யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிப்பு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் குற்றச்சாட்டு

பெரம்பலூர்,
ஆசிரியர்நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல்படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆலோசனைகூட்டம்
பெரம்பலூரில்தமிழ்நாடு பி.எட் கணினிஅறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ்முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள்சங்க மாநில தலைவர் அருள்ஜோதிவாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர்குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
ஆசிரியர்நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்றதேர்வுகளில் பி.எட் கணினிஅறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பிறபாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல்பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கெனகணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
காலிபணியிடம்
இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணைஇயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல்ஆசிரியர் பணி காலியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவேபி.எட் கணினி அறிவியல்தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம்செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில்மாநில துணை செயலாளர் புகழ், தலைமை ஆலோசகர் கண்ணன் உள்படபலர் கலந்து கொண்டனர். முடிவில்மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக