யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/6/17

PRESS RELEASE- நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு நாளை முதல் அமல்

முறையான கணினி ஆசிரியர்கள் இல்லாமல் காட்சி பொருளாகும் கம்ப்யூட்டர் உபகரணங்கள்

Image may contain: text

"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017 - 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் - மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - நிற்கும் இடங்கள் மற்றும் செயல்முறைகள்

கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகச் செலுத்த வேண்டும்: மத்திய அரசின் அடுத்த அதிரடி!

பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இனி கல்விக்
கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பெறவேண்டும்' என்று மத்திய அரசின் மனிதவளத்துறை, கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
கல்விக் கட்டணங்கள் பிரகாஷ் ஜவடேகர்
மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 'பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனைத்துக் கட்டணங்களையும் இணையத்தின் வழியாகப் பெறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை, அனைத்து பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் வழங்க வேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
'கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான கல்விகட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்ற இதர கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே பெற வேண்டும். சம்பளம் மற்றும் இதர செலவினங்களையும் டிஜிட்டல் வழியில் மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள கேன்டீன்களிலும் மற்றும் இதர கடைகளிலும் ஆன்லைன் வழியே பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பீம்ஸ் செயலியையும், இந்தச் செயலியுடன் மாணவர் வங்கி கணக்கையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். கல்வி வளாகத்தில் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும். இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒரு சிறப்பு அலுவலரை நியமித்து, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விவரத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பிவைக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் முன்னோடியாக, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகச் செலுத்த அறிவுறுத்தியிருப்பது நல்ல விஷயமே. அரசின் வழிகாட்டுதல் இல்லாமலேயே, ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் வங்கிகளின் வழியாகப் பெறப்படுகின்றன. இப்போது, அரசின் வழிகாட்டுதலை ஏற்படுத்தி இருப்பதன்மூலம், இனி வரும் காலங்களில் இதைத் தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அரசு கொண்டுவரும் மாற்றங்கள் வழியே மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம்.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!!

ஆசிரியர்களே..!


1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள்
மட்டுமே கொண்டவராகவும்
ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.

2.படிப்பே வராத குழந்தை என்ற போதும் .. தன்னம்பிக்கை
இழந்து விடாதவாறு அதனிடம்
பேசிப் பழகுங்கள்.

3.மதிப்பெண் நிறைய எடுக்க முயற்சிப்பது நல்லதுதான். ஆனால், முயற்சியையும் தாண்டி அது முடியாத போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து..உணர்த்துங்கள்.

4.கற்றலில் குறையுள்ள குழந்தையை எதற்கும் உதவாததென முத்திரை குத்தவோ மற்றவர் முன் அதைச்
சொல்லி அவமானப் படுத்தவோ கூடாது.அவர்களுக்கு உதவுங்கள்.

5.வீட்டுப் பாடம் அளவாக தினமும் கொடுக்கலாம்.அது நன்கு கற்பிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

6.Meanings Test என்பது வீட்டுப் பாடம் என்றால் ...வகுப்பில் அது நன்கு விளக்கப் பட்ட பிறகு ரஃப் நோட்டில்  எழுதச் செய்து பிறகு
வீட்டுப் பாடமாகத் தரலாம்.

7.அடுத்த நாளில் உடனே தேர்வு வைக்காமல் வாய் மொழியாக ஒவ்வொருவரிடமும் கேட்டு நல்ல பயிற்சி கொடுத்த பிறகு
எழுதச் சொல்லலாம்.

8.இவ்வாறு நல்ல பயிற்சிக்குப்
பிறகு வகுப்பில் எழுதும் சிறு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்  பெறும் வகையில் கவனம் கொண்டால்  அது கற்றலின் மீது குழந்தைக்குப் பிரியம் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும்.

9.பாடங்களை கற்பிக்க நிறைய நேரம் எடுத்து புரியும்படி கற்பிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பாடம் நடத்தி விட்டு தேர்வு வரை மனனம் செய்ய வைத்து கூடுதல் மதிப்பெண் பெற வைப்பது பயனற்றது... அருவருக்கத் தக்கது.

10.முதல் வகுப்பு முதலே மொழிப் பாடங்களில் சிறு சிறு சொற்றொடர் சொந்தமாக எழுதப் பயிற்சி அளித்து பிறகு சிறு கட்டுரைகள் எழுத வைத்து மொழித் திறனை வளர்க்கலாம்

11. பாராட்டும், ஊக்குவிப்பும்,அன்பான அணுகு முறையுமே ஒரு நல்லாசிரியரின்
பண்புகள்.

12.எழுத்துக்களும், அடிப்படை இலக்கணமும் சரிவரக் கற்பிக்கப் பட்டால் பிழையின்றி எழுதவும் தவறின்றி மொழியைக் கையாளவும் செய்வார்கள்.

13.ஒவ்வொரு பாடம் கற்பிக்கும் முன்பும், பின்பும் அந்தப் பாடத்தை படிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். வேகமாகப் படிக்க முடிந்தால்தான் புரிதல் சாத்தியம்.

14. பாடங்களை சிறு நாடகமாக்கி எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கும் வண்ணம் நடிக்கச் செய்தால் நல்ல புரிதலுடன் மகிழ்ச்சி யான கற்றல் நிகழும்.

15.பாடப்புத்தகம் தாண்டியும் வாசிக்கும  பழக்கம் உருவாக உறுதுணையாக இருங்கள்.

16.ஆடல், பாடல், பேச்சு, வரைதல் போன்ற தனித் திறமைகள் கண்டறியப பட்டு ஊக்குவிக்கப் பட வேண்டும்.
போட்டி என்பது பரிசு பெற மட்டுமல்ல..பங்கு பெறவும்
யார்வென்றாலும் மனமாறப் பாராட்டி மகிழவும் என்று உணர்த்துங்கள்.

17.பரிசு  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

18.பள்ளி வளாகத்தில்.. முதலில் பாதுகாப்பு...பிறகுதான் கற்பித்தல்.

19.அடி வாங்கி வளரும் குழந்தை கோழை அல்லது கொடூரன் ஆக மாறும் அபாயம் உள்ளது.

20.சமூக வன்முறைகளுக்கும், அவலங்களுக்கும் பள்ளி நாற்றங்காலாகி விடாமல் இருப்பதில் உங்கள் பங்கு முக்கியமானது.

21.மனக்காயங்கள் இல்லாத குழந்தைப் பருவம்குழந்தைகளின் அடிப்படை உரிமை.

22.பின்னாளில் நினைவு கூரும் போதெல்லாம் இனிய தென்றலாக நினைவலைகள் வந்து தழுவிச் செல்வதாக பள்ளிப் பருவம் அமைவது ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியப் படுத்தக் கூடிய ஒன்று.

23.உங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது உயிர்ப்புடன் கூடிய நிகழ் காலங்கள்...நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்..!

***
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் நம் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அரசுமற்றும் தனியார் மருத்துவ கல்லுாரி களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், 'நீட்'
நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

இடைக்கால தடை :

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் எழுதியு உள்ளனர். இங்கு, அரசு மற்றும் தனியார் மருத் துவ கல்லுாரிகளில் உள்ள,5,650 எம்.பி. பி.எஸ்., இடங்களுக்கு, மே மாதத்தில் விண்ணப்பங்கள்

வினியோகிக்கப்பட்டு, ஜூலை யில், மாணவர் சேர்க்கை, 'கவுன்சிலிங்' நடத்தப் படுவது வழக்கம். இந்தாண்டு, மற்ற மாநிலங்களில், விண் ணப்பங்கள் வழங்கப்பட்டு வரு கின்றன. தமிழகத் தில், இன்னும் வழங்கப் படவில்லை.

அதற்கு, தமிழக அரசு,'நீட்' தேர்வு குறித்து, தெளி வான முடிவு எடுக்காததே காரணம். இந்நிலையில், 'நீட்' நுழைவுத் தேர்வில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வினாத்தாள்களில், மாறு பட்ட கேள்விகள் கேட்கப் பட்டத்தை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில்,'நீட்' தேர்வு முடிவுகளை வெளியிட, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
திட்டவட்டம் :
தற்போது, இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு பின் தான், எம்.பி.பி.எஸ்., விண்ணப்பங்கள் வினியோகிக் கப்படும் என, தமிழக சுகாதாரத் துறை திட்டவட்ட மாக தெரிவித்து விட்டது. தற்போது, இன்ஜினியரிங் விண்ணப்பம் வினி யோகிக்கப் பட்டு, கவுன்சிலிங் துவங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளிலும், விண்ணப்பங்கள் வினியோகிக் கப்பட்டு, சேர்க்கை நடந்து வருகிறது. தற்போதைய
சூழலில், மற்ற படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பிய பின் தான், எம்.பி.பி.எஸ்., விண்ணப் பங்கள் வினியோகிக்கப்படும் என, தெரிகிறது. இதனால், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைக்காத மாணவர்கள், மற்ற படிப்புகளில் சேர முடியா மல், ஓராண்டை வீணாக்கும் நிலைமை ஏற்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''மூன்று வித விண்ணப்பங்கள் தயார் நிலையில் உள்ளன. நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்த மறுநாளே, விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்,'' என்றார். - நமது நிருபர் -

RTI 2005இன் கீழ் TRB சில தகவல் வழங்கவில்லை. அதனால் தகவல் ஆணையத்திடம் TRB மீது வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கில் அனைத்து தகவலையும் TRB இணைய தளத்தில் வெளியிட வேண்டுமென ஆணை பெற்றுள்ளேன். அதன் விவரம் பின்வருமாறு

Thanks : Mr JAYAPRAKASH




கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..

தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு விபரங்கள் (Employment Registration)சரியாக உள்ளதா என அவ்வப்போது சரிபார்க்கவும்…


For UG with Bed…  இளநிலை பட்டங்களை (BCA / B,Sc(CS) / B.Sc(IT))
தங்களுடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விபரங்களின் அடிப்படையில் Seniority Date, Major & Subject, Medium போன்றவைகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளவும்…


NCO Code பற்றி எதுவும் குழப்பமடைய தேவையில்லை. ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் (Degree) இது வேறுபடும்… NCO Code என்பது பதிவு (Register) செய்யும்போது தரவுதளம் கொடுக்கும் ஒரு Random Number – ஆகும். NCO Code பற்றிய மேலான விபரங்களுக்கு தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அனுகவும்…


For PG with BEd & MEd… தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் மதுரையிலும், வட மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சென்னையிலும் தங்களுடைய முதுநிலை பட்டங்களை (MCA / M.Sc(CS) / M.Sc(IT)) பதிவு செய்யவும் (சில ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளில் தெளிவாக இருப்பதில்லை).

UG + BEd., மற்றும் PG + BEd., + MEd., போன்ற கல்வித்தகுதிகள் சரியான பதிவுமூப்பு தேதியின்படி இருக்கிறதா என அவ்வப்போது சரிபார்க்கவும்…

Both UG and PG…. கணினி அறிவியல் (CS) Computer Science எனவும், கணினி பயன்பாட்டியல் (BCA / MCA) Computer Applications எனவும், தகவல் தொழில்நுட்பவியல் (IT) Information Technology எனவும் இடம் பெற்றிருக்கும்…

 இந்த விபரங்கள் பிழையாக (Mistake) இருக்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று திருத்தம் செய்து கொள்ளவும் (நீங்களாகவே இந்த பிழைகளை இணையத்தில் திருத்த முயற்சிக்க வேண்டாம்; அப்படி திருத்தும் பட்சத்தில் Seniority Date மாறும் அபாயம் உள்ளது என்பதை மறவாதீர்கள்)

 பெண் கணினி ஆசிரியைகள் திருமணத்திற்கு பின்னர் Address மற்றும் Initial-இவைகளை வேலைவாய்ப்பு அலுவலங்களில் திருத்தம் செய்ய வேண்டாம். ஏனெனில், பதிவுமூப்பு (Seniority) அடிப்படையில் பணி நியமனம் பெறும் பட்சத்தில் இந்த திருத்தங்கள் குழப்பமாகி வேலை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெ.குமரேசன்
9626545446
மாநிலப் பொதுச்செயலாளர்,

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ® *பதிவு எண் : 655 / 2014.

ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!

அரசுஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள்
பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில், அரசுப்பள்ளிகளில் ஆங்கில கல்வித்திட்டம், கடந்த 2012-13 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. ஒன்று, ஆறாம் வகுப்புகளில், தனி பிரிவாக துவங்கப்பட்டு, ஆங்கிலவழி கல்விக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. குறைந்தபட்சம் 5 முதல், 15 மாணவர்கள் சேர்ந்தால் கூட, வகுப்பு நடத்த, கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி, வரும் கல்வியாண்டில், 59 பள்ளிகள்,பொதுத்தேர்வை சந்திக்க உள்ளன.கோவை மாவட்டத்தில், 21 அரசுப்பள்ளிகளில், ஏற்கனவே ஆங்கில வழி பிரிவுகள் உள்ளன. இதுதவிர, 50 அரசு ஆங்கில வழிப்பள்ளிகள், பத்தாம் வகுப்பில், தற்போது காலடி எடுத்து வைத்துள்ளன.மேலும், 9 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், வரும் 2017- 18 கல்வியாண்டில், பிளஸ் 1 பொதுத்தேர்வை சந்திக்கின்றன. இவர்களுக்கு, மொழித்திறன் மேம்படுத்துதல், சிறப்பு பயிற்சி வகுப்பு மூலம், தேர்வுக்கு தயார்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசுப்பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவதால், மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒன்பதாம் வகுப்பிலும், 'பெயில்' போட உத்தரவு இல்லை. இவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கொண்டு தான், ஆங்கில வழி பள்ளிகளின் கற்பித்தல் தரம் பரிசோதிக்கப்படும்.'கோவை மாவட்டத்தில், வரும் 2017-18 கல்வியாண்டில், 50 அரசு, மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் இருந்து, 450 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். பிளஸ் 1 பொதுத்தேர்வில், ஒன்பது அரசு ஆங்கில வழி பள்ளிகள் பங்கேற்கவுள்ளன,'' என்றார்.

8/6/17

ஜூலை 17ல் குடியரசுத் தலைவர் தேர்தல்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: டெல்லி: நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 13வதுகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம்
ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதன்படி குடியரசுத் தலைவர் நடப்பட உள்ளது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்ஜைதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும்; ஜூலை 20ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடத்தப்படும் இந்தத் தேர்தலில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்களிப்பார்கள். நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 120 எம்எல்ஏக்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும் உள்ளனர்.

மக்கள்தொகை அடிப்படையில் எம்.பி, எம்எல்ஏக்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். சட்டப்பேரவை செயலாளர்கள் தேர்தல் அதிகாரிகளாகவும், மக்களவை, மாநிலங்களவை செயலர்கள் தேர்தல் துணை அதிகாரிகளாக செயல்படுவார்கள். ECI may anniunce President elections date today

BREAKINGNEWS : PGTRB நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

முதுநிலை ஆசிரியருக்கான நியமனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க
வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்.

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நியமனத்திற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை...

நியமனங்கள் கோர்ட் உத்தவுக்கு உட்பட்டது என்ற உத்தரவு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

CCE Resource Material

DGE-SSLC Exam Takkal

DGE- HSE Exam 2017 (Tatkkal)

DSE ; BT TRB REGULARISATION ORDER

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ‘தட்கல்’ மூலம் விண்ணப்பிக்கலாம்

ஜூன், ஜூலை மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சிறப்பு துணை
பொதுத்தேர்வு எழுத அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 8.6.2017 (இன்று), 9.6.2017 (நாளை) ஆகிய 2 நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மார்ச்–2017 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதியவர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினையும், தேர்வு எழுதாதவர்கள் தமது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டையும் (ஹால் டிக்கெட்) விண்ணப்பத்தினை பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை விண்ணப்பம் பதிவு செய்யும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு தட்கல் திட்டத்தில் அனுமதிக்கப்படும் தேர்வர்களுக்கு நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் தேர்வு -ஜூன் 20-ல் ''ரிசல்ட் "

No automatic alt text available.

பள்ளிக்கல்வி - முதன்மைக கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, இடமாற்றம் அரசாணை



'டெட்' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம்


ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது.

தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர். இந்த கடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.

ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்கு கிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.

பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.

பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும்.

பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர். இதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது. 10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.

இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 

இதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக அரசு பாடத்திட்டத்தில் யோகா மற்றும் சாலை விதிகள் விரைவில் சேர்க்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 41 அதிரடி அறிவிப்புகள் பற்றி வரும் 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு புத்தகங்கள் ,சீருடை ஆகியவற்றை வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பாடபுத்தகம், சீருடை வழங்கிய பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். தனியாருக்கு இணையாக தமிழக பள்ளிக்கல்வித் துறை திகழ்ந்துக் கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.


கோடை விடுமுறை முடிந்து விட்டது. மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்துள்ளனர். வானமே பூ மழை தூவி வருங்கால கல்வியாளர்களை வாழ்த்தி வரவேற்கிறது. சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை திறந்த தரத்துடன் திகழ்கிறது. மத்திய அரசு தேர்வுகளை மாணவர்கள் எதிர்க்கொள்ளும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும் 


பள்ளிக்கல்வித்துறையில் நேற்று அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருந்தார் செங்கோட்டையன். அது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன், 15ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கையின் போது 41 அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார். 


நீட் தேர்வு பற்றி நாங்கள் கூறவில்லை. நீட் வேறு பொது தேர்வு வேறு. மத்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை பற்றிய அறிவிப்பை சாதாரணமாக வெளியிடுவதை விட மானியக்கோரிக்கையில் வெளியிட்டால் அது சட்டசபை வரலாற்றில் இடம் பெறும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளார் செங்கோட்டையன் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

முதுகலை ஆசிரியர்கள் பணி இட ஒதுக்கீடு வழக்கு, பணி நியமன ஆணை வழங்கக்கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தில் மொத்தப் பதவிகளில் 4 சதவீதம் ஒதுக்க வேண்டும். அச் சட்டத்தின்படி 4 சதவீதம் என்ற அளவீட்டில் 67 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு வருமாறு:

கடந்த மே 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் கிரேட்-1 பணிக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தொடங்கலாம். ஆனால், எந்த நியமனத்தையும் ெசய்யக்கூடாது. வழக்கு வரும் 16ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.

தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கும் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள, ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.


மாதிரி வினாத்-தாள் : இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று பேசி-யதா-வது: மாண-வர்க-ளுக்கு யோகா மற்றும் சாலை விதி-கள் குறித்த பயிற்-சி-கள் தரப்படும். 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்-வு-களுக்கு எப்-படி வினாத்-தாள் வர உள்ளது என்-பது குறித்து, ஆசி-ரி-யர்கள், மாண-வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.


இந்த பணி-கள், இன்னும் ஒரு வாரத்தில் முடியும். பிளஸ் 1 மாண-வர்க-ளுக்கு மாதிரி வினாத்-தாள் வழங்கப்படும்.


42 அறி-விப்-பு : நீட் - ஜே.இ.இ., போன்ற மத்-திய அரசின் அனைத்து நுழைவு -தேர்வுக-ளை-யும் சந்-திக்க, ஒன்-றி-யத்-துக்கு ஒரு இடம் வீதம், சனிக்கிழமையில், சிறப்பு பயிற்சி அளிக்கப்-ப-டும். கல்-வித்-துறை குறித்து, 42 அறி-விப்-பு-களை, வரும், 15ம் தேதி, பள்-ளிக் கல்வி மானி-யக் -கோ-ரிக்கையில் எதிர்-பார்க்க-லாம். இவ்வாறு அவர் பேசினார்.


அரசு ஊழியர் பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு? : 'அரசு ஊழி-யர்க-ளின் பிள்-ளை-கள், அரசு பள்-ளி-யில் சேர்க்கப்-பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்படுமா?' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ''அரசு பள்-ளி-களில் மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்-பு-ணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு, 1 லட்-சம் மாண-வர்கள் கூடு-த-லாக சேர்ந்துள்ளனர். அரசு பள்ளி, கல்லுாரிகளில் இருந்தே, சிறந்த கல்-வியாளர்கள் தேர்வாகி உள்ளனர்; அதற்கான பட்-டி-யலை தர தயார். எனவே, எல்-லா-ரும் இதற்கு ஒத்-து-ழைப்பு தருவர்,'' என்றார்.


ஐகோர்ட்டில் முறையீடு : மருத்துவ படிப்புக்கான நுழைவு தகுதி தேர்வு, 'நீட்'க்கு விலக்கு அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று முறையிடப்பட்டது.உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' கூடியதும், மூத்த வழக்கறிஞர் விஜயன், ''கடந்த ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டது போல், இந்த ஆண்டும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; இது குறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என்றார். மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலம், 30ல் முடிகிறது; எனவே, அது தொடர்பான வழக்கையும் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.


இது குறித்து, மனுக்கள் தாக்கல் செய்யும் பட்சத்தில், அதை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

7/6/17

தமிழகத்தில் முதல் முறையாக கல்வியாண்டு தொடங்கும் முன்பே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது.

2018-ம் ஆண்டிற்கான  பொது தேர்வு தேதிகள்  அறிவிப்பு*

*2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசு அறிவித்தது.*


*தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.*

*10ம் வகுப்பு தேர்வு 16.3.2018 தொடங்கி 20.4.18 முடியும் என அறிவிப்பு*

*10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.5.2018 வெளியிடப்படும்.*

*11ம் வகுப்பு தேர்வு 7.3.2018 தொடங்கி 16.4.18 வரை நடைப்பெறும்*

*11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30.5.18 வெளியிடப்படுகிறது.*

*12ம் வகுப்பு தேர்வு 1.3.2018 தொடங்கி 6.4.18 முடியும்.*

*12ம் வகுப்பு தேர்வு முடிவு 16.5.18 வெளியிடப்படுகிறது.*

2018ம் ஆண்டு 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு, தேர்வு முடிவுக்கான தேதிகள் அறிவிப்பு

தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல் 2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ் பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல் -தொடர்பாக




TET' தேர்வு விடைத்தாள் அடுத்த வாரம் திருத்தம் - ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது.


இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.


இந்தகடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது.



ஒருவாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்கு கிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது

இண்டர்நெட் திட்டங்களுக்கு இனி ஒரு வருஷம் வேலிடிட்டி: மொபைல் சேவை நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் ட்ராய்!

மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று
'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளது.


பொதுவாக 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்)  பரிந்துரைக்கும் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள்  இருப்பதை, மொபைல் சேவை  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் தெரிவிப்பதே இல்லை. எனவே குறைந்த செலவில் இண்டர்நெட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பிய ட்ராய், தற்பொழுது மொபைல் சேவை  நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய ஒரு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.


இதுதொடர்பாக ட்ராய் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:


மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் வழங்கும் இண்டர்நெட் திட்டங்களில்,  ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள ஒரு இன்டர்நெட் சேவை திட்டமானது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். அத்துடன் அந்த திட்டமானது அதிக அளவு டேட்டா பயன்பாடு கொண்டாதாகவும் இருக்க வேண்டும்.


நாடுமுழுவதும் தொலை தொடர்பு சேவையை விரிவு படுத்தும் பொருட்டும், டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பொருட்டும், ட்ராய் அறிமுகப்படுத்தும் இந்த திட்டத்தினை, அனைத்து மொபைல் சேவை  நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு  வழங்குவார்கள்;என்று எதிர்பார்க்கிறோம்.


ட்ராய் அமைப்பானது இது தொடர்பாக விரைவில் மொபைல் சேவை  நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனை கூட்டங்கள் நடத்த உள்ளது. அலைபேசி நுகர்வோர் அமைப்புகளும் இத்தகைய ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலமே வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தினை நாங்கள் அறிந்து கொள்ள முடியும்.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2012-13ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்பட்டவர்கள் - நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்

தொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அனைத்தும் 06.06.2017க்குள் பள்ளிகளுக்கு வழங்க உத்தரவு

தரம் உயரும் பள்ளிகளுக்கான அரசாணை தாமதம் : 50 ஆயிரம் இடங்கள் வீணாகும் அபாயம்

நடப்பு கல்வியாண்டில், தரம் உயர்த்தப்படும், 250 பள்ளிகளுக்கான அரசாணை வெளியாவதில் தாமதமாவதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை
வீணாகும் அபாயம் உள்ளது.


 'நடப்பு கல்வியாண்டில், 150 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும்; 100 உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளி களாகவும், தரம் உயர்த்தப் படும்' என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 'எந்தெந்த இடங்களில் தரம் உயர்வு தேவை என்பதை ஆய்வு செய்து, பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும்' என, தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர், சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் குறித்த பட்டியலும், அது தொடர்பான அரசாணையும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதனால், தரம் உயர்த்தப்படும் பள்ளிகள் எதுவென தெரியாமல், மாணவர்கள் சேர்க்கை நடக்கவில்லை. மேலும், பள்ளிகளை தாமதமாக தரம் உயர்த்து வதால், 50 ஆயிரம் மாணவர்களின் சேர்க்கை வீணாகும் அபாயம் உள்ளது. அதாவது, 100 மேல்நிலைப் பள்ளிகளில், நான்கு பாடப்பிரிவுகளில், 20 ஆயிரம்; 150 உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது, ௧௦ம் வகுப்புகளுக்கு, 30 ஆயிரம் இடங்கள் என, ௫௦ ஆயிரம் இடங்களில், மாணவர்களே இல்லாமல், ஓர் ஆண்டை கழிக்கும் நிலை உருவாகியுள்ளது.


இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'ஏதோ சில காரணங்களுக்காக, அரசாணையை வெளியிடுவதில், அரசு தாமதம் செய்கிறது. பள்ளிகளை தரம் உயர்த்த, ௫௦௦ கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப் படலாம். 'இதனால், அந்த நிதி வீணாவதுடன், தரம் உயரும் பள்ளிகளில், நடப்பு ஆண்டில், மாணவர்கள் சேர முடியாத நிலைமையும் உருவாகும்' என்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று...திறப்பு!

ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிகளில், முதல் நாளான இன்று, மாணவர் கள், புதிய வகுப்புக்கு மாற்றம் செய்யப்படுகின் றனர். பின்,அரசு மற்றும் அரசு உதவி பள்ளிக ளில், மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகள், இன்றே வழங்கப்படுகின்றன.


அறிவுறுத்தல்


மேலும், 8ம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவ, மாணவியருக்கும், இலவச சீருடை களும் வழங்கபட உள்ளன.இவற்றை எல்லாம் உடனடியாக வழங்கும்படி, அரசு உத்தர விட்டு உள்ளது. இலவசங்கள் வினியோகத் திற்கு பின், பள்ளிகளுக்கு விடுமுறை விடப் படும். நாளை

முதல், வழக்கம் போல வகுப்பு கள் துவங்கும். தனியார் பள்ளிகளில், புதிய மாணவர்களை வரவேற்றும், புதிய வகுப்புக்கு மாறும் மாணவர் களை வாழ்த்தியும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதல் நாள் என்பதால், மாணவர்கள், சீருடை அணிந்தே வர வேண்டும் என, பள்ளிகள் அறி வுறுத்தி உள்ளன.இதற்கிடையில்,ஓரிரு மாவட் டங்களில் மட்டும், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு விஷயத்தில், உள்ளூர் நிலவ ரத்திற்கு ஏற்ப, அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவெடுக்கலாம் என, அரசு ஏற்கனவே கூறியுள்ளது.


பழைய'பஸ் பாஸ்'


'பள்ளி மாணவர்கள், புதிய, 'பஸ் பாஸ்' வழங்கப் படும் வரை, கடந்த ஆண்டு பாசை பயன்படுத்தி, இலவசமாக பயணம் செய்யலாம்' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பஸ் பாஸ் வழங்கும் பணி, இன்னும் துவங்கவில்லை. அதனால், மாணவர் கள், பழைய பஸ் பாசை பயன்படுத்த லாம் என, அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து

உள்ளனர்.பழைய பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, பஸ்களில் அனுமதிக்கும்படி, நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு


புதுச்சேரி:''வெயில் தாக்கம் குறையாததால், புதுச்சேரியில் கோடை விடுமுறை நீட்டிக்கப் பட்டு, 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்,'' என, அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். இதுகுறித்து, முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசித்த பின் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது:

விடுமுறை விடாமல் பள்ளியை தொடர்ந்து நடத்தினால் தான், ஓராண்டு பாடங்களை நடத்தி முடிக்க முடியும். கடந்த ஆண்டு மழை பெய்யாததால், மழை விடுமுறை விடப்பட வில்லை. இந்த ஆண்டு, கனமழை இருக்கும் என, கூறப்படுகிறது.


விடுமுறை விட்டால், சனிக்கிழமை தோறும் பள்ளிகள் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். இருந்தும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுப்பதாலும், பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு, வரும், 12ல், பள்ளிகள் திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்

1.ஆசிரியர் வருகைப் பதிவேடு


2.மாணவர் வருகைப் பதிவேடு
3.மாணவர் சேர்க்கை நீக்கல் பதிவேடு
4.சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு

5.பதிவுத்தாட்கள் உண்மை நகல்
6.அளவைப் பதிவேடு
7.நிறுவனப்பதிவேடு
8.பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
9.தணிக்கைப் பதிவேடு
10.பார்வையாளர் பதிவேடு

11.பள்ளி விவரப் பதிவேடு (school profile )
12.ஊதியப்பட்டியல் பதிவேடு
13.ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
14.மதிப்பெண் பதிவேடு
15.தேக்கப் பட்டியல்
16.வருகைப்பட்டியல்
17.மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
18.வரத்தவறியவர் பதிவேடு
19.சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
20.மாணவர் தினசரி வருகைச் சுருக்கம்

21.மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
22.சுற்றறிக்கைப் பதிவேடு
23.பொறுப்பு ஏற்புப் பதிவேடு
24.தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
25.தற்செயல் விடுப்பு
26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
27.தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
28.ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
29.வாசிப்புத்திறன் பதிவேடு
30.அஞ்சல் பதிவேடு
31.தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
32.அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
33.கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
34.Inspire விருது பதிவேடு
35.கிராமக்கல்விக்குழு பதிவேடு
36.பெற்றார் ஆசிரியர் கழக்க் கூட்டப்பதிவேடு
37.அன்னையர் குழு பதிவேடு
38.பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
39.மன்றப் பதிவேடுகள்
a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
b.கணித மன்றம்
c.அறிவியல் மன்றம்
d.செஞ்சிலுவைச் சங்கம்
e.சுற்றுச்சூழல் மன்றம்
40.கால அட்டவணை
41.வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
42.சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
43.பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
44.பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
45.பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
46.S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
47.S.S.A வரவு செலவுப் பதிவேடு
48.வங்கி கணக்குப் புத்தகம்
49.பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
50.E.E.R பதிவேடு
51.S.S.A பார்வையாளர் பதிவேடு
52.நலத்திட்டப் பதிவேடுகள்


1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்வி உதவித்தொகை பதிவேடு

பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணம் உயர்வு : முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு 2017-18ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்,
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.


 அதன்படி, விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.755லிருந்து ரூ.900ஆகவும், கல்லூரி விடுதி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு ரூ.875 லிருந்து ரூ.1000 ஆகவும்  உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


இந்தஉயர்த்தப்பட்ட உணவுக் கட்டணம், 2017-18ம் கல்வியாண்டு ஜூன் 2017 முதல் மாணவ, மாணவியருக்கு வழங்கிட முதல்வர் அனுமதி வழங்கியதோடு, அதற்கான கூடுதல் செலவினத் தொகையான 12 கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 750 ரூபாய்க்கு  நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் 1338 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 86,807 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள்.

10-வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.10,000 பரிசு - உத்தரபிரதேச அரசு அதிரடி

உத்தரபிரதேசத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு தலா ரூ. 10,000 பரிசு தொகையாக வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத்
உத்தரவிட்டுள்ளார்.


 உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் யோகி ஆதித்யநாத் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறும் ஒவ்வொரு மாணவிகளுக்கு பரிசு தொகையாக தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று அம்மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் ஷர்மா இந்த அறிவிப்பை வெளியிட்டார். கன்யா வித்யா தன் யோஜனா (KVDY) முறையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறுபான்மையினருக்கும் உதவி செய்யும் வகையில் ஏழை முஸ்லிம் பெண்களின் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க யோகி அரசு முன்வந்துள்ளது.


100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் சிறுபான்மையினர் சேர்த்துள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மோகினி ராசா தெரிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத்தின் 45-வது பிறந்தநாளையொட்டி 100,000 பெண்களை கவுரவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

TET - 1111 ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் - நாளை சான்று சரிபார்ப்பு

அரசுதொடக்க மற்றும் உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1111 பட்டதாரி ஆசிரியர், சிறப்பு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதிப் பட்டியலை பிப்ரவரி மாதம் தயாரித்தது.


 மேலும், சந்தேகம் இருப்பின், கடந்த மார்ச் 10ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.


இந்தபட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. பட்டியலில் உள்ளவர்களுக்கு சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்று சரிபார்ப்பு நடக்க இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

G.O.335, date 2.6.2017-அனைத்து பள்ளி வேலைநாட்களிலும் காலை இறைவணக்க கூட்டம் நடத்துதல் குறித்து வழிகாட்டுதல் அரசாணை வெளியீடு..

5/6/17

பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம்

தமிழகத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்துத் துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருவதால் அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ரூ. 700 சிறப்பு ஊதியம் வழங்கப்படுவதோடு, அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகே பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

பாடத்திட்ட மாற்றத்திற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும்

தமிழக பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக இன்னும் 2 நாட்களில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட இருப்பதாகவும், ஒரு பாடத்திற்கான மதிப்பெண் 200-ல் இருந்து 100 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுவான சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டு ஒரே சான்றிதழ் வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான உயர்மட்ட குழு 2 நாட்களில் அமைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் இந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது போல இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழக மாணவர்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் பழனிச்சாமியின் ஒப்புதலோடு ஜூன் 6 அன்று வெளியாகவுள்ள கல்வி சார்ந்த அறிவிப்புகளைப் பார்த்து நாடே வியப்படையும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வெளிவர இருக்கிறது எனவும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 491 தனியார் மெட்ரிக், 40 நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கும் விழா காட்பாடி தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகாரச் சான்று வழங்கி, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
வேலூர், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் கூடுதலாக தலா ஒரு கல்வி மாவட்டம் ஏற்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது 41 அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. பிளஸ் 1 பாடத் திட்டம் குறித்த கமிட்டியில் இடம்பெற உள்ள கல்வியாளர்கள் குழு குறித்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 17,000-த்துக்கும் மேற்பட்ட மெட்ரிக். மற்றும் 3,000 நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் நிர்வாகிகள் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.

அதேபோல, தனியார் தொழிற்சாலைகள் உதவியுடன் கட்டப்பட்டு வரும் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பெறும்.
யோகா, தேசப் பற்று, சாலைவிதி, பெற்றோரை மதிக்கும் நிலை, விளையாட்டு ஆகிய 5 அம்சங்களை உள்ளடக்கிய வகுப்பறைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவுத் துறையிலும் நல்ல அறிவிப்பு வர இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கும் அரசாக இருப்பதால் 5 ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றார்.
நிகழ்ச்சியில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, எம்எல்ஏ-க்கள் என்.ஜி.பார்த்திபன், சு.ரவி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்

7வது சம்பள கமிஷனின் பரிந்துரையின் படி, மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம் ரூ .7,000 இலிருந்து ரூ. 18,000 ஆக குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் திருத்தப்பட்ட வருமானம் 9,300 முதல் 34,800 ஊதியம் வரை அதிகரித்துள்ளது. 4200, 4600, 4800 மற்றும் 5400 ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் ஊதியம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது மேலும் 40 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *5,200-20,200 ஊதிய குழுவினால் மத்திய அரசாங்க ஊழியர்கள் வகுப்பு 1800 முதல் 2800 வரை ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இது மேலும் 40 மட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.
   *7th Pay Commission: Revised pay matrix under all pay bands for central government employees.    
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் பாதுகாப்பு பணம் மேட்ரிக்ஸ்.    *பாதுகாப்பு பேட் மேட்ரிக்ஸ், முந்தைய 24 நிலைகளாக பிரிக்கப்பட்டது இப்போது சிவில் பே மேட்ரிக்ஸ் போன்ற 40 நிலைகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 7 வது ஊதியக் குழுவின் கீழ் திருத்தங்கள் செய்ய அனுமதி அளித்தது.  *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம்.  
 *7 வது ஊதியம் ஆணையம்: மத்திய அரசு ஊழியர்களுக்கான அனைத்து ஊதியத் தொகையின்கீழ் திருத்தப்பட்ட ஊதியம் ஓய்வூதிய திருத்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2016 க்கு முந்தைய ஓய்வூதியம் பெறும் மத்திய ஊதியக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட ஓய்வூதிய மதிப்பீட்டு முறையை மாற்றியமைத்துள்ளது.

4/6/17

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் (www.agae.tn.nic.in) இம்மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

👉 பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைதளத்தில் இருந்து தங்களின் 2016-2017 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்" - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



🔸 எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.


🔹 இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

🔸 பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

🔹 அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

🔸 மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.

🔹 இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.

🔸 இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

💥 இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

🔸 மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41  அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.

🔹 இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.

🔸 இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

🔹 இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்

 தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

'நீட்' தேர்வை ரத்து கோரி ஐகோர்ட்டில் மேலும் மனு

மதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஜொனிலா உட்பட, 10 மாணவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:'இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மே 7ல் நடந்தது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். மே 7ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், 'நீட்' மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதை ஏற்று, 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜூன் 12க்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் ஒத்திவைத்தார்.இந்நிலையில், புதுக்கோட்டையை ஜெரோபோ கிளாட்வின், உயர்நீதிமன்ற கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'பிளஸ் 2 வில், 1,177 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'நீட்' தேர்வு வினாக்கள், ஒரே மாதிரியாக இடம்பெறாததால், அதனடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய முடியாது. 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை சேர்க்க உத்தரவு

தனியார் பள்ளிகள் வெளியேற்றும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கல்வி ஆண்டு நேற்று துவங்கியது. கோடை விடுமுறை முடிந்து, வரும், 7ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கு முன், மாணவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும்படி, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள 
சுற்றறிக்கை:
• உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 6ம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அருகில் உள்ள தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளிகளில் இருந்து, மாணவர்களின் விபரங்களை பெற்று சேர்க்க வேண்டும்
• மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பள்ளி வளாகங்களை துாய்மைப்
படுத்த வேண்டும்
• வகுப்பறை கட்டடங்களின் உறுதித்தன்மை, மின் சுவிட்சுகளின் செயல்பாடுகள், மேற்கூரையின் தன்மை, கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தேர்ச்சியை காரணம் காட்டி, தனியார் பள்ளிகளிலிருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டால், அவர்களை அரசு பள்ளிகளில், ஒன்பது, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சேர்க்க, தயக்கம் காட்டக் கூடாது. 
அதேநேரம், எந்த பள்ளியிலிருந்து மாணவர் வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை, இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

உதவி கமிஷனர் பதவிதகுதித்தேர்வு அறிவிப்பு - TNPSC

சென்னை, : இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் பதவிக்கு, முதல் நிலை தகுதி தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்து அறநிலைய துறையில், நிர்வாக பிரிவு உதவி கமிஷனர் பதவிக்கு, மூன்று காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தகுதி தேர்வு, செப்., 3ல் நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை, இம்மாதம், 28 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 
www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., அனுமதி பெறாமல் பள்ளிகள் முறைகேடு

திண்டுக்கல், : மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரிய அனுமதி பெறாமல், பல பள்ளிகள், சி.பி.எஸ்.இ., என, விளம்பரம் செய்து மாணவர்களிடம் வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகின்றன. 

'நீட்' தேர்வு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள்; ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுகளுக்கு, சி.பி.எஸ்.இ., என்ற மத்திய அரசின் இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான வினாக்கள்
கேட்கப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் செயல்படும், பல தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்திற்கு மாறி வருகின்றன.இக்கல்வி திட்டத்தை செயல்படுத்த, பல கட்ட ஆய்வுகள் இருக்கின்றன. சில பள்ளிகளே, அவற்றை முறையாக கடைபிடித்து அனுமதி பெற்றுள்ளன. பெரும்பாலான பள்ளி கள் அனுமதி பெறுவதற்காக, விண்ணப்பங்களை மட்டும் அனுப்பி உள்ளன.இன்னும் சில பள்ளி கள் விண்ணப்பிக்காம லேயே, சி.பி.எஸ்.இ., என விளம்பரம் செய்து, பெற்றோரிடம் கட்டண வசூலில் மும்முரம் காட்டுகின்றன.பெற்றோரும், சி.பி.எஸ்.இ., பள்ளிக்கான அனுமதி அல்லது அங்கீகாரம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பிள்ளைகளைச் சேர்த்து வருகின்றனர்.
விதிமுறைகள்பெற்றோர், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம். விதிமுறைகள் வருமாறு: பள்ளி பரப்பளவு, 2 ஏக்கர் இருக்க வேண்டும். வகுப்பறை, 500 ச.அடி; ஆய்வகம் 600 ச. அடியில் இருக்க வேண்டும். நுாலகம், படிக்கும் அறையுடன், 14 மீ.,க்கு 8மீ., என்ற அளவில் இருக்க வேண்டும். கணிப்பொறி, கணித ஆய்வகங்கள் தனித்தனியாக இருக்க வேண்டும்.
பள்ளிக்கான தற்காலிக அனுமதி பெறுவோர், அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று, அத்துறை மூலம், மத்திய கல்வி வாரியத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 
தமிழக அரசின் அங்கீகாரத்தையும், மத்திய அரசு இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு வளாகத்தில், மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி மட்டுமே இயங்க முடியும்.
எழுத வேண்டும்அனுமதி எண்ணை, பள்ளி அறிவிப்பு பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்து

100 சதவீத தேர்ச்சி பெற்ற சென்னை பள்ளிகள்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வில், சென்னையிலுள்ள பல பள்ளிகள், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
சென்னை, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியில், தேர்வு எழுதிய 2௫௮ மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 59 பேர், தரவரிசையான, சி.ஜி.பி.ஏ.,வில், 10க்கு, 10 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர்களை, பள்ளியின் முதுநிலை முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் பாராட்டினார்.

அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் பள்ளியில், தேர்வு எழுதிய 805 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 199 மாணவர்கள், ஏ 1 கிரேடான, 10க்கு, 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை,
பள்ளியின் முதல்வர் ராதிகா உன்னி வாழ்த்தினார்.
ராஜா அண்ணாமலைபுரம், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், 640 பேர் தேர்வு எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 88 மாணவர்கள், 10க்கு, 10 மதிப்பெண்ணுடன் சி.ஜி.பி.ஏ., தரம் பெற்றுள்ளனர். அவர்களை, பள்ளியின் தாளாளர் மீனா முத்தையா மற்றும் முதல்வர் அமுதலஷ்மி வாழ்த்தினர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்திலுள்ள, கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேர்வு எழுதிய, 129 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 33 பேர், 10க்கு, 10 மதிப்பெண் தரம் பெற்றுள்ளனர். அவர்களை, சென்னை மண்டல துணை கமிஷனர் எஸ்.எம்.சலீம் மற்றும் முதல்வர் மாணிக்கசாமி வாழ்த்தினர்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவு திருவனந்தபுரம் மண்டலம் முன்னிலை

சென்னை, :சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புத் தேர்வு முடிவு கள், நேற்று வெளியாகின. கடந்த ஆண்டை விட, ௫ சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. வழக்கம் போல, திருவனந்தபுரம் மண்டலம், அதிக தேர்ச்சி பெற்றுள்ளது. 

16 லட்சம் பேர்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது; 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்டது. இதில், 90.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
கடந்த ஆண்டு, 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 5.26 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம், 99.85 சதவீத தேர்ச்சியுடன், வழக்கம் போல, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய, சென்னை மண்டலத்தில், 99.62
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

'கிரேடு' முறை 

இந்த தேர்வில், விடைத்தாள்கள் மதிப்பிடப்பட்டு, மொத்த மதிப்பெண்களுக்கு, சி.ஜி.பி.ஏ., என்ற, தர வரிசை குறிக்கப்பட்டுள்ளது. மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, மொத்தம், 10 சி.ஜி.பி.ஏ., மதிப்பெண்களுக்கு, 'கிரேடு' முறை வழங்கப்பட்டுள்ளது. 
இந்த கிரேடு அடிப்படையில், உயர்கல்வி தகுதி; மதிப்பெண்ணை உயர்த்தும் தேர்வு தகுதி, தகுதியில்லை என, 10 விதமான குறிப்புகள், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சதவீத கணக்கீடு எப்படி?

சி.பி.எஸ்.இ., தேர்வில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 தர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஐந்து பாடங்களிலும் தாங்கள் எடுத்த, தர மதிப்பெண்களை கூட்டி, அதை ஐந்தால் வகுத்தால், மொத்தம் எவ்வளவு சி.ஜி.பி.ஏ., என்ற, தரவரிசை கூட்டுத் தொகை வரும். இதுவும், 10 மதிப்பெண்களுக்குள்
மட்டுமே வரும். பின், மதிப்பெண் சதவீதத்தை தெரிந்து கொள்ள, சி.ஜி.பி.ஏ., எண்ணை, 9.5 என்ற எண்ணால் பெருக்கினால், மொத்தம் எத்தனை மதிப்பெண் என்பது, சதவீதமாக வரும். உதாரணமாக ஒருவர், ஒன்பது சி.ஜி.பி.ஏ., எடுத்திருந்தால், அவரது மொத்த மதிப்பெண் சதவீதம், 85.5 சதவீதமாகும்.

மீண்டும் அமலாகிறது மதிப்பெண் முறை

நடப்பு கல்வி ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மீண்டும் மதிப்பெண் மற்றும் 'டாப்பர்ஸ்' முறைஅமலாகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு, ௨௦௧௦ல், பொதுத்தேர்வு முறை மாற்றப்பட்டு, பள்ளி அளவிலான தேர்வு அமலானது. விருப்பப்படும் மாணவர்கள் மட்டும், பொதுத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின், 2011ல், மதிப்பெண் முறை மாற்றப்பட்டு, கிரேடு முறை அமலானது. 

இந்நிலையில், பள்ளி அளவிலான தேர்வால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி, மீண்டும் பொதுத்தேர்வு கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு கட்டாயமாகிறது. 
அத்துடன், வரும் பொதுத்தேர்வில், கிரேடு முறை ஒழிக்கப்பட்டு, மீண்டும் மதிப்பெண் மற்றும் முதல் மூன்று இடங்களை பெறும், 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. நேற்று வெளியான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு தான், கிரேடு முறையில் கடைசியானது. இனி வரும் தேர்வு முடிவுகளில், மதிப்பெண் படி மாணவர்கள் தேர்ச்சி கணக்கிடப்பட உள்ளது.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட 
உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டு
உள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தர
விடப்பட்டுள்ளது. இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

WHATSAPP & FACE BOOK ஜூன்-6 உலாவரும் வதந்திகள்??? ( உண்மைகளா )

ஜூன்-6 உலாவரும் வதந்திகள்- 

*#ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் அதிகபட்சம் 5 ஆண்டுகள் மற்றுமே பணியாற்றமுடியும் அடுத்தகல்வி ஆண்டு முதல் எனத்தகவல்.

*#நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஒரே அலகு UNIT ஆக மாற்றம் எனத்தகவல்.

*#கூடுதலாக 12 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்படும் எனத்தகவல்.


*#அனைத்துவகை பள்ளிகளில் யோகா ஆசிரியர் நியமனம் எனத்தகவல்.

*#பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரப்படுத்தலாம் எனத்தகவல்.

*#6வது வகுப்பு முதல் கணினியியல் கல்வி ஒரு பாடமாக கட்டாயமாக கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#தொடக்கக்கல்வியில் மாவட்டத்தில் உள்ள 1முதல்5 வரையிலும் அனைத்து ஓன்றியங்களையும் இனைத்து மாவட்ட அளவில் ஒரே அலகின் கீழ் கொண்டுவரப்படும் எனத்தகவல்.

*#அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வித்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் 10% வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத்தகவல்.

6ஆம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிக்கும் 41அறிவிப்பில் முதல் அறிவிப்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்(தமிழக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் எம்எல்ஏ,எம்பி உள்பட )பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப்பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்படும் எனத்தகவல்

2/6/17

Student's are advised not to take admission in any M.Phil/P.hd., Programme through Distance Education - UGC..

PRESS RELEASE COPY-12-ம் வகுப்பு விடைத்தாள் நகல் நாளை பிற்பகல் தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியீடு - தேர்வுத் துறை அறிவிப்பு.



09/07/2017 மற்றும் 23/07/2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்

மாற்று சான்றிதழ் - சில விவரங்கள் :

தொடக்க கல்வித்துறை மாற்று சான்றிதழின் அடிக்கட்டு பள்ளியில் இருக்க வேண்டிய ஆவணம் என்பதால் , மாற்று சான்றிதழின் விவரங்கள் முன்புறம்
இரண்டு A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும் . நடுவில் கிழிப்பதற்கு வசதியாக துளையிட்ட தாளாக இருக்க வேண்டும் . நூறு மாற்று சான்றிதழ்கள் கொண்ட பைண்டிங் செய்ய பட்ட புத்தகமாக இருக்க வேண்டும் . மாற்று சான்றிதழின் இடப்பக்கம் உள்ள அனைத்து விவரங்களும் வலப்புறம் இருக்க வேண்டும் . இடப்பக்கம் உள்ள மாற்று சான்றிதழின் அடிக்கட்டையில் விவரங்களை பூர்த்தி செய்து , அதே விவரங்களை வலது பக்கம் உள்ள மாற்று சான்றிதழில் பூர்த்தி செய்து , இடது பக்க சான்றிதழில் பெற்றோரிடம் கையொப்பம் பெற்று , பின்னர் வலது பக்கம் உள்ள சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் . இடது பக்கம் உள்ள அடிக்கட்டு சான்றினை முக்கிய பதிவேடாக பாதுகாக்க வேண்டும் . இதில் உள்ள தாள் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் . சான்றின் முன் பக்கம் , பின்பக்கம் அனைத்து விவரங்களும் பள்ளியில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் . Xerox எடுக்காமல் , பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகமாக வாங்க வேண்டும் .


எஸ்பிஐ.,ல் எதற்கெல்லாம் கட்டணம் :

SBI - இன்று முதல் அமல்படுத்தியுள்ள சேவை கட்டணம் என்னென்ன? எதற்கெல்லாம் கட்டணம்?


நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ள
சேவை கட்டணம் இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவை கட்டணம் குறித்து பல குழப்பங்கள் நிலவி வருகிறது. இதற்கு எஸ்பிஐ தரப்பில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1. 'எஸ்பிஐ பேங்க் பட்டி' (SBI Bank Buddy) எனப்படும் வங்கி ஆப்சை பயன்படுத்தி மொபைல் வாலட் மூலம் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

2. மற்ற அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் மாதம் 8 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம்.

3. இதில் மெட்ரோ நகரங்களில் வசிப்போர் 5 முறை எஸ்பிஐ ஏடிஎம்.,களிலும், 3 முறை மற்ற வங்கி ஏடிஎம்.,களிலும் பணம் எடுக்கலாம். மெட்ரோ நகரங்களில் இல்லாதவர்கள் மாதம் 10 முறை வரை சேவை கட்டணம் இல்லாமல் ஏடிஎம்.,ல் பணம் எடுக்கலாம்.

4. அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம் என்ற வரைமுறை பொருந்தும்.

5. ஏழ்மை நிலையில் இருப்போர் வங்கிக் கணக்கில் அதிகம் சேமிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த 4 முறை மட்டுமே பணம் எடுக்கமுடியும் என்ற வரையறை வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இவர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு தொகை பிடித்தம் செய்யப்படுவதில்லை.

6. ஆன்லைன் பணபரிமாற்றம் : ஜூன் 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையின்படி, ஐஎம்பிஎஸ் வழியாக ஆன்லைனின் பணம் பரிமாற்றம் செய்பவர்கள், ரூ.1 லட்சம் வரை பரிமாற்றம் செய்தால் ரூ.5 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பணபரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.15 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிமாற்றம் செய்பவர்களிடம் ரூ.25 உடன் சேவை வரி வசூலிக்கப்படும்.

7. அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டு பரிமாற்றம் : 20 க்கும் மேற்பட்ட அழுக்கு அல்லது கிழிந்த நோட்டுக்களையோ வாடிக்கையாளர் மாற்றினால்அவர்களிடம் ரூ.2 உடன் சேவை கட்டணம் ஒவ்வொரு நோட்டுக்கும் வசூலிக்கப்படும்.

ரூ.5000 க்கும் மேலான மதிப்புடைய அழுக்கு மற்றும் கிழிந்த நோட்டுக்களுக்கும் இது பொருந்தும்.

8. செக் புக் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 10 செக் தாள்கள் கொண்ட

புக்கிற்கு ரூ.30 உடன் சேவை வரியும், 25 செக் தாள்கள் கொண்ட புக்கிற்கு ரூ.75 உடன் சேவை வரியும், 50 செக் தாள்கள் கொண்ட செக் புக்கிற்கு ரூ.150 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

9. ஏடிஎம்., கார்டுகளுக்கு கட்டணம் : ஜூன் 1 ம் தேதியிலிருந்து புதிய டெபிட் கார்டுகளுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும். ரூபே கிளாசிக் கார்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.


10. பணம் எடுப்பதற்கான கட்டணம் : அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு 4 முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை பணம் எடுப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்பிஐ வங்கியில் ரூ.50 உடன் சேவை வரியும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்.,களில் பணம் எடுத்தால் ரூ.20 உடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

June diary - 2017

June-1.New academic year begins.

June - 1 BT s dist to dist transfer counseling continues (DSE)

June - 1: Last date to apply HSE instant exam (+2)

June - 2: SGT to BT promotion (DSE)

June - 2: Last day to apply PG TRB


June - 3.Last date to apply SSLC instant exam

June - 3: Grievance day likely (DEE).

June - 7: School reopens

June - 10: Grievance day likely (DSE).

June - 22: RH Shabha Kahdar

June - 23: Supplementary exam for XII begins

June - 26: HL Ramzan


June - 28: Supplementary exam for X begins.

பள்ளி மாற்று சான்றிதழில் 'ஆதார்' எண் பதிய உத்தரவு

அரசுபள்ளி மாணவர்களுக்கான மாற்று சான்றிதழில், மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. 'ஆதார்' எண் மற்றும் மாணவர் வருகை நாட்களை, பள்ளி மாற்று சான்றிதழில் குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலிருந்து, வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு, இதுபோன்ற விபரங்கள் அடங்கிய, மாற்று சான்றிதழ் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய மாற்று சான்றிதழில், 18 விதமான விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. முதல்முறையாக, ஆண், பெண் இனத்துடன், மூன்றாம் பாலினம் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெயர், பெற்றோர், பாதுகாவலர் பெயர், படித்த பள்ளி, முந்தைய வகுப்பு போன்ற, பல விபரங்கள் பதிவு செய்யப்பட உள்ளன. அதேபோல, ஏதாவது சலுகை கட்டணத்தில் சேர்ந்தவரா; கல்வி உதவித் தொகை பெற்றவரா என்ற, அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மாணவரின் ஆதார் எண், அந்த மாணவன் கடைசியாக படித்த வகுப்பில், பள்ளிக்கு வருகை தந்த நாட்களின் சதவீதத்தை குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், குறைந்த நாட்கள் வந்திருந்தால், அந்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

இடைநிலை ஆசிரியர் ஒதுக்கீடு : அரசு அறிவிப்பால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு உயர்
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2,500க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 1,663 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், ஜூலை, 7ல், தேர்வு நடத்தப்படுகிறது.


 இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், 'முதுநிலை ஆசிரியர் நேரடி நியமனத்தில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 10 சதவீதம் ஒதுக்கப்படும். தகுதி யானவர்கள் விண்ணப்பம் அனுப்ப, இன்று வரை அவகாசம் அளிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

இதற்கு, ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, நேரடி நியமனம் செய்வதால், அவர்கள் இதுவரை பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்து, புதிய நியமனமாக கருதப்படும். இந்த உத்தரவை, பதவி உயர்வாக மாற்றினால் தான், ஏற்கனவே பணியாற்றிய காலமும் பணிமூப்பு கணக்கில் வரும் என்கின்றனர்.


இதற்கிடையில், 'பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுநிலை பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

1,111 ஆசிரியர் பணியிடம் : ஜூன் 8ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசுபள்ளிகளில் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூன், 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 286
பட்டதாரி ஆசிரியர்; 623 பின்னடைவு இடங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், 202 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என, 1,111 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்கள், ஏற்கனவே நடந்த ஆசிரியர்


 தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டது.அதனால், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் கூடுதல் விபரங்களை பதிவு செய்ய, மார்ச், 10 முதல், 23 வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதில், கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விதிகளின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.


'ஜூன், 8 முதல், 10 வரை, சென்னை, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, இதில் பங்கேற்கலாம்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு 'நோ'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, 'டிஜி லாக்கர்' என்ற,
டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடைத்தாள் ஆய்வுக்கு, ஜூன், 5க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.


 விடைத்தாள் ஆய்வில், மதிப்பெண் மாற்றம் இருந்தால், விண்ணப்பித்தோருக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்தோர் தேவைப்பட்டால், விடைத்தாள் நகலை ஆன்லைனில் பெறலாம். இதற்கு, ஜூன் 14 முதல், 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகல் கிடைத்த பின், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம்.


விடைகள் மதிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தாலும், விடைத்தாள் நகல் கிடைத்த ஏழு நாட்களில், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், 'திருத்தப்பட்ட விடைகளுக்கு, மறுமதிப்பீடு வழங்கப்படாது' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Epayslip இல் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars கடந்த இரண்டு மாதாங்களாக Update செய்யாமல் இருந்தது. அதற்கு CM CELL க்கு மனு அனுப்பிய பின் Financial Year 2017-18 in Annual-Income Statement, Pay Drawn Particulars நேற்று முதல் OPEN ஆகிறது. CM CELL மனுவின் விவரம்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு LTC எனும் விடுப்பு பயணச் சலுகை வழங்கி வருகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி துறை இல்லையென்கிறது. ஆனால் நிதித் துறை ஆசிரியர்களுக்கு LTC உண்டு என்று சொல்கிறது.Cm cell அளித்த பதில் விவரம் பின்வருமாறு

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை!!! UGC Letter

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும்
பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள், தங்களின் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு வங்கிக்கு மாறும் வசதி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரம் கூறியதாவது:  தற்போது, மொபைல்
போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்தின் சேவைக்கு, வாடிக்கையாளர்கள் மாறும் வசதி உள்ளது. இதே போல, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி., வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனங்களுக்கு மாறும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்கி வாடிக்கையாளர்களும், அவர்களது கணக்கு எண்ணை மாற்றாமல், வேறு பொதுத் துறை வங்கிக்கோ அல்லது தனியார் வங்கிக்கோ மாற, வழிவகை செய்வது பற்றி, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. வங்கிகளில், தற்போது வாடிக்கையாளர் கணக்கு எண்ணுடன், 'ஆதார்' கார்டு எண் இணைக்கப்பட்டு வருகிறது. அதனாலும், மொபைல் போன் வழி பணப் பரிவர்த்தனை பிரபலமாகி வருவதாலும், இது சாத்தியமாகும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.
  

பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளத்தில் முறைகேடு