யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/17

உங்க வங்கி கணக்கில் 10000 ரூபாய் இருக்க அப்ப நீங்க வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க தகுதியில்லை!!

ஒரு கோடி மதிப்புள்ள இடம் அரசுப்பள்ளிக்கு தானமாக வழங்கிய மாமனிதர்!!!

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

செல்போனில் சாதி பெயரைச் சொன்னாலும் சிறை!!!

பொது இடங்களில் செல்பேசியில் தாழ்த்தப்பட்டவர்க
ளை சாதி ரீதியில் திட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி,அலகாபாத் உயர் நீதிமன்றம் முதல் தகவலறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. அந்த நபர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே செலமேஸ்வர் மற்றும் எஸ் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான விவேக் விஷ்னோய் என்ற வழக்கறிஞர், சம்பவ நடந்தபோது புகார் அளித்த பெண்ணும், தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், செல்பேசி மூலமே பேசிக்கொண்டதாகவும் அதனால், அவர் மீது பதிவுசெய்யப்பட்ட முதல் தகவலறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதாடினார். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் மறுப்புத் தெரிவித்தனர். மேலும், சாதிரீதியாக மோசமான கருத்துகளை செல்பேசி மூலம் தெரிவித்தாலும் குற்றம் என்றும் என்று உத்தரவிட்டனர்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து, சாதி ரீதியாக விமர்சிப்பதும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆட்சேபமான கருத்துகளை பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் எச்சரிக்கை விடுத்தது நினைவுகூரத்தக்கது.

19/11/17

தமிழகம் முழுவதும் 36 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கணினி அறை அறிவியல் ஆய்வு கூட வசதி!!!

தமிழகம் முழுவதும் 36 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள்,
அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தற்போது, இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் 6 மாதத்திற்குள் இப்பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், கணினி அறை, அறிவியல் ஆய்வு கூடங்கள், நூலக அறை, கழிவறை 39 ேகாடி செலவில் கட்டப்படும் என்று சட்டசபை கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 பள்ளிகள், வேலூரில் 2, தர்மபுரி 1, திருவண்ணாமலை 3, விழுப்புரம் 4, சேலம் 1, கோவை 2, திண்டுக்கல் 1, திருச்சி 2, பெரம்பலூர் 1, கடலூர் 3, திருவாரூர் 4, தஞ்சாவூர் 1, புதுக்கோட்டை 5, மதுரை 1, தூத்துக்குடி 1, திருநெல்வேலி 1, கிருஷ்ணகிரி 1 உள்பட தமிழகம் முழுவதும் 36 பள்ளிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுமார் 39 கோடி செலவில் இப்பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

பொதுப்பணித்துறையின் மூலம் இதற்கான பணிகளுக்கு தற்போதுடெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இப் பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 15 கோடி செலவில் 137 கூடுதல் வகுப்பறைகள், 3 கோடி செலவில் அறிவியல் ஆய்வகம்,1.71 கோடி செலவில் கணினி அறை, 3.73 கோடி செலவில் கலை மற்றும் ஓவிய அறை, 5.34 கோடி செலவில் நூலக அறை கட்டப்படுகிறது.

 இந்த பணி முடிந்த பிறகு கணினி, ஆய்வக தளவாட பொருட்கள் வாங்கப்படுகிறது. இதற்காகவும், தனியாக டெண்டர் விடப்பட உள்ளது. 6 மாதத்திற்குள் முழுவதுமாக இப்பணிகளை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

NTSE Exam 2017 - Exam Instruction Regarding...



DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!!!

11 லட்சம் போலி வாக்காளர்கள்; தேர்தல் கமிஷன் நீக்க முடிவு!!!

                                              
தமிழகம் முழுவதும், 11 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர்களை, 
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது; ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 30 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஆண்டு தோறும், அக்டோபர் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடத்தப்பட்டு, ஜனவரி, 5ல், இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும்.

சிறப்பு முகாம்

அதன்படி, இந்தாண்டு அக்டோபரில், தமிழகம் முழுவதும், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி துவங்கியது. இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன; ஆன் - லைனிலும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.


0:00

இதன்படி, ஒரு மாதத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.60 லட்சம்; நீக்கக்கோரி, 1.58 லட்சம்; முகவரி மாற்றக் கோரி, ஒரு லட்சம்; திருத்தம் கோரி, 51 ஆயிரத்து, 84 என, மொத்தம், 7.69 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 30 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில், விண்ணப்பம் அளிக்கலாம். தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஆன் - லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில், 'சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள, 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில், மனு அளிக்கப்பட்டது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், 30 ஆயிரத்து, 495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.

விசாரணை:

தமிழகம் முழுவதும், ஒன்றுக்கும் மேற்பட்டஇடங்களில் உள்ள பெயர்கள், இடம் மாறிசென்றவர்கள், இறந்தவர்கள் என, 9.45 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அக்டோபரில், பெயர் நீக்கக் கோரி, 1.58 லட்சம் விண்ணப்பங்கள் பெறபட்டுள்ளன. இவற்றையும் சேர்ந்து, மொத்தம், 11.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.

இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறுகையில், ''11.03 லட்சம் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர். நீக்க வேண்டியவை என, உறுதி செய்து, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்,'' என்றார்.

2100 க்குள் சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம் !!!

அடுத்த வாரம் 2 புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகிறது... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

வி.ஏ.ஓ.க்கள் நூதன போராட்டம் அறிவிப்பு!!!

இலவச 'லேப் டாப் 'கள் பழையது மாணவர்கள் முற்றுகை!!!

முடிந்துபோன பணிக்கு டெண்டர் அதிகாரிகள் துணையோடு முறைகேடு!!!

தேசிய திறனாய்வு தேர்வு 1.59 லட்ச மாணவர்கள் எழுதுகின்றனர்!!!

மாணவர்களுக்கு ஸ்டேஷனில் பாடம்!!!

குரூப் 4 தேர்வு: இலவச பயிற்சி!!!

தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு SABL - LESSON PLAN எழுத தேவை இல்லை - DATE : 06/07/2015

1-4 வகுப்பு ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்து அரசாணைகள் உள்ளதா??? RTI பதில்

*அரசாணை அறிவோம் : 34 தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014

7வது ஊதிய கமிசனில் பாரபட்சம் ஊதிய நிர்ணய விருப்ப கடிதத்தை திரும்ப பெறும் இடைநிலை ஆசிரியர்கள்!!!