யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

கொத்தடிமைகள் மீட்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நான்கு வாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரோஸ்ஆன் ராஜன் என்பவர் பொது மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமைகளை தொழிலாளர்களை மீட்டு ,அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. கொத்தடிமை தொழிலாளர்களை மீட்பது, அவர்களால் யாரால் கொத்தடிமைகளாக அமர்த்தப்பட்டனர், எப்போது விடுவிக்கப்பட்டார்கள், விசாரணை ,விடுவிப்பு மற்றும் ஆரம்ப கட்ட மறுவாழ்வு தொகை போன்ற ஆவணங்களை அதிகாரிகள் நீதிமன்றங்களில் சமர்ப்பிப்பது இல்லை. இதனால், நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொத்தடிமைகளாக இருக்கும் தொழிலாளர்களை மீட்டு,அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மாநில அளவில் ஒரு அதிகாரியை நான்கு வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், கொத்தடிமைகளாக பணி அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்த திட்ட வரைவை மூன்று மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக