யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/11/17

7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!!!

அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.*

ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்)*

✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும்.

✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும்.

✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றி கொடுக்கலாம். *(மாற்றம் இருந்தால்)*

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்.

அரசாணை -652 -நாள் 31.10.2017-பள்ளிக்கல்வி SSA இயக்கத்தின் கீழ் மற்றும் மாவட்ட திட்ட அலுவலங்களில் வட்டரா மற்றும் தொகுப்பு வள மையங்களில் பணிபுரியும் 350 ஆசிரியர் BRTE 'S களை பட்டதாரி ஆசிரியர்களாக 2017-2018 ஆம் கல்வியாண்டில் -இணைய வழியில் பொது மாறுதல் -(Transfer Norms )








TNOU B.ED ADMISSION 2018

தமிழ்நாடு பல்கலையில், நவ., 3௦ வரை,
பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


பல்கலை பதிவாளர்,விஜயன் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

'இதன்படி, நவ., ௩௦ வரை, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

தரம் உயர்த்தியவர்கள் சம்பளம் தரவில்லையே பட்டதாரி ஆசிரியர்கள் தவிப்பு

 தரம் உயர்த்தப்பட்ட நுாறு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 
மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் தவிக்கின்றனர்.தமிழகத்தில்கடந்த ஜூலையில் நுாறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,
உயிரியல், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என 900 பேர் நியமிக்கப்பட்டனர்.இவர்களுக்கு மாத ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி துறையில் இருந்துஒப்புதல் பெற்று, அதனை கருவூலகங்களுக்கும்,முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் அனுப்ப நிதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்கள் சிரமம்கல்வித்துறையில் இருந்து பட்டியல் அனுப்பியும், நிதித்துறையில் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதத்திற்கான சம்பளத்தை பெற முடியாமல் 900 ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரேய்மண்ட், பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ஆதங்கம் -வீட்டு வாடகைப்படி குறைவு!!!

                                            

நவ., 3 தேர்வு 25ல் நடக்கிறது!

சென்னை, அண்ணா பல்கலையில், நவ., 3ல் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, வரும், 25ல் 
நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், இரண்டு தேதி அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.

அண்ணா பல்கலையில், பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. நவ., 2ல், சென்னையில் பெரும் மழை கொட்டியதால், மறுநாளான, 3ம் தேதி நடக்கவிருந்த தேர்வு மட்டும் தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வு, வரும், 19ல் நடத்தப்படும் என, நேற்று காலை, அண்ணா பல்கலை அறிவித்தது. ஆனால், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்த தேதியை மாற்றும்படி, பொறியியல் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, வரும், 25ல், அந்த தேர்வு நடத்தப்படும் என, தேதி மாற்றி அறிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 29-ந் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட பொதுக்கூட்டம் வேலூர் 
டவுன் ஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கொய்யாமணி, துணைச் செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரகு வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் செல்வன், மாநில முதன்மை செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில தலைவர் சந்தன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுந்தரேசன் நன்றி கூறினார்.

பின்னர் மாநில பொதுச் செயலாளர் செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கிராம நிர்வாக அலுவலர்கள் இணையதள பணிகளை செய்ய அதற்கு தேவையான கருவிகள் மற்றும் இலவச இணையதள வசதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, ஆன்லைன் கருவிகள், இலவச இணையதள வசதி ஆகியவற்றை வழங்கவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) கிராம நிர்வாக அலுவலர்கள் மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் பொறுப்பு, அடுத்த மாதம் 7-ந் தேதியில் இருந்து கூடுதல் பொறுப்பில் நீதிமன்ற பணிகளை தவிர வேறு பணிகளை செய்ய மாட்டோம்.

அதேபோல், டிசம்பர் 14-ந் தேதி முதல் இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்காக பரிந்துரை செய்வதையும் கிராம நிர்வாக அலுவலர்கள் நிறுத்துவார்கள். கிராம நிர்வாக அலுவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு கல்வி தகுதியாக பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு!!!

ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் 
இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தெரிவித்தார்


 திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பின் மாநில தலைவர் மோசஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006ல் அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டம் நடத்தியும், எட்டாவது ஊதியக்குழுவிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழு அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழு குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு

இப்பிரச்னைக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டவில்லை என்றால் ஜாக்டோ -ஜியோ இக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உடனே போராட்டம் அறிவிக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டம் அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்க வேண்டும்-அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!!

                                          

பெண் ஊழியர்களுக்கு 3மாத சம்பளத்துடன் விடுமுறை!!

                                          

70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர் ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!

                                          

10ஆம் வகுப்பு சாதனை மாணவி சாலைவிபத்தில் மரணம்!!!

                                                                     

பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் கட்ட கலந்தாய்வு!!!

                                                  
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட ஒன்பது
துணை மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என நேற்று (நவம்பர் 4) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்

1.பி.எஸ்சி (நர்ஸிங்) - செவிலியர்களை உருவாக்கும் படிப்பு

2. பி.பார்ம் (பார்மஸி) - மருந்தியல் துறை வல்லுநர்களை உருவாக்கும் படிப்பு

3. பி.பி.டி (பிசியோதெரபி) - முடநீக்கியல் துறை

4. பி.ஏ.எஸ்.எல்.பி (அகெளஸ்டிக்ஸ் மற்றும் லேங்வேஜ் தெரபி ) - செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்

5. பி.எஸ்சி (ரேடியோலஜி) - X ray , Scan போன்றவை குறித்து படிப்பது.

6. பி.எஸ்சி (ரேடியோதெரபி) - ரேடியோ கதிர்களை கொண்டு நோய் நீக்கும் துறை

7. பி.எஸ்சி ( எமெர்ஜென்சி & ட்ராமா கேர் ) - விபத்து மற்றும் அவசரக் கால சிகிச்சைகள் குறித்த படிப்பு

8. பி.எஸ்சி (மெடிக்கல் லேப் டெக்னீசியன்) - இரத்தம், சிறுநீர் போன்றவற்றின் மூலம் நோய் கண்டறியும் ஆய்வுகள் குறித்த படிப்புகள்

9. பி.எஸ்சி (மெடிக்கல் ரெக்கார்ட் சைன்ஸ்) - பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளின் ஆவணங்களைப் பராமரிப்பது குறித்த படிப்பு) ஆகிய ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு 8,381 இடங்கள் உள்ளன. துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டன. சுமார் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 25, 293 பேருக்கான தகுதிப் பட்டியல், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதற்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டு கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கலந்தாய்வு சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடக்கும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

                                           
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்)
காலியாக உள்ள டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 354

பணியின் தன்மை : டிரேடு அப்ரென்டிஸ்( பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன.)

வயது வரம்பு : 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

கடைசித் தேதி : 15/11/17

மேலும் விவரங்களுக்கு www.iocl.com என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்

உச்ச நீதிமன்றம் உத்தரவால் பலர் வேலையிழக்கும் அபாயம்!!!

                                          

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!

                                              
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக 
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in

நாளைவரை மழை நீடிக்கும்-வானிலை மையம் தகவல்!!!

8,10 ஆம் வகுப்பு தகுதிக்கு 18,000 சம்பளத்தில் கஸ்டம்ஸ் வேலை!!!

                                                 

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டிகள்- மாவட்ட ஆட்சியர்

                                                     

பென்ஷனுக்காக 45 ஆண்டு போராட்டம்: தியாகி இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு வழங்க உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் கோரி 45 
ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து நிவாரணம் கிடைக்காமல் இறந்த 96 வயது தியாகிக்கு உரிய ஓய்வூதியத்தை அவரது 73 வயது மனைவியிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் எம்.கணபதி(96). இவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1943-ல் பணியில் சேர்ந்தார். இவரை பிரிட்டீஷ் ராணுவம் கைது செய்து 1945 ஏப்ரல் முதல் 1946 ஜனவரி வரை சிறையில் அடைத்தது. இவருக்கு 1969 முதல் மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு 1972-ல் விண்ணப்பித்தார். அதன் மீது மத்திய அரசு கடந்த 45 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2011-ல் கணபதி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் கணபதி 2012 ஜூனில் இறந்ததால், உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் இவ்வழக்கை அவரது மனைவி வள்ளி(73) தொடர்ந்து நடத்தினார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை, ஞானகுருநாதன் வாதிட்டனர். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மாநில அரசு அங்கீகரித்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகியை, சுதந்திரப் போராட்டத்தின்போது அவரது மதிப்புமிக்க சேவையை கருத்தில் கொள்ளாமல், அவரது ஓய்வூதிய கோரிக்கையை கடந்த 45 ஆண்டுகளாக கவனிக்காமல் கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது. தன் கோரிக்கை என்ன ஆனது என தெரியாமலேயே அந்த ஆத்மா மறைந்துவிட்டது.

இதுபோன்ற வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தியாகி ஏ.பிச்சை தொடர்ந்த வழக்கில், ‘இன்றைக்கு நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என் றால் அதற்கு நமது நாட்டின் முன்னோர்கள்தான் காரணம். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தங்கள் ஓய்வூதியத்தை வழக்கின் மூலமாகவே பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தியாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு தனிப் பிரிவு தொடங்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.

தியாகி வி.ராஜய்யன் ராபின் தொடர்ந்த மற்றொரு வழக்கில், தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு அளிக்கும் மனுக்களை தொழில்நுட்பரீதியில் அதிகாரிகள் அணுகக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படையில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனது கணவருக்குரிய ஓய்வூதியத்தை வழங்கக் கோரி மனுதாரர் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை 8 வாரங்களில் அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்