யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/9/16

கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க உத்தரவு.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளி களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக ளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளில் ஆண்டு ஆய்வு மேற்கொள்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, பள்ளிகளை முன்ன றிவிப்பின்றி திடீர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்டத்தில்உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோரை குழுக்களாக ஒருங்கி ணைக்க வேண்டும். ஒரு குழு வுக்கு 2 பேர் வீதம் குழுக்களை பிரித்துக்கொண்டு எவ்விதமுன்ன றிவிப்பும் இன்றி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மாணாக்கரின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

உங்கள் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கிறார்களா? அவர்களது படிப்பை விட, ப்ராஜெக்ட்டுகளுக்காக ஏராளமான பணம் செலவழித்து சோர்ந்து விட்டீர்களா? ஆம் எனில் இனி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்.


அதாவது, பள்ளி மாணாக்கருக்கு, வீட்டில் செய்து கொண்டு வர வேண்டும் என்று எந்த ப்ராஜெக்டுகளையும் இனி கொடுக்கக் கூடாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதற்கு பதிலாக, பள்ளிகளிலேயே, வகுப்பு நேரத்திலேயே ப்ராஜெக்ட்டுகளை செய்ய வைப்பதால், மாணவர்களுக்கும் அதன் மீது ஆர்வம் ஏற்படும், அதோடு, பெற்றோர் ஏற்கனவே தயாரித்து விற்பனைக்கு வைக்கும் ப்ராஜெக்டுகளை வாங்கி பள்ளிக்கு எடுத்து வரும் நடைமுறையும் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ இயக்குநர் கே.கே. சௌத்ரி இது குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனி ப்ராஜெக்ட்டுகள் அனைத்தும் பள்ளி வகுப்பு நேரத்தில் மாணவர்கள் குழுவாக சேர்ந்து செய்யும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உதவி தேவைப்படும் தமிழர்கள் கீழ்கண்ட கர்நாடக வாழ் தமிழ் சங்கத்தினர் எண்களை தொடர்புகொள்ள அறிவுறுத்தல்

வதந்திகளை பரப்பவேண்டாம் என வேண்டுகோள்

மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
பெங்களூர் தமிழ்ச் சங்கம்.

லேண்ட் லைன் - 080 25510062.
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166.
தி.கோ.தாமோதரன் - 94494 85903. 
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர், ஆறுமுகம் - 90364 74224.
துணைத் தலைவர், குமார் - 99643 58993.
ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி - 94488 45681.
அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர், அரசப்பன் - 99720 42935.
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்.
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்.
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்.
தலைவர், சீனிவாசன் - 81055 17263.

13/9/16

முதுநிலை உளவியல் படிப்பு: செப்.16-இல் நுழைவுத்தேர்வு



சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2 ஆண்டு முதுநிலை மருத்துவ உளவியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.
சென்னை அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் 2016-17 கல்வியாண்டுக்கான மருத்துவ உளவியல் பாடப்பிரிவில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil Clinical Psychology)படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இது இரண்டாண்டு படிப்பாகும்.
இந்தப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு வரும் 16-ஆம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவ நிறுவனத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வில் பங்கேற்கத் தகுதியானவர்களின் பட்டியல் தமிழக சுகாதாரத் துறையின் 
www.tnhealth.org திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த 4 நாளில் பாஸ்போர்ட் : சென்னை மண்டல அதிகாரி அறிவிப்பு



மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது: 

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துக்  கொடுத்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைத்ததும் போலீஸ் துறையின் சான்றாய்வு செய்யப்படும் என்ற திட்டத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. தட்கல் என்னும்  துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீசார் விரைவாக சான்றாய்வு பெற வசதியாக மொபைல் ‘போலீஸ்-ஆப்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 மாநிலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போலீஸ் ஆப் மூலம்  போலீஸ் சான்றொப்பம் கிடைப்பதற்கான நேரம் வெகுவாக குறையும். இந்த திட்டத்தை சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்தில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய உள்ளோம். தமிழகத்தில் உள்ள 280 இ-சேவா மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கிராமங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெற இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ரூ.155 செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கேட்டு வி்ண்ணப்பிக்கும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கான கால அளவு 19 நாளில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கொடுத்த மறுநாளே அவர்கள் சான்று சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு மண்டல அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார். 

'குரூப் - 4' தேர்வு விண்ணப்பம் விண்ணப்பிக்க நாளை கடைசி



அரசுத் துறையில், 5,451 காலியிடங்களுக்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். தமிழக அரசுத் துறையில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, ஏழு வகையான, 'குரூப் - 4' பதவிகளுக்கு, 5,451 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, செப்., 8 கடைசி நாளாக, அறிவிக்கப்பட்டு இருந்தது. கடைசி இரண்டு நாட்களில், இணையதளத்தில் பிரச்னை ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடு, நாளை முடிகிறது. விண்ணப்பதாரர்கள், கடைசி நேரம் வரை காத்திருக்காமல், விரைந்து விண்ணப்பிக்குமாறு, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Posts Widget

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்



அக்டோபரில் நடக்கும், பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு, வரும், 15, 16ம் தேதிகளில், தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'அக்டோபரில் நடக்க உள்ள, பிளஸ் 2 துணைத்தேர்வில் பங்கேற்க, சிறப்பு அனுமதியுள்ள, தத்கல் திட்டத்தில், செப்., 14, 15ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டது. 14ம் தேதி, ஓணம் பண்டிகைக்காக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், செப்., 15, 16ம் தேதிகளில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்; மாவட்டந்தோறும் உள்ள, அரசு தேர்வுகள் சேவை மையத்திற்கு, நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

கிராம வங்கிகளில் 16615 அதிகாரி பணி: ஐபீபிஎஸ் பொது தேர்வு அறிவிப்பு.



கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும் கிராமிய வங்கிகளுக்கான கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வை ஐபீபிஎஸ் என அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் அமைப்பு. 

தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கிறது. அந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்வை அனுமதிக்கும் வங்கிகளின் பணியிடங்களில் பணி நியமனம் பெறலாம்.

மொத்த காலியிடங்கள்: 16,615

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Office Assistant (Multipurpose) - 8824
சம்பளம்: மாதம் ரூ.7,200 - 19,300

பணி: Officer Scale- I - 5539
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700

பணி: Officer Scale- II (General Banking Officer/Specialist Officers) - 521
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றறு இரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100
பணி: Officer Scale- III - 198

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பொது ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600
மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிப்பிக்க தொடங்கும் தேதி: 14.09.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detailed_Advt_for_Recruitment_of_CWE_RRBs_V.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள்

பிரபலங்கள் அவர்களின் இயற்பெயர்

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்பு என்ன?

புலவர்கள் பற்றிய சில தகவல்கள்

பெண்ககள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள்

பெண்களை மதித்த வீர சிவாஜி அந்தப்புரத்தில் செய்த செயல்

பெண்கள் ஏன் குங்கும பொட்டு வைக்க வேண்டும்

மகாவீரர் பற்றிய சில தகவல்கள்

மகாவீரர் பிறப்பு

மனக்குரங்கு

மனதிற்கான மருந்துகள்-மனவளக் கட்டுரை..

மனம் கலங்காதிருக்க