யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/12/16

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாள் துக்கம் அனுசரித்து பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்றுடன் மூன்று நாள் நிறைவு பெறுவதையடுத்து நாளை பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

இந்நிலையில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இன்று அறிவித்துள்ளது. 

டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அறிவித்தார் அருண் ஜேட்லி.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
# ரெயில்வே பயணச்சீட்டு மின்னனு முறையில் பதிவு செய்தால் ரூ.10 லட்சம் வரை காப்பீடு

# புறநகர் ரெயில்களில் மின்னணு முறையில் சீசன் டிக்கெட் வாங்கினால் 0.5 % தள்ளுபடி

# கிசான் கிரெடிக் கார்டு வைத்திருப்போருக்கு நபார்டு வங்கி மூலம் ரூபே கார்டு வழங்கப்படும்

# இந்த திட்டங்களுக்கான தள்ளுபடி ஜனவரி 1-ம் தேதி முதல்அமல்படுத்தப்படும்

# பெட்ரோல்,டீசல் நிலையங்களில் மின்னணு முறையில் பரிவர்த்தனை செய்தால் 0.75 % தள்ளுபடி

# பணமில்லா பரிவர்த்தனையே பொருளாதார வளர்ச்சிக்கான முதுகெலும்பு

# டோல்கேட்டில் கார்டு பயன்படுத்தினால் 0.5 % கட்டணச்சலுகை

# ரெயில்வே நிலையங்களில் ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்தால் 5 % சலுகை

# சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 10 % தள்ளுபடி

# எல்.ஐ.சி.காப்பீடுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் 8 % தள்ளுபடி

# மின்னணு முறைக்கு நுகர்வோர்களை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது

# மின்னணு பணப்பரிமாற்றமே பண மதிப்பிழப்பு அறிவிப்பின்இலக்கு

# ரிசர்வ் வங்கி திட்டமிட்டபடி புதிய பண தாள்களை வெளியிட்டு வருகிறது.

# ரெயில்களில் மின்னணு முறையில் டிக்கெட் வாங்கினால் ரூ.10 லட்சத்திற்கு காப்பீடு

# ரெயில்களில் உணவு வாங்க மின்னணு முறையில் பணம் செலுத்தினால் 5 % தள்ளுபடி

# கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மின்னணு பரிவர்த்தனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

விரைவில் தள்ளுபடி அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC:குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிச.12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 
''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 85 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக டிசம்பர் 8 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் விண்ணப்பதாரர்கள் கடைசிநேரம் வரை விண்ணப்பிக்க முற்பட்டுவருகின்றனர்.இதைத்தொடர்ந்து பல்வேறுதரப்பினரிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த தொகுதி-1 தேர்விற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 12 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த டிசம்பர் 15 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் முதனிலைத் தேர்விற்கான தேதியில் மாற்றம் இல்லை.இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8/12/16

பருவம் 2 தேர்வு கால அட்டவணை


Upper primary
15.12.2016.         தமிழ்
16.12.2016.         ஆங்கிலம்
19.12.2017.         Slas
20.12.2016.         Slas
21.12.2016.         கணக்கு
22.12.2016.          அறிவியல்
23.12.2016.         சமுக அறிவியல்

Primary

15.12.2016.      தமிழ்
16.12.2016.      ஆங்கிலம்
19.12.2016.      கணக்கு
20.12.2016.      அறிவியல்
21.12.2016.       Slas
22.12.2016.       Slas
23.12.2016.       சமுக அறிவியல்

Directorate of Government Examinations- - ESLC 2017 - Tatkal Date Extension to 08/12/16 - Information

13 ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த மிலாடி நபி- பண்டிகை (விடுமுறை) 12 ம்தேதிக்கு மாற்றம்* *மத்திய அரசு ஆணை

2017-மார்ச் -SSLC தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி தேர்வர்களின் சலுகைகள் கோரும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அறிவுரைகள்

TNTET- ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!

பல்வேறுவழக்குகளால் தள்ளிக்கொண்டே போன ஆசிரியர் தகுதித்தேர்வு, விரைவில் வரவிருக்கிறது. இது ஆசிரியப் பட்டம்படித்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி.ஆசிரியர் தகுதித்தேர்வு
நடத்தப்பட்டு முதல் இரண்டு தேர்வுகளும்கடினமாக இருந்ததாகப் பரவலான கருத்து இருந்தபோதும்2013 ஆம் ஆண்டு தகுதித் தேர்வில்பலர் தேர்ச்சி பெற்றனர்.

TNPSC:'குரூப் - 1' தேர்வு; விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் கிடைக்குமா?

திடீர்விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால், 'குரூப் - 1' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை இன்றுடன் முடிக்காமல், ஒரு வாரம்
நீட்டிக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில், துணைகலெக்டர், வணிக வரி அதிகாரி, டி.எஸ்.பி., உள்ளிட்ட, 'குரூப் - 1' பதவிகளில், 85 இடங்கள் காலியாக உள்ளன. 

 இவற்றை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல்தேர்வு நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்றுடன் முடிகிறது.


ஆனால், கடந்த வாரம், வங்க கடலில்உருவான, 'நடா' புயலால் அறிவித்தவிடுமுறை; செல்லா நோட்டு அறிவிப்பால்பணத் தட்டுப்பாடு மற்றும் தமிழக முதல்வராகஇருந்த ஜெயலலிதாவின் மறைவால் விடுமுறை போன்றகாரணங்களால், விண்ணப்பிக்க, தேர்வர்களுக்கு தாமதம் ஏற்பட்டது. இன்றுஒரு நாளில், விண்ணப்பம் பதிவுசெய்வதில், நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், ஒரு வாரம் கூடுதல் அவகாசம்வழங்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

CPS NEWS:ஆசிரியர்கள் போராட்டம் _ போலீஸ் தடியடி.ஆசிரியர் மரணம்.

 புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உத்தரபிரதேசதலைநகர் லக்னோவில் இன்று (07.12.2016) நடைபெற்ற போராட்டத்தில் ஆசிரியர்கள்
மீது போலீசார் நடத்தியதடியடியில் ஆசிரியர் ஒருவர் மரணம்.
CPS ரத்துசெய்ய போராடிவீரமரணம் அடைந்த ஆசிரிய சகோதரருக்குவீரவணக்கம்.


நன்றி-தகவல்-திரு-எங்கெல்ஸ்.திண்டுக்கல்

மாவட்ட தொடக்ககல்வி அலுவலகம் - தஞ்சாவூர் இரண்டாம் பருவத்தேர்வுக்கான அட்டவணை...

NMMS ONLINE ENTRY !!

மாணவர்விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களைதயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால்சுலபமாக
இருக்கும்.

www.tngdc.gov.in* என்றவலைதளத்திற்கு சென்று

*Welcome to ONLINE PORTAL* ஐCLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில்*NMMS* CLICK செய்தவுடன்*USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவுசெய்யவேண்டும்.

*NMMS : Vellore District*


User Name : *D30E30* Password : *DEE30P030*

பின்னர்*ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

  அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து இறுதியில்*Submit* கொடுத்தால்Application ஏற்றுக்கொள்ளப்படும்.

Techno Club-Competition Marks ,Prize& Expenditure



Flash News:மிலாடி நபி முன்னிட்டு 13.12.2016 ஆம் தேதிஅன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.



வங்கக்கடலில் மீண்டும் புதிய புயல் சின்னம்.

வங்கக் கடலில் அந்தமான் அருகே, புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வங்கக் கடலில், நவ., 30ல் உருவான, 'நடா' புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை தாண்டி, அரபிக் கடலுக்கு சென்றது. 
இப்புயல், நேற்று காலை, கடலிலேயே கரைந்தது. இந்நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே, இரு தினங்களுக்கு முன், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 1,260 கி,மீ., ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து, 1,310 கி.மீ., தெற்கு நிகோபாரிலிருந்து, 260 கி.மீ., தொலைவில், நேற்று மாலை மையம் கொண்டிருந்தது.

 இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயல் சின்னமாக உருவாகும்; இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி வடக்கு கடலோர மாவட்டங்களில், டிச., 9 முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழக புதிய அமைச்சரவை விவரம்:

1. ஓ.பன்னீர் செல்வம் - பொது நிர்வாகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்துறை
2. திண்டுக்கல் சீனிவாசன் - வனத் துறை
3. எடப்பாடி பழனிச்சாமி - பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலை துறை
4. செல்லுார் ராஜூ - கூட்டுறவுத் துறை
5. தங்க மணி - மின்சாரம், மதுவிலக்குத் துறை

6.வேலு மணி - நகர வளர்ச்சி துறை
7.ஜெயகுமார் - மீன்வளத் துறை
8.சண்முகம் - சட்டத்துறை
9.அன்பழகன் - உயர்கல்வி துறை
10.சரோஜா - சமூக நலன், சத்துணவுத் துறை
11. எம்.சி. சம்பத் - தொழில் துறை
11. கருப்பணன் - சுற்றுச்சூழல் துறை
12.காமராஜ் - உணவுத் துறை
13. ஓ.எஸ்.மணியன் - கைத்தறித் துறை
15. உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி வாரியத் துறை
16. விஜய பாஸ்கர் - சுகாதாரத் துறை
17. துரைகண்ணு - வேளாண் துறை
18. கடம்பூர் ராஜூ - தகவல் மற்றும் செய்தி தொடர்பு துறை
19. ஆர்.பி. உதயகுமார் - வருவாய் துறை
20. வேலுமணி - நகர வளர்ச்சி துறை
21. வெல்லமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
22. மஃபா பாண்டியராஜன் - பள்ளி கல்வித் துறை
23. ராஜேந்திர பாலாஜி - பால்வளத் துறை
24. பென்ஜமின் - ஊரக வளர்ச்சி துறை
25. விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
26. நிலோபர் கபில் - தொழிலாளர் நலத் துறை
27. மணிகண்டன் - தகவல் தொடர்பு துறை
28. ராஜலெட்சுமி - ஆதி திராவிடர் நலத் துறை
29. பாஸ்கர் - கதர் துறை
30. வீரமணி - வணிக வரித் துறை
31. சேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத் துறை
32. வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை
32. பால கிருஷண ரெட்டி - கால்நடை துறை

NMMS ONLINE ENTRY !!

மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.


*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.
அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.
 *NMMS : Vellore  District*
---------------------------------------------
 User Name : *D30E30*   Password : *DEE30P030*
------------------------------+++-+-----
பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்
அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

முதல்வர் ஜெயலலிதா மறைவு எதிரொலி : அரையாண்டுதேர்வுகள் ஒத்திவைப்பு.

முதல்வர் ஜெயலலிதா மறைவால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றும்,
6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்கும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா ேநற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று நடக்க இருந்த அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதியும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி குறிப்பிடாமலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Paytm:ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் இனி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யலாம்: எப்படி?

ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான புதிய முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.     

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை நடத்துவதில் தற்போது பேடிஎம் நிறுவனம் முன்னணி வகிக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க விவகாரத்திற்கு பிறகு நாடு முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இணைய இணைப்பும், ஸ்மார்ட்போனும்  இருப்பவர்கள் மட்டுமே இதில் ஈடுபட முடியும் என்ற நிலை உள்ளதால், நாடு முழுவதும் பெரும்பான்மையாக இருக்கின்ற இதர மக்கள் இந்த வசதியைப் பெற முடியாத நிலைமை இருந்தது. இதனைப்போக்க தற்போது பேடிஎம் நிறுவனம் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதன்படி இந்த இணைய இணைப்போ , ஸ்மார்ட்போனோ இல்லாதவர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடலாம். இதற்கென 180018001234 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதை பயன்படுத்துவதற்கு என நடைமுறைகளும் வெயிடப்பட்டுள்ளது.

அதன்படி இதனைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களோ, வியாபாரிகளோ முதலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தங்களது அலைபேசி எண்னை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தங்களுக்கு என ஒரு நான்கு இலக்க ரகசிய எண்னை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் யாருக்கு பணத்தை செலுத்த வேண்டுமோ அவர்களது அலைபேசி எண்னை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையையம் உள்ளிட வேண்டும். அதன் பின்னர் பரிவர்த்தனையை உறுதி செய்ய தங்களது ரகசிய எண்னை பதிவிட வேண்டும். இதன் முறையின் மூலம் அவர்களும் பணத்தை டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய இயலும். 

இவ்வாறு பேடிஎம் நிறுவனத்தின் துணைத்தலைவர் நிதின் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.