யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/6/17

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

TRB PG EXAM | 02.07.2017 - CHIEF- ADL CHIEF - DEPT - ADL - DEPT DUTY ORDER MEETING - 28.07.2017

FLASH NEWS:-குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளி துவக்கப்பள்ளி ஆக தரம் இறக்கப்பட்டு பட்டதாரிகளை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுக்கு மாற்ற அரசு திட்டம் விரைவில் ..


G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards

G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards...



BREAKING NEWS : 6,7,8 வகுப்புகளை கையாளாத மற்றும் பட்டதாரிகளை விட குறைந்த தரநிலை ஊதியம் பெறும் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு தரக்கூடாது - மதுரை உயர்நீதிமன்றம் ஆணை - JUDGEMENT COPY

திரு.த.உதயச்சந்திரன் IAS அவர்கள் RMSA பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்

ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை எவ்வாறு மாணவர்களுக்கு நடத்த
வேண்டும்,ஆசிரியர்களின் கடமைகள் என்ன? என்பதை பற்றி-திரு.த உதயச்சந்திரன் IAS அவர்கள் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்த அறிவுரைகள்:

கண்டிப்பாக அனைத்து ஆசிரியர்களும் 01 மணி நேரம் ஒதுக்கி இந்த வீடியோவின் நான்கு பாகங்களையும் நன்றாக பாருங்கள் நிச்சயம் உங்கள் மனதில் மாற்றம் வரும்.மிகவும் அருமையான சமுதாய பற்றுடன் கூடிய பதிவு.
போற்றுதலுக்குரிய பள்ளிக்கல்வி முதன்மை செயலர் திரு. த.உதயசந்திரன் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.  நூறு நாட்களில் பள்ளிக்கல்வித் துறையை  தலைநிமிரச்செய்தீர்கள்.அரசாணை எண் 99 மற்றும் 100.ஆகியவற்றை  செதுக்கிய விதம்.அதனை இந்த வீடியோவில் தாங்கள் எடுத்துரைத்த விதம் அருமை.

அதுதமிழக ஆசிரியர்களின்  மனதிலும் கல்வித்துறையிலும் மிகப்பெரிய மாற்றத்தினை உண்டாக்கும் என்பதில் மாற்றம் இல்லை.பள்ளிக்கல்வித் துறையில் நீங்கள் ஏற்படுத்த நினைக்கும் மாற்றங்கள் நிச்சயம் தமிழ் சமுதாய மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை வளர்க்கும்- மேலும் NTSE,NEET,IIT,JEE,IAS,IPS போன்ற போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும் பயிற்சியும் பள்ளி அளவில் வழங்க நினைக்கும் உங்களின் முயற்சிகள் நிச்சயம் வெற்றிபெறும்.
  • VIDEO PART I  (21:35 MINUTES) CLICK HERE
  • VIDEO PART II  (09:24 MINUTES) CLICK HERE
  • VIDEO PART III  (21:13 MINUTES) CLICK HERE
  • VIDEO PART IV  (14:30 MINUTES) CLICK HERE
  • தமிழை காக்கவேண்டிய பொறுப்பு தமிழகத்தில் ஒரு ஆங்கில ஆசிரியரின் கையில் உள்ளது.ஆங்கில ஆசிரியர்கள் வகுப்பறையில்.ஆங்கிலத்தை முறையாக கற்பித்தால் தமிழகத்தில் தமிழ் வாழும் என தாங்கள் கூறியது ஆச்சரியமே ஆனால் உண்மை. கடைசி மனிதனின் பயனுள்ள கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றையெல்லாம் தொகுத்து அதனை அடிப்படியாக கொண்டு செயல்திட்டங்களை அமைக்கும் தங்களின் மேலான வழிகாட்டுத்தல் போற்றுதலுக்குரியது. நீங்கள் கல்வித்துறையில் இன்று ஏற்றிய அகல் விளக்கு நிச்சயம் ஒருநாள் என் சமுதாயம் ஒளி பெரும் மிகப்பெரிய மகாதீபமாக மாறும் என்பதில் ஐயம் இல்லை.உங்களின் ஆணைக்காக காத்திருக்கும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

உங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

நிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள்
கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) வணிக வங்கிகள், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குப் புத்தகங்களின் போதுமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறது. 'சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வங்கிக் கணக்குகளில் இடப்படும் உள்ளீடுகள் தொடர்பான குறைந்தபட்ச விவரங்களை வழங்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவிக்கிறது.

இருந்தாலும், இப்போதும் நிறைய வங்கிகள் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்களை வங்கிக் கணக்குப் புத்தகங்கள் மற்றும் / அல்லது வங்கிக் கணக்கு அறிக்கைகளில் வழங்குவதில்லை என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சொல்கிறது.

வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீடு
வங்கிகள் 'வைப்புநிதி இன்சூரன்ஸ் காப்பீட்டு' விவரங்களுடன் காப்பீட்டு வரம்பு விவரங்களையும் கணக்குப் புத்தகங்களின் முன்பக்கத்தில் அளிக்க வேண்டும். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இணையத்தளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, இந்தியாவில் இயங்கும் அனைத்து வங்கிகளுக்கும், வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும் சேர்த்து, வைப்புநிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத நிறுவனத்தினால் (DICGC) காப்புறுதி தரப்படுகிறது. ஒரு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டுத் தோல்வியடைந்தால், DICGC வங்கி வைப்புத் தொகைகளைப் பாதுகாக்கிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர்/அவள் வைத்திருக்கும் அசல் மற்றும் வட்டி இரண்டிற்குமான அதே அளவுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது.

ஆர்பிஐ சுற்றறிக்கை
ஜுன்22 தேதியிடப்பட்ட ஆர்பிஐ சுற்றறிக்கையில், வங்கிகள் கணக்குப் புத்தகத்தில் சேர்க்க வேண்டிய பணப் பரிவர்த்தனைகளின் விவரங்களை அளிக்கிறது. இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன:

மூன்றாம் தரப்பினருக்குப் பணம் செலுத்துதல்:
(i) பணம் பெறுபவரின் பெயர்,

(ii) பணப் பரிவர்த்தனையின் முறைமை, தீர்வாக வங்கி வணிக நடவடிக்கைகள், இடை - கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், காசோலை (எண்)

(iii) பணம் செலுத்தல் வங்கித் தீர்வகம்/வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே செய்யப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

வங்கிக் கட்டணங்கள்:
(i) பரிவர்த்தனையின் தன்மை - கட்டணம்/தரகு/அபராதம்/தண்டனைத் தொகை மற்றும் பல.
(ii) கட்டணங்களுக்கான காரணங்கள், விரிவாக - உதாரணமாக. காசோலை திருப்பம் (எண்), வெளியிடப்பட்ட வரைவோலைக்கான தரகு/கட்டணம்/பணம் அனுப்புதல் (எண்), காசோலை சேகரிப்புக்கான வசூல் கட்டணங்கள் (எண்), காசோலை புத்தகம் வழங்கல், குறுஞ்செய்தி எச்சரிக்கை, ஏடிஎம் கட்டணங்கள், கூடுதல் பணத்தைத் திரும்பப் பெறுதல், மற்றும் பல..

தவறாகப் பெறப்பட்ட வரவுத் தொகைகளைத் திரும்பச் செலுத்துதல்:
(i) வரவு நுழைவு திருப்பிச் செலுத்தப்பட்ட தேதி

(ii) திருப்பிச் செலுத்தியதற்கான காரணங்கள், விரிவாக.

கடன்/கடன் மீது வட்டி ஆகியவற்றின் தவணை மீட்பு:

(i) கடன் கணக்கு எண்

(ii) வங்கிக் கடன் கணக்குதாரரின் பெயர்.

நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை உருவாக்கம்: நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வங்கிக் கணக்கு/ரசீது எண்

(ii) நிலையான வைப்புத் தொகை/தொடர்ந்த வைப்புத் தொகை வைத்திருப்பவரின் பெயர்.

POS-ல் பரிவர்த்தனை (விற்பனை புள்ளி):

(i) பரிவர்த்தனை தேதி, நேரம் மற்றும் அடையாள எண்

(ii) POS இன் அமைவிடம்
பண வைப்பு
(i) அது 'பண வைப்பு' என்பதைச் சுட்டிக்காட்டும்

(ii) பண வைப்பீட்டாளரின் பெயர் - தன்னுடைய/மூன்றாம் தரப்பு.

மூன்றாம் தரப்பிலிருந்து ரசீது:
(i) பணம் அனுப்பியவர்/பணம் மாற்றியவர் பெயர்

(ii) பரிவர்த்தனையின் - தன்மை, இடை கிளை, ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி, ரொக்கம், மற்றும் பல.


(iii) பணம் செலுத்தல் வங்கியின் இடை கிளை பரிவர்த்தனை/ஆர்டிஜிஎஸ்/என்இஎஃப்டி வழியே பெறப்பட்டிருந்தால், பணப் பரிமாற்றம் செய்தவரின் பெயர்.

Cursive Writing For Beginners | Writing Cursive Alphabets : Capital | Cursive Handwriting Practice

26/6/17

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம் !!!

எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார்
நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மே, 7ல், ‘நீட்’ தேர்வு நடந்தது. தமிழகத்தில், 88 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ளன.
மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:

பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டு ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை ஜூலை, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்ப படிவங்கள் பெற, ‘செயலாளர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை’ என்ற பெயரில், 500 ரூபாய்க்கான வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும். சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்; மாணவர்கள் அதற்கான ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும்.

அரசுமற்றும் தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை வினியோகிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் படிவங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. மதிப்பெண் சான்றிதழ் நகல் வழங்க வேண்டியதில்லை. ஜூலை, 14ம் தேதி தரப்பட்டியல் வெளியிடப்படும். விண்ணப்பங்களுக்கான டி.டி., எடுப்பதற்கு அந்தந்த மருத்துவக் கல்லுாரிகளில் வங்கிகளின், சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. !!!

சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு,
ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 1ல் துவங்கியது; ஆக., 31 வரை விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பெற, மத்திய, மாநில அரசு நடத்தும் தேர்வுகளில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்திலும், www.minorityaffairs.gov.in என்ற இணையதள இணைப்பு மூலமும்விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய விடுப்பு நாட்களை கழிப்பது பற்றிய விளக்கம்

தொகுப்பூதிய வழக்கு தொடுக்க காரணங்கள், தொகுப்பூதிய கால இழப்புகள் மற்றும் அரசமைப்பு விதிகள்



தொடக்கக்கல்வி செயல்முறைகள் - நாள்:23/6/17-மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள் இயக்குனரிடம் தெளிவுரை கேட்டல் என்ற பெயரில் காலம் கடத்தாமல் உடனடி முடிவெடுக்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-பி.லிட் மற்றும் DTEd முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆகிறார்கள்

அரசுப் பள்ளியில், தாய் மொழி வழிக் கல்வியில் படியுங்கள்..! - சீன தமிழ் விஞ்ஞானியின் ஆலோசனை

அவன்பெயர் சரவணன். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பக்கம் ஒரு சிறு கிராமம். சிறு கிராமத்தில் வசித்தாலும் நில புலன்கள் ஏராளம். வசதிக்கும் குறைவில்லை. இன்னும் அவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில், அவர்கள் சொந்த
தேவைக்கென்று இயற்கை விவசாயம் செய்வதால், அந்த இடத்திற்கு பறவைகள் அதிகமாக வரும். அதனால் இயல்பாக அவனுக்கு பறவைகள் மீது ஈர்ப்பு அதிகம். பறவைகளுடன் பேசுவான், விளையாடுவான். மனிதர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்கவே விரும்பும் பறவைகளும், அவனுடன் விளையாடும்.'


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

Why do you bother ? The Plague killing Democracy
பறவைகள் மீது கொண்ட அலாதி காதலால், அவனுக்கு பறவையியல் (Ornithology) படிக்க வேண்டுமென்று விருப்பம் வந்தது. இந்த விருப்பம் வந்த போது, அவன் ஓசூரில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இணையத்தில் எப்படியோ தேடி சலீம் அலி மையத்தை பற்றியும் தெரிந்து கொண்டான்.

ஆனால், அவன் பெற்றோர்களுக்கு எப்போதும் பறவைகளை பிடித்ததில்லை. தங்கள் நிலத்தில் விளையும் சோளப் பயிர்களை சிதைக்கும் வில்லன்கள்தான் பறவைகள். இந்த புரிதலுடன் அணுகியதால், அவர்களால் பறவைகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை, பறவைகளின் காதலனான சரவணனையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் மருத்துவர் ஆக வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தார்கள். கல்வி நிலையமும் அவன் பெற்றோருடன் இணைந்து கொண்டது. அவனால் அழுத்தங்களை தாங்க முடியவில்லை. முதலில் வீட்டார்களுடன் பேசுவதை நிறுத்தினான். பின் பள்ளியையும், பெற்றோரையும் பழி வாங்க எண்ணி, பத்தாவது வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தான்.

சமீபத்தில் அவனை ஒரு பேருந்து பயணத்தில் சந்தித்தேன். இறுக்கமான ஒரு மெளனத்திற்கு பின், அவன் பேசினான். பறவைகளை குறித்து துவங்கிய நிறைய பேசினான். அவன் இறங்க வேண்டிய நிறுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவன், “ உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களை நீங்க கொல்லுவீங்களா சார்..? " என்றான். “நிச்சயம் முடியாது... என்னால் மட்டுமல்ல எவராலும் முடியாது...” என்றேன். " இல்லை சார்... அதெல்லாம் ச்சும்மா... இங்க எல்லாரும் அவங்களுக்கு மிகவும் பிடிச்சவங்களை தினமும் கொன்னுட்டுதான் இருக்கிறாங்க.... கொல்றதுன்னா ரத்தம் தெறிக்க கொல்றது இல்ல சார்... அவங்க கனவுகளை கொல்றது... என்னை என் பெற்றோர் கொன்ன மாதிரி...” என்றவன், தன் நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டான்.

ஆம், உண்மைதானே..? ஒருவரின் வாழ்வென்பது அவர்களின் கனவுகளால் கட்டமைக்கப்பட்டது. அந்த கனவுகளைக் கொன்றால், அவர்கள் உயிர் வாழ்வார்கள்தான். ஆனால், அது அவர்கள் வாழ்வாக இருக்காது.

சரிகட்டுரைக்கு வருவோம். இது கல்வி குறித்த ஆளுமைகளுடனான உரையாடலின் மூன்றாவது பகுதி.

விஜய் அசோகன். ஒரு சிறு கிராமத்தில், மத்திய தர குடும்பத்தில் பிறந்தவர். மத்திய தர குடும்பத்திற்கே இருக்கும் அபிலாஷைகளை எதிர் கொண்டவர். கடும் காதலால் (ஆம். முயற்சி என்ற சொல்லை வெறுக்கிறார்) ஆராய்ச்சியாளராக உயர்ந்தவர். நானோ தொழிற் நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்போது சீனாவில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவை மட்டும் அவர் அடையாளங்கள் அல்ல. இவர் தொடர்ந்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும், தமிழ் வழிக் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

அவருடனான உரையாடலில் இருந்து...


கல்வி குறித்து, அறிவு தளத்தில் உங்களின் தொடர் செயல்பாடுதான், உங்களை பேட்டி எடுக்க என்னை தூண்டியது. உங்களை போன்ற ஆராய்ச்சியாளர்கள், அரசுப் பள்ளி, தாய்மொழி வழிக் கல்வி போன்ற விஷயங்களில் மெளனம் காக்கின்றபோது, உங்களுக்கு இதில் இயங்க வேண்டும் என எப்படி விருப்பம் வந்தது...?

என்பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரமும்... பின் நான் படித்த தனியார் பள்ளியும்தான் முதன்மையான காரணங்கள்.

என்னதனியார் பள்ளியா...?

ஆம். அங்கு நான் பெற்ற சில கசப்பான அனுபவங்கள்தான். என்னை அரசுப் பள்ளிக்காக குரல் கொடுக்க தூண்டுகிறது என நினைக்கிறேன். ‘பாருங்க... இவனுங்க நல்லா தனியார் பள்ளியில் படிச்சிட்டு நம்மை அரசு பள்ளியில சேருங்கன்னு புத்தி சொல்ல வந்துடுறாங்க...’ என்று எண்ணாதீர்கள். நான் என் பள்ளி வாழ்க்கையை தனியார் பள்ளியில் துவங்கினாலும், நான் அங்கு தொடரவில்லை. அந்தப் பள்ளி என்னிடம் இருக்கும் பிற ஆற்றல்களை பார்க்காமல், கல்வியை திணிப்பதை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. நான் சுதந்திரமாக சிந்திப்பதை, அப்பள்ளி விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் எனக்கும் பள்ளிக்குமான இடைவெளி மனதளவில் தொலைவாகியாது. நல்லவேளையாக எனது அப்பா என்னை புரிந்துகொண்டார். அங்கிருந்து வெளியேறி என் படிப்பை அரசு பள்ளியில் தொடர்ந்தேன்.

உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்...?

எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகன் கவின் திலீபனுக்கு ஆறு வயது. இரண்டாவது மகன் கதிர் நிலவனுக்கு நான்கு வயது. இன்னும் இருவரையும் பள்ளியில் சேர்க்கவில்லை. ஆறு வயதில்தான் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அடுத்த மாதம் நான் சீனாவிலிருந்து வருகிறென். என் மனைவி தன் ஆராய்ச்சி படிப்பில் அடுத்த மாதம் கோவையில் சேர உள்ளதால், அந்த பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் நிச்சயம் சேர்த்துவிடுவேன்.

உங்கள் வீட்டில் புரிந்து கொள்கிறார்களா...?

முதலில் என் மனைவிக்கு சில தயக்கங்கள் இருந்தன. ஆனால், எங்களுக்கிடையேயான உரையாடல் அந்த தயக்கத்தை சரி செய்தது. ஆனால், சுற்றத்தாரின் பார்வைதான் மிக மோசமானதாக இருக்கிறது. 'அரசுப் பள்ளியில் சேர்க்கப் போகிறோம்' என்று சொன்னால் மிக பரிதாபமாக பார்க்கிறார்கள். நாங்கள் ஏதோ பணத்தை சேமிப்பதற்காக இது போல் செய்கிறோம் என்றும், வறட்டுப் பிடிவாதம் என்றும் பரிகாசம் செய்கிறார்கள். எங்களிடம் அந்த கிண்டல் பேச்சுகள் வந்தால், அதற்கு நாங்கள் உரிய எதிர்வினையை ஆற்றிவிடுவோம். ஆனால், எங்கள் குழந்தைகளிடம் எடுத்துச் சென்றார்கள் என்றால்...? இந்த பரிகாசங்கள் அவர்களை எவ்வளவு உளவியல் ரீதியாக பாதிக்கும்...? இதுதான் அச்சமாக இருக்கிறது.

உண்மையை சொல்லுங்கள்... தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் நன்றாகவா இருக்கிறது....?

100 சதவீதம் நன்றாக இருக்கிறது என்பது என் வாதம் அல்ல. இங்கு தனியார் பள்ளிகளும் நூறு சதவீதம் தரமாக இருக்கவில்லையே...? அரசு பள்ளிகளில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அதை புறக்கணிப்பதன் மூலம் சரி செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை நாம் மறுப்பதன் மூலம், கல்வி அளிப்பது அரசின் கடமை என்பதையும் மறுக்கிறோம். அரசுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்த்து, அரசை கேள்வி கேட்பதன் மூலம்தான் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடியும்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இங்கு தனியார் பள்ளிகள் அனைத்தும் தரமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இயங்குவதில்லை.பெரும்பாலான தனியார் பள்ளிகள் விளையாட்டு மைதானம் இல்லாமல் தான் இயங்குகின்றன. தீப்பெட்டி போன்ற வகுப்பறைகள்... இவ்வளவு இறுக்கத்தில் குழந்தைகள் படித்தால், அவர்களின் சிந்தனை திறன் எப்படி வளரும்...? தனியார் பள்ளிகளில் 1 சதவீதம்தான் அனைத்து வசதிகளுடன் தரமாக இருக்கின்றன. அது பெரும் பணக்காரர்களுக்கான இடமாக இருக்கிறது. இந்த கணக்குடன் ஒப்பிட்டு பார்த்தால், பெரும்பாலான அரசு பள்ளிகள் தரமானதாக இருப்பதாக தோன்றுகிறது.

மீண்டும் சொல்கிறேன். அரசுப் பள்ளிகளை புறக்கணிப்பதன் மூலம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியாது.

ஹூம்... புரிகிறது. நீங்கள் தமிழ் வழிக்கல்வி குறித்தும் தொடர்ந்து எழுதி, பேசி வருகிறீர்கள்தானே...?

தமிழ் வழிக் கல்வியாக சுருக்கி பார்க்காதீர்கள். தாய் மொழி வழிக் கல்வி என்று அதனை பாருங்கள். இயல்பாக தாய்மொழி வழிக் கல்வியில் படித்தால், குழந்தைகளின் சிந்தனை திறன் வளரும். இதனை நான் மேம்போக்காக சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள். நான் ஐரோப்பாவில் ஏழு ஆண்டு காலம் வசித்திருக்கிறேன். சீனாவில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். அங்கு குழந்தைகள் தங்கள் தாய் மொழியில்தான் படிக்கிறார்கள். அதனால்தான் விஞ்ஞானத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது.

ஆனால், இந்த நவீனச் சூழலில் ஆங்கிலம் இல்லாமல் எப்படி சமாளிக்க முடியும்...?

இதுதான் நம்மிடம் இருக்கும் பிரச்னையே. தாய் மொழி வழிக் கல்வியில் படிப்பதென்பது பிற மொழிகளை புறக்கணிப்பதல்ல. ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, சீனம் என உங்களுக்கு விருப்பமான மொழிகளை எல்லாம் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் பள்ளிக் கல்வியை, அறிவியலை, உங்கள் தாய் மொழிக் கல்வி ஊடாக படியுங்கள். அப்போதுதான் நம் மண்ணிற்கு தேவையான படைப்புகள் வரும்.

இதைத்தாண்டி அரசுப் பள்ளிகளை ஆதரிப்பதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா...?

உண்மையாக குழந்தைகள் தம் கனவுகளின் கரம் பிடித்து வளரும் இடமாக அரசுப் பள்ளிகள் மட்டும்தான் இருக்கின்றன. பாடப் புத்தகத்தை தாண்டி அவர்களால் அங்குதான் நிறைய சிந்திக்க முடிகிறது என்பது என் அனுபவத்தின் ஊடாக நான் கண்ட உண்மை. நாம் அனைவரும் கரம் கோர்த்து அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக குரல் கொடுத்தால், நிச்சயம் அங்கு படிக்கும் மாணவர்கள் சமுகத்திற்கு அளப்பெரிய பங்களிப்பை அளிப்பார்கள்.

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளியில் படிக்கும் போது, குழந்தைகள் மீதான பொருளாதார அழுத்தங்கள் குறைகின்றன. இதனால் அவர்களால் சுதந்திரமாக இயங்க முடிகிறது. சுதந்திரமான மனநிலையில் இருப்பவர்களால்தான், நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

சரி. எப்படி அரசு பள்ளிகளை மேம்படுத்துவது...?

உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்தால் என்ன செய்வீர்கள்... மாதம் ஒரு முறையாவது ஆசிரியர்களை சந்திப்பீர்கள்தானே...? ஆசிரியர்களிடம் சந்தித்து உரையாடுங்கள். பள்ளியில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மாவட்டக் கல்வி அலுவலரை சென்று சந்தியுங்கள். அரசியல் இல்லாமல் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை கட்டமையுங்கள்.

இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். ஆனால், துரதிருஷ்டமாக ஆசிரியர்களின் பங்களிப்பு கவலை அளிப்பதாக இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களையும் குறைகூறிவிட முடியாது என்றாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பொறுப்பை உணரவில்லையோ என்றுதான் தோன்றுகிறது.


அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கான போராட்டங்களை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்னெடுத்தால், நிச்சயம் மாற்றங்கள் வியக்கத்தக்கதாக இருக்கும்.

அன்புள்ள கணித ஆசிரியருக்கு...

நீங்கள் ஒரு மாணவரின் கல்வியில் மிக முக்கியமான பங்கு வகிப்பவர். கணிதமே வாழ்கைக்கு ஆதாரம். உயர் அறிவியல், கண்டுபிடிப்பு, பொருளாதாரம் என எந்த துறைக்கு சென்றாலும் அங்கே கணக்கு பிணைந்திருக்கும்.

சரி, கடிதத்தின் சாரத்திற்கு வருகிறேன். “நான் ஒரு கணக்கு பைத்தியம்” என்ற சின்ன கணிதத்தொடரினை எழுத ஆரம்பித்தபோது ”ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கின்றது? ஏன் கணிதம் உங்களுக்கு பிடிக்கவில்லை?” என்ற கேள்வியை எழுப்பினேன். இரண்டிலும் முதன்மையானதாக வந்த பதில் “ஆசிரியர்” என்பதே. பிற பதில்களும் வருத்தங்களும் இருந்தாலும் தற்சமயம் அதனை விட்டுவிடுவோம்.

ஏன்சிரமமாகின்றது?
1. *காட்சிப்படுத்துதல்*
படிக்கும் கணிதங்களையும் சூத்திரங்களையும் காட்சி படுத்த முடிவதில்லை. அறிவியலை அவன் எப்படியேனும் காட்சிப்படுத்திவிடுகின்றான், நிஜத்தில் பார்க்கின்றான், உணர்கின்றான் ஆனால் கணிதத்தை அவன்/அவள் காட்சிபடுத்துவதில்லை. பாடங்களில் உதாரணங்களைக் கொண்டு விளக்கினாலும் அவனால் அதனை காட்சிப்படுத்த முடியாமல் திணறுகின்றான்.

2. *தொடர்புபடுத்த முடிவதில்லை*
படிப்பவற்றை அவனால் தொடர்புபடுத்த முடிவதில்லை. ஏன் பயன்படுத்துகின்றோம் எங்கே பயன்படுத்தபடுகின்றது என்ற எந்த ஒரு தெளிவோ குறைந்த அறிவோ கிடைப்பதில்லை.

இவைஇரண்டுமே மிக முக்கியமான காரணங்களாக தங்களை தூர விலக வைக்கின்றன.

வகுப்பறைகளில் என்ன செய்யலாம்?
1. *காட்சிப்படுத்தல் முயற்சி*
இதுஆசிரியரின் கற்பனைக்கு உட்பட்டது. அதனை தொழில்நுட்பம் கொண்டு எளிமையாக காட்சிப்படுத்தலாம் அல்லது வகுப்பறைகளில் அந்த மாயத்தினை நிகழ்த்திக்காட்டலாம்.

2. *பயன்பாட்டு விளக்கம்*
கணிதம் எப்படி தொடர்ச்சியாக பயன்பட்டு வருகின்றது என விளக்கிக்கொண்டே இருக்க வேண்டும். தினசரி வாழ்வில் என்ன கணிதம் இருக்கு என கூற வேண்டும். தினசரிகளில் காணப்படும் கணிதம் என்ன என்று விளக்கலாம். ஒரு பாலத்தினைப்பார்த்தால் ஏன் அது அந்த வடிவில் இருக்கு அதில் இருக்கும் கணிதம் என்ன என்று விளக்கலாம். அளவீடுகளில் அவர்களை நேரடியாக களம் காணச்செய்யலாம். ஒரு லிட்டர் என்றால் எவ்வளவும், ஒரு கி.மீட்டர் என்றால் எவ்வளவு தூரம், ஒரு கிலோ என்றால் எவ்வளவு எடையுள்ளது என தங்கள் உணர்வுகள் மூலம் புரிந்துகொள்ளவேண்டும். இது ஒரு நெருக்கத்தினை எண்கள் மீதும் கணிதம் மீது ஏற்படுத்தும்.

3. *கணக்குகளை உருவாக்கச்சொல்லுங்கள்*
ஒருகணித வகுப்பில் கணக்கிற்கு தீர்வு மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஏன் அவர்களை கணக்குகளை உருவாக்க வைக்கக்கூடாது? தினசரி வாழ்வில் இருக்கும் கணக்குகளை அவர்கள் உருவக்க வேண்டும்.
இதுகல்வியை அசைத்துப்பார்க்கும் முயற்சியும் கூட. நம் கல்வி யாரோ ஒருவர் சொல்ல அதற்கு ஏற்ப வேலை செய்யவே திட்டமிடப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட Consumer Education நம் பிரச்சனைகளை நாம் பார்த்து அதற்கான தீர்வுகளை தொழில்நுட்பம் + அறிவியல் அனுபவங்களை பயன்படுத்துவதே இல்லை. ஆகவே பிரச்சனைகளையும் கணக்குகளையும் அவர்களே உருவாக்கட்டும்.

4. வகுப்பறை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு ஐந்து-பத்து நிமிடம் புத்தகத்தில் இல்லாத கணிதம் பற்றிய உரையாடலை முயற்சி செய்யலாம். புதிர்கள். கணித ஆளுமைகளைப் பற்றிய நிகழ்வுகள். கணித வரலாறு. எண்களின் வரலாறு. உலக அளவில் எப்படி கணிதம் வளர்ச்சி கண்டுள்ளது என பேச ஏராள ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

அட ஆறாவது வகுப்பு சதவிகிதம் பற்றி எடுக்க வேண்டும் அவ்வளவு தானே என்ற தொனியில் வகுப்பறைக்குள் சென்றால் அதே எனர்ஜியே வெளிப்படும். ஒவ்வொரு ஆசிரியருக்கு தனக்கான சவாலை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இன்று எப்படி புதிதாக கற்றுத்தரப்போகின்றேன், எதனை புதிதாக கற்கப்போகின்றோம் என்ற ஆவலுடனும் உற்சாகத்துடனும் வகுப்பிற்குள் நுழைய வேண்டும். சொன்னதையே திருப்பித்திருப்பி சொல்வதென்றால் அதற்கு ஒரு வீடியோ போதுமே. இன்னும் சிறப்பாக அது அந்த காரியத்தை செய்து முடிக்கும்.

5. *தொழில்நுட்ப பயன்பாடு*
இணையம், சமூக வலைத்தளங்கள் ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சியினை சரியாக பயன்படுத்தி தங்களுக்குள் ஒரு இணைப்பினை ஏற்படுத்தி வகுப்பறைகளில் செய்யும் முயற்சிகளை சக ஆசிரியர்களிடம் பகிர்வது, மேலும் முயற்சிகளை பெறுவது, அனுபவம் மூலம் மேலும் மாணவர்களை மகிழ்வூட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடலாம்.

இன்னும் இன்னும் நிறைய செய்யலாம்.

பேரன்புடன்,

விழியன்

படிச்சா படிங்க...! படிக்காட்டி போங்க...!


திரும்பும் திசையெல்லாம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளம்பர பதாகைகளும், சுவரொட்டிகளும் தான் தென்படுகின்றன.

காசுக்கு கலவி செய்யும் கூட்டமொன்று கல்வியின் தரம் பற்றி காணொளி ஊடக விளம்பரங்களில் நொடிக்கு நொடி அபச்சாரமாய் விபச்சாரம் செய்கின்றன.

எங்கள் பள்ளியில் அது இருக்கு...
எங்கள் கல்லூரியில் இது இருக்கு என்றும், மண்ணைப் பொன்னாக்கி உங்கள் குடிசையை கோபுரமாக்குவோம் என்றும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க அப்பாவிகளை நோக்கி கவர்ச்சித்தூண்டில்கள் வீசப்படுகின்றன.

மூன்று வயது குழந்தையின் மூளைக்குள் ஆறு வயது குழந்தையின் அறிவை, அறுவை சிகிச்சை செய்தாவது திணித்துவிட வேண்டும் என்ற அவசரமும், பேராசையும் கொண்ட பெற்றோர்களும்....

படிக்காமல் பட்டம் பெற்று, உழைக்காமல் உயர்ந்து விடத் துடிக்கும் இளைஞர்களின் கூட்டமும் இந்த கவர்ச்சித் தூண்டில்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிஉலகில் தங்களை கலியுக காமராசர்களாக காட்டிக்கொண்டு உள்ளுக்குள் கல்வியை காசாக்கிவிடத் துடிக்கும் கயவர்களிடம்....

கசாப்புக் கடை முதலாளிகளிடம் காசை வாங்கிக்கொண்டு கறிக்கு சினை ஆட்டைக் கூட விற்கும் மந்தையின் சொந்தக்காரனைப் போல் இந்த கல்வி வியாபாரச் சந்தையில் முதலாளிகளிடம் பெட்டிகளை வாங்கிக்கொண்டு நம் அடுத்த தலைமுறையை விற்றுக்கொண்டிருக்கின்றன பகட்டு விளம்பரங்களால் ஆட்சியை பிடித்த அரசுகள்.

# இதனால் பாதிக்கப்படப் போவது இளைஞர்களின் எதிர்காலம் மட்டுமல்ல...
இளைஞர்களின் எண்ணிக்கையை மட்டுமே பெரும் சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் எதிர்காலமும் தான் என்பதை அரசுகளும் நாமும் உணர்ந்து திருந்தாதவரை அழிவுப் பாதையில் நடைபோடும் கல்வியின் கால்களை தடுத்து நிறுத்த வழியேயில்லை....


ச.தாஸ்

இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் இன்னும் ஆயிரம் பிறை கண்டு கொண்டாட என் வாழ்த்துக்கள் !