யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/9/16

பத்ம விருதுகளின் தேர்வு மக்களிடமே ஒப்படைப்பு!

1954ஆம் ஆண்டு முதல் இந்திய மத்திய அரசின் சார்பாக கலை, அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம 
விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பொறுத்து, அவர்களுக்கு சாதகமான மனிதர்களுக்கே பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருவதாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்ம விருதுக்கான தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் முறையை முதன்முதலாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆன்-லைன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை பொதுமக்கள் பத்ம விருதுக்காக பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பரிந்துரைக்க முன் வருபவர்கள் தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே அவர்களது பரிந்துரை ஏற்கப்படும்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, ‘‘கவுரவமிக்க தேசிய விருதுகளை உண்மையான மக்களுக்கான விருதாக மாற்றும் முதல்படிதான் இது. இதனால் தெரிந்தவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற செல்வாக்கு படைத்தவர்களின் நெருக்கடிகள் முடிவுக்கு வரும். வெளிப்படைத்தன்மையும் நிலை நாட்டப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான நபர்களைப் பரிந்துரை செய்வதற்கான கடைசி நாள் வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை பொதுமக்களிடம் இருந்து 1,700 பரிந்துரைகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக