யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/8/17

கல்வி உதவித்தொகை பெற இறுதி தேதி அறிவிப்பு

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, கடைசி தேதியை மத்திய அரசுஅறிவித்துள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, மாநில அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
பெரும்பாலான கல்வி உதவித்தொகை திட்டங்களை, மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், சில பள்ளிகள், மாணவர்களை கணக்கு காட்டி உதவித்தொகை பெற்று, அவற்றை மாணவர்களிடம் வழங்காமல், ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்தன.இதை தொடர்ந்து, கல்வி உதவித்தொகையை மாணவர்களின்வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை, சில ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு அறிமுகம் செய்தது.
அதேபோல், மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில், ஆன் - லைன் விண்ணப்ப பதிவு முறையும் துவங்கப்பட்டது.மாணவர்கள், scholarships.gov.in என்ற இணையதளத்தில், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு திட்டத்திலும் வழங்கப்படும் தொகை எவ்வளவு; தகுதியானவர்கள் யார் போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ளன.ஏற்கனவே, இணையதளத்தில் பதிவு செய்து, உதவித்தொகை பெறும் மாணவர்கள், இந்த ஆண்டுக்கு புதுப்பிக்க, வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதே போல், புதிதாக விண்ணப்பிப்போர், அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை - ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. 
உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில் ஆக., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு தொழிற் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும், அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள், விடுதியில் தங்கியிருந்தால் மாதம் 1,000 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.
தொழிற்கல்வியில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு படிக்கும் விடுதி  மாணவர்களுக்கு, மாதம் 700 ரூபாயும், வீட்டிலிருந்து வரும் மாணவர்களுக்கு, மாதம் 400 ரூபாயும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், தற்போது வேறு எந்த முறையிலும் உதவித்தொகை பெறக் கூடாது. பெற்றோர் மாத வருமானம் 15,000 ரூபாய்கு மேல் இருக்கக் கூடாது.
தகுதி உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின், படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, அத்துடன் கல்வி சான்றுகள், உடல் ஊனமுற்றோருக்கான சான்று, வருமான சான்று, விடுதியில் சேர்ந்து படிப்பதற்கான சான்று அகியவற்றை இணைத்து, National Handicapped Finance and Development, Corporation (NHFDC), Red Cross Bhawan, Sector12, Faridabad - 121 007 என்ற முகவரிக்கு ஆக.,31க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://nhfdc.nic.in என்ற இணையதள முகவரி அல்லது 0129 - 2226 910, 2287 512, 2287 513 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்..

FLASH NEWS : JACTTO - GEO - 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு - செயல்முறைகள்



CPS - ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, வரும்
21 முதல் மீண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினரின் கருத்துகளை கேட்க உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தில், அரசும், ஊழியர்களும், ஓய்வூதிய தொகையை பங்கிட்டுச் செலுத்த வேண்டும்.ஆனால், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு, 14 ஆண்டுகளான நிலையில், ஊழியர்களின் பங்களிப்பு தொகை மட்டும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஓய்வு பெற்ற ஊழியருக்கான முழுப் பலன் வழங்கப்படவில்லை.
'இது, பாதுகாப்பில்லாத திட்டம்' எனக் கூறி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இதை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே, 2016 பிப்ரவரியில், தொடர் போராட்டமும் நடத்தினர். அதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, வல்லுனர் குழுவை அரசு அமைத்தது.இக்குழுவின் புதிய தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது தலைமையில், வல்லுனர் குழுவினர், 21ம் தேதி முதல், மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினரின் கருத்துக்களை கேட்க உள்ளனர்

Central Govt Employees Expected 1% D.A From July - 2017

தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு ( GRAFF ) பத்திரிக்கை செய்தி!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்

                       
                 திருவண்ணாமலை: புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு
கடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


-திருவண்ணாமலையில், நேற்று துவங்கிய புத்தக திருவிழா, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், 180க்கும் மேற்பட்ட அரங்குகள் மைக்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்களை குவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கியில் கடனுதவி பெறுவதற்கு, தி.மலை கலெக்டர், பிரசாந்த்
எம்.வடநேரே, ஏற்பாடு செய்துள்ளார்.இந்த கடன் தொகையை, ஆறு தவணைகளில், சம்பளத்தில் இருந்து திருப்பிச் செலுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திலேயே, வங்கிகள், வழிகாட்டி மையம் அமைத்துள்ளன.புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
புத்தகங்கள் வாங்க, வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருப்பது, இதுவே முதல்முறை.

19/8/17

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 
இதற்காக 2017-2018ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் பணிமனைகள் அமைத்து மாதந்தோறும் 2 பயிற்சி என்ற வீதத்தில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. அதன்படி 2017-2018ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 40 மையங்களில் 80 பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது.
இன்டர்மீடியட் மற்றும் அட்வான்ஸ்டு’ என மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு ஆசிரியர்களின் கணினி பயன்பாட்டின் முன்னறிவை சோதித்து அதனடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த மூன்று நிலைகளிலும் பயிற்சி பெற தகுந்த ஆசிரியர் மாவட்டம் தோறும் ‘டயாக்னிஸ் டெஸ்ட்’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு 40 மையங்கள் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் இன்று முதல் வருகிற 22ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ- - மாணவியருக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன.
இவற்றில், 84 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். சில ஆண்டுகளாக, இந்த விடுதிகளில், 40 சதவீதம் வரை காப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஒரு காப்பாளர், மூன்று விடுதிகள் வரை கவனித்து வருகிறார். விடுதியை சரியாக நிர்வகிக்க முடியாததால், மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறை குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 2014ல், காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதாக அரசு அறிவித்தது; அது, இன்னும் அறிவிப்பாகவே உள்ளது. இதேபோல, சமையலர், இரவு காவலர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, சத்தான உணவும் கிடைப்பதில்லை.
இரவு நேரத்தில் உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவமனை செல்வதற்கும் வழியில்லை. 
எனவே, காலியாக உள்ள விடுதி காப்பாளர்கள், இரவு காவலர், சமையலர் பணி இடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை

இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும், மாணவ - மாணவியரை ஏற்ற மறுத்து, அவமதிக்கும் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்' என, அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. 
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால், குறிப்பிட்ட நிறுத்தங்களில், டிரைவர்கள், பஸ்களை நிறுத்தாமல் செல்வதாகவும், கண்டக்டர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, 'அரசு பஸ்களில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யாத ஊழியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், எச்சரித்து உள்ளது.
இதுதொடர்பாக, அனைத்து போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது: பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரிடம், கண்டக்டர்கள் கனிவுடன் பேச வேண்டும்.அனைத்து நிறுத்தங்களிலும், அரசு பஸ்சை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். தகாத வார்த்தைகளை, கண்டிப்பாக பேசக்கூடாது. இதை மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த விஷயத்தில், 
மண்டல துணை மேலாளர் மற்றும் பஸ் நிலைய பொறுப்பாளர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை, 8:00 மணி முதல் 10:00 மணி வரை, கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள், துணை மேலாளர்கள், அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட, பஸ் நிறுத்தங்களில் கள ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்'

சென்னை: தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 12 ஆயிரம் இடங்களுக்கு, இதுவரை, 1,200 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து 800 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதி வரை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன கல்லுாரிகளில், மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவர் என, பள்ளிக் 
கல்வித்துறை அறிவித்துள்ளது.
'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக, தங்கள் சான்றிதழ்களை எடுத்து சென்று, ஆசிரியர் டிப்ளமா படிப்பில் சேரலாம்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி தெரிவித்துள்ளார்

சத்துணவு சமைக்க 'பிரஷர் குக்கர்'

சென்னை: சத்துணவு மையங்களுக்கு, 'பிரஷர் குக்கர்' வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்துணவு மையங்களுக்கு வழங்க, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அலுமினியம் அல்லது, 'இண்டோலியம் பிரஷர் குக்கர்' வாங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரஷர் குக்கர் வாங்க, சமூக நலத்துறை சார்பில், 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. டெண்டர் சமர்ப்பிக்க, செப்., 11ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்த இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அவர்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பினார். இது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகளை, அவர்கள் அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டயப்படுத்த முடியாது என குறிப்பிட்டது. கட்டமைப்பு வசதிகளுக்காக தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க பெற்றோர் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு நியாயமானது. ஆசிரியர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் அவர்களது குழந்தைகளை தாமாகவே முன்வந்து அரசு பள்ளியில் சேர்ப்பார்கள். பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்ற உரிமை அவர்களுக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, கடந்த 4 ஆண்டில் உரிய நேரத்திற்கு வராத 910 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைப்பது என்பது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு:


திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
திட்டமிட்டபடி 22-ம் தேதி வேலைநிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
புதுடெல்லி:

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி யூனியன்கள் பங்கு பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்துடன் வங்கி ஊழியர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் 22-ம் தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற உள்ள இந்த போராட்டத்தில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாகவும், செப்டம்பர் 15ம் தேதி டெல்லியில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர். 

நாடு தழுவிய வங்கிகள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதால், வங்கிப்பணிகள் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: செப்.23-ல் எழுத்துத்தேர்வு

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிக் கான போட்டித்தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வுசெப் டம்பர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.தேர்வுக்கான ஆன் லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 27-ம் தேதி தொடங்கியது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நள்ளிரவு 11.59 மணி வரை ஆன் லைனில் (www.trb.tn.nic.in) விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


முதல்முறையாக போட்டித்தேர்வு இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படை யிலேயே நிரப்பப்பட்டு வந்தன. தொடக்கத்தில் மாவட்ட அள விலான பதிவுமூப்பு அடிப்படை யிலும் அதன்பிறகு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையிலும் சிறப்பாசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.தற்போது தான் முதல்முறையாக போட்டித் தேர்வுமூலமாக சிறப்பாசிரியர் பணிநியமனம் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 100 மதிப்பெண் ணில் 90மதிப்பெண் எழுத்துத்தேர் வுக்கும், எஞ்சிய 5 மதிப் பெண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்புக்கும் ஒதுக்கப் பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் ஆகலாம் எழுத்துத்தேர்வில், ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் விண் ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப் படுவர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அப்போது, பதிவுமூப்புக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படும்.இறுதியாக எழுத்துத்தேர்வு மதிப் பெண், பதிவுமூப்பு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் சிறப்பாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணியில் சேரும் சிறப்பாசிரியர்கள் உரிய கல்வித்தகுதி இருந்தால் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VAO : கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (விஏஓ) ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டார்.

கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:
கிராம கர்ணம், கிராம முன்சீப் தேர்வில் 1980 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 2009 -ஆம் ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்ட 747 கிராம நிர்வாக அலுவலர்களின் பணி, தகுதியின் அடிப்படையில் விரைவில் வரன்முறை செய்யப்படும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணக்குப் பராமரிப்பு, அலுவலகங்களைப் பராமரிப்புக்காக, ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்பட்டு வரும் ரூ.2,500 பராமரிப்புச் செலவுக்கான தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
தாலுக்கா அலுவலகங்களில் இணைய வழி பட்டா வழங்கும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள 254 கணினி பதிவேற்றுநர்களின் பணி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்படும் இணையதள சான்றிதழ்களின் பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், எல்காட் நிறுவனம் மூலம் இணையதள வசதி, எழுதுபொருள் செலவினம் ஆகியன அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் அளிக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலர்களை நிர்வாக சாத்தியக்கூறுகள், வழிவகைகளுக்கு உட்பட்டு, அவர்களது சொந்த உள்வட்டம், வட்டத்தில் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் முதல்வர்.

18/8/17

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு பயிற்சி : பயணப் படியும் உண்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 
பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடக்க உள்ளது.
இதற்கான பயிற்சி மாணவர்களுக்கு முதற்கட்டமாக அளிக்கப்பட உள்ளது. இத்தேர்விற்கு 'ஆன்லைன்' மூலமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு இருவர் வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் வல்லுனர்கள் மூலம், வாரத்தில் 2 நாட்கள் (சனி,ஞாயிறு) பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இப்பயிற்சி ஆக.19 முதல் செப்.23 வரை, காலை 9:30 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கும்.மாவட்டத்திற்கு குறைந்தது 100 மாணவர்கள் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படும். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.இதில்,பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்க இயலாது. மாணவர்களுக்கு பயணப்படியும், பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்கு ஏற்ப
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, நத்தம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவை மையங்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளது. இதேபோல் எல்லா மாவட்டத்திலும் பயிற்சி மையங்கள் செயல்படும்.
''இதுபோன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'', என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜேசுராஜா பயஸ் தெரிவித்தனர்.

குரூப்–1 முதன்மை தேர்வின் விடைத்தாள்களை டி.என்.பி.எஸ்.சி. தாக்கல் செய்ய வேண்டும் !!

தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி, மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 
குரூப்–1 தேர்வை கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்தியது. இதில் நான் தேர்ச்சி பெற்றேன். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்–1 முதன்மை தேர்வு நடந்தது. இந்த தேர்வை நன்றாக எழுதியிருந்தேன். ஆனால், நான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், குரூப்–1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஆதாரத்துடன் தனியார் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனவே, குரூப்–1 தேர்வை ரத்து செய்யவேண்டும். மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிட்டு, குரூப்–1 தேர்வை நடத்த டி.என்.பி.எஸ்.சி.க்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் சென்னை போலீஸ் கமி‌ஷனரையும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்தையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த 7–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுவிட்டது. குரூப்–1 தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள் என்று கூறி, அதை காட்டி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த விடைத்தாள் போலியானவை. அதுகுறித்து சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் கடந்த 1–ந் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது’என்றார்.

இதற்கு நீதிபதி, ‘நேர்முக தேர்வின் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டியது வரும். அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், குரூப்–1 தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள் தங்களிடம் உள்ளது என்று தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தானே இருக்க முடியும்?. அது எப்படி இரண்டு விதமான விடைத்தாள்கள் இருக்க முடியும்?.

எனவே, இது தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. போலீசாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் தான் உண்மை வெளி கொண்டுவர முடியும். அதனால், இந்த வழக்கை வருகிற 18–ந் தேதிக்கு (நாளைக்கு) தள்ளிவைக்கிறேன். அன்று தங்களிடம் உள்ள உண்மையான விடைத்தாள்களை இந்த ஐகோர்ட்டில், டி.என்.பி.எஸ்.சி. தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் வக்கீல் எம்.புருஷோத்தமன், ‘அதுவரை நேர்முகத் தேர்வு முடிவின் அடிப்படையில் பணி நியமனம் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்று தடைவிதிக்க வேண்டும்’ என்றார். அதற்கு நீதிபதி, ‘ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரங்கள், அரசுக்கு தெரியும். அதனால் அவர்களே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். தடை ஏதாவது விதித்தால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 2 நாட்களில் எதுவும் நடந்து விடாது’ என்று கருத்து தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 அமைச்சகங்கள் ஒப்புதல் !!

அட்டர்னி ஜெனரல் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை*

*இறுதி முடிவெடுக்க மத்திய அரசு ஆலோசனை*


புதுடெல்லி : தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளன.



 நீட் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கில வினாத்தாள்களில் குளறுபடி ஏற்பட்டதாக நாடு முழுவதும் புகார் எழுந்தது. அதிலும், குறிப்பாக தமிழ் மொழி வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.


இந்நிலையில், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் என்ற உள்ஒதுக்கீட்டை கடந்த மாதம் 22ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது.


இந்த அவசர அரசாணையை சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, “ நீட் என்பது என்பது நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறையாகும். அதனால் இதில் ஒரே நிலையில்தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

 தமிழகத்திற்கு என தனி ஒதுக்கீடு எதுவும் செய்ய முடியாது’ எனக்கூறி மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வை ஆகஸ்ட் மாத 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதியன்று

*மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் அளித்த பேட்டியில்*

 ‘ நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒராண்டிற்கு மட்டும் விலக்கு கேட்டு சட்டம் இயற்றினால் மத்திய அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’ என தெரிவித்தார்.


இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு வேண்டும் என்ற அவசர சட்ட வரைவை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

 இது மத்திய உள்துறை ,சட்டத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதை ஏற்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் சட்ட அமைச்சகம் கேட்டுள்ளது.

 அதற்கு கே.கே.வேணுகோபால் நேற்று அனுப்பிய பதிலில், ‘தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை.


 மேலும், அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.
1956ன் பிரிவின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வரைவு இயற்றப்பட்டுள்ளது.


அதனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கலாம். இந்த அவசர சட்டத்தை பிறப்பிக்கும் பட்சத்தில் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமையாது’ என கூறியுள்ளார்.


 இதை ஏற்றுக் கொண்ட மத்திய சட்ட அமைச்சகம், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம், மனிதவளமேம்பாட்டு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தன.


இதையடுத்து அவசர சட்டம் இறுதியாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 அதன்பின் தமிழக கவர்னர் அல்லது ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் வெளியிடப்படும். இதன் மூலம் 2017-18 கல்வியாண்டில் தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிகிறது.



விரைவில் நல்ல செய்தி அமைச்சர் நம்பிக்கை
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு திடீர் என்று ெடல்லி புறப்பட்டு சென்றார். இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.


தொடர்ந்து, நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய சட்டத்துறையின் இணை அமைச்சர் பி.பி. சவுத்ரியை சந்தித்து அவசர சட்ட வரைவு விலக்கு கோரி வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உடனிருந்தார்.

 *நேற்று மாலை டெல்லியில் நிருபர்களை சந்தித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி*


நீட் தேர்வின் அவசர சட்ட முன்வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.

 துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், ஒப்புதல் கிடைப்பது பற்றி எங்களால் தற்போது எதுவும் கூற முடியாது. துறைகளின் பரிசீலனைக்கு பிறகு தான் தெரியவரும்.



மத்திய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று எங்களிடம் நேரடியாக எதுவும் குறிப்பிட்டு கூறவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது.


 நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான் முடிவு எடுக்க முடியும். அது குறித்து நாங்கள் கருத்து5 எதுவும் கூற விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


*உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு*


நீட் தேர்வு குறித்து மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


அதில், ‘நீட் தேர்வு முறையில் தமிழகத்தின் 85 சதவீத அரசாணையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ரத்து செய்து, மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு இது குறித்து எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கால தாமதம் செய்து வருகிறது. இதனால் தமிழக மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.


அதனால் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் விரைவில் மருத்துவ கலந்தாய்வை நடத்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்வதாகவும், இதன் விசாரணையை இன்று நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது.


 மேலும், இந்த வழக்கில் சிபிஎஸ்இ மற்றும் மருத்துவ கவுன்சில் ஆகிய நிர்வாகங்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தில் பணி!

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில்
காலியாக உள்ள தள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: தள பொறியாளர்

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங்

தேர்வு முறை: நேர்காணல்

கடைசித் தேதி: 04.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.nhai.org/Doc/14aug17/Instructions%20to%20applicant.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.