யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/2/17

நீதியரசர் கவுலின் இரண்டாவது தாய் வீடு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரான சஞ்சாய் கிஷன் கவுல், உச்சநீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு, பிரிவு உபச்சார விழா சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் நடத்தப்பட்டது.



அவ்விழாவில், அவர் பேசியதாவது: என் தாய் வீட்டுக்கு அடுத்தபடியாக சென்னைதான் எனது இரண்டாவது தாய்வீடு என பெருமிதத்துடன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, பார் கவுன்சில் முன்னாள் தலைவர் செல்வம், துணைத்தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், பெண் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவி டி.பிரசன்னா, மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பதிவாளர்கள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைமை நீதியரசரைப் பாராட்டி அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி பேசினார். இதையடுத்து, தலைமை நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் பேசியதாவது: தமிழர்களின் பண்பாடு தனித்துவம் மிக்கது. தமிழர்களின் வீரம், அன்பு, மானம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமானது. நீதிமன்றம் மக்களுக்கானது அது சாமானிய மக்களிடமும் நட்புடன் செயல்பட வேண்டும். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களை ஊக்குவிக்க வேண்டும், அவர்களை வழிநடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழா முடிந்தபின் நிருபர்களிடம் கூறுகையில், சிறந்த வழக்கறிஞர்கள், நீதிபதிகளுடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இங்குள்ள மக்கள் என்மீது காட்டிய அன்பு மற்றும் அனைவரின் ஒத்துழைப்புமே நான் சிலவற்றை சாதிக்க காரணமாக இருந்தது. இந்த நீதிமன்றத்தின் பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று நம்புகிறேன்.

ஸ்ரீநகரை பிறப்பிடமாகக் கொண்ட நீதியரசர் கவுல், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக