யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/11/17

பென்ஷனுக்காக 45 ஆண்டு போராட்டம்: தியாகி இறந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு வழங்க உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியம் கோரி 45 
ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்து நிவாரணம் கிடைக்காமல் இறந்த 96 வயது தியாகிக்கு உரிய ஓய்வூதியத்தை அவரது 73 வயது மனைவியிடம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் எம்.கணபதி(96). இவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1943-ல் பணியில் சேர்ந்தார். இவரை பிரிட்டீஷ் ராணுவம் கைது செய்து 1945 ஏப்ரல் முதல் 1946 ஜனவரி வரை சிறையில் அடைத்தது. இவருக்கு 1969 முதல் மாநில அரசின் தியாகிகள் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான ஓய்வூதியம் கேட்டு 1972-ல் விண்ணப்பித்தார். அதன் மீது மத்திய அரசு கடந்த 45 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2011-ல் கணபதி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் கணபதி 2012 ஜூனில் இறந்ததால், உயர் நீதிமன்ற அனுமதியின் பேரில் இவ்வழக்கை அவரது மனைவி வள்ளி(73) தொடர்ந்து நடத்தினார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை, ஞானகுருநாதன் வாதிட்டனர். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மாநில அரசு அங்கீகரித்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகியை, சுதந்திரப் போராட்டத்தின்போது அவரது மதிப்புமிக்க சேவையை கருத்தில் கொள்ளாமல், அவரது ஓய்வூதிய கோரிக்கையை கடந்த 45 ஆண்டுகளாக கவனிக்காமல் கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது. தன் கோரிக்கை என்ன ஆனது என தெரியாமலேயே அந்த ஆத்மா மறைந்துவிட்டது.

இதுபோன்ற வழக்கில் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தியாகி ஏ.பிச்சை தொடர்ந்த வழக்கில், ‘இன்றைக்கு நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என் றால் அதற்கு நமது நாட்டின் முன்னோர்கள்தான் காரணம். ஆனால் சுதந்திரப் போராட்ட தியாகிகள் தங்கள் ஓய்வூதியத்தை வழக்கின் மூலமாகவே பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தியாகிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசு தனிப் பிரிவு தொடங்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.

தியாகி வி.ராஜய்யன் ராபின் தொடர்ந்த மற்றொரு வழக்கில், தியாகிகள் ஓய்வூதியம் கேட்டு அளிக்கும் மனுக்களை தொழில்நுட்பரீதியில் அதிகாரிகள் அணுகக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளின் அடிப்படையில் மனுதாரருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனது கணவருக்குரிய ஓய்வூதியத்தை வழங்கக் கோரி மனுதாரர் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும். அதை 8 வாரங்களில் அதிகாரிகள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக