவதால், இது பயனர்களுக்கு பல தகவல்களை கற்று கொடுப்பதோடு, இணையத்த்ல் உலாவும்போது அவை வெளிப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் இணையத்தின் தரவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பல கருவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவேதான் கூகுள் நிறுவனம் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கவும் கூகுள் அக்கவுண்ட் மூலம் பல டூல்ஸ்களை கொடுத்து வருகிறது. பிரைவைட் செக்கப், மை ஆக்டிவிட்டி ஆகியவை பயனர்கள் தங்களுடைய தேவையை, டேட்டா அளவை சரிசெய்து கொள்ள இந்த கூகுள் அக்கவுண்ட் உதவுகிறது.

அதேபோல் கூகிள் குடும்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு என இரட்டிப்பு பாதுகாப்பை வழங்குகிறது.. ஃபேமிலி லிங்க் செயலியானது பெற்றோர்களால் டிஜிட்டல் செட் செய்யப்பட்டு அவர்களே மேனேஜ் செய்வதால் குடும்பத்தில் உள்ளவர்களின் கூகுள் அக்கவுண்ட், அவர்களுடைய சாதனம் மற்றும் செயலிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்கின்றது

நீதிக்கதை



ஆணவம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம்.
வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் மெத்தப்படித்த மேதாவி. தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும், மேதமை கொள்வான்.
மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை என் ஆணவம். அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக்கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தயுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆனவத்துடன் பேசினான்.
அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார்.

அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மவுனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், ‘கொஞ்சம் உணவு கிடைக்காதா?’ என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயியிடம், ‘ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும்’ என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, ‘படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான்’ என்றார். தொடர்ந்து அவர், ‘இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம்’ என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான், தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.

அரசு பள்ளிக்கு என தனி செயலி வடிவமைத்து அசத்தும் ஆசிரியர்கள்!

இப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது .
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம்
மிளகனூர் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்விப்பணி
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை விடும் நோட்டிற்கு குட்பை சொல்லிவிட்டு, ஆப் மூலமாக பல அறிய தகவல்களை இப்பள்ளி வழங்கிவருகிறது.
* நமது பள்ளி செயலியை உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறோம்
* இது முற்றிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனுக்காக
உருவாக்கப்பட்டுள்ளது.
* இந்தச் செயலி மூலமாக மாணவர்களின் வளர்ச்சியும்,பள்ளியின் வளர்ச்சி நிலையயும் எளிதில் அரசின் கவனத்தையும் நமது பள்ளியைச் சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்து நமது பள்ளியை ஒரு முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்குவதே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதன் நோக்கமாகும்.

வாருங்கள், இந்தச் செயலியில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி உங்களுக்கு
விளக்குகிறேன்.

* முகப்பு பக்கத்தில் தலைமையாசிரியர் பெயரும் பள்ளியின் பெயரும்
தொலைபேசி எண்ணுடன் இடம் பெற்றிருக்கும்.
தொலைக்காட்சியில் ஓடும் Scrolling போல அறிவிப்பு செய்திகள் என்ற பகுதி உள்ளது.
* அடுத்து இரண்டாவது  முகப்பு பக்கத்தில் ஆறு விதமான தலைப்புகளில் கட்டங்கள் அடங்கிய பகுதி காணப்படும். அந்தப் பகுதி குறித்து கீழ் காண்போம்.
* இந்த ஆறு கட்டங்களுக்கு மேல் பகுதியில் பள்ளியின் நிகழ்ச்சி நிரல்கள் தொடர் செய்தியாக நகர்ந்து செல்லும். அதில் ஏதாவது ஒன்றை தட்டினால் அது குறித்த முழு செய்தி குறித்த விபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

1. ஆளுமை பகுதி (Admin)
ஆளுமைப் பகுதி என்பது நமது பள்ளி செயலி முழுவதும் தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்ச்சி குறித்த செய்திகள், புகைப்படங்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள் குறித்த அனைத்து விபரங்களும் தலைமையாசிரியர் அனுமதியின்றி யாரும் செயல்படா வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் தலைமையாசிரியர் கவனத்தின் மூலமாக.


2. பெற்றோர் பகுதி (Parents)
* இதில் மாணவர்களின் பெற்றோர் குறித்த விபரங்கள் அடங்கியிருக்கும்.
* மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் மற்றும் அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் பள்ளி தலைமையாசிரியர் மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்தப்படும்.
* பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் குறித்த அறிவிப்புகள் தேதிகள் இதன் வாயிலாக அனுப்பப்படும்.

3. மாணவர்கள் பகுதி (Student)
* மாணவர்கள் பகுதியில் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட விபரங்கள் அடங்கியிருக்கும்.
* ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உள்நுழை குறியீடும் மற்றும் இரகசிய சொல்லும் தரப்படும். இவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் உள்நுழைந்து தங்கள் விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
* ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்கு வருகைபுரிந்த நாட்களானது இந்தப் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.

i. மாணவர்களின் குறைகள் பகுதி
* இதன் வாயிலாக மாணவர்கள் தங்கள் குறைகளை தலைமையாசிரியருக்குத் தெரியப்படுத்த முடியும்.  
* ஒவ்வொரு மாணவரும் தங்கள் பள்ளியின் நிலை குறித்தும் தனது வகுப்பு ஆசிரியர் குறித்த நிறைகள் மற்றும் குறைகளை நேரடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.
* மாணவர்களின் பெற்றோருக்கும் தங்கள் பள்ளி குறித்தும், பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் தங்கள் நிறை, குறைகளை தெரிவிக்க உதவியாக இருக்கும்.
* மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வரமுடியாத பட்சத்தில் ஆப் மூலமாகவே விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டுதல் பகுதியும் (Leave Request) உள்ளது.
* மாணவர்கள் மற்றும் பெற்றோர் அளித்த புகார்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் உண்மை நிலையை அறிந்து எளிதில் அதற்கான தீர்வு எடுக்க இந்தப்பகுதி பயனுள்ளதாக அமையும்.

4. நமது பள்ளி (namathu palli) :
நமது பள்ளி என்ற பகுதியில் நமது பள்ளியினுடைய சிறப்புகள் மற்றும் நமது பள்ளி அமைந்திருக்கும் இடம், சுற்றுச்சூழல் பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.


5. Gallery :
இப்பகுதியை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம். இதில் Photo gallery, Video gallery என இரண்டு பகுதிகள் உள்ளன. Photo gallery இல் நமது பள்ளியின் புகைப்படம் மற்றும்  நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம், பரிசுகள் வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. Video Gallery இல் நமது பள்ளியின் video காட்சிகள் மற்றும்  நம் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட video காட்சிகள், மாணவ மாணவிகள் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட video காட்சிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

6. நிகழ்வுகள் பகுதி (Events)
* நிகழ்வுகள் பகுதியில் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்தி இடம் பெற்றிருக்கும்.
* இதன் மூலம் மாணவர்களின் திறன் வெளிப்படுத்தப்படும்.
* மாணவர்கள் செய்த சமூகப்பணி (தங்கள் இருக்கும் பகுதி மற்றும் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றவை) இடம் பெறும்.

7. தேர்வு முடிவுகள் பகுதி (Result)
* தேர்வு முடிவுகள் பகுதியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் பதிவேற்றம் செய்யப்படும்.
* ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பருவத்தேர்வு முதல் சிறப்புத் தேர்வுகளின் மதிப்பெண்கள் அவர்களுக்கு இதன் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.
* உடல்நிலை சரியில்லாத நேரத்தில் பள்ளிக்கு வர இயலாத மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை வீட்டிலிருந்தே அறிந்து கெள்ள முடியும்.
* தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் பொழுது கூடவே ஒவ்வொரு மாணவரும்
தங்கள் பாடவாரியாகப் பெற்ற மதிப்பெணகளை இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

8. அறிவிப்பு பகுதி (Announcement)
* இதில் பள்ளிகளில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்த செய்திகள் குறிப்பிட்ட தேதி வாரியாக வெளியிடப்படும்.
* அனைத்து அறிவிப்புகளைவிடவும் மாணவர்களின் உயிர்நாடியாகக் கருதப்படும் அரசு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்புகள் இதில் முக்கியமாக இடம் பெற்றிருக்கும்.
* பள்ளியில் பருவத்தேர்வுகள் முதல் அரசுப் பொதுத்தேர்வு குறித்த தேதி அட்டவணைப் பட்டியல் குறித்த அறிவிப்புகள் அடங்கியிருக்கும்.

9. தேர்வுக்கு தேவையான குறிப்புகள் (Study materials)
* இந்தப்பகுதியில் மாணவர்களுக்குத் தேவையான தேர்வு காலங்களில் பயன்படும் வகையில் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாக்களின் தொகுப்பு PDF வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்
* மாணவர்கள் தங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்

10. எங்களை தொடர்புகொள்ள (Contact)
* இந்தப் பகுதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
* இந்தச் செயலி குறித்த கருத்துக்களை பொது மக்கள் அனைவரும் இதில் பதிவு செய்யலாம். இந்தச் செயலியில் உள்ள நிறை மற்றும் குறைகளை இதில் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


 இப்படிக்கு
 அரசு உயர்நிலைப்பள்ளி
மிளகனூர், சிவகங்கை மாவட்டம்
தலைமையாசிரியர்
முனைவர் V.M.விநாயகமூர்த்தி
செல் : 9976935585

அறிவியல்-அறிவோம்: இளநீரை வெறும்வயிற்றில் அருந்தலாமா?

நாம் அனைவரும் அதிகம் விரும்பக்கூடிய இயற்கை பானங்களில் ஒன்று இளநீர். கிராமப்புறங்களில் சர்வசாதரணமாக கிடைக்கும் இளநீர், தற்போது நகர்புறங்களில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகிறது.

தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலைத் தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.  ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.



அதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக்கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

ஜிம்முக்கு செல்பவர்கள், அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காக என்ன உடற்பயிற்சி செய்கிறேர்களோ, அந்த பலன், வித்தியாசம், வெகு விரைவில் தெரியும்.

மதிய உணவுக்கு முன்/பின்

மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடற்சூடு தணிக்கப்படுகிற. மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும் பவர் இளநீருக்கு உண்டு.

இரவு படுக்கைக்கு முன்:

இனிமையான இரவு உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், நார்மலாக சாந்தமாக இருக்கச் செய்கிறது. இதனால், அன்றாட நமக்கு இருக்கும் எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும்.

"பூலோகக் கற்பக விருட்சம்' என்று இளநீர் சித்தமருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதில்  A,B,C,K போன்ற வைட்டமின்களும்,
சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும்.
உடலில் நீர்வறட்சியால் உண்டாகும் சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது"

பள்ளிகளில் உள்ள கழிப்பறை கண்காணிக்க 'மொபைல் அப்ளிகேஷன்' :

பள்ளி ,அங்கன்வாடி , மருத்துவமனை, வீடு  போன்றவைகளில், கழிப்பறைகள் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.முழு சுகாதாரம் அடைய, துாய்மை பாரத இயக்கத்தை, மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் சார்பாக, துாய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக, நவம்பர் 19ல் கொண்டாடப்படும் 'உலக கழிப்பறை தினம்' காஞ்சிபுரம் அடுத்த வேளியூரில் கொண்டாடப்பட்டது.மாவட்ட ஆட்சியர் பொன்னையா பங்கேற்று, பல்வேறு சுகாதார பணிகளை துவக்கி வைத்தார். அதில் குறிப்பிடும் வகையில், சுகாதார இயக்கத்திற்காக, 'துாய்மை காஞ்சி' என்ற மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ளிகேஷன் மூலம், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார ஊக்குவிப்பவர்கள், மாதம் இருமுறை நேரடியாக ஆய்வு செய்து, அதன் விபரங்களை இந்த அப்ளிகேஷனில் பதிவிடுவர்.ஒவ்வொரு வீடுகளிலும், தொடர்ந்து கழிப்பறை பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்யப்பட்டு, பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வீடுகள் மட்டுமல்லாமல், அங்கன்வாடி மற்றும் பள்ளிகளும் இந்த அப்ளிகேஷனில் பதிவிடப்படும். சிறப்பான முறையில் கழிப்பறையை பயன்படுத்தும் அமைப்புகளுக்கு, ஜனவரி 26ல், குடியரசு தினத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்