யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம்!!!

நாடு முழுவதும் ஊழியர்களுக்கான சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க வகை செய்யும் தீர்மானத்தை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

தில்லியியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான 
முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஊழியர்களுக்கான சம்பள பரிவர்த்தனையில் ஒரு கூடுதல் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நேரடியாக சம்பளம் வழங்கும் முறையும் பின்பற்றப்படும்.

ஊழியர்கள் வங்கி மூலம் வேறு பணப்பரிவர்தனைகளை நிகழ்த்த வசதியாக இந்த வசதி கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இப்போது செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திருத்தம் மூலம் ஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் மட்டுமே வழங்க வேண்டும் என்று கட்டாய ப்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக