யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல் :

சென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் 
பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.     தமிழக சட்டமன்றத்தில்முதல்வர் ஜெயலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில்770 பள்ளிகளில்மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது,  தமிழக மாணவர்களுக்குஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.
முதற்கட்டமாக770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்துநடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த  மையத்திலோ அல்லது பள்ளிகளிலோநடைபெறும் பாடத்தினைவகுப்பறையில்விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.
இந்தவகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.    இந்த வகுப்பறைஅமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார். ரயில்வே கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம்?  பஸ் கட்டணங்கள்அதிகமாக இருப்பதால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால்  கடந்த சிலஆண்டுகளாக குறிப்பாக பாஜ அரசு மத்தியில் பதவியேற்றது முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

SECOND SPELL TEACHERS COUNSELLING NEWS:

Image may contain: text

ஆசிரியர்களுக்கு பணி வரன்முறையில்லை:

Image may contain: text

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

பெரம்பலூர்,
ஆசிரியர்நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல்படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலோசனைகூட்டம்
பெரம்பலூரில்தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் அருள்ஜோதிவாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர்குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
ஆசிரியர்நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்றதேர்வுகளில் பி.எட் கணினிஅறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பிறபாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல்பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கெனகணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
காலிபணியிடம்
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணைஇயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல்ஆசிரியர் பணி காலியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவேபி.எட் கணினி அறிவியல்தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம்செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்மாநில துணை செயலாளர் புகழ், தலைமை ஆலோசகர் கண்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில்மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.

10TH 12TH PRACTICAL EXAM DATE ANNOUNCED:

10 மற்றும் 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வு அறிவிப்பு.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன.பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்) அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25 மதிப்பெண்) செய்முறைத்தேர்வு உண்டு.

பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற எதிர் பார்ப்பு தேர்வெழுத உள்ள மாணவர் கள் இடையே எழுந்துள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந் தராதேவியிடம் கேட்டபோது, 
“பிளஸ் 2 செய்முறைத்தேர்வை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி 3-வது வாரத்துக்குள்ளாகவும் அதேபோல், 10-ம் வகுப்பு செய்மு றைத்தேர்வை பிப்ரவரி 3-வது வாரம் முதல் மார்ச் 5-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

10-ம் வகுப்புக்கு மத்திய கல்வி வாரிய தேர்வு கட்டாயம் அரசுக்கு பரிந்துரை.

மத்திய கல்வி வாரிய திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் இப்போது வாரிய தேர்வு அல்லது பள்ளிகள் நடத்தும் தேர்வில் ஏதாவதுஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மத்திய கல்வி வாரிய தேர்வு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய கல்வி வாரியம் பரிந்துரை அனுப்பியுள்ளது. அதேபோல இந்தி, ஆங்கிலம், நவீன இந்திய மொழி என 3 மொழிகளில் கல்வி பயிலும் திட்டம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. இதில் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

21/12/16

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த உணவுகளை சாப்பிடுங்க

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்

சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

சிறந்த 25 பொன்மொழிகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும்

தமிழ் இலக்கண இலக்கியம்

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும்

தேசிய கீதம் - விளக்கம்

புதிய வருமான வரி திட்டம் 
4 லட்சம் வரை வரி இல்லை 
4 லட்சம் முதல் 10 லட்சம் =10% வரி
10 லட்சம் முதல் 15 லட்சம் =15%வரி 
15 லட்சம் முதல் 20 லட்சம் =20%வரி
20 லட்சத்திற்கு மேல் 30%வரி

INCOME TAX SLABS TO BE REVISED

Upto Rs. 4 lacs salary  = NIL tax
From 4 lacs to 10 lacs =  10% tax
From 10 lacs to 15 lacs = 15% tax
From 15 lacs to 20 lacs = 20% tax
Above Rs. 20 lacs          = 30% tax

- Source: CNBC awaazTV

போலீஸ் ஸ்டேஷன்களில் இனி ‘ரிசப்ஷனிஸ்ட்’..! 3,647 பெண் போலீசார் நியமனம்!!

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரிடம் கரடுமுரடான அணுகுமுறையை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் நிலையங்களுக்கு புகாரளிக்க வருவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மேலும்,
காவல் நிலையங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காவல் நிலையங்களில் புகாரளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிய, 1,007 பெண் போலீசார் உள்ளிட்ட 3,647 பேர் காவல்நிலை வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்களுக்கு, சென்னை காவலர் பயிற்சி பள்ளி, மாவட்டம், மாநகர தலைமை அலுவலகங்களில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், புகாரளிக்க வருவோரை வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிந்து மேலதிகாரிக்கு தெரிவிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் தேவைகளை உணர்ந்து, நல்ல முறையில் அணுக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்!!

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது: தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..? மறுப்பு தெரிவித்துள்ள அரசு !!

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும். எதிர்க்கட்சியினர் நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பை
எதிர்த்து வரும் நிலையில் வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக இந்தியா டூடே சேனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



எப்போது அறிவிக்கப்படும்

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய வருமான வரி உச்சவரம்பு எப்படி இருக்கலாம்?

இந்திய டூடேவின் அறிக்கை படி 4 முதல் 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரியும், 10 லட்சம் வரியும், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 15 சதவீத வரியும், 15 முதல் 20 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 20 லட்சத்திற்கும் அத்திக்காக்க சம்பளம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகின்றது. இந்த புதிய வரி உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டால் வரி செலுத்துனர்கள் பெரிதும் பயனடைவர்.

Income Tax Slabs     

Income Tax Slabsநடப்பு வருமான வரி உச்சவரம்புபுதிய வருமான வரி உச்சவரம்புSlab (Rs. Lakh)Tax Rate (%)Slab (Rs. Lakh)Tax Rate (%)0-2.5No Tax0-4No Tax2.5-5104-10105-102010-151510 +3015-202020+30


நடப்பு வருமான வரி உச்சவரம்பு எப்படி உள்ளது?

இப்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீத வரியும், 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.


மறுப்பு தெரிவித்துள்ள அரசு

இது குறித்து அரசு தரப்பு செய்தி தொடர்பாளர் ஃபிராங்க் நோரோன்ஹாவை கேட்ட பொழுது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம் ஏஎன்ஐ இது வதந்தி ஆதாரமற்ற செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


அருண் ஜேட்லி

டிசம்பர் 14-ம் தேதி மத்திய அமைச்சர் அருண் கேட்லி 2018 ஆண்டு பட்ஜெட்டில் பொது மக்களின் நேரடி வரி மற்றும் மறைமுக வரி இரண்டும் குறைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


நேரடி வரி மற்றும் மறைமுக வரி

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவித்ததை அடுத்து மறைமுக வரியை விட நேரடி வரி அதிகரித்து உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவிக்கின்றனர்.



அதே நேரம் மறைமுக வரி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TRB REGULARISARTION ,TRB மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணிநாள் முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவே தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை*