யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/17

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி: மத்திய அரசுக்கு மேனகா காந்தி கடிதம் !!

பள்ளியில் மாணவர்களுக்கு உடல்ரீதியிலான தண்டனை வழங்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் சம்ஸ்கிருத பாடலை மனப்பாடம் செய்யாத காரணத்துக்காக மாணவிகள் ஏராளமானோருக்கு, மைதானத்தை 
கீழாடை (ஸ்கர்ட்) இன்றி சுற்றி ஒடிவரும்படி தண்டனை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு மேனகா காந்தி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையத்தால், மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகளுக்கு முடிவு கொண்டு வருவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வழிகாட்டுதல்களை அனைவரும் தெரியும்படி வெளியிட வேண்டும் என்றும், அதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான தேசிய ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களில், பள்ளிகளில் மாணவர்களுக்கு உடல்ரீதியில் அளிக்கப்படும் தண்டனைகள், மாணவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடர்பான புகார்களை கவனிப்பதற்கு சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அறிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக