யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/16

ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரம்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வாபஸ்!!!

ரூபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது._

_கடந்த மாதம் 8-ஆம் தேதி 500 ருபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு 
அறிவித்தது. மேலும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது._

_ஆனால் கடந்த 19-ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், 'ரூபாய் 5000 அல்லது அதற்கு மேல் வங்கிகளில் டிசம்பர் 30-ஆம் தேதி வரை  ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்யலாம் என்றும், அவ்வாறு டெபாசிட் செய்பவர்கள் கூட குறைந்த பட்சம் இரண்டு  வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ஏன் அந்த தொகை தாமதமாக டெபாசிட் செய்யப்படுகிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்' என்றும் கூறப்பப்பட்டிருந்தது._

_ஆனால் கடந்த திங்கள் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'ருபாய் நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களிடம் எந்த விதமான விசாரனையும் நடத்தப்படாது என்று அறிவித்தார். இதனால் ஒரு குழப்பமான சூழல் நிலவியது._

_இந்நிலையில் டிசம்பர்-19-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக