யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/2/18

சிறப்பு ரயில் பெட்டிகள், சிறப்பு ரயில்களை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்♨

சிறப்பு ரயில்பெட்டிகளையோ, சிறப்பு ரயில்களையோ இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
▪திருமணக் குழுக்களுக்கோ, ஆன்மீகச் சுற்றுலாவுக்கோ ஒரு குழுவினரோ தனி மனிதர்களோ ஒட்டுமொத்தமாக ஒரு ரயில்பெட்டியையோ அல்லது அமைப்புகள் சார்பில் சிறப்பு ரயில்களையோ பதிவு செய்ய ரயில் நிலைய முன்பதிவுக் கண்காணிப்பாளரை அணுகி பயணவிவரங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 15க்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி – அமைச்சர் செங்கோட்டையன்♨

மார்ச் 15ஆம் தேதிக்குள் 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணிணிகள் வழங்கி அனைத்து பாடங்களும் அதில் இணைக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
🎯நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மாணவர்கள் எந்தவிதமான தேர்வுகளையும் எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவித்தார்

டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??

Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.
கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். 
அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.
டிஎம்சி அளவிடும் முறை :
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.
டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.
கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள் :

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு  177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு :
தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிளஸ்2 படித்தவுடன் வேலை! : அமைச்சர் செங்கோட்டையன்!

புதிதாகத் தொடங்கப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (பிப்ரவரி 17) ஈரோடு மற்றும் திருப்பூரில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திருப்பூரில் உள்ள பள்ளியொன்றில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தை, அவர் இன்று திறந்துவைத்தார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கியதோடு, அப்பள்ளி நூலகத்திற்காக புத்தகங்களையும் அளித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன்,இன்னும் நான்கு மாதத்தில் தமிழகக் கல்வித்துறையில் மாற்றம் உண்டாகும் என்று தெரிவித்தார்.”உலகத் தரத்தில் தமிழகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளது.

 சீருடைகளும் மாறவுள்ளது. அதன்பின், தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளிகளில் தேடி வந்து சேரும் நிலை உண்டாகும்” என்றார்.இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது, பிப்ரவரி 19ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாடத்திட்டங்களினால், பிளஸ்2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலைமை உண்டாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் செய்து, புதிதாக 72 பாடத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார் செங்கோட்டையன்.

அரசுப்பள்ளியின் இன்றைய நிலை பற்றி ஒரு கவிதை - வினோதன்

நீர் குடிக்கப் பயமா ?
ஆம், குடித்தால்
சிறுநீரகத் தொட்டி
கொள்ளளவு எட்டியதும்
விடுதலை கேட்கும்
மூத்திரத்திற்கு
விடையென்ன சொல்வேன் ?



ஆணைப் போல
அவசரத்திற்கு
திறந்துவிடப்படமுடியாத
உடல் வாகைவிட
நின்று சீறுநீர் கழித்தால்
ஒருத்தியை சமூகம்
எப்படி எடைபோடும்
என நினைக்கும்போதே
அடைத்துக் கொள்கிறது
அத்தனை துவாரங்களும் !

கழிவறைகள் ?

நீங்கள்
அரசுப் பள்ளி
பெண்கள் கழிப்பறையை
கண்டிருக்க வாய்ப்பில்லை,
கண்டபின் இப்படிக் கேட்கவும் தான் !

ஒரு ஆணின் சிறுநீரகத்தைவிட
ஒரு பெண்ணின் சிறுநீரகத்தில்
ஒரு பேக்டீரியப் படையெடுப்பு
எத்தனை இலகுவானதும்
இரக்கமற்றதும் தெரியுமா ?

நீவிர் கண்டறிந்த
எந்த மருந்தையும்
மயிருக்கும் மதிக்காத
எத்தனை பேக்டீரியாக்கள்
ஜனித்திருக்கின்றன தெரியுமா ?

ஒரு முறை தொற்றினால்
வலியென்ற சொல்லின்
உச்சபட்ச அர்த்தத்தை
நொடிக்கொரு முறை
நினைவூட்டிக் கொல்லும்,
மீண்டுவரத் தயங்காமல் !

சரி தீர்வு ?

நுழையும் படியான
ஒரு கழிவறை ?!

அன்றி
சிறுநீர்த் தொட்டியின்
கொள்ளளவு கூட்டல்
சாத்யமில்லை என்பதால்
அருந்தப் பயந்து சாதல் !

நீரின்றி‌ அமையுமாம்
அரசுப்பள்ளி
மாணவியின் உலகம் !

- வினோதன்

இணைய வழி பத்திரப் பதிவுக்கு அமோக வரவேற்பு

தமிழக அரசின் இணைய வழி பத்திரப் பதிவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் (பிப்.13) இணைய வழி மூலம் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை வரை (பிப்.15), 24,819 பயனாளிகள் இணையத்தை பயன்படுத்தி உள்ளதுடன், 48,422 வரைவு ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். இதில், 13,557 ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சார் பதிவாளர்களுக்கு முன் சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டு, 11, 680 ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. 7,875 ஆவணங்கள் அச்சுப் பிரதி எடுக்கப்பட்டு பதிவு தாக்கல் செய்யப்பட்டன என்று பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தே வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யலாம்: ஜூன் மாதம் வருகிறது புதிய செயலி

புது தில்லி: வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
டிஜிட்டல் மயத்தை நோக்கி முன்னேறும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இணையதளம் மூலம் செயல்படும் வகையில் இந்த செயலியை உருவாக்கவும், இதன் மூலம் ஒரு வாக்காளர் மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றால் கூட தேர்தல் அலுவலகம் அல்லது வாக்கு மையத்துக்குச் செல்லாமலேயே தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
'எலக்டோரல் ரோல்ஸ் சர்வீசஸ் நெட்' (ERONET - Electoral Rolls Services NeT) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த செயலி மூலமாக எந்த நேரத்திலும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்ளலாம். இதுவரை 22 மாநிலங்கள் இந்த செயலியில் இணைக்கப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார்.
தேர்தல் நடைபெறும் அல்லது நடைபெற்று முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தில் இதுவரை இணைக்கப்படவில்லை.
அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த செயலியின் மூலம் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்ய, வாக்காளரின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதைப் பயன்படுத்தி திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

புதிய முகவரியை பதிவு செய்ததும், தானாகவே பழைய முகவரி அழிக்கப்பட்டு, புதிய முகவரி பதிவேற்றம் செய்யப்படும். இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

17/2/18

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாத அதாவது நேரடி சேர்க்கை மாணவர்களை இன்று முதல் EMIS ல் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யாத அதாவது நேரடி சேர்க்கை மாணவர்களை இன்று முதல் EMIS ல் சேர்க்கை செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பணியினை சிறப்பாக விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*EMIS பதிவேற்றம், புதிய சேர்க்கை மற்றும் ஆதார் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் இன்னும் ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

பிப்ரவரி 21 முதல் சென்னையில் ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் போஸ்டர் மற்றும் ஜாக்டோ ஜியோ வின் மனு

தேர்வுப்பணிகளுக்கான கையேடு-மார்ச்/ஏப்ரல் 2018-வழித்தட அலுவலர்களுக்கான கடமைகள்!!!

யாரையும் நம்பி கையேழுத்து போடாதீங்க-உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் சங்கம் கதறல்.(பத்திரிக்கைச் செய்தி)

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டம்-அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!!

விரைவில் 5ஜி நெட்வொர்க் சேவை!

5ஜி நெட்வொர்க் சேவைக்கான அரசின் செயல்திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள்
வெளியிடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

இதுபற்றி அசோசெம் கூட்டமைப்பு சார்பாக பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளரான அருணா சுந்தரராஜன், “இந்தியாவின் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பான அரசின் செயல் திட்டங்கள் ஜூன் மாதத்துக்குள் வெளியிடப்படும். சர்வதேச அளவில் 5ஜி சேவைக்கு இந்தியாவைத் தயார்படுத்தும் விதமாக அதிசிறந்த ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 5ஜி தொழில்நுட்ப சேவையை மக்களிடம் எடுத்துச் செல்வது, 5ஜி சேவைக்கான இலக்குகளை நிர்ணயிப்பது ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கும்.

இதன்மூலம், 2020ஆம்ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 5ஜி சேவை அமலாகும்போது இந்தியாவும் 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்கும். 5ஜி சேவையில் இயந்திர வழி தொலைத் தொடர்புக்காக புதிய எண் வரிசைகள் அறிமுகப்படுத்தப்படும். 5ஜி தொழில்நுட்பம் வாயிலாகக் கார்களில் சென்சார் உதவியுடன் விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றார். 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.500 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பட்டங்கள் தமிழக கல்வித்துறையில் ஊக்க ஊதிய உயர்விற்கு தகுதியற்றது . முதல்வர் தனிப்பிரிவில் பதில் !!!

ENTRANCE EXAMINATION -2018

RMSA PROCEEDING-தேர்வு பற்றிய மனஅழுத்தம்,பயம்,மனவெழுச்சிகளை களைதல் தொடர்பான RMSA மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்,



கோடை விடுப்பில் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி!!!

வரும் கல்வியாண்டில், புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால்,
அதனடிப்படையில்

பாடம் நடத்த, 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஏப்ரலில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம், ஏழு ஆண்டுகளாக அமலில் உள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 13 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டத்தில் தான் பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சியை உள்ளடக்கிய, புதிய பாடத்திட்டம் கொண்டு வர, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.அதன்படி, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, செயலர் உதயசந்திரன் தலைமையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. புதிய பாடத்திட்ட இறுதி அறிக்கைக்கு, முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், பாட புத்தகம் அச்சிடும் பணியை துவங்க, அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையில், புதிய பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே, கல்லுாரி பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும், என்.ஜி.ஓ,,க்கள் வழியாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அதற்காக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களை குறைத்து, ஏப்ரலில் புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஒவ்வொரு பாடத்திலும், 10 ஆயிரம் ஆசிரியர்களை தேர்வு செய்து, பயிற்சி தரப்பட உள்ளது.

அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது – உயர்நீதிமன்றத்தில் TRB விளக்கம்

அரசுபோட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான வழக்கில் தவறான முறையில் மதிப்பெண்களை பெறுபவர்கள் தகுதியுடையவர்களின் இடங்களை பறித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வுகளை முறைப்படுத்தி முறைகேடுகளை தடுக்கக் கோரப்பட்டிருந்தது.

தொடர்புடையவர்கள் மீது விசாரணைக்குழு அமைக்கவோ, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அரசு போட்டித்தேர்வு நடைமுறைகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என டி.ஆர்.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டி.ஆர்.பி. அலுவலகத்திற்குள் நுழைவது பயோமெட்ரிக் முறையில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மார்ச் 9-க்கு விசாரணையை ஒத்திவைத்தனர்

வேலைவாய்ப்பு: மின்சார வாரியத்தில் பணி!

                                         

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பொறியாளர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 325

பணியின் தன்மை: உதவி பொறியாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,100 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100

தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கடைசி தேதி: 28.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

90,000 பணிகளுக்கு ஆட்கள் தேர்வு-உலகில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!!