யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/12/17

சேலம் DEEO-வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எதிர் வரும் 27.12.2017 முதல் 30.12.2017 முடிய ICT பயிற்சி மற்றும் பயிற்சி நடைபெறும் மையங்கள் விவரம்!!





விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் 
மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களை மாற்ற கோர்ட் உத்தரவு!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு மாதத்திற்குள் தனியார் மருத்துவக் கல்லூரி 
மாணவர்களை சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அன்னை மருத்துவக் கல்லூரியை நிர்வகிப்பதில் நிர்வாகிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய கல்வி பாதிக்கப்படுவதாக அக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 17 மாணவர்கள் தங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் தலைமையில் நேற்று(டிசம்பர் 22) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்தபோது, வழக்கறிஞர் என்ற போர்வையில் சிலர் கல்லூரி நிர்வாகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்கின் உத்தரவில் கூறியிருப்பது: "இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க நேரிடும். மேலும் ஒரு கல்லூரி சரியாக இயங்கவில்லை என்றால் அந்தக் கல்லூரிக்கு அனுமதியளித்த அரசு தான் அங்குப் பயிலும் மாணவர்களின் கல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தனியார் நிர்வாகத்தின் குளறுபடி காரணமாக இந்தக் கல்லூரியில் 2017-18, 2018-19 ஆகியஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கைக்கு தடை விதித்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

அன்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 144 மாணவர்களையும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கவேண்டும். இதற்கு ஏதுவாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை உயர்த்த ஒரு மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மாணவர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லவில்லை என்பதால் அவர்களின் வருகைப்பதிவேட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவர்களின் சான்றிதழ்களை அக்கல்லூரி நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். மாணவர்களின் நலன் கருதி காணொலி காட்சி மூலமாக ஜனவரியில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்கொடுமை ,தற்கொலைக்கு தூண்டப்பட்டு இறந்த போன மாணவ மாணவிகளின் விபரங்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

                                          

TNHB JUNIOR ASSISTANT RESULT 2017 TYPIST EXAM RESULT PUBLISHED

                                               


CLICK HERE TO CHECK YOUR RESULTS

பொறியியல் கல்லூரிகளில் 2500 பேராசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: ஏஐசிடிஇ சலுகை எதிரொலி

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தில் அகில இந்திய 
தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அளித்துள்ள சலுகை காரணமாக, குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 பேராசிரியர்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளதாக பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகை, பொறியியல் கல்வியின் தரத்தை மேலும் குறைக்கவே வழிவகுக்கும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாடு முழுவதும் 3 ஆயிரத்து 224 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 927 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை 523 பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 78 ஆயிரத்து 845 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தக் கல்லூரிகளை ஏஐசிடிஇ கட்டுப்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற்ற பின்னரே, மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். இதற்கென ஒவ்வொரு ஆண்டும், அனுமதி வழிகாட்டுதலை ஏஐசிடிஇ வெளியிடும்.
அதுபோல, 2018-19 கல்வியாண்டுக்கான அனுமதி நடைமுறைகளை ஏஐசிடிஇ இப்போது தொடங்கியுள்ளது. இதற்காக அண்மையில், அனுமதி வழிகாட்டுதலை வெளியிட்டது. அதில், கல்லூரிகளின் கோரிக்கைகளை ஏற்று ஆசிரியர்-மாணவர் விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்து, ஏஐசிடிஇ அறிவித்திருந்தது. இதற்கு, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் வரவேற்பு தெரிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும், கல்வியாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரும், தனியார் கல்வி நிறுவன ஊழியர் சங்க நிர்வாகியுமான கார்த்திக் கூறியது:-

பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் இதுவரை 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஏஐசிடிஇ நிர்ணயித்த போது, பெரும்பாலான கல்லூரிகள் அதைப் பின்பற்றவில்லை. பல கல்லூரிகள் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், சில கல்லூரிகள் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவிலேயே விகிதத்தை அமல்படுத்திவந்தன.
இப்போது இந்த விகிதாசாரத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்து சலுகை அளித்துள்ளது. இது கல்லூரிகளின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும். இதனால், மாணவர்களை கவனிக்கும் அளவு குறைந்து, கல்வித் தரம் பாதிக்கப்படும்.

இப்போது தமிழகத்தில் உள்ள 523 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் படிப்படியாக மூடப்பட்டு, ஒருசில ஆண்டுகளில் 300 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நிலைத்திருக்கும். எனவே, ஏஐசிடிஇ-யின் இந்தச் சலுகையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன் கூறுகையில், ஏஐசிடிஇ ஏற்கெனவே 1:15 என்ற அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதத்தை நிர்ணயித்திருந்தபோதே, பெரும்பாலான பொறியில் கல்லூரிகள் 30 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் (1:30) என்ற அளவில்தான் நிர்ணயித்து வந்தன.
எனவே, ஏஐசிடிஇ இப்போது இந்த விகிதத்தை 1:20 ஆக நிர்ணயித்திருப்பதால், எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. பொறியியல் கல்வியின் தரம் இப்போது உள்ளதைப் போலவேதான் நீடிக்கும் என்றார்.

கல்வித் தரம், ஆராய்ச்சி நிச்சயம் பாதிக்கும்

ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 ஆக ஏஐசிடிஇ குறைத்திருப்பது, பொறியியல் கல்வியின் தரத்தை மட்டுமின்றி, உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டையும் கடுமையாகப் பாதிக்கும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார்.

இதுகுறித்து தொலைபேசி மூலம் அவர் அளித்த பேட்டி:

பொறியியல் கல்லூரிகளை, மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் ஏ,பி,சி என பிரித்து, அதில் -சி- பிரிவில் வரும் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு மட்டும் ஆசிரியர்-மாணவர் சேர்க்கை விகிதத்தை 1:20 ஆக அறிவித்திருக்க வேண்டும். ஏ, பி பிரிவில் வரும் பொறியியல் கல்லூரிகளுக்கு முன்பிருந்தது போல 1:15 என்ற விகிதத்தையே நிர்ணயித்திருக்க வேண்டும்.

ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்து கல்லூரிகளுக்கும் 1:20 என ஏஐசிடிஇ அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சில தனியார் பொறியியல் கல்லூரிகளின் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவே தெரிகிறது. இந்தச் சலுகை காரணமாக, பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு மட்டுமே நேரம் இருக்கும். ஆராய்ச்சி அல்லது ஆராய்ச்சி ஊக்குவிப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பேராசிரியர்களுக்கு நேரம் இருக்காது. எனவே, பொறியியல் கல்லூரியின் தரம் மேலும் மோசமடையும் என்பதோடு, ஆராய்ச்சி மேம்பாடும் பாதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பலர் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.

தேர்வு முறைகேடு :156 பேர் மீது வழக்குப் பதிவு!

                                                  
பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமன தேர்வில் நடைபெற்ற 
முறைகேடு குறித்த விவகாரத்தில் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வை நடத்தியது.

இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதன்பேரில் தேர்வு முடிவுகள் திறம்ப பெறப்பட்டது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2200 பேரில் பெரும்பாலானோருக்கு மதிப்பெண் வேறுபாடு இருந்தது தெரியவந்தது.

தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பலருக்கு நிறைய மதிப்பெண் வித்தியாசம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து,மதிப்பெண் குளறுபடிகள் ஏற்பட்ட தேர்வர்கள் தேர்வு வாரியத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் முறைகேடு தொடர்பாக 196 பேர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் 20 அன்று தெரிவித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த , மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக . விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், முறைகேடாக வேலையில் சேர முயன்றவர்கள் என 156பேர் மீது 6 பிரிவுகளில் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விசாரணை ஆணையம் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் முறைகேடு பின்னணி குறித்து தெரியவரும் என்றும் மற்ற அரசு பணி நியமனங்களிலும் ஊழல் குறையும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியள்ளார்.

16/12/17

RTI-மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி ரூ 2500 க்கு தெளிவுரை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் நன்றி திரு.இரவிச்சந்திரன்-கரூர்



TRB Exam - தகுதியற்ற 300 பேருக்கு போலி மதிப்பெண் வழங்கியது அம்பலம். தேர்வை ரத்து செய்ய கோரிக்கை!!!

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

சென்னை: 'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொதுத் தேர்வு தேதியை, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பரில், அரசு தேர்வுத் துறை அறிவிக்கும். இந்த ஆண்டு, பள்ளிக் கல்விச் செயலர், உதயசந்திரன் உத்தரவில், இறுதி தேர்வு விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே, பொது தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதனால், தேர்வு நாளை, முன்கூட்டியே கணக்கிட்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தவும், மாணவர்கள் படிக்கவும் வசதியாக இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, அதே தேதிகளில், திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடக்கும் என, தேர்வுத்துறை, நேற்று அறிவித்துள்ளது



ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு

சென்னை: உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநில அளவில் இன்று நடக்கிறது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.

குரூப் - 4' தேர்வு பதிவுக்கு 20ம் தேதி வரை அவகாசம்

சென்னை: 'குரூப் - 4' தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவிகளில், 9,351 காலி இடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., பிப்., 11ல் போட்டி தேர்வை நடத்துகிறது. இதில், பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு, நவ., 14ல் துவங்கி, டிச., 13ல் முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், வரும், 20 வரையும், தேர்வு கட்டணம் செலுத்துவது, 21ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயக்குமார் அறிவித்துள்ளார். நேற்று வரை, இத்தேர்வுக்கு, 18.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை நடந்த, குரூப் - 4 தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களில், இதுவே அதிகபட்சம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளை விட, அதிக விண்ணப்பங்கள், இந்த முறை பதிவாகி உள்ளன.'ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். தேர்வு நடக்கும் தேதியில், எந்த மாற்றமும் இல்லை' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

STATE TEAM VISIT - கோயம்புத்தூர் மாவட்ட பள்ளி குழு பார்வை குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் !



மார்கழி : _ மாதம்

மார்கழி :

மார்கசீர்ஷம் – வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். ‘மார்கம்’ என்பது ‘வழி’ என்று பொருள்படும். ‘சீர்ஷம்’ என்பது ‘தலை சிறந்தது, உயர்ந்தது’ என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி உள்ளது என்பதே  ‘மார்கசீர்ஷம்’ என்பதன் உண்மைப் பொருளாகும்.


மார்கழி மாதங்களில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. இதன் காரணமாக சிலர் மார்கழி மாதம் என்பது பீடை மாதம் என்ற கருத்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். அவ்வாறு மார்கழி மாதமானது பீடை மாதமாக இருந்தால், அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதா உபதேசத்தில் ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கிருஷ்ணபரமாத்மா கூறியிருப்பாரா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதிகாலை அற்புதம்

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறைப் பொழுது என்று  அழைக்கப்படும் அதிகாலை நேரம்தான் மார்கழி. தெளிவான உள்ளத்துடன், உடலில் சுறுசுறுப்பும் குடிகொண்டிருக்கும் அந்த  அதிகாலை நேரமே தேவர்களை வழிபடுவதற்கு சிறந்ததொரு நேரமாக கருதப்படுகிறது. அந்த அதிகாலை நேரத்தில் இறைவனை துயிலில் இருந்து எழுப்பும் விதமாகவே கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றன. இதனால் தான் ‘திறக்காத கோவில்களுக்கு திறக்கும் மாதம்’ என்று மார்கழியின் மாண்பை எடுத்துரைக்கும் வகையில் கூறிவைத்தார்கள்.

இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவே அந்த காலத்தில் நமது  பெரியவர்கள் மார்கழியில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை வைக்கவில்லை. இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது  சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை வைப்பது இல்லாமல் போனது.

சரணாகதியே வழி

பொதுவாக ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங் களில்தான் சுப நிகழ்ச்சிகள் இருக்காது. ஆடியில் அம்மன் வழிபாட்டிற்காகவும்,  புரட்டாசி பெருமாள் வழிபாட்டிற்காகவும், மார்கழி மாதம் அனைத்து தெய்வ வழிபாட்டுக்கும் உரியது. இந்த மூன்று மாதங்களும் தெய்வ வழிபாட்டிற்காகவே பக்தர்களால் ஒதுக்கப்பட்ட மாதங்களாகும். இதில் அனைத்து தெய்வ வழிபாடு உள்ள மார்கழி மாதமே மாதங்களில் மிகவும் உயர்ந்த மாதமாக கருதப்படுகிறது.

இறைவனை சுலபமாக அடையும் வழியானது சரணாகதி. ‘உன்னை தவிர என் வாழ்க்கை துணை வேறுயாரும் இல்லை. என்னை  சீக்கிரம் வந்து ஆட்கொள்’ என்று ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளும், பாண்டிய அரசவையில் அமைச்சர் பதவி வகித்தும்,  ‘அரச பணியை விட, ஆண்டவன் பணியே சிறந்தது’ என்று இறைவழி சென்று அவன் புகழ்பாடி தொழுத நாயன்மார்களில்  ஒருவரான மாணிக்கவாசகரும் மேற்கொண்டது இந்த சரணாகதியைத்தான். அதன் வாயிலாகவே அவர்களின் வாழ்வு உயர்வு  பெற்றது.

மதிப்புக்குரிய மார்கழி

மார்கழி மாதத்தை மதிப்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது  மிகையாகாது. மார்கழி மாதத்தில் பாராயணம் செய்யும்  பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்க வாசகர்  பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை பாராயணம் செய்யத் தொடங்கியதும் விண்ணை முட்டி நின்ற  மார்கழியின் சிறப்பு, விண்ணைத் தாண்டியும் வளரத் தொடங்கி விட்டது.

15/12/17

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

                                            
பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், 
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.


அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன்வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

*எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது?*


வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.


உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது.அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.



பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.



டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லதுயூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும். அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும்.

பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.



இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும்.

அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும்.மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.


யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினைரீபிரிண்ட் செய்திட முடியும்.

பேஸ்புக், டுவிட்டரில்' காஸ் சிலிண்டர் பதிவு!!!

வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்'
போன்ற, சமூக வலைதளங்கள் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, இந்தியன் ஆயின் நிறுவனம் அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு என, இரண்டு வகை, சமையல் காஸ்சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. தற்போது, வீட்டு வாடிக்கையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின், கட்டணமில்லா தொலைபேசி, இணையதளம் வாயிலாக, சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளம் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.
தற்போது, இந்த சேவை, டில்லி உட்பட, வட மாநிலங்களில் மட்டுமே உள்ள நிலையில், ஓரிரு தினங்களில், தமிழகத்திலும் செயல்பாட்டுக்குவருகிறது.

இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமூக வலைதளத்தில், சிலிண்டர் பதிவு செய்வது எப்படி என்ற விபரம், நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் சத்தம் போடக் கூடாது-உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டணம்!!

ஆகஸ்டில் மக்களவைத் தேர்தல்???

தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

ஆசிரியர் பயிற்றுனர்களில் 350 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் !!!

சிறப்பு 'இம்ப்ரூவ்மெண்ட்' தேர்வு!!

மார்ச் 4ல் செட் தேர்வு!

அரசு வக்கீல்கள் நீக்கமா?

+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்?

                                       
                                               

Click here

சட்டப்படி உங்களை தற்காத்து கொள்ளுவது எப்படி?



ஊழியர்களை வெளியேற்றும் வெரிசோன்!!!

                                              
அமெரிக்காவைத் தலைமையிடமாகக்கொண்டு 
செயல்படும் வெரிசோன் நிறுவனத்தின் ஒருபகுதியான Verizon Data Services India தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு இந்தியாவின் ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்தியாவில் சுமார் 7,000 பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வெளியேற்ற வெரிசோன் முடிவு செய்துள்ளதாக ஐடி (IT) மற்றும் ஐடிஇஎஸ் (ITES) ஊழியர்களின் சங்கம் (UNITE) தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கின், “வெரிசோன் நிறுவனத்தில் 7 முதல் 3 வரையிலான பிரிவில் உள்ள 993 ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், நேற்று முன்தினம் (டிசம்பர் 12) மூத்த ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பாதுகாவலர்களின் உதவியுடன் அவர்கள் அப்புறப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தொழிலாளர் ஆணையர் தலையிட்டு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி பணியில் இருந்து நீக்குவதைத் தடுக்க வேண்டும் என ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வெரிசோன் நிறுவன செய்தி தொடர்பாளர், “சர்வதேச சந்தையில் போட்டியிடவும், வெற்றி பெறவும் சில மாறுதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அந்த மாறுதல்கள் ஊழியர்களின் எண்ணிக்கையில் பிரதிபலித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐடி ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் ஃபோர்ம் ஆஃப் ஐடி எம்ப்ளாய்ஸ் (FITE)யிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஆம், இந்தத் தகவல் உண்மையானதுதான். சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ள தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் 1,000 பேரை வெளியேற்ற வெரிசோன் முடிவு செய்துள்ளது. இதற்கான செயல்பாடுகள் நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12ஆம் தேதி பணிக்கு வந்த ஊழியர்களை அவர்களின் இடத்துக்கே டெலிவரி மேனேஜர், செக்யூரிட்டி ஆகியோர் போய் அழைத்துச் சென்றுள்ளனர். இரண்டு மாத ஊதியம் தருகிறோம். கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பிரச்சினை செய்யக் கூடாது என்பதற்காக வாசல் வரையில் செக்யூரிட்டி உடன் சென்றுள்ளார். முன்பின் அறிவிக்காமல், திடீரெனப் பணியிலிருந்து நீக்குவதால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் அச்சத்தில் உள்ளனர்” என்று நிலைமையை விளக்கினார்.

‘இது தொடர்பாக உங்கள் சங்கம் சார்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?’ என்று கேட்டபோது, “தொழிலாளர் ஆணையர், சி.எம். செல் ஆகியவற்றுக்குப் புகார் அனுப்பியுள்ளோம். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தொழிலாளர் ஆணையர் உறுதியளித்துள்ளார்” என்ற பதில் கிடைத்தது.

‘எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் இந்த முயற்சியைத் தொழிலாளர் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்பதே ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: பள்ளிக்கல்விக் கல்வித்துறை!!!

                                         

தமிழ்நாடு BHEL நிறுவனத்தில் 1080 வேலைக்கு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளது

வேலையின் பெயர் :  Engineer Trainee

சம்பளம் : Rs. 40000

Apply Now: https://goo.gl/Ks4jPR

கல்வி: B.E/B.Tech

கடைசி நாள்: 03.02.2018

இடம் :Tamilnadu

More details Click Here: https://goo.gl/Ks4jPR

இந்த வேலை தகவலை மற்ற வாட்ஸாப்ப் Groupkum ஷேர் பண்ணவும்

silent letters in english

                                                    
Click here

ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது?

பொருளாதார ரீதியில் 
பின்தங்கியிருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. மீதமுள்ள 31 சதவீதப் பொதுப்பிரிவு இடங்களை, மற்ற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யத் தடை கோரி ஹரி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவில் மற்ற பிரிவினரும் போட்டியிடுவதால் சிறந்த கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கு இடம் கிடைப்பதில்லை என்றும், பெரும்பாலான இடங்கள் பிற பிரிவினருக்கே ஒதுக்கப்படுகின்றன என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இட ஒதுக்கீட்டு முறையால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் அடைந்த முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

Icici Bank நிறுவனத்தில் 9011 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது

*வேலையின் பெயர்:* Business Development

சம்பளம் :INR 50,000 - 2,00,000 Per month

*தேர்வு முறை*: Written test

Apply Link: https://goo.gl/5LguHq

*கல்வி:*Degree

*கடைசி நாள்*: 30.01.2018

மேலும் தகவலுக்கு Click Here=>https://goo.gl/5LguHq

TRB Exam - 220 ஆசிரியர்கள் தேர்வில் ஊழல் - ரூ.50 கோடி கைமாறியதாக குற்றச்சாட்டு

14/12/17

ENGLISH READING PRACTICE

                                           

Click here

வேலைவாய்ப்பில்லா வணிகப் பள்ளி மாணவர்கள்!

                                           
பி-ஸ்கூல் எனப்படும் வணிகப் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு 
வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருவதாகவும், இங்குப் பயிலும் 20 சதவிகித மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர் எனவும் அசோசெம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தகக் கூட்டமைப்பான அசோசெம், இந்திய வணிகப் பள்ளிகளில் பயிலும் மானவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வு மேற்கொண்டது. பணமதிப்பழிப்பு, புதிய திட்டங்கள் நிறுத்தப்படுவது மற்றும் மந்தமான தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் இம்மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதாக அசோசெம் கூறுகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 30 சதவிகிதம் குறைவான அளவிலேயே பி-ஸ்கூல் மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல பி-ஸ்கூல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்குக் கிடைக்கும் ஊதியமானது 40 முதல் 45 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது.

இந்த வணிகப் பள்ளிகளில் இவ்வளவு கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டுமா என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சிந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. 400க்கும் மேற்பட்ட இதுபோன்ற நிறுவனங்கள் செயலிழந்துவிட்டன. மேலும், 2015ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் டெல்லி, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, டேராடூன் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த சுமார் 250 பி-ஸ்கூல்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் சீட்டுகளை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாலும், தரமான மாணவர்களைத் தேர்வு செய்யத் தவறுவதாலும் இதுபோன்ற பிரச்னைகள் எழுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்குத் தீர்வாக உள்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது, சிறந்த பயிற்சி அளிப்பது மற்றும் ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தில் அதிகம் செலவிடுவது போன்றவை தீர்வாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு கல்வி பணியா? பிற பணிகளா?

1)மாணவர் திறள்பதிவேடு*

*2) FA(a)பதிவேடு*

*3)FA(b)பதிவேடு*

*4)பாட ஆசிரியர் பதிவேடு*

*5)வகுப்பாசிரியர் பதிவேடு*

*6)வகுப்பாசிரியர் வேலை பதிவேடு*

*7)மாணவர் அடைவு திறன் பதிவேடு*

*8)கல்வி இணை செயல்பாடுகள் பதிவேடு*

*9) I can I did பதிவேடு*

*10)உடற்கல்வி பதிவேடு*

*11)கணித உபகரணபெட்டி பயன்பாட்டு பதிவேடு*

*12)கணித உபகரணபெட்டி stock list பதிவேடு*

*13)புத்தக பூங்கொத்து stock list பதிவேடு*

*14)   புத்தக பூங்கொத்து பயன்பாட்டு பதிவேடு*

*15)காலை வழிபாட்டு பதிவேடு*

*16)மாணவர் வருகை பதிவேடு*

*17)விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு*

*18)விலையில்லா வண்ண பென்சில் வழங்கிய பதிவேடு*

*19)விலையில்லா பாடநூல் வழங்கிய பதிவேடு*

*20)விலையில்லா குறிப்பேடு வழங்கிய பதிவேடு*

*21)விலையில்லா புத்தக பை வழங்கிய பதிவேடு*

*22)விலையில்லா காலணி வழங்கிய பதிவேடு*

*23)C,D grade எடுத்த மாணவருக்கு அளித்த சிறப்பு கவன செயல்பாட்டு பதிவேடு*

*24)வாழ்க்கை திறன் பதிவேடு*

*25) 2 line note திருத்தம்*

*26) 4 line note திருத்தம்*

*27) தமிழ் note திருத்தம்*

*28) English note திருத்தம்*

*29) கணக்கு  note திருத்தம்*

*30) அறிவியல் note திருத்தம்*

*31) சமூக அறிவியல் note திருத்தம்*

*32) 1:30Pm  தமிழ், English dictation திருத்தம்*

*33) பள்ளி கண்ணாடி*

*34) கம்பிபந்தல் படைப்பு திருத்தம்*

*35)வீட்டு பாடம் திருத்தம்*

*36)தமிழ் புத்தக* *பாட பின் பயிற்சி* 
*திருத்தம்*

*37) ஆங்கில புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*38) கணித புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*39)அறிவியல் புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*40)சமூக அறிவியல் புத்தக பாட பின் பயிற்சி திருத்தம்*

*41) கணிணி பதிவேடு*

*42)மக்கள் தொகைக் கணக்கு*

*43) வாக்காளர் சரிபார்ப்பு பணி*

*45) பள்ளி பகுதி மக்கள்தொகை கணக்கெடுப்பு*

*46)ஆதார் வேலை*

*47) EMIS வேலை*

*48) NMMS பதிவு*

*49) மாணவர் ரத்தப் பிரிவு*

*50)மாணவர் சுகாதார அட்டை பதிவேடு*

*51) RANK CARD*

*52) மதிப்பெண் பட்டியல்*

*53) RESULT WORK*

இதுபோக இன்னும்   பதிவேடுகள் உள்ளன.

CCE RESOURCE MATERIAL (STANDARD 1-9)

ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இனி மாவட்டம் வாரியாக மட்டுமே EMIS இணையதளம் இயங்கும்!!!

பொது வருங்கால வைப்பு நிதி- ஊதிய திருத்தம் - திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா பிடித்தம் செய்தல் அரசாணை எண் 362 நிதி( படிகள்) துறை நாள் : 11.12.2017

G.0 NO : 751 | 350 ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குதல் திருத்தப்பட்ட அரசாணை!

வாக்காளர் வீடுகளில் வருமானவரி சோதனை-தேர்தல் ஆணையம் உத்தரவு*

அதிகாரியை செருப்பால் அடித்த ஆசிரியை!!!

EMIS Server முடங்குவதால் கிழமை வாரியாக மாவட்டங்கள் பிரிப்பு.

கல்வி மேலாண்மைத் தகவல் திட்டத்தின் கீழ் மாணவர் தரவுகள்
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

☀மாநிலம் முழுமையும் பயன்படுத்தும் அளவிற்கு பிரதான கணினியின் செயல்திறன் இல்லாததால் பலநேரங்களில் இத்தளத்தின் பறிமாற்ற வேகம் குறைந்தவிடுகிறது.

☀நேற்று இரவிலிருந்து இயங்காமல் இருந்த EMIS தளம் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

☀இதனையடுத்து கிழமை வாரியாக இணையத்தைப் பயன்படுத்தம் வகையில் மாவட்டங்களைப் பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

☀கீழ்க்காணும் நாட்களில் மட்டும் சார்ந்த மாவட்டங்கள் EMIS தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

*☀ஞாயிறு :*

அனைத்து மாவட்டங்களும்

*☀திங்கள், புதன் & வெள்ளி :*

1. சென்னை
2. கடலூர்
3. கோயமுத்தூர்
4. தர்மபுரி
5. ஈரோடு
6. காஞ்சிபுரம்
7. கிருஷ்ணகிரி
8. நாமக்கல்
9. நீலகிரி
10. சேலம்
11. திருப்பூர்
12. திருவள்ளூர்
13. திருவண்ணாமலை
14. விழுப்புரம்
15. வேலூர்

 வியாழன் & சனி :*

1. அரியலூர்
2. திண்டுக்கல்
3. கரூர்
4. கன்னியாகுமரி
5.  கிருஷ்ணகிரி
6. மதுரை
7. நாகப்பட்டினம்
8. புதுக்கோட்டை
9. பெரம்பலூர்
10. இராமநாதபுரம்
11. சிவகங்கை
12. தஞ்சாவூர்
13. தேனி
14. திருச்சிராப்பள்ளி
15. திருவாரூர்
16. திருநெல்வேலி
17. தூத்துக்குடி
18. விருதுநகர்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17லட்சம் பேர் விண்ணப்பம்,

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர் 
விண்ணப்பித்துள்ளனர். 9351 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்றிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.*

ஒரு ரூபாய்க்கு விமானப் பயணம்!

                                   
2012 ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால்
கிங்ஃபிஷர் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது, மீண்டும் ஏர் டெக்கான் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அதன் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவையைத் தொடங்கினார். குறைந்த கட்டணமாக ஒரு ரூபாய் கட்டணத்தை அறிமுகப்படுத்தி, சிம்ஃபிளி ஃபிளை என்ற வாசகத்துடன் செயல்பட்டது.

பின்னர், இந்த விமான சேவை 2008ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் இணைந்து செயல்பட தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் ஏர் டெக்கான் சேவையும் தடைப்பட்டது. தற்போது ஏர் டெக்கான் நிறுவனம் மீண்டும் தனது சேவையை வரும் டிசம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தனது முதல் சேவையை மும்பை- நாசி வழித்தடத்தில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் சிறுநகரங்களை இணைக்கும், மத்திய அரசின் உடான் சேவையை தற்போது பல விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. இந்த உடான் சேவை சிறிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டணத்தில் விமான பயணம் மேற்கொள்வது. சாதாரண மனிதர்களை விமானத்தில் பயணிக்கச்செய்வதே இந்த உடான் திட்டத்தின் நோக்கம். இந்தத் திட்டத்தின் படி ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 மட்டுமே. மீதமுள்ள தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும்.

இந்த உடான் சேவையுடன் இணைந்து ஏர் டெக்கான் நிறுவனமும் தனது இரண்டாவது சேவையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ''நாசிக்கில் இருந்து மும்பைக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல 4 மணி நேரமாகும். விமானத்தில் 40 நிமிடத்தில் சென்று சேரலாம். டிக்கெட் கட்டணம் ரூ.1400. சில அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.1 கட்டணத்திலும் டிக்கெட் கிடைக்கும். இவர்கள் முதலில் டிக்கெட் புக் செய்பவர்களாக இருக்க வேண்டும்.

2018, ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து ஆக்ரா, சிம்லா, லூதியானா, டேராடூன், குலு பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் பணியிடங்கள்.!!!

SABL TIME TABLE

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை
இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற அறிவிப்பு ரத்து 

வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை 

புதிய காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும்

- மத்திய அரசு

13/12/17

ML - ஓராண்டிற்கு குறைவான பணி - மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - இயக்குனர் விளக்க ஆணை

14 கோடி 'பான்' எண்கள் ஆதாருடன் இணைப்பு

புதுடில்லி : நாடு முழுவதும், நேற்று வரை, 14 கோடி, 'பான்' எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன. 


அரசு உயரதிகாரிகள், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும், 115 கோடி பேருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. அதே போல், 33 பேரிடம், 'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்கள் உள்ளன. ஆதாருடன், பான் எண்களை இணைக்க வேண்டும் என, அரசு கூறியுள்ளது. இதையடுத்து, நேற்று வரை, 14 கோடி பான் எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன. மொத்த பான் எண்களில், இது, 41 சதவீதம். ஆதாருடன், பான் எண்களை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

ஆதாருடன், பான் எண்களை இணைக்க, 2018 மார்ச், 31 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? : மதிப்பெண் குளறுபடியால் விசாரணை

அரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பாலிடெக்னிக்குகளில், விரிவுரையாளர் பணியில், 1,058 காலி இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அமைப்பு, செப்., 16ல் போட்டி தேர்வை நடத்தியது.
இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வின் முடிவுகள், நவ., 7ல் வெளியிடப்பட்டன. மதிப்பெண் தரவரிசைப்படி, ஒரு காலியிடத்துக்கு, இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில், இன்ஜினியரிங் இல்லாத பாடப்பிரிவு பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்காக, 4 சதவீத இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோருக்கு, வேலை கிடைத்துள்ளதாக, புகார் எழுந்தது; நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில், நவ., 7ல் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக, டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன் அறிவித்துள்ளார்.

அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் நகலையும், இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலையும், விடைக்குறிப்புகளையும், தேர்வர்கள் ஆய்வு செய்த நிலையில், பல தேர்வர்களுக்கு, மதிப்பெண்ணில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 
பல தேர்வர்களுக்கு, ஏற்கனவே, டி.ஆர்.பி., பட்டியலில் குறிப்பிட்ட மதிப்பெண்ணை விட, 60 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. சில தேர்வர்களுக்கு, 100 மதிப்பெண் வரை குறைவாக வருகிறது. இந்த குளறுபடி எப்படி நடந்தது என, தேர்வர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
ஒரே விடைத்தாளை திருத்தியதில், எப்படி வித்தியாசமான மதிப்பெண் வந்தது; இந்த குளறுபடியை செய்தது யார்; அரசியல் தலையீடு உள்ளதா; தேர்வர்களிடம் லஞ்சம் வாங்கி மதிப்பெண் வழங்கப்பட்டதா என, கல்வியாளர்களும், தேர்வர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, டி.ஆர்.பி., நடத்திய தேர்வுகள் தொடர்பாக, பல பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, உச்சபட்ச குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்து, புதிதாக மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கூண்டோடு மாற்றம் வருமா? : 'பாலிடெக்னிக் தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், டி.ஆர்.பி.,யின் மதிப்பீட்டு முறையிலும், தேர்வை நடத்துவதிலும் மாற்றம் செய்ய வேண்டும். ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக பணி புரியும், டி.ஆர்.பி., அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, கூண்டோடு மாற்ற வேண்டும். அவர்கள் மீது விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட்' தேர்வு வினாத்தாள் : சி.பி.எஸ்.இ., திட்டவட்டம்

புதுடில்லி: 'அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வுக்கு ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும்' என, மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன; இதனால், பெரும் 
சர்ச்சைகள் எழுந்தன.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
'நீட்' தேர்வை, ஹிந்தி மற்றும் ஆங்கில வழியில் தான், பெரும்பாலோர் எழுதுகின்றனர். மாநில மொழிகளில், குறைவானவர்கள் தான் எழுதுகின்றனர். அதனால் தான், சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

TPF ஆசிரியர்களுக்கு உங்கள் TPF கணக்கில் உள்ள இருப்புத் தொகை SMS செய்தியாக வந்துகொண்டிருக்கிறது

NEWS: TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை 
உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

சென்னை AG அலுவலகத்திலிருந்து TPF ஆசிரியர்களுக்கு 2017 செப் வரை உங்கள் TPF  கணக்கில் உள்ள இருப்புத் தொகை குறுஞ் செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.

*சரிபார்த்துக்கொள்ளவும்

வரவில்லையெனில் கைபேசி எண்ணை AG website - ல் பதிவு செய்ய வேண்டும்.
இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.agae.tn.nic.in/onlinegpf/

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு பயிற்சி வார்த்தைகள்!!!

14 இலட்சம் பேர் விண்ணப்பம்!!!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகள் ரத்து!!!

வங்கி டெபாசிட் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு-ஜெட்லி உறுதி!!!

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் 
அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 700க்கும் மேற்பட்ட, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளுக்கு, தமிழக பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி, மெட்ரிகுலேஷன் இயக்குனரகங்கள் மற்றும், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய கல்வி வாரியம் ஆகியவை சார்பில், தனித்தனியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சில பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., மற்றும், ஐ.ஜி.சி.எஸ்.இ., எனும் கல்வி வாரியங்களின்அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை தவிர, 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும் செயல்படுகின்றன.

இந்த பள்ளிகள், அங்கீகாரம் பெற்றது போல், இயங்கி வருகின்றன. அதனால், பல பெற்றோர், பல லட்சம் நன்கொடை செலுத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு, பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

*அதில், அவர் கூறி உள்ளதாவது:*கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட்டால், அவற்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மூட வேண்டும். எச்சரிக்கையை மீறி, மீண்டும் நடத்தினால், ஒரு நாளைக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

இதுகுறித்து, தமிழக பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தி, அங்கீகாரத்தை சோதனையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நிறுத்தப்படுமா ஆர்.கே.நகர் தேர்தல்???: தயாராகிறது தேர்தல் கமிஷன்!!!

சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன், சுயேட்சையாக

நின்றாலும், பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். வெற்றிக்காக தினகரன் கடுமையாக உழைக்கிறார். அவரது ஆதரவாளர்கள், வீடு வீடாக சென்று பணம் தருவதாகவும் கூறப்படுகிறது.அதே நேரம், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷும் தொகுதியில் பம்பரமாக சுழல்கிறார். இதையெல்லாம் கடந்து ஆளும்கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால், மக்களை வெயிட்டாக கவனிக்க வேண்டும் என்று, மதுசூதனனை, கட்சியினர் பலரும் உசுப்பி வருகின்றனர்.இதையடுத்து, தொகுதியில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு, தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பண விளையாட்டுக்களும் தங்கு தடையின்றி நடக்கிறது.இதையெல்லாம், பா.ஜ., தரப்பு, தீவிரமாக படம் பிடித்து ஆவணமாக்கி உள்ளது. இது தொடர்பாக, படமாக்கப்படும் விஷயங்களையெல்லாம், மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் பா.ஜ., தீவிரமாகி உள்ளது. இருந்த போதும், ஆர்.கே.நகர் தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுவைத் தொடர்ந்து, மீண்டும் தேர்தலை நிறுத்திவிடும் யோசனைக்கு தேர்தல் ஆணையம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

TET - சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET தேர்ச்சி கட்டாயம் இயக்குனர் ஆணை!!!

புற்று நோய் சிகிச்சைக்கு புதிய பாலிசி-- SBI அறிமுகம்!!!

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு வேலை!!!

இதில், பல்வேறு, ’கார்ப்பரேட்’ நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று,
மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த வகையில், சென்னை ஐ.ஐ.டி.,யில், முதல் கட்ட கேம்பஸ் முகாம், டிச., 1ல் துவங்கி, நேற்று முடிந்தது.
இதில், 763 பேருக்கு, அதிகபட்சமாக, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில், வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம், 211 நிறுவனங்களில், சிட்டி வங்கி, இ.எக்ஸ்.எல்., பிலிப்கார்ட், ஹெச்.சி.எல்., ஆகிய நிறுவனங்கள், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கிஉள்ளன.

மாணவர்களின் அடையாள அட்டை பள்ளிகளில் வடிவமைக்க புது செயலி!!!

கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசி
ரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தனியார் பள்ளிகளை போல, அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும், அடையாள அட்டை வழங்கும் நோக்கில் 2012ல், பள்ளிக்கல்வி மேலாண்மை இணையதளம் (எமிஸ்) உருவாக்கப்பட்டது.தொழில்நுட்ப குளறுபடிகளால், பள்ளிகள் சார்பில், இணையதளத்தில் உள்ளீடுசெய்த, தகவல்களை திரட்டுவதில், சிக்கல் நீடித்தது.
இதற்காக நடப்பாண்டில்,மேம்படுத்தப்பட்ட எமிஸ் இணைய பக்கம் உருவாக்கி, தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டு வருகிறது.இதில், கடந்த செப்., 1ம் தேதி நிலவரப்படி, அனைத்து வகை பள்ளிகளும், மாணவர் வருகை சார்ந்த தகவல்களை, உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதோடு, நலத்திட்ட உதவிகள், உதவித்தொகை திட்டங்களை இணைக்க, ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, பிரத்யேக மையங்கள் அமைத்து, பதிவு செய்யுமாறு, இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகள் முடித்த பின், தகவல்களை ஒட்டுமொத்தமாக திரட்டுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, மாணவர்களின் அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில்,”அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே, அடையாள அட்டை வடிவமைக்கும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
”ஸ்மார்ட் போன்களில், மாணவர்களை புகைப்படமெடுத்தால் போதுமானது. ஏற்கனவே வடிவமைத்த லே-அவுட்டில், புகைப்படத்திற்கான இடத்தில், மாணவர்களின் படம் பொருந்தி கொள்ளும். மாணவரின் பெயர், பள்ளி பெயர், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட, தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால், அடையாள அட்டை தயாராகிவிடும்.
”இதுசார்ந்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, விரைவில் பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.

குமரியில் முதல்வர்-நிவாரணம் அறிவிப்பு!!!

ஓகி புயலினால் உயிரிழந்த மீனவர்
குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று, கன்னியாகுமரியில் இன்று (டிசம்பர் 12) அறிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரண உதவிகள் பெறும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஓகி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரப்பர், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்ததால், அந்தப் பகுதி முழுவதும் விவசாயம் நசிந்தது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை; அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால், குமரி மாவட்ட மீனவர் குடும்பங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட சில அமைச்சர்கள் கன்னியாகுமரியில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம் சென்றிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டவர், மீனவர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது, கடைசி மீனவர் கிடைக்கும்வரை, ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களைத் தேடும் பணி தொடரும் என்றும், குமரி மாவட்டத்தில் ஹெலிபேட் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

”ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கான நிவாரணத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. வீடிழந்த மீனவர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், மீனவர்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவரது கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்.

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் நிவாரணம் பெறும் வகையில், சட்டவிதிகள் தளர்த்தப்படும். புயலில் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்; உலகவங்கி உதவியுடன் மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு, புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் செய்த ஆய்வின் அடிப்படையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதனை அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் பல அம்சங்கள், பத்து நாட்களுக்கு முன்பு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பை நினைவூட்டுகிறது.

இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு!!!

சர்வதேச அளவில் அதிவேக இணையச்
சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 Mbps ஆகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சராசரியாக கிடைத்த வேகத்தை (7.65 Mbps) விட அதிகமாகும். இந்தப் பட்டியலில் 62.66 Mbps மொபைல் இணைய வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து 53.01 Mbps வேகத்துடன் நெதர்லாந்து இரண்டாம் இடத்திலும், 52.78 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து மூன்றாம் இடத்திலும், 51.50 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் நான்காவது இடத்திலும், 50.46 Mbps வேகத்துடன் மால்டா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

பிராட்பேண்ட் இணையச் சேவையில் இந்தியா 18.82 Mbps வேகத்துடன் 76வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 153.85 Mbps வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்திலும், 147.51 Mbps வேகத்துடன் ஐஸ்லாந்து இரண்டாம் இடத்திலும், 133.94 Mbps வேகத்துடன் ஹாங்காங் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மாநில அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர்: பின் வாங்கிய அரசு!

                                            
தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) 
காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்படுவது இதுவே முதன் முறையாகும்.

பல வகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த 16.06.17 அன்று வெளியிடப்பட்டது. அப்பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 13.08.2017 அன்று எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டு, 07.11.2017 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நவம்பர் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இத்தகைய சூழலில் தான் தேர்வு முடிவுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதுடன், தேர்வில் பங்கேற்ற 1,33,567 மாணவர்களின் விடைத்தாள்களும், தேர்வுக்கான சரியான விடைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டிருக்கிறதா? என்பதை விடைகளுடன் ஒப்பிட்டு, ஏதேனும் தவறு இருந்தால் அதை வரும் 18

ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இன்று (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டிருக்கும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி,. ‘’அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டதில் இன்னொரு நன்மையும் நடைபெற வாய்ப்பிருக்கிறது. இப்பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 107 பேர் ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வில் பிற மாநிலங்களும் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 107 தொழில்நுட்ப ஆசிரியர் பணியிடங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி கற்றவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும்.

தேர்வு முடிவுகள் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், புதியப் பட்டியல் தயாரிக்கும் போது வெளிமாநிலத்தவரை தவிர்த்து விட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும் சேர்க்கப்பட வேண்டும். இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த சமூக அநீதி சரி செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய பட்டியல் எந்த வித குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வாய்ப்பளிக்காமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

TNPSC வி.ஏ.ஓ.தேர்வு மாதிரி வினா-விடை!!!

தொடர் வாசிப்பு திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி???

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் 
வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட அரசியல்வாதிகளுக்கு எதிரான 1,581 கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை முடிக்க திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய நிதி அமைச்சகம் ரூ. 7.8 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.

2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 8 மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது அரசியல்வாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட வழக்குகள்தான் இவையாகும். சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் திட்டம் தொடர்பாக இரு பக்கங்கள் அடங்கிய அபிடவிட்டை மத்திய சட்ட அமைச்சக கூடுதல் செயலாளர் ரீட்டா வசிஷ்தா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய நிதி அமைச்சகம் ரூ. 7.8 கோடியை ஒதுக்கி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை வியாழன் கிழமைக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்து உள்ளது.


*வழக்கு தொடர்பான முந்தைய விபரம்*

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா தண்டனை பெற்ற எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என பொதுநல மனுவகை தாக்கல் செய்தார். இவ்வழக்கில் தங்களையும் சேர்க்குமாறு பிறர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜூலை 12-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்ற போது அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக தெளிவான நிலையை எடுக்காதது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தது.

மத்திய அரசு தாக்கல் செய்த அபிடவிட்டில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை என்ற மனுதாரரின் கோரிக்கையானது ஏற்கப்பட முடியாதது, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தொடர்ச்சியான விசாரணை கடந்த மாதம் ஒன்றாம் தேதி நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் நாவின் சின்கா தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்றது. 2014 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகள் மற்றும் அவற்றில் எத்தனை விசாரணை முடிந்தது என்பது தொடர்பாக விபரங்களை அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் உத்தரவிட்டது. 1,581 வழக்குகளில் கடந்த ஒரு வருடங்களில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டது, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது மற்றும் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விபரங்களை மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றது.

ஆறு வாரங்களில் இதுதொடர்பான விபரங்களை கோர்ட்டில் வழங்க வேண்டும் எனவும் டிசம்பர் இரண்டாவது வாரம் அடுத்தக்கட்ட விசாரணை எனவும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விரைவாக முடிக்க மத்திய அரசு விரும்புகிறதா? எனவும் கேள்வியை எழுப்பி இருந்தது. இப்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.

ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition


ஆசிரியர்கள் பாடம் நடத்த நேரமில்லாமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களாக உள்ளனர் - The New Indian Express-trichy Edition