யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/15

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிப்பு

7-வது ஊதியக்குழுவின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
குழுவின் தலைவர் ஏ,கே., மாத்தூர் மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அருண்ஜெட்லியிடம் 900 பக்க அறி்க்கையை சமர்பித்தார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 18, ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ 2. 25 லட்சம் வரை வழங்கவும், ஊழியர்களுக்கு ஆண்டிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், வீ்ட்டு வசதி கடனை 25 லட்சம் வரையில் வழங்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டு மொத்தமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்கவும், அடிப்படை சம்பளாக 16 சதவீதமாகவும், இதர படிகள் 63 சதவீதமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கு பென்சனை 24 சதவீதம் வரையில் உயர்த்தி வழங்கவும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் தனது அறிக்கையை அமல்படுத்தும் படியும்
தற்போது வழங்கப்பட்டு வரும் 52 வகையான படிகளையும் ரத்து செய்யும்படியும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Grade pay விற்கு பதிலாக புதிய முறை அறிமுகம்
இடைநிலை ஆசிரியர் new level will b 5
B.T Asst level 7
P.G level 8
For BT entry level pay 53600
Sec.Grade 32900
P.G. 58600

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதிலுமாக, மத்திய அரசு ஊழியர்கள் 48 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 55 லட்சம் பேரும் உள்ளனர். இவர்களின் ஊதியத்தை திருத்தி அமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான 7-வது பரிந்துரைக் குழுவை, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமித்தது. இந்தக் குழு, தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் வியாழக்கிழமை (நவம்பர் 19) அளிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை 15 சதவீதம் வரை உயர்த்துவதற்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதர சலுகைகளுடன் சேர்த்தால், மொத்த ஊதியம், 23 சதவீதம் வரை உயரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்காக, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழுவை மத்திய அரசு நியமிக்கிறது. முன்னதாக, நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான பரிந்துரைக்குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மத்திய அரசு அவகாசம் அளித்திருந்தது. பின்னர் இம்மாதம் வரை கெடு நீட்டிக்கப்ட்டது.

7வது ஊதியக் குழுவின் அறிக்கை முழு விவரம்

19/11/15

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு

ஒர பளளிககடததகக ஆயவாள ஒரதத வநதார

மீன் உணவு சாப்பிட்டு வாழ்க நலமுடன் நண்பர்களே

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது:

சந்தனம், குங்குமம் மற்றும் திருநீறு இடுவதின் உண்மையான பயன்கள்:-

அக்டோபர் 30, செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் நினைவு

அரைஞாண் கயிறு உணமையில் எதற்க்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர்...

ஆன்லைனில் ஈசியாக "பான் கார்ட்" பெற வேண்டுமா? - கட்டணம் வெறும் ரூ.106:

உங்கள் செல்போன் எண் மறந்துவிட்டதா ..!

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

எண்ணெய் பாக்கெட் வாங்கும்போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

கணிணி உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ள எளிய வழிகள்!

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்

வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை

தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு 
உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் நனைந்தும் சேதமாகி விட்டன.

பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மீண்டும் இலவசமாக வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பட்டியலை விரைவில் சேகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு 
உள்ளது.

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். 
இதுவரை, இந்த திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது இல்லை. முதல் முறையாக, இந்தாண்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,இந்தாண்டில், அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரித்துஉள்ளது.


இதுகுறித்து, உ.பி., அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.,யில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, ஆண்டுக்கு, 20 நாட்கள் மட்டுமே, அரசு விடுமுறை தினமாக இருந்தது. சமாஜ்வாதி அரசு பதவியேற்றதும், பல்வேறு சமூகத்தினரின் ஓட்டு வங்கியை குறிவைத்து, அந்தந்த சமூகம் சார்ந்த தலைவர்களின் பிறந்த நாட்களை, அரசு விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது. 
விடுமுறை நாட்கள் அதிகரித்துள்ளதால், அரசு நிர்வாக பணிகளில் தேக்க நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 24 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 மட்டும் போதாது! தேர்தல் கமிஷன் கோரிக்கை

புதுடில்லி,:'இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்ய, ஜனவரி 1 என்ற தேதி மட்டுமே, 'கட்-ஆப்' தேதியாக உள்ளதை மாற்றி, மேலும் பல தேதிகளை அனுமதிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. தற்போது, நம் நாட்டில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களே, வாக்காளர்களாக,
தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும். இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில், புதிய வாக்காளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. 'ஜனவரி, முதல் தேதியில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டுமே, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும்' என, விதிமுறை உள்ளது. இதனால், ஜனவரி, 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் தேர்தல் வந்தால், 18 வயது பூர்த்தியானவர்கள் கூட, ஓட்டளிக்க முடியாத நிலை உள்ளது. இவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கு, அடுத்தாண்டு வரை காத்திருக்க வேண்டிய நிலை 
நிலவுகிறது. இந்த பிரச்னைகளை தீர்ப்பதற்காக, 'ஜனவரி 1 என்ற, ஒரே ஒரு தேதியை மட்டுமல்லாமல், வேறு சில தேதிகளையும், கட்-ஆப் தேதிகளாக அறிவிக்க வேண்டும்' என, மத்திய சட்ட அமைச்சகத்திடம், தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மத்திய சட்டஅமைச்சகம் மற்றும் தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இடையே, விரைவில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.