யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/17

TRB மூலம், சிறப்பாசிரியர் தேர்வினை (2017) பாடவாரியாக எழுதியவர்கள் விபரம் RTI பதில்




வானிலை, 'லைவ்' இணையதளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது!

ஆறு மாதங்களுக்கு பின், சென்னை வானிலை மையத்தின், 'லைவ்' 
தகவல் இணையதளம், மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னையில் செயல்படுகிறது. இங்கு செயற்கை கோள் வழி கண்காணிப்பு, மழை, வெப்பநிலை கண்காணிப்பு மையம், ரேடார் ஆய்வு மையம் ஆகியவை செயல்படுகின்றன. சென்னை துறைமுக கட்டடத்தில், ரேடார் அமைக்கப்பட்டுள்ளது. இது, சென்னையின், 500 கி.மீ., சுற்றளவை கண்காணித்து, தகவல்களை அளிக்கும்.

'வர்தா' புயலின் போது, ரேடார் தொழில்நுட்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. அதை, இந்திய வானிலை மையம், சில மாதங்களில் சரி செய்தது. ஆனாலும், சென்னைக்கான, 'லைவ்' வானிலை தகவல் அளிப்பதில், சில சிக்கல்கள் இருந்தன. அதனால், ஆறு மாதங்களாக, சென்னை வானிலை மையத்தின், சென்னை, 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்படாமல் இருந்தது.

தற்போது, தொழில்நுட்ப பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும், 'லைவ்' வானிலை தகவல் பக்கம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வழியே, ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் முந்தைய வெப்ப நிலை, பனி, காற்றில் உள்ள ஈரப்பத அளவு, மழை அளவு, காற்றின் வேகம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று பதிவு!

சென்னை: பிளஸ் 2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் 
தனித்தேர்வர்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத முடியும்.
வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பிளஸ் 2 பொது தேர்வில், தனித்தேர்வர்கள் நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதன் விபரங்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள், இந்த தேர்வை எழுதலாம். இந்த ஆண்டில் இருந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், அடுத்த ஆண்டில் இருந்து, தனித்தேர்வர்களும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே, 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 வை நேரடியாக எழுத, இந்த ஆண்டே கடைசி வாய்ப்பு என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில், இன்று முதல் வரும், 16 வரையிலும், பின், 18 முதல், 20ம் தேதி வரையில், அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.

பாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள் : துணை ஜனாதிபதி விருப்பம்!

சென்னை: ''பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,''
என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.


வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது.
விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு வழங்கி பேசியதாவது: பாரதியாரின் பாடல்கள் அனைத்தும் கருத்துக்கள் செறிந்தவை. மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு கூடாது என, அவர் வலியுறுத்தி உள்ளார். பாரதியாரின் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தமிழும், தமிழகமும் எனக்கு நெருக்கமானவை. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட போது, எனக்கு தமிழை கற்க நேரமில்லை. அனைவரும், அவரவர் தாய்மொழியில், பேசுவதே சிறப்பு. நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. நாம் முயற்சி கண்டால், பாரதி கண்ட புதுமை தேசத்தை அடையலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் பாண்டியராஜன், இல. கணேசன் எம்.பி., - ஆர்.நட்ராஜ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு, ஜன., 16 முதல் துவங்குகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 2009க்கு பின், முதல் முறையாக, 10ம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில் முடியும்.
இந்நிலையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வுகளை நடத்த, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன்படி, ஜன., 16ல் செய்முறை தேர்வு துவங்கி, 25ல் முடிகிறது.

பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றம்!!!

                                             
வங்கி கிளைகளை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவற்றுக்கு ‘ஐ.எப்.எஸ்.சி.’
குறியீடு தரப்பட்டுள்ளது. 11 இலக்க எண்களை கொண்ட இந்த ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு, ஆன்லைன் பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி, தனது 1,300 கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடுகளை மாற்றி உள்ளது.

அதன்படி சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, பாட்னா, லக்னோ என பல்வேறு இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளின் ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ‘ஐ.எப்.எஸ்.சி.’ குறியீடு மாற்றப்பட்டுள்ள வங்கி கிளைகளின் பட்டியல், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் சார்பு வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரேண்டம் முறையில் வாக்குபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

மறுமதிப்பீடு,விடைத்தாள் நகல் வழங்கும் முறை அடுத்த ஆண்டில் அறிமுகம்-தொழில்நுட்ப கல்வித்துறை முடிவு!!!

முனைவர் மற்றும் பட்டதார்களுக்கு யுஜிசி சலுகை!!!

10,000 மீனவர்கள் மீது வழக்கு

கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத பிற நிகழ்ச்சிகளுக்கு ஐ கோர்ட் தடை!!!

கல்வி ஊழியர் போராட்டம்!!!

DSE - உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு!!!




EMIS ENTRY THROUGH YOUR SMARTPHONE"

ஓய்வூதியர்களுக்கு அதிர்ச்சி!

பட்டதாரி ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி!!!

6,7,8 பணியிடங்களை கையாளாத , அறிவியல் , ஆங்கிலம் , கணித பாடங்கள் படிக்காத , குறைவான தர ஊதியம் பெறும் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக தகுதி இல்லை ..வழக்கின் அபிடவிட்

10/12/17

உத்தர பிரதேசத்தில் அரசு துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூச்சு!!!

                                               
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பதவி ஏற்றதில் இருந்து,
அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,   மாநிலத்தில் உள்ள  100 தொடக்கப்பள்ளிகளுக்கு காவி நிறம் பூசப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பிலிபட் மாவட்டத்தில் உள்ள 100 துவக்க பள்ளிகளுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளது. போராட்டத்தையும் மீறி கிராம தலைவர்கள் காவி நிற வர்ணத்தை பூசியதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தொடக்கப்பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் தாய் மொழியாம் தமிழில் எளிதில் மாணவர்கள் பேசுகிறார்கள். 
அதேநேரம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்-மாணவிகள் குறைந்த எண்ணிக்கையில்தான் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.

எல்லா மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச அனைவருக்கும் கல்வி திட்டம் முன்வந்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது, அதன்படி முதல் கட்டமாக சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைக்க முடிவு எடுக்கப்பட்டது.

முதலில் 1-ம் வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச வைக்க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ‘லிப்ட் யுவர் ஹேண்ட்ஸ்’ என்று ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினால் உடனே மாணவர்கள் தங்களின் கைகளை உயர்த்தவேண்டும். இதுபோல் சிறு சிறு வார்த்தைகளை மாணவர்களுக்கு கற்பிப்பார்கள். மேலும் பாட்டு மூலமும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஆங்கிலத்தை கற்பிப்பார்கள்.

இவ்வாறு தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி ஒரு நாள் நடத்தப்பட்டது. பயிற்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற பயிற்சியை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிப்பார்கள். அந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதில் ஆங்கிலத்தில் பேச வைப்பார்கள்.

ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது குறித்து 90 வகையான புத்தகங்கள், 4 சி.டி.க்கள் ஆகியவை அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை புதிய பாடத்திட்டவரைவிலும் ஆங்கிலத்தில் மாணவர்களை எளிதில் பேச வைப்பது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரேஷன் அதிகாரிகளுக்கு லேப்-டாப்

                                        

12 நேரடி தேர்வுக்கு டிசம்பர் 11ல் பதிவு துவக்கம்!!!

சென்னையில் சர்வராகப் பணிபுரியும் ரோபோக்கள்!

                                        
இந்தியாவில் முதன்முறையாகச் சென்னையில் ரோபோக்கள் சர்வராகப்
பணிபுரியும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் செம்மஞ்சேரியில் 747 என்ற பெயருடன் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் உரிமையாளர்கள் கார்த்திக் கண்ணன் மற்றும் வெங்கடேஷ் ராஜேந்திரன், இந்த ஹோட்டலை விமானம் போன்ற வடிவத்தில் வடிவமைத்துள்ளனர்.

இதுகுறித்து உரிமையாளர் கார்த்திக் கண்ணன் கூறுகையில், “சீனா போன்ற நாடுகளில்தான் இந்த மாதிரியான ஹோட்டல்கள் உள்ளன. இதுபோன்று இந்தியாவில் இல்லை. அதனால், ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து ரோபோக்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டு, ஹோட்டல்களில் பயன்படுத்த முடிவு செய்தோம்.

வாடிக்கையாளர்களின் மேஜையில் டாப்லெட்டுகள் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் அந்த டாப்லெட்டில் அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்யலாம். அந்த ஆர்டரை ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். ரோபோக்களுக்கு புரோகிராம் செய்யப்பட்ட சில வாக்கியங்களைக் கொண்டு வாடிக்கையாளரிடம் உரையாடும். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஹோட்டல் திறந்தவுடனே அதிகமான மக்கள் முன்பதிவு செய்தனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இதுபோன்று, வேறொரு இடத்தில் இதனுடைய கிளை ஆரம்பிக்கப்படும். அதில் ரோபோக்கள், வாடிக்கையாளர்களை மேஜைக்கு அழைத்துச் செல்லுதல், அடிக்கடிவரும் வாடிக்கையாளர்களை அடையாளம் காணும் வசதிகளுடன் ரோபோக்கள் பணியமர்த்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

G.O 202 NEW HEALTH INSURANCE SCHEME- 2016

                                                 
                                                 

Click here more reads... Download pdf

வேலைவாய்ப்பு வேலைக்கு அழைக்கிறது இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

                                       
இந்திய அஞ்சல் துறையின்
மதுரை, கொல்கத்தா, சந்திராபூர், ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி, கோரபுட், கார்பூடண்டாபாத், ராஞ்சி, கிரிடிஹ், புராபி சிங்ன்பம், ஹஜாரிபாக், கம்மம், அஜ்மீர், ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளி்ட்ட அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள Gramin Dak Sevaks, எம்டிஎஸ், கார் ஓட்டுநர், பணியாளர் கார் ஓட்டுர், வாகன பழுது நீக்குபவர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Motor Vehicle Mechanic
காலியிடங்கள்: 01
பணியிடம்: மதுரை
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 33,000
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
முகவரி: Manager, Mail Motor Service, C.T.O Compound, Tallakulam, Madurai 625002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.01.2018

பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: கொல்கத்தா
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் 5,200 - 20,200
பணி அனுபவம்: 3 - 5 ஆண்டுகள்
முகவரி: Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2017

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: சந்திராபூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: பணியாளர் கார் ஓட்டுநர்
பணியிடம்: மும்பை
காலியிடங்கள்: 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
முகவரி: Senior Manager, Mail Motor services, 134-A, s. K. AHIRE MARG, Worli, MUMBAI-400018
பணி அனுபவம்: 3 முதல் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2017

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: கோராப்பூர்
காலியிடங்கள்: 284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017

பணி: Gramin Dak Sevak
காலியிடங்கள்: 1236
பணியிடம்: Dhanbad, Ranchi, Giridih, Purbi Singhbhum, Hazaribagh
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்களுக்கு http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Koraput
காலியிடங்கள்: 93
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2017

பணி:  Gramin Dak Sevak
காலியிடங்கள்: 190
பணியிடம்: Rajahmundry, Visakhapatnam, West Godavari
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017
மேலும் விவரங்கள் அறிய https://indiapost.gov.in அல்லது http://appost.in/gdsonline என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பணி: Gramin Dak Sevak
பணியிடம்: Khammam
காலியிடங்கள்: 127
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2017

பணி: Skilled Artisan
காலியிடங்கள்: 04
பணியிடம்: மும்பை
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து 1 முதல் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2017

பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 33
பணியிடம்: Ajmer, Jaipur, Jodhpur
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ,400
விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.doprajrecruitment.in அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.12.2017

OTP மூலம் செல்போனை ஆதாருடன் இணைக்கும் வசதி-ஜனவரி 1முதல்..

குமரியில் 25,000 மீனவர்கள் மீது வழக்குப் பதிவு!!!

ஆசிரியர் கல்வி கவுன்சிலில் பணியிடங்கள்!!!

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் பணியிடங்கள்

மெட்ரோ ரயில் கழகத்தில் பணிகள்!

DSE PROCEEDINGS- அங்கீகாரமின்றி தொடங்கி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு!!!




வீடு-மனைகளுக்கான பத்திரப்பதிவு நடைமுறை

வீடு மற்றும் மனை ஆகியவற்றை விற்பது 
அல்லது வாங்குவது போன்ற வர்த்தக பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி இங்கே காணலாம். குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட புல எண்கள் அமைந்துள்ள இடங்களுக்கு, அவற்றின் சந்தை மதிப்புகளை பொறுத்து அரசின் வழிகாட்டி மதிப்பு (Guide line value) வெவ்வேறு விதங்களில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கலாம். அந்த மதிப்பிற்கேற்ப ஆவணங்களை தயார் செய்யும்போது, முழு மதிப்பிற்கும் முத்திரைத்தாள் வாங்க முடியாத நிலையில், குறிப்பிட்ட மதிப்புக்கு வாங்கிவிட்டு மீதி உள்ள மதிப்பை சார்பதிவாளர் அலுவலகத்திலும் செலுத்தலாம்...!*

*பதிவு கட்டணம்*

*▪மேற்கண்ட கட்டணத்தை செலுத்த 41 என்ற படிவத்தில் வாங்கப்பட்ட முத்திரைத்தாள் மதிப்பு, வாங்க வேண்டிய முத்திரைத்தாள் மதிப்பு, மீதி செலுத்த வேண்டிய கட்டணம் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து பத்திரத்துடன் இணைத்து தாக்கல் செய்யவேண்டும். மீதி கட்டணம் ரூ. ஒரு ஆயிரத்துக்கும் மேற்பட்டிருந்தால் ‘கேட்பு வரைவோலையாக’ (DEMEND DRAFT) மீதி தொகையை செலுத்த வேண்டும். அரசு வழிகாட்டி மதிப்பிலிருந்து பதிவுக் கட்டணம் ஒரு சதவிகிதம் மற்றும் கணினி கட்டணம் ரூ. 100 ஆகியவற்றையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையில் ரூ. ஒரு ஆயிரம் வரை பணமாகவும், அதற்கு மேற்பட்ட கட்டணத்தை ‘கேட்பு வரைவோலையாகவும்’ செலுத்தவேண்டும்...!*

*பத்திர பதிவு*

*▪முத்திரை தாள்கள் அடங்கிய ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்புறம் சொத்து வாங்குபவர் மற்றும் சொத்து விற்பவர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவர் புகைப்படம், அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரி பார்த்தபின்னர், சார்பதிவாளர் பத்திரத்திற்கான பதிவு எண்ணை குறிப்பிடுவார். பின்னர் விற்பவர் மற்றும் வாங்குபவர் புகைப்படங்கள் முதலாவது முத்திரைத்தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு, கையொப்பம், முகவரி, கைரேகை ஆகியவை பெறப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவதோடு, ஆவணத்திற்கான சாட்சிகள் இருவரது கையொப்பமும் பெறப்பட்டு, பதிவு நிறைவு பெறும்...!*

 *பத்திரம் பெறுதல்*

*பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் ஆகியோர் கையொப்பமிட்டு, குறிப்பிட்ட நாள்கள் கழித்து, இரசீதை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து தமது பத்திரத்தை சொத்து வாங்கியவர் பெறலாம். வேறொருவர் வாங்க வேண்டியதிருந்தால், ரசீதில் அவர் கையொப்பமிட வேண்டும்...!*

*‘பெண்டிங் டாக்குமெண்ட்’*

*▪பத்திரப்பதிவின் போது அரசு வழிகாட்டி மதிப்பிற்கேற்ப முத்திரைத்தாள் வாங்குவது அவசியம் என்றாலும், அரசு நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு அதிகம் என்று கருதுபவர்கள் அவர்களே சொத்திற்கான மதிப்பை நிர்ணயம் செய்து அதன் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தை கணக்கிட்டு முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அந்த ஆவணத்தை சார்பதிவாளர் பதிவு செய்த பின்னர் ‘pending document' என்று முத்திரை இடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பிரிவின் அலுவலர் மூலம் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தையும், சுற்றிலும் அமைந்துள்ள மற்ற சர்வே எண்களின் மதிப்பையும் கணக்கிட்டு, முன்னர் குறிப்பிட்டிருந்த அரசு வழிகாட்டி மதிப்பில் வித்தியாசம் உள்ளதா..? என்பதை முடிவு செய்வார் அல்லது அவரே மதிப்பை நிர்ணயம் செய்வார்...!*

*வித்தியாச கட்டணம்*

*▪ஒரு வேளை அரசு வழிகாட்டி மதிப்பு சரியாக இருப்பதாக தெரியும் பட்சத்தில் அந்த தொகைக்கும், நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகித தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாச தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டணமாக செலுத்தவேண்டும். அதன் பிறகு பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47-கி பிரிவு என்று சொல்லப்படும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தை பெற வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பத்திரம் அனுப்பப்பட்டு, அங்கு சென்று வித்தியாச கட்டணத்தை செலுத்தி பத்திரத்தை பெற்று கொள்ளலாம்...!*

R.K.நகர் தொகுதி Ballot paper

                                                 
Click Here
https://drive.google.com/file/d/11UjomBsIHhn2r_jlzBfXcrZ8vHlQH9Si/view?usp=drivesdk

9/12/17

இதுக்கு மேல் கார் ஓட்டினால் உரிமம் ரத்து; அரசு உத்தரவால் ஓட்டுநர்கள் அதிர்ச்சி!!!

நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வாடகை வாகனம் 
ஓட்டினால் ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளாதாவது:-
சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டில் 17,218 பேரும், 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 14,077 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சாலை விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை ஆய்வு செய்ததில் 90% விபத்துகள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு உண்டாகும் களைப்பு மற்றும் மன உளைச்சல்களால் ஏற்படுவது என்பது தெரியவந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஓட்டுநர்கள் ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் வாகனங்களை ஓட்ட வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் ஒரு பணி முடிந்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக் கூடாது. ஆண்டுந்தோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும். சட்ட விதிகளை மீறும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4G வசதியுடன் லேப்டாப்!

Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை 
தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதுவரை அதிக பேட்டரி வசதிகள்கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை உற்பத்தி செய்துவந்த இந்த நிறுவனம், முதன்முறையாக புதிய முயற்சியைக் கையாண்டுள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் (டிசம்பர் 6) Asus நிறுவனம் NovaGo என்ற புதிய மாடல் மடிக்கணினி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முதன்முறையாக 4G நெட்வொர்க் வசதியுடன் செயல்படும் வகையில் இந்த மடிக்கணினி வெளியாகி உள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் ஸ்னேப்டிராகன் 835 ப்ராசெஸ்சர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

4GB RAM மற்றும் 64GB அல்லது 256GB இன்டெர்னல்கள் கொண்டு இரண்டு விதமான மாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் சிம் பயன்படுத்துவதற்காகத் தனியே வசதி இணைக்கப்பட்டுள்ளது. எனவே வைஃபை இல்லாத நேரங்களிலும் இதில் இன்டர்நெட் வசதியை பெற்றுக்கொள்ள முடியும். இந்தப் புதிய மடிக்கணினியானது முக்கியமாக 4G நெட்வொர்க் வசதியின் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிகவும் மெல்லியதாகவும், எடைக்குறைந்த ஒன்றாகவும் இந்த மடிக்கணினி உள்ளதால் இதை எளிதில் எங்கும் எடுத்து செல்ல இயலும். இதன் பேட்டரி சக்தியைக்கொண்டு சுமார் 22 மணி நேரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதன் விற்பனையை விரைவில் தொடங்கவும் Asus நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க...

நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி 
மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம் தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன

👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .

👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?

👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்

1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%

2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%

3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%

4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.

👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.

👉அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.

👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.

👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.

👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்

👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக

👉விழிப்படைவோம்.

👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்

எந்த வேட்பாளருக்கு சென்றது நான் போட்ட ஓட்டு?? தீர்வுகளை முன்வைக்கிறார் மென்பொருள் நிபுணர்!!!

                                       

வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப்பணி காலம் நீட்டிப்பு!!!

                                               

மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு தீர்வு:நடமாடும் உளவியல் ஆலோசகர் மூலம் கவுன்சிலிங் ஏற்பாடு-கல்வித்துறை அதிரடி உத்தரவு

                                       

விரைவில் ஸ்டிரைக்!!!

                                      

பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் குளறுபடி

சென்னை: பிளஸ் 2 அரையாண்டு தமிழ் தேர்வு வினாத்தாளில் உள்ள
குளறுபடியால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் தமிழ் 2-ம் தாளிலும் கேட்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மெயில் மூலம் மாற்று வினாத்தாள் அனுப்பப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

105 MBBS மாணவர்கள் நீக்கம்-இந்திய மருத்துவ கவுன்சில் அதிரடி!!!

                                                    

ஆசிரியர் கண்டித்ததால் பள்ளிகட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

                                          

நாடுமுழுவதும் 27 ந்தேதி ஸ்டிரைக்!!!

                                            

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள்!

                                    
ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் 
இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

ஜனவரி 1ஆம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது என்று பொது விநியோகத் துறை உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்க `ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதன்படி 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.

இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொது விநியோகப் பொருட்கள் வழங்க வேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு பொது விநியோகத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

எனவே, ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டால் மட்டுமே அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்களை பெற முடியும். என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டனர். எனவே ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமும், பொது விநியோகத் துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று (டிசம்பர் 08) தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்ட் இல்லாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது எனவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது. அத்துடன் டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்ட் கொடுத்து முடிக்கப்படும் எனவும் அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓகி புயல் தாக்குதல் காரணமாக குமரியில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

.கன்னியாகுமரி மக்கள் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்த ஜனவரி 31-ம் தேதி
வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 16க்குள் செலுத்த வேண்டிய மின் கட்டணம், நுகர்வோர் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிசம்பர் 18-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த அவகாசத்தை மேலும் நீடித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.*_

STATE TEAM VISIT ன் போது தலைமையாசிரியர் மேசையின் மீது இருக்க வேண்டியவை!!!

 *தலைமை ஆசிரியர் மேசை மீது இருக்க வேண்டியவை*-
வருகை பதிவேடு
AEEO.,BRTE,SUPERVISOR,VISIT NOTE,Time table,Action plan,Assesment Register,

வெற்றியின் விழுதுகள் , துளிரின் தொடக்கம், STEP INTO ENGLISH, PHONETICS BOOKS .

SG  ,MG செலவினம் தெளிவாக கூற வேண்டும்

அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்க பட்டிருக்க வேண்டும்

EER ,SMC பதிவேடு updatedவேண்டும்


2.பள்ளி வளாகம்,கழிப்பறை தூய்மை, water tank ,Toilet சுத்தமாகவும் தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.

3.கரும்பலகையில் நாள்,தேதி,வருகை,பதிவு எழுதி இருக்க வேண்டும்

4. *SABL*-ஆரோக்ய சக்கரம் காலநிலை, அட்டவணை,கீழ்மட்ட கரும்பலகை , TRAY,பாய்,KITBOX,புத்தக பூங்கொத்து, action plan assesment note , CCE records இருக்க வேண்டும்

5.periodical assesment results assessment registerல் ஒட்ட வேண்டும்
6.CAL CENTRE பள்ளிகளில் CAL  time  table ,syllabus மற்றும் கணினிகள் சுத்தமாக இருக்க வேண்டும் .

7.periodical test பற்றி அனைத்து ஆசிரியர் களும் தெரிந்து இருக்க வேண்டும்.

8.TV,  DVD, CD பயன்பாடு இருக்க வேண்டும் .

9.மதிய உணவு Hand washing solution இருக்க வேண்டும்.

10. C,D மாணவர் களுக்கான செயல் திட்டம்/test papers / பதிவேடுகள்

11.SALM,ALM- MIND MAP,தொகுத்தல் ALM படிநிலைகள் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.

12.Class work note,home work,composition  note ,Test note , two ruled , four ruled திருத்தம் செய்து இருக்க வேண்டும் .


13.SLm kit box ,Science kitbox பயன்பாட்டில் இருக்க வேண்டும். மாணவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என தெரிந்து இருக்க வேண்டும்.

14.TLM PROJECT WORKS
 FA (a ) ,FA (b) ,files ,port folios காட்சி படுத்த வேண்டும்.

15.ICT வகுப்பறைக்கள் பாராட்டுக்குரியவை.

16. *சிறப்பான நிகழ்வுகள்*
மாணவர் சேர்க்கை அதிகரிக்க எடுத்த முயற்சிகள்,மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ,
பள்ளியில் செயல்படுத்தி வரும் புதுமைகள்மற்றும்  செயல்பாடுகளை பார்வை அதிகாரிகளிடம் முன்னிலைப்படுத்தலாம்.

*Important:* ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளிடம் பதில் கூறும் பொழுது நேர்மறையாக பதில் கூற வேண்டும்.

ஆதார் எண்னை இணைப்பதற்கு அனைத்துவகையான இணைப்புகள்(LINKS) கொடுக்கப்பட்டுள்ளது!!!

*Aadhaar Update Link*
https://ssup.uidai.gov.in/web/guest/update


*Link Aadhaar & Pan*
https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html

*Link Aadhaar To Lic Policy*
https://www.licindia.in/Home/Link_Aadhaar_and_PAN_to_Policy


*Link Aadhaar With Indane Gas*
https://indane.co.in/aadhaar-seeding.php


*Link Aadhaar With HP Gas*
https://myhpgas.in/myHPGas/HPGas/JoinDBTLAadhaar.aspx


*Link Aadhaar With Bharat Gas*
https://my.ebharatgas.com/bharatgas/JoinDBTLAadhaar.jsp


*Link Aadhaar To SBI Bank*
https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding


*Link Aadhaar To Indian Bank*
https://apps.indianbank.in/ekyc_otp/


*Aadhaar Official Website*
https://uidai.gov.in/


*Link To Download Aadhaar Card*
https://eaadhaar.uidai.gov.in/#/popup


*Official Notice To Link Aadhaar With Mobile Networks*
http://www.dot.gov.in/sites/default/files/Re-verification%20instructions%2023.03.2017.pdf?download=1


*Link Aadhaar With Airtel Mobile Number*
https://www.airtel.in/link-aadhaar-mobile


*Link Aadhaar With India Post*
https://www.indiapost.gov.in/Financial/DOP_PDFFiles/AadhaarLinkageDelink.pdf

https://www.sbi.co.in/portal/web/agriculture-banking/aadhaar-seeding

மூத்த வழக்கறிஞர்களை எச்சரித்த தலைமை நீதிபதி!

வழக்கு விசாரணையின்போது சில மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன்பாகக் 
குரலை உயர்த்தி ஆவேசத்துடன் வாதிடுகின்றனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

அயோத்தி நிலம் மற்றும் டில்லி முதல்வர் – துணைநிலை ஆளுநர் இடையேயான அதிகாரப் பகிர்வு தொடர்பான விசாரணைகள் உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்தன. இது தொடர்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதியை நோக்கிக் குரலை உயர்த்தியும் ஆவேசத்துடனும் வாதிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் செயலுக்கு தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சில மூத்த வழக்கறிஞர்கள் வழக்கில் வெற்றி பெற வேண்டும், தங்களுக்குச் சாதகமான தீர்ப்பு பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு நீதிபதி முன்பாக மிரட்டல் தொனியில் குரலை உயர்த்தி ஆவேசத்துடன் கூச்சலிடுகின்றனர்” என்று வழக்கு விசாரணை ஒன்றின்போது குறிப்பிட்ட தீபக் மிஸ்ரா, இது போன்ற செயல்பாடுகளைச் சகித்துக்கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இப்படி ஆவேசப்படுவது அவர்கள் திறமையற்றவர்கள், மூத்த வழக்கறிஞர்களுக்கான தகுதியில்லாதவர்கள் என்பதைத்தான் காட்டுகிறது. மூத்த வழக்கறிஞர்கள் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பு மொழிக்கு எதிராக இவர்கள் வாதிடுவதை எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொள்ள முடியும் என்று கேள்வியெழுப்பிய அவர், “இவர்களை உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என்றும் எச்சரித்துள்ளார்.

8/12/17

பள்ளி மாணவர்களுக்கு, ‘ஹெல்ப்லைன்’ தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை!!!

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, ‘ஹெல்ப்லைன்’ திட்டம், சில வாரங்களில் அறிமுகம்
ஆகிறது.

14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள்


அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ‘ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ‘ஹெல்ப்லைன்’ திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இன்று 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

வணக்கம். ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம்
நடைபெற உள்ளது. எனவே அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ_ஜியோ

புத்தக பூங்கொத்து பதிவேடு - படிவம்

இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி?

உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லைஎன்றாலும்


பான்கார்டு வைத்திருப்பது நல்லது.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.
முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினைபெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டேநாட்களில் பான் கார்டு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுஎப்படி என்று இங்குப் பார்ப்போம்.
1.என்எஸ்டிஎல் https://tin.tin.nsdl.com/ இணையதளத்தில் உள்நுழைக.

என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகுஉங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர்இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதுதேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும்
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத்தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப்படிவத்தில் உள்ளிடவும்.
3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையானஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம்விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தைஅச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர்தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக
விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண்ஒன்று கிடைக்கும், அதைவைத்துக்கொண்டுhttps://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள்விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்றுசரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்குஎப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரைஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்யவேண்டும்.
5. 48 மணி நேரத்தில் பான் கார்டு

படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளைசெய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்குவருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பதுநல்லது.

அரசு ஊழியர்களுக்கு நிகராக ஓதுவார்களுக்கு சம்பளம் ஐக்கோர்ட் உத்தரவு!!!

தமிழாசிரியர் ஊக்க ஊதிய உயர்வு குறித்த CM CELL Reply




RTI-HRA-மாநகராட்சி வீட்டு வாடகைப்படியை 16 கி.மீ ஆர எல்லை பெற்று அரசாணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரே வழங்கலாம்




Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க

நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம்
தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன

👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .

👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?

👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்

1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%

2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%

3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%

4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.

👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.

👉அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.

👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.

👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.

👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்

👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக

👉விழிப்படைவோம்.


👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்

EMIS NEWS

தற்போது  எமிஸ் வலைதளம் 
செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம்  மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம்  பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில்   ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன்  என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள்  முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும்  பதிவேற்றலாம்.

7/12/17

30,000 பேருக்கு மீண்டும் தேர்வு!

தொலைநிலை கல்வி திட்டம் மூலம் பொறியியலபடித்த 30,000 பட்டதாரிகள் பட்டத்தை செல்லுபடியாக்க, மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பை தொலைநிலை கல்வி திட்டம் மூலம் வழங்கக்கூடாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிமுறை கூறுகிறது. ஆனால், சில தனியார் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைகள், தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், உள்ளிட்ட தொழில்நுட்ப பட்டங்களை வழங்குவதாகப் புகார் எழுந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏகே.கோயல், உதய் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நவம்பர் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தொலைதூர கல்வி திட்டத்தில், தொழில்நுட்ப கல்வி கற்பிப்பதை ஏற்க முடியாது. பல தனியார் பல்கலைகள் தொலைதூர கல்வி திட்டத்தில், பிஇ, பிடெக், பட்டங்களை வழங்கியுள்ளன. அது செல்லாது வரும், 2018 - 19 கல்வி ஆண்டு முதல் இவ்வகை கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படுகிறது. உதய்பூரில் உள்ள ஜேஆர்என் ராஜஸ்தான் வித்யாபீட், ராஜஸ்தான் சுரு மாவட்டத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் அன்வான்ஸ்ட் ஸ்டீஸ் இன் எஜூகேசன், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அக்ரிகல்ச்சரல் இன்ஸ்டிடியூட், தமிழகத்தில் உள்ள விநாயகா மி‌ஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேசன் ஆகிய நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் 2001 முதல் 2005 வரை தொலைதூர கல்வி திட்டத்தில் வழங்கப்பட்ட அனைத்துத் தொழில்நுட்ப பட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட ஒப்புதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமிருந்து கட்டணமாக பெறப்பட்ட தொகையை 2018 மே 31 ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ சார்பில் நடத்தப்படும் ஸ்கிரீனிங் டெஸ்டில், அவர்கள் வெற்றி பெற வேண்டும். 2018 அவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வாய்ப்புகளையும் ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்” என அவர்கள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தொலைநிலை கல்வி திட்டத்தில் வழங்கிய பொறியியல் பட்டங்களைப் பல்கலைக்கழக மானியக்குழு நிறுத்தி வைத்தது. இதனால், இந்த நிறுவனங்களின் வாயிலாக பொறியியல் பட்டம் பெற்ற சுமார் 30,000 பொறியியல் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்களுக்கான ஒரே தீர்வாக மே அல்லது ஜூன் மாதத்தில் ஒரு தேர்வு நடத்தப்படவுள்ளது. அதை எழுதுவதற்கு ஜனவரி 15ஆம் தேதிக்குள் அவர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் பட்டங்களை செல்லுபடி ஆக்க அவர்களுக்கு இதுவே ஒரே வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். 
மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்வு பயிற்சி: ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கான, போட்டி தேர்வு பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள், 'ஜே.இ.இ., நீட்' போன்ற நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, எம்.பி.பி.எஸ்., படிக்கவும், தேசிய உயர் கல்வி நிறுவனத்தில் சேரவும், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 
தமிழகம் முழுவதும், 100 மையங்களில், இலவச பயிற்சி துவங்கப்பட்டது.
இந்த மையங்களின் எண்ணிக்கை, 500 ஆக உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தவில்லை. அதனால், பெரும்பாலான மாணவர்களுக்கு, பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், போட்டி தேர்வு பயிற்சி மையம், பள்ளிகள் மற்றும் மாணவர்களின் வீடுகளில் இருந்து, வெகு தொலைவில் உள்ளது.
அதனால், மாணவர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது. எனவே, போட்டி தேர்வு பயிற்சி திட்டம், கண்துடைப்பாக இல்லாமல், மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். எனவே, கூடுதலாக பயிற்சி மையங்களை துவங்க வேண்டும் என்றும், அவை, பள்ளிக்கு அருகில் அமைய வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

தனியார் பள்ளி முதல்வர்களுக்கு கருத்தரங்கம் : அமெரிக்க கல்வி முறையை அறிய வாய்ப்பு

சென்னை: அமெரிக்காவில் கிடைக்கும் செயல்முறை கல்வி பயிற்சி வாய்ப்புகள் குறித்து, தனியார் பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கம், வரும், 9ல், சென்னையில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, இதை நடத்துகின்றன.
அமெரிக்காவில் உள்ள கல்வி வாய்ப்பு, பள்ளி மாணவர்களுக்கான செயல்முறை பயிற்சி மற்றும் மாணவர் கல்வி பரிமாற்ற வாய்ப்புகள் குறித்து, சென்னையில், வரும், 9ம் தேதி, கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
தாஜ் கோரமண்டல் ஓட்டலில், காலை, 9:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, 'எஜு கனெக்ட்' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடக்கிறது.
இதில், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., - ஐ.ஜி.சி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளி முதல்வர்கள் பங்கேற்கலாம்.
'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள்... 
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு, தமிழக பள்ளி, கல்லுாரி மாணவர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்லும், 'கோ பார் குரு' நிறுவனம் இணைந்து, நிகழ்ச்சியை நடத்துகின்றன.
அமெரிக்க துாதரகத்தின் கல்வி அதிகாரிகள், 'கோ பார் குரு' நிறுவன, சி.இ.ஓ., காயம்பூ ராமலிங்கம், மதுரை விஸ்வ வித்யாலயா குரூப் ஆப் ஸ்கூல்ஸ் முதல்வர், பி.சந்திரசேகரன் ஆகியோர் விளக்கம் தர உள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயர்களை, EDUCONNECT@GO4GURU.com என்ற இ - மெயிலிலும், 87542 55117, 99523 53851 என்ற தொலைபேசி எண்ணிலும், முன்பதிவு செய்து கொள்ளலாம். 
முன்பதிவு கட்டாயம்; அதேநேரம் அனுமதி கட்டணம் எதுவும் இல்லை.

மழை வெள்ளத்தால் திறன் தேர்வு ஒத்திவைப்பு

திண்டுக்கல்: எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு மழையால் டிச., 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்துகிறது. இத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ரூ.500 வீதம் அரசு வழங்கும்.இத் தேர்வினை எழுதுவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை ஆன்-லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இத் தேர்வு டிச., 9 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒக்கி புயல் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இத் தேர்வு தேர்வு டிச., 16 ம் தேதி நடைபெறும் என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

இடைத்தேர்தலை ஒட்டி, டிச., 21ல், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் வாக்காளர் கள், சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால், அவர்களுக்கு ஓட்டுப்பதிவு தினமான, டிச., 21 அன்று, சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக கல்வித்துறையில் நூலகர் மற்றும் உதவி நூலகர் பதவி TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்!!!

ஆசிரியர் வருகைப்பதிவேட்டில் pay band & Grade Pay க்கு பதிலாக தற்போது எழுத வேண்டியது -ஏற்கனவே இருந்த கிரேடு பே-க்கு நேராக உள்ள Level எண் மற்றும் ஊதிய விகிதம் எழுத வேண்டும்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6:00 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த புதுச்சேரி அரசு தடை :

புதுச்சேரி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலை 6 மணிக்குமேல் சிறப்பு வகுப்புகள் நடத்த தடைவிதித்து அம்மாநில பள்ளிக்கல்வி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி இலக்கை கருத்தில் கொண்டு, சில அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில், இரவு வரை பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் நீண்ட நேரம் படிப்பிலேயே, கவனம் செலுத்த வேண்டி இருப்பதால், அவர்கள் மனதளவில் சோர்வடைவதாகவும் பெற்றோர்கள் தரப்பில், கல்வித்துறைக்கு பல புகார்கள் வந்தன. மாணவர்கள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாலை 6 மணிக்குள் சிறப்பு வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்த நடைமுறையை, கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என, புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, புதுச்சேரி மாநில அனைத்து பள்ளி முதல்வர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் வெளியில் செல்வதை தடுத்து, படிப்பில் கவனம் செலுத்த மதிய உணவு இடைவேளை நேரம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6/12/17

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிப உயர்வுக்கான தடையாணை இரத்து செய்யப் பட்டுள்ளதுடன் 250 முதுகலை ஆசிரியர்களையும் 630 பட்டதாரி ஆசிரியர்களையும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

TNTET Paper 2 VACANCIES : தமிழ்நாடு பள்ளிக்கல்வி பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2265 - CM CELL REPLY

ACTION PLAN FOR LATE BLOOMERS!!



தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

அரசுமேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.

அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம்.

மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

DIGITAL SR கணினி மயம் ஆவதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்

ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் பணிப் பதிவேடு கணினி மயமாவது
  வரவேற்கத்தக்கதே

அதேவேளையில் ஏன் இந்த அவசரம்?

பல பணிப்பதிவேடுகளிலே முதல் பக்கத்தைத் தவிர வேறு பதிவுகள் இல்லை, பதிவுகளும் தவறாக உள்ளது.

பல ஆண்டு  தவறுகளை ஓரிரு நாளில் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?எப்படிக் களைய முடியும்?

Digital ஆக்குவதிலும் எண்ணிலடங்கா தவறுகள் .

தலைவலி  போய் திருகுவலி வந்தது போல் உள்ளது.

Digital ஆக்கியதில் அவசர கதியில் சரி பார்த்து விடுபட்டவைகளைச் சேர்க்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இதுதான் Final எனச்சொல்ல நாம் Foreign ல் இல்லை.

எனவேமீண்டும் மீண்டும் வாய்ப்புகள் தர வேண்டும்.

யாரோசெய்த தவறுக்கு ஊழியர் எப்படி இழக்க முடியும்.

மற்றதுறைகளை விட கல்வித்துறையில் மட்டும்ஏன் இந்த அவசரம்?

யாருக்கும் எள்ளளவும் பாதிப்பின்றி கணினிமயமாக்க சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்.,

தவறுகள் ஏற்படலாம் தவறில்லை அதை திருந்திக் கொள்ள மறுபடி மறுபடி வாய்ப்புகள் வழங்கவில்லை எனில் ஊழியருக்கு பெருத்த அடியே.

அதுவும் நம் நாட்டில் அவசர கதியில் எந்த ஒரு திட்டமானாலும் செயல்படுத்துவது வாய்ப்பு தராமலிருப்பது  வழக்கத்திற்கு மாறானது.

நாம்  நினைக்கலாம் நமக்கு விடுதல் இல்லை என ஆனால் நமக்கே தெரியாமல் தவறுகள் இருக்கலாம்.


எனவே  தவறுகள் திருத்த வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.