யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/9/16

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்-

விண்வெளி திட்டங்கள் பற்றிய சில தகவல்கள்

விமானத்தில் பயணிக்கும் போது எவற்றையெல்லாம் எடுத்துச் செல்லக்கூடாது

விருந்தோம்பலை உலகிற்கு உரைத்தவன் இன்று

வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல

ஜெயித்த வாழ்க்கையும் ஜெயிக்காத வாழ்க்கையும்

11/9/16

பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?

 'பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
    ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்   மெயில்
பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.

பிஎஸ்என்எல்-லின் இந்த திட்டத்த்தின் முழு விபரம் என்ன..? இதை எப்படி பெறுவது..? இதை பெற என்ன என்ன ஆவணங்கள் தேவை..? போன்ற தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். உடன் பிஎஸ்என்எல்-ன் பிற பிராட்பேண்ட் திட்டங்கள், 3ஜி / 4ஜி திட்டங்கள், மற்றும் பிஎஸ்என்எல் அன்லிமிடட் திட்டங்கள் சார்ந்த விளக்கப்படமும் தொகுக்கப்பட்டுள்ளது.
பிபி249 திட்டத்தை பெறுவது எப்படி.?
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


வழிமுறை #01
18 வயதுக்கு மேல் நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சரியான அடையாள அட்டை வேண்டும் (வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை , நிரந்தர கணக்கு எண் அட்டை)

வழிமுறை #02
உங்களுடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு அருகாமையில் உள்ள உள்ளூர் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பிராந்திய அலுவலகத்திற்கு சென்று, உங்கள் வீட்டிற்கு பிபி249 திட்டம் பெற வேண்டும் என்று கூறி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கவும், பின் அது சரிபார்க்கப்படும்.

வழிமுறை #03
இறுதியாக, 6 மாதங்களுக்கு ரூ.249 என்ற கட்டண தொகையை செலுத்த வேண்டும், ஆக்டிவேஷன் நிகழ 1 வார காலம் ஆகக்கூடும்.

வரம்பற்ற பிபி249 திட்டத்தின் நன்மைகள் :
1. வெறும் ரூ249-ல் 6 மாதங்களுக்கு வரம்பற்ற இணைய தரவு
2. 6 மாதங்கள் இந்தியா மூக்குக்கு வரம்பற்ற இலவச லேண்ட்லைன் மற்றும் மொபைல் அழைப்புகள்.


பிற தகவல்கள் :
1. இந்த திட்டம் செப்டம்பர் 9, 2016-ல் இருந்து கிடைக்கப்பெறும்.
2. முக்கியமாக புதிய பயனர்கள் மட்டும் தான் இந்த திட்டத்தை பெற முடியும்.

பிபி 249 திட்டத்தின் முக்கிய விதிமுறைகளும்,
நிபந்தனைகளும் :
1. இரண்டு எம்பிபிஎஸ் (MBPS) வேகத்தில் வரம்பற்ற 2ஜி தரவு பயன்பட்டை பெறுவீர்கள்.
2. 6 மாதங்களுக்கு பிறகு, நீங்கள் இதே திட்ட நன்மைகளை பெற ரூ.799 பிபி திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
3. ஞாயிறன்று மட்டுமே வரம்பற்ற இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
4. திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலாக இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக மட்டுமே இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்கள்.





விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.





விளக்கப்படம் :
பிஎஸ்என்எல் 3ஜி / 4ஜி திட்டங்கள்.





Share ...

Departmental Examinations - MAY 2016 Results (Updated on 09 September 2016)

Results of Departmental Examinations - MAY 2016
(Updated on 09 September 2016)
Enter Your Register Number :                                                         
 

பள்ளிகளில் பழத்தோட்டம் : தோட்டக்கலை துறைக்கு உத்தரவு

தமிழக அரசு பண்ணைகளில் உருவாகும் மரக்கன்றுகளை மழைக்காலம் துவங்கும் முன் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பழத்தோட்டம் அமைக்க குழு ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது. 


தமிழக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் நாற்று நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு கன்றுகள் வளர்ந்துள்ளன. தோட்டக்கலைத் துறையினர் மழைக் காலம் மற்றும் சீசன் முடிந்த பின், நாற்றுகளை விவசாயிகளிடம் கொடுக்கின்றனர். அதனால் அவற்றை பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது.

பள்ளிகளில் பழத்தோட்டம் : இந்த நிலையில், தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்தாண்டு பழக்கன்றுகளையும், நிழல் தரும் மரக்கன்றுகளையும் அதிகளவு நட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே எவ்வளவு கன்றுகள் தேவை என்பதை அறிந்து செயல்பட வேண்டும். கன்றுகளை மழைக்காலம் துவங்குவதற்குள் வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில், பழத்தோட்டம், மூலிகை பண்ணை அமைப்பது; நிழல் தரும் மரங்கள் வளர்ப்பதற்கு தலைமை ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., திட்ட அதிகாரிகள், மாணவ, மாணவியர் கொண்ட குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மாணவன் தற்கொலை : ஆசிரியை மீது வழக்கு

சேலம், நங்கவள்ளி அடுத்த, வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில், 10ம் வகுப்பு படித்து வந்த, 15 வயது மாணவன், நேற்று முன்தினம் காலை, அவனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். 

விடைத்தாள் மாயமான சம்பவத்தில், பள்ளி ஆசிரியை நாராயணி, மாணவனை திட்டினார்; அதனால் தான், மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் என, அவனது தந்தை பழனி சாமி, போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, தற்கொலைக்கு துாண்டியதாக, நாராயணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தடை

இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், மாற்று ஆசிரியர் வரும்வரை பிற பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மாதம் 6ம் தேதி கலந்தாய்வு தொடங்கி கடந்த வாரம் முடிந்தது. இதில் இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடமாறி வருகின்றனர். ஆசிரியர்கள் புதிய இடங்களுக்கு மாற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரே பள்ளியில் இருந்து அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால் அவர்களை உடனே மொத்தமாக இடம்மாற்ற செய்ய அனுமதிக்கக்கூடாது. 3ல் 2 பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் இருக்க வேண்டும். இதுகுறித்து முடிவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்கவேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத்தரப்படும் அரசு பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை அவரை விடுவிக்கக்கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே ஆசிரியர்கள் இடமாற அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். 

உள்ளாட்சி தேர்தல் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்க ஆசிரியர்கள்... கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதக் கூடிய மாணவர்களுக்கான பாட நேரங்கள் பாதிக்கப்படும் என்பதால், தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறும், தேர்தலுக்கென நிரந்தர பணிக் குழுவை உருவாக்கி, செயல்படுத்துமாறும் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில், அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், சப் - கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்படுவர்.

லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளுக்கும், சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். எனவே, சப் - கலெக்டர்களை நியமித்தால் போதுமானதாக இருந்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், 12 ஆயிரத்து, 524 ஊராட்சி தலைவர்; 99 ஆயிரத்து, 324 ஊராட்சி வார்டு; 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு; 655 மாவட்ட ஊராட்சி வார்டு; 919 மாநகராட்சி வார்டு; 3,613 நகராட்சி வார்டு; 8,280 பேரூராட்சி வார்டு ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏராளமானோர் மனு தாக்கல் செய்வர். எனவே, ஊராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி வாரியாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும்.

அனைத்திற்கும், வருவாய் துறையினரை நியமிக்க முடியாது என்பதால், பெரும்பாலான 
இடங்களில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு, 
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை, ஒவ்வொரு துறை வாரியாக கேட்டு பெற, காலதாமதமாகும். மேலும் துறை அதிகாரிகள், தங்களுக்கு வேண்டிய நபர்களை, தேர்தல் பணிக்கு பரிந்துரை செய்யாமல் விட வாய்ப்பு அதிகம் என்பதால், கருவூலத் துறையில் இருந்து, நேரடியாக அரசு சம்பளம் வாங்குவோர் பட்டியலை பெற்று, அவர்களை தேர்தல் பணிக்கு அழைக்க, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.ஆனால், ஆசிரியர்கள், 
தங்களை இந்தப் பணிக்கு அழைத்தால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் எனக் 
கூறுகின்றனர்.

பெயர் வெளியிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:

காலாண்டு தேர்வு விடுமுறையில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதால், இந்த நேரத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுவது, மாணவர்களின் இரண்டு நாட்கள் படிப்பு வீணாகும். 

இதனால், எங்களை தேர்தல் பணியிலிருந்து விடுவித்தல் நலம்.தமிழகத்தில், இரண்டு 
ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஏதாவது, ஒரு தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தல் பணிக்கு, ஒவ்வொரு துறையிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்துவதை விட, 
குறிப்பிட்ட ஆட்களைக் குழுவாக அமைத்து, நிரந்தரமாக தேர்தல் பணியில் ஈடுபட வைத்தால், பண விரயத்தையும், நேர விரயத்தையும் தவிர்க்கலாம். முறைகேடுகள் நடைபெறா வகையில் கண்காணிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.இவ்வாறு அவர் கூறினார்.

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆர்.கணேசன், கல்வி அதிகாரி யு.ராஜன் ஆகிய 2 பேரையும் பணியிட மாறுதல் செய்து மே மாதத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் எனும் பெயரில் வந்த கடிதத்தின்பெயரில் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு சட்ட விரோதமானது. ஆகவே, இதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆனந்தி, "குற்றச்சாட்டு கடிதம் மனுதாரர்களுக்கு வரவில்லை. பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கூட விசாரிக்காமல், இருவரையும் இடமாறுதல் செய்துள்ளனர்' என்றார்.
இதையடுத்து, கூடுதல் அரசு வழக்குரைஞர், "இதுபோல் எந்தவொரு கடிதத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பவில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:-
புகார் கடிதம் வந்தால், உண்மைத் தன்மையைக் கூட ஆராயாமல், குறைந்தபட்சம் விசாரணையும் நடத்தாமல் இடமாறுதல் செய்திருப்பது சட்டப்படி தவறு. போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் விடுப்பில் இருந்த நாள்களையும் பணியில் இருந்ததாகக் கருதி அதற்கான பலன்களை வழங்க வேண்டும். போலி கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

'வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: 
மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது. இதற்காக சென்னை, வேலுார், கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் பின், அரசு பொறியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், அரசு பள்ளிகளில், 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வையும் நடத்த, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது.வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. வழக்குகளை ஒருங்கிணைத்து, ஒரே வழக்காக நடத்த, உச்ச நீதிமன்றம் உத்-தர-விட்டுள்ளது. இவ்வழக்கு, வரும், 13ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வருகிறது. அப்போது, அரசின் கொள்கை முடிவு தெரிவிக்கப்படும்; இதன்பின், டி.இ.டி., தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்க கல்வி - மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு...




CPS ஐ இரத்து செய்ய வல்லுநர் குழுவை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இன்றைய தின இதழ் நாளிதழ்*

DEE PROCEEDINGS-மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் AEEO/AAEEO மற்றும் BRTE கொண்ட குழு அமைத்து பள்ளிகளை பார்வையிடுதல் (Surprise Visit) சார்பு.நாள்:8/9/16



உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வழக்கு!

காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீது 420பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்டியா நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடுத்திருக்கிறார் ஒருவர். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் விநாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடகம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 10,000 கன அடி நீரும், கபினிஅணியில் இருந்து 5,000 கன அடி நீரும் என்று காவிரியில் விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டியாவைச் சேர்ந்த ராஜண்ணா என்பவர் மாண்டியா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘தமிழகத்துக்குத் தண்ணீர் தர உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தி அடைந்தேன். காவிரி நதி நீர் விவகாரத்தில் எனக்கு தனிப்பட்ட மற்றும் பொதுநலனும் உண்டு. தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு என்னை மிகவும் துயரமடைய செய்துள்ளது. நதி நீர் பிரச்னைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் சட்ட விரோதமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்கு புறம்பான உத்தரவு என நீதிபதிகளுக்கு தெரியும். எனவே, இது குற்றமாகும். மேலும், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் காவிரி பிரச்னையில் தலையிட்டது சட்ட விரோதம் ஆகும். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் மீது நடவடிக்கை தேவை. தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, இரு மாநில தலைமைச் செயலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கூர், ஜெயலலிதா, சித்தராமய்யா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் ஆகியோர் மீது 420 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் ராஜண்ணா கூறியுள்ளார்.

பத்ம விருதுகளின் தேர்வு மக்களிடமே ஒப்படைப்பு!

1954ஆம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசின் சார்பாக கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம 
விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கவுரவமிக்க தேசிய விருதுகளை உண்மையான மக்களுக்கான விருதாக மாற்றும் முதல்படிதான் இது. இதனால் தெரிந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற செல்வாக்கு படைத்தவர்களின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வெளிப்படைத்தன்மையும் நிலை நாட்டப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்வதற்கான கடைசி நாள் வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1,700 பரிந்துரைகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் 
துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13இல் தொடங்குகிறது. இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’ நாளிதழில் கூறும்போது,

“அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா ரூபாய் 50 கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் ரூபாய் 100 கட்டணம் செலுத்த வேண்டும்.

இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் இரண்டு நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு மூன்று பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு இரண்டு பேர் வீதம், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார்.

தகவல்களுக்கு www.vvm.org.in என்ற இணையத்தைத் தேடலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.