யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/2/17

NCRTE புத்தகத்தை மட்டும் பயன்படுத்த CBSE.க்கு உத்தரவு

புதுடெல்லி: தரமான பாடத் திட்டங்களை தரும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் வரும் கல்வியாண்டில் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. 
இங்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தயாரித்து வழங்கும் பாடத் திட்டத்தின் அடிப்படையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் என்சிஇஆர்டி புத்தகங்கள் குறிப்பிட்ட காலத்தில் கிடைப்பதில்லை என்று சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்கள் புகார் தெரிவித்துள்ளன. இதனால் தனியாரிடம் புத்தகங்களை கூடுதல் விலை கொடுத்து வேறு புத்தகங்கள்வாங்குவதாகவும் மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎஸ்இ பள்ளிகளில் தரமான கல்வி வழங்கும் வகையில் என்சிஇஆர்டி புத்தகங்களை மட்டும் பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களின் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய மனிதவளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல பள்ளிகளில் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தனியார் கடைகள் இயங்கி வருகின்றன.

 இந்த கடையில் கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக பள்ளிநிர்வாகிகளை சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அந்த கடை அதிபர்கள் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்வதாக தெரியவந்துள்ளது.எனவே முறைகேட்டை தவிர்க்கும் வகையில் 2017-18ம் ஆண்டு முதல் என்சிஇஆர்டி புத்தகங்கள் போதுமான அளவுக்கு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் நாடு முழுவதும் உள்ள 680 மையங்கள் மூலம் மார்ச் மாத இறுதியில் விநியோகம் செய்யப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ப்ளஸ்: மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக, ஏற்கனவே இருந்த மத்தியக் கல்விக் கழகம் உள்ளிட்ட 7 அமைப்புகளை ஒருங்கிணைத்து,தன்னாட்சி அமைப்புடன் 1961ல் நிறுவப்பட்டது, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு.

+2 வினாத்தாள்கள் தயார்.

மாணவர்கள் நீண்ட விடுப்பு 100 சதவீத கனவு தகர்ப்பு!

நீண்ட நாள் விடுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளதால், தேர்வில் பங்கேற்காத பட்சத்திலும், தோல்வியை தழுவியவர்களாக குறிப்பிடப்படுகிறது. இதனால், நுாறு சதவீத தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகம்முழுக்க, மார்ச் 2ம் தேதி, பிளஸ் 2 மாணவர்களுக்கும், மார்ச் 8ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு துவங்குகிறது. பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட, மாணவர்களின் தகவல்கள் கொண்டு, பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவல், ஆண்டு துவக்கத்திலே பதிவு செய்யப்பட்டு சரி பார்க்கப்பட்டவை. எனவே, அனைத்துமாணவர்களின் தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.இதில், தொடர்ந்து நான்கு மாதங்களாக, பள்ளிக்கு வராமல், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு எண் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், பல அரசுப்பள்ளிகளில், தலா நான்கு மாணவர்கள் வீதம், நீண்டநாள் விடுப்பில் உள்ளனர்.இவர்களில், பெரும்பாலானோர் செய்முறை பொதுத்தேர்வு எழுதவரவில்லை என கூறப்படுகிறது. எழுத்துத்தேர்வுக்கும் வராத பட்சத்தில், 'ஆப்சென்ட்' என குறிப்பிட்டு, தேர்ச்சியடையாதோர் பட்டியலில் சேர்க்கப்படும். இதனால்,நுாறு சதவீத தேர்ச்சி பெறும் முயற்சிக்கு தடை ஏற்பட்டுள்ளதாக, தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'நீண்டநாள் விடுப்பில் இருக்கும் மாணவர்கள், எந்த தேர்வும் எழுதாதபட்சத்தில், அவர்களை தோல்வியடைந்தவர்களாக குறிப்பிடக்கூடாது.

ஒரு தேர்வு கூட எழுதாதபட்சத்தில், விடுப்பில் இருக்கும் மாணவர்களால், 100 சதவீத தேர்ச்சிஇலக்கு, தடைபடுகிறது. 'எனவே, தேர்வு எழுதியோரை கணக்கிட்டு,நுாறு சதவீத தேர்ச்சி பள்ளிகளின் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றனர்.

TNTET -2017: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான 7 லட்சம் விண்ணப்பங்களை திருப்பி அனுப்ப உத்தரவு.

ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களில் எழுத்து பிழைகள் இருப்பதாக கூறி அவற்றை திருப்பி அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29 மற்றும் 30ம் தேதிகளில்  நடைபெறவுள்ளது. தாள் 1 மற்றும் தாள் 2க்கான தனித்தனியான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய 7 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ரூ.50. தேர்வு கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.500. ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. வரும் 28ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் விண்ணப்ப விநியோகம் நடைபெறவில்லை. வரும் மார்ச் முதல் வாரத்தில் விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘ஆசிரியர் தகுதித்தேர்வு  விண்ணப்பங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்து அங்கு வைத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பவிநியோகம் மார்ச் முதல் வாரம் துவங்க உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதற்கு முக்கிய காரணம் அச்சடிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் பிழைகள் இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. இதனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், புதிய விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அவற்றை விநியோகம் செய்தால் போதும்என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 7 லட்சம் விண்ணப்பங்களும் வீணாகியுள்ளது.

17/2/17

TET 2017 Exam - தேர்வு தேதியும் மாற வாய்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழக அரசு
முடிவு..

தேர்வு தேதியும் மாற வாய்ப்பு..
ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். அப்போது, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேதி, தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது தேர்வு நிறைவு பெறும் வரை, தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாது. எனவே, நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடத்த தேவையான, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் (டேபிள், சேர், குடிநீர், விளக்கு, பேன், கழிவறை வசதிகள்) இருப்பது குறித்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு விடும்.


இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும், விரைவில் மாற்றம் செய்யப்படும். புதிய அமைச்சரவை அமைய இருப்பதால், தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.01.2017 to 31.03.2017 – Orders – Issued.

ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 - தேர்விற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்தல் / திரும்ப பெறுதல் சார்ந்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் கோரி உத்தரவு

டெட்’ விண்ப்ப வினியோகம் திடீர் நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் நேற்று வழங்கப்படுவதாக இருந்த, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ப்ப வினியோகம், திடீரென
நிறுத்தப்பட்டது; இதனால், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகினர். தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29ம் தேதியும்; பட்டதாரி ஆசிரியர் களுக்கு, ஏப்., 30ம் தேதியும், தகுதித்தேர்வு (டி.இ. டி.,) நடத்தப்படும் என்று, தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.


இதற்கான விண்ப்பம், நேற்று முதல், வரும், 27ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.சென்னையில் இருந்து மாவட்டம் வாரியாக விண்ப்பம் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்துக்கு, 14 ஆயிரத்து, 800 விண்ப்பங்கள் பெறப்பட்டு, 14 மையங்கள் மூலம் வழங்கப்படும் என்று, முதன்மை கல்வி அவலர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, விண்ப்பம் பெற வந்த ஆசிரியர்களுக்கு, நேற்று வழங்கவில்லை.

விண்ப்பங்கள் வைக்கப்பட்டிருந்த, திருப்பூர் கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, மற்ற மையங் களுக்கு அவை அனுப்பி வைக்கப்படவில்லை. விண்ப்பம் பெற வந்திருந்த ஆசிரியர்கள், ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அரசிடம் இருந்து உத்தரவு ஏது வும் வராததால், விண்ப்பம் வழங்கப்படவில்லை. மறு அறிவிப்பு வந்த பிறகே, விண்ப்பம் வழங்கப்படும்,’ என்றனர்.

நேற்று முன்தினம் பள்ளி கல்வி இயக்குனரிடம் இருந்து, மாவட்ட முதன்மை கல்வி அவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்ற றிக்கையில்,‘டி.இ.டி., விண்ப்பங்கள், மார்ச் முதல் வாரத்தில் விற்பனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், ஒவ்வொரு ஒன்றியத்திம் தேர்வு நடைபெறாத இரண்டு பள்ளிகளின் விவரத்தை அனுப்ப வேண்டும்,’ என தெரிவிக்கப்பட் டிருந்தது. இதனால், நேற்று விண்ப்பம் வழங் குவது நிறுத்தப்பட்டது.


ஆசிரியர் தரப்பில்,‘ பொதுத்தேர்வு துவங்குவது மார்ச்,2ம் தேதி; ‘டெட்’ விண்ப்பம் பெற கடைசி நாளோ, பிப்., 27ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, விண்ப்ப வினியோகத்தை தள்ளிப்போடக்கூடாது,’ என்றனர்.

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

TET 2017 Exam Date Change ?

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை மாற்றி அமைக்க தமிழகஅரசு முடிவு..

தேர்வு தேதியும் மாற வாய்ப்பு...

ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களை, மாற்றி அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு, மார்ச் மாதம் நடைபெறும் என்றுஏற்கனவே அரசு அறிவித்து, தேர்வு மையங்களை இறுதி செய்திருந்தது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் அதே மையங்கள்தான், ஆசிரியர் தகுதி தேர்வு மையங்களாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் நடைபெறும். அப்போது, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேதி, தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது தேர்வு நிறைவு பெறும் வரை, தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த அனுமதிக்க இயலாது. எனவே,நடுநிலைப்பள்ளி, துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதிதேர்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு நடத்த தேவையான, அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகள் (டேபிள், சேர், குடிநீர், விளக்கு, பேன், கழிவறை வசதிகள்) இருப்பது குறித்து, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் தகுதியான பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு விடும்.இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தேதியும், விரைவில் மாற்றம் செய்யப்படும். புதிய அமைச்சரவை அமைய இருப்பதால், தேர்வு தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC -. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது

 டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடத்திற்கான கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
கலந்தாய்வு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் 2015-ம் ஆண்டு மே 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு, சென்னை பிரேசர் சாலையில் உள்ள (கோட்டை ரெயில் நிலையம் அருகில்) தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 24-ந்தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும். மறுவாய்ப்பு கிடையாது கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் அவர்களுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இ.மெயில் மூலம் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இட ஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற முடியாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்புஅளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்

தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடத்தப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி, 2016 அக்டோபரில் நடந்தது. அப்போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, சட்டசபை தொகுதிகளில் மட்டும், திருத்தப் பணி நடைபெறவில்லை. இந்தத் தொகுதிகளில் மட்டும், பிப்., 20ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அன்று முதல், மார்ச், 6 வரை விண்ணப்பிக்கலாம்.

பிப்., 25ல், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படும். பிப்., 26 மற்றும் மார்ச், 5ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், மார்ச், 16ல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15 ஆயிரம் போலீஸ் பணிக்கான தேர்வு ஆலோசனை : நாளை மதுரையில் தினமலர் நடத்துகிறது.

தமிழக போலீஸ் துறையில், 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, மே 21ல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனை முகாம், தினமலர் சார்பில் நாளை( பிப்.,18) மதுரையில் நடக்கிறது.

இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம் நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.,22. இத்தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 100. இதில் எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண்கள், என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.எழுத்துதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை நடக்கும்.வாசகர்கள், எழுத்து தேர்வில் வென்றிடும்விதமாக வழிகாட்ட, ஆலோசனை நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது. நாளை மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை, மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நிகழ்ச்சி நடக்கிறது.

அனுமதி இலவசம்.மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் டாக்டர் அருண்சக்திகுமார் துவக்க உரை நிகழ்த்துகிறார். தேர்வில் வெற்றி பெறுவதற்குரிய வழிமுறைகள், முக்கிய கேள்விகள், பாடமுறைகள் குறித்து நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் விளக்குகிறார்.

TNPSC - குரூப் - 4 பதவிக்கு 'கவுன்சிலிங்' அறிவிப்பு.

குரூப் - 4' அடங்கிய இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு, பிப்., 22ல் நடக்க உள்ளது. டி.என்.பி.எஸ்.சி., செய்திக்குறிப்பு:
'குரூப் - 4' பதவிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கு, டிச., 21ல் தேர்வு நடந்தது.இதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிகளில், காலி இடங்களுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, பிப்., 22 முதல், 24 வரை நடக்கும். விபரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

பன்னீருக்கு ஆதரவாக மீண்டும் மாணவர் போராட்டம்?

அ.தி.மு.க., சட்டசபைக் குழு தலைவராக, சசிகலாவின் ஆதரவாளர் இடைப்பாடி பழனிச்சாமி, தேர்வு செய்யப்பட்டு, நேற்று மாலை முதல்வராக பதவியேற்றார். 
இது, பன்னீர் ஆதரவாளர்கள் மற்றும் அவர் தலைமையை எதிர்பார்த்து, ஆதரவு அளித்து வரும் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல், பன்னீருக்கு ஆதரவாகவும், இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, சமூக வலைதளங்களில் நேற்று இத்தகவல், 'வைரலாக' பரவியது. இதையடுத்து போலீசார், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

1 லட்சம் மாணவர்களுக்கு கை கழுவுவது குறித்த பயிற்சி

நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, முறையாக கை கழுவுவது எப்படி என, ஒரு லட்சம், பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி செய்முறை பயிற்சி அளித்தது.
சென்னை மாநகராட்சி சுகாதார கல்வித் துறை சார்பில், நோய் பாதிப்பில் இருந்து தப்புவது குறித்தும், கொசு உற்பத்தி, நோய் உருவாவது எப்படி என்பது போன்ற, பல்வேறு சுகாதார விழிப்புணர்வு தகவல்களை, நகர மக்களுக்குதெரியப்படுத்தி வருகின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார துாதுவர்களுக்கான, அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 10 லட்சம் மாணவ, மாணவியருக்கு, சுகாதார துாதுவர்களுக்கான அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நேற்று, நகர் முழுவதும் ஒரே நேரத்தில், ஒரு லட்சம் பள்ளி மாணவ, மாணவியருக்கு, நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, முறையாக சோப்பு போட்டு கை கழுவுவது எப்படி என, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் செய்முறை பயிற்சி அளித்தனர்.

அப்போது, சுகாதாரம் குறித்து பல்வேறு தகவல்களை, மாணவர்களுக்கு, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு ஒரு பள்ளி வீதம், மொத்தம், 200 பள்ளிகளில் நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூரைச் சேர்ந்த ராஜசெல்வன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"தமிழக அரசு கடந்த 2006-ம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின் அடிப் படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் நூலகம் அமைக் கப்பட்டது. இந்த நூலகங்கள் தற்போது பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. பல இடங்க ளில் நூலகங்கள் ரேஷன் கடைக ளாகவும், கிராம நிர்வாக அலுவலக மாகவும் மாற்றப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர் களும், பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, இந்த நூலகங் களை பராமரித்து மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்''என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, ''தமிழகத்தில் 2006-ல் 12,522 நூலகங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 10,447 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன. 2,075 நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன"என்றார். இதையடுத்து, காலியாக உள்ள 2,075 நூலகர் பணியிடங்களை 4 மாதங்களில் நிரப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா நகைகள், கைக்கடிகாரங்கள் மதிப்பு என்ன?

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் நகைகள், கைக்கடிகாரங்கள், கார்களின் மதிப்பு என்ன என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


1991-1996 கால கட்டத்தில், ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தபோது, அவரும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு அளித்தது.

வழக்கை முதலில் விசாரித்த பெங்களூரு தனிக்கோர்ட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் வழங்கிய தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உறுதி செய்தனர். அதன்படி அவர்களுக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் தண்டனையில் இருந்து விலக்கு பெறுகிறார்.

நீதிபதிகள் வழங்கிய 570 பக்க தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், சொத்துகள் ஆகியவற்றின் மதிப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தங்கம், வைர நகைகளின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சம்.

* கைக்கடிகாரங்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 90 ஆயிரம்.

* கார்களின் மதிப்பு ரூ.1 கோடியே 29 லட்சம். (மாருதி கார், கண்டெசா கார், வேன்கள், ஜீப்புகள் அடங்கும்.)

* 400 கிலோ வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.20 லட்சத்து 80 ஆயிரம்.

* அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.20 கோடியே 7 லட்சம். புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் மதிப்பு ரூ.22 கோடியே 53 லட்சம்.

* 1991-1996 கால கட்டத்துக்கு முன்பு அவர்களது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சம். மீதி சொத்துகள் அனைத்தும் 5 அல்லது 6 ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்டதாகும்.

* தண்டிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் இருப்பு ரூ.97 லட்சத்து 47 ஆயிரம். ரூ.3 கோடியே 42 லட்சத்தை நிலைத்த வைப்புகளிலும், பங்குகளிலும் வைத்துள்ளனர்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி: மத்திய அரசுக்கு மேனகா காந்தி கடிதம் !!

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியிலான தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சம்ஸ்கிருத பாடலை மனப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவிகள் ஏராளமானோருக்கு, மைதானத்தை 
கீழாடை (ஸ்கர்ட்) இன்றி சுற்றி ஒடிவரும்படி தண்டனை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு மேனகா காந்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையத்தால், மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முடிவு கொண்டு வருவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை அனைவரும் தெரியும்படி வெளியிட வேண்டும் என்றும், அதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகள், மாணவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடர்பான புகார்களை கவனிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண் கருவிழி மூலம் வங்கிக் கணக்கு திறக்கும் வசதி..!

பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எனப் பல ஆவணங்களை வழங்கி வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், நம் நாட்டில் முதன் 
முறையாகக் கண் கருவிழி ஸ்கேனிங் மற்றும் ஆதார் எண்ணை மட்டுமே வழங்கி, வங்கிக் கணக்கைத் திறக்கும் வசதியை டிசிபி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.


டிசிபி இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் கண் கருவிழி ஸ்கேனிங் மூலம் வங்கிக் கணக்குத் திறக்கும் முறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாகக் கடந்த ஆண்டு, ஆதார் அடிப்படையிலான ஏடிஎம்களை இந்த டிசிபி வங்கிஅறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த மாதம் கருவிழி அடிப்படையிலான வங்கிக் கணக்குத் திறக்கும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
முதலில், 10 கிளைகளில் மட்டும் சோதனை அடிப்படையில் இது தொடங்கப்பட்டது. கருவிழி ஸ்கேனிங் மூலமாக இதுவரை நூற்றுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் திறக்கப்படும் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பல வாடிக்கையாளர்கள், ஆவணங்களைக் கையாள் வதை பிரச்னையாகக் கருதி வந்தனர். இப்போது இதன் மூலம் அது எளிதாக்கப்பட்டு உள்ளது.