யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/18

உடல்நலம் மருத்துவம்








































































தொடக்க பள்ளி ஆசிரியர்கள்அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம் LKG/UKG பாடம் கற்பிக்க உள்ளனர்.?

தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது.


இதற்காக, சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 2,381 அங்கன்வாடிகளில் படிக்கும், 52 ஆயிரத்து, 933 பிள்ளைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும், யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தினமும் அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, இரண்டு மணி நேரம், பாடம் கற்பிக்க உள்ளனர். இந்த மாணவர்களுக்கு, நான்கு ஜோடி சீருடை மற்றும் ஒரு ஜோடி காலணிகள் வழங்கப்பட உள்ளன.

வகுப்பு ஆசிரியர்களின் வருகைப்பதிவு பரிதாபங்கள்!

சமீப காலம் வரை  பள்ளிகளில் வருகைப்பதிவு முறை பதிவேடுகளில் பதிவிடுவதாக தான் இருந்தது.

தற்போது அதை டிஜிட்டல் ஆக்கும் முயற்சியாக TNSchools மொபைல் செயலி மூலமாக பதிய வேண்டும் என்று கொண்டு வந்ததன் மூலம் வகுப்பு ஆசிரியர்கள் படும் கஷ்டங்கள் கல்வித்துறை அதிகாரிகள் அறிவார்களா என்று தெரியவில்லை! 

#ஆசிரியர் தன் மொபைலில் மாணவர்களின் வருகையைப்  பதிவு செய்த பிறகும் பல சமயங்களில் விடுப்பு மாணவர்கள் செயலியில் அப்டேட் ஆவதில்லை.

#ஒரு ஆசிரியர் அவர் மொபைலில் வருகையைப் பதிவு செய்த பின் வேறொரு ஆசிரியரின் மொபைலில் அதே வகுப்பை பார்த்தால் வருகை பதிவு செய்யப்பட்டதாக காண்பிக்கவில்லை. மீண்டும் அந்த மொபைலில் வருகை பதிவு செய்தால் தான் அவர் மொபைலில் தெரிகிறது. 


#இப்படி ஒரு நிலையில் கல்வி உயரதிகாரிகள் அவர்கள் மொபைலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் மொபைல் செயலியை உபயோகித்து வருகை பதிவு செய்திருக்கிறார்களா என்று கண்டறிய முற்பட்டால் அந்த பள்ளியில் மொபைல் செயலியை உபயோகப்படுத்தவில்லை என்பது போல தான் காண்பிக்கும்!

#பதிவு செய்த பிறகு Alert என்ற தலைப்பில் School login mismatch என்று ஒரு தகவல் வருகிறது. அதை க்ளிக் செய்து விட்டால் நாம் பதிவு செய்த வருகை மாயமாக மறைந்து விடுகிறது!

#மொபைல் செயலியில் 9:30 மணிக்குள் வருகையைப் பதிய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் அந்த மாணவர்கள் தாமத வருகை என்றாகி விடும். 9:30 மணிக்குள் என்ற கால அளவு இறை வணக்கத்திற்குரிய காலம். அந்த நேரத்தில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் இறை வணக்கக் கூடத்தில் இருப்பார்கள். 

#மதியமும் இந்த வருகைப்பதிவை மொபைல் செயலியில் பதிய வேண்டும். 


#மொபைல் செயலியில் பதிந்த பிறகும் Daily Report என்ற பகுதியில் வருகையைச் சரிபார்க்கும் போது ஆசிரியர்கள் பதிந்த வருகை  பல வகுப்புகளுக்கு entry ஆகவில்லை.

#ஒரே நேரத்தில் சர்வரை பல ஆசிரியர்கள் உபயோகப்படுத்துவதால் இணையத் தொடர்பு சரிவர கிடைப்பதில்லை.

#ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய பாடப்பகுதிகள் அதிகம் உள்ள நிலையில் இந்த மொபைல் செயலி மூலம் வருகைப் பதிவு மேற்கொள்வது அவர்களின் நேரத்தை வீணடிக்கிறது. 

#புதிய புதிய கற்றல் முறைகள், எண்ணற்ற பதிவேடுகள், கணினி மயமாக்கல் இவைகள் அனைத்தும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நினைத்து கல்வித்துறை கொண்டு வந்துள்ளது. 

#ஆனால் நடைமுறையில் இவை அனைத்தும் கல்வி கற்றுத்தருவதற்கான நேரத்தை வீணடிக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை! 

#தற்கால கல்வி முறையில் பயிலும் மாணவர்களை விட அந்த கால குருகுல முறையிலும் 1960-2000 வரையிலுமான காலக்கட்டத்தில் பயின்ற மாணவர்களின் அறிவுத்திறன் மேலோங்கி இருந்தது என்பதை அனைவரும் நன்கு அறிவர். 

#கல்வித்துறையில் மாற்றம் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

#ஆனால் அவை மாணவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். 

#ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும். 

#இவற்றை மனதில் வைத்து #மேதகு_கல்வி_அதிகாரிகளும் #மாண்புமிகு
#கல்வியமைச்சரும் ஆசிரியர்களின் துயர் களைய முன்வருவார்களா?

ஆங்கில வழி பிரிவுக்கு ஸ்பெஷல் ஆசிரியர்: வரும்26ல் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

ஆங்கில வழியில், 15 மாணவர்கள் படித்தால், பிரத்யேக ஆசிரியர் நியமித்து, வரும் 26ல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.


அரசுப்பள்ளிகளில் கடந்த 2012 முதல், ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டு, விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆறாம் வகுப்பில், இப்பிரிவு துவங்கிய போது சேர்ந்த மாணவர்கள், தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் நியமிக்க வேண்டுமென்ற, நீண்டநாள் கோரிக்கைக்கு தற்போது விடிவு கிடைத்துள்ளது.

மாவட்டந்தோறும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை, ஆங்கில வழி பிரிவுக்கு நியமிக்க, இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 15 மாணவர்கள் ஆங்கில வழி பிரிவில் படித்தால், இவர்களுக்கு பிரத்யேக ஆசிரியர் வகுப்பு எடுப்பார்.

இதேபோல், ஒரு வகுப்பறையில், 60 மாணவர்களுக்கு மேல் படித்தால், புதிய பிரிவு துவங்க வேண்டும்.

மாவட்ட வாரியாக உபரியாக உள்ள ஆசிரியர்களை நியமித்து, வரும் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலர்கள் சிலர் கூறுகையில்,'கோவையில் உள்ள, 15 வட்டாரங்களிலும், ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் மாணவர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் தயாரானதும், புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவர்' என்றனர்

பிளாஸ்டிக் தடை பள்ளிகளில் கட்டாயம் மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது

பள்ளிகளில், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது

தமிழகம் முழுவதும், ஜன., 1 முதல், பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது


*அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்டவற்றில், பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது


*ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலித்தீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன


*அதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது


*அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக் கூடாது என, உத்தரவிடப்பட்டுஉள்ளது


*நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை, இதுபோன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் எடுத்து வரக் கூடாது


*மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது' என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது


*வரும், 1ம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது

TNPSC அறிவிப்பு : ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மாவட்ட கல்வி அதிகாரி(D.E.O) வேலை

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 18+2 = 20
பதவி: மாவட்ட கல்வி அதிகாரி
தகுதி: கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,900 - ரூ.1,80,500
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரம் வெளியான நாள் அல்லது பணியில் சேரும்போது 58 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத்தேர்வு (Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வு (Viva-Voce Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு கட்டணம் ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணம் ரூ.200
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.01.2019
முதல்நிலைத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.01.2019
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2019
இதுகுறித்த மேலும் முழுமையான விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளிகளில் 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 3ம் பருவ பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தற்போது அரையாண்டு தேர்வு(இரண்டாம்பருவம்) நடந்து வருகிறது. இதன் பின் 3ம் பருவம் துவங்க உள்ளதால் அதற்கான பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் இருக்கிறது. 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் துவக்கத்திலேயே, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை வநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்! - 131 பேர் வெற்றிபெற்று அசத்தல்

மத்திய குடிமைப்பணி தேர்வாணையம், அகில இந்திய குடிமைப்பணிக்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகளை இன்று (20.12.2018) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 131 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்றழைக்கப்படும் மத்திய குடிமைப் பணி தேர்வாணையம், இந்திய அளவில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப் எனப் பல மிக முக்கிய பணிகளுக்கு தகுந்த திறமையானவர்களை நியமிக்க ஆண்டுதோறும் மூன்று கட்டமாக தேர்வை நடத்தி வருகிறது.
முதல் கட்டமாக, ஜூன் 3-ம் தேதி நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில் ஆறு லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதியுள்ளனர்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதி அட்டவணை வெளியீடு.!!

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான போது தேர்வுகள் தேதியை 19 ஆம் தேதி அறிவிப்பதாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தேர்வு நடைபெறும் நாட்கள்:-
10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெறும்
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் நாட்கள்:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 29.4.2019 அன்று வெளிவிடப்படும்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 19.4.2019 அன்று வெளியிடப்படும்
10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை:-
14.3.2018 - தமிழ் முதல் தாள் மதியம்
18.3.2018 - தமிழ் இரண்டாம் தாள் மதியம்
20.3.2018 - ஆங்கிலம் முதல் தாள் மதியம்
22.3.2018 - ஆங்கிலம் இரண்டாம் தாள் மதியம்
25.3.2018 - கணிதம் காலை
27.3.2018 - அறிவியல் காலை
29.3.2018 - சமூக அறிவியல் காலை

அரையாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டும்!...

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது!
தமிழக பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், வரும் 23 முதல் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்திலுள்ள 413 மையங்களிலும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகளை கருத்தில்கொண்டு செய்முறை வகுப்புகள் மற்றும் மீதம் இருக்கக்கூடிய பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த கால அட்டவணையை தயார் செய்து, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் எனவும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து பெற்று வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளின் போது அரையாண்டு தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

அரையாண்டு விடுமுறை கிடையாது - சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு