யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/2/18

வேதாரண்யத்தில் வரும் 26ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

வேதாரண்யம் தாலுகாவில் வரும் 26ம் தேதி
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேதாரண்யம் கோவிலில் வரும் 26ம் தேதி தேரோட்ட விழா நடைபெறுவதையொட்டி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

அரசு வேலை வேண்டுமா??

TNPSC & TET தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை 
கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று  உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.


   1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

      ஆனால், எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

     இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.   
    இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.

      இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.

மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல்  புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.

3.நடப்பு நிகழ்வுகள்.
    இதில் விளையாட்டு, மத்திய  மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.

4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)

இம்முறையில் படித்தாலே RRB  தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.

பதினோறாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தாலும் கவலை வேண்டாம்-அமைச்சர் செங்கோட்டையன்

இன்று சென்னையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 
கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயம்கொள்ள வேண்டாம் தேர்வில் தோல்வியடைந்தாலும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத வழியுள்ளது என தெரிவித்தார்.

நீட் தேர்வு மனு தள்ளுபடி..!

நீட் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான 
கட்டுப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வயது கட்டுப்பாட்டை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதமுடியாது என்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடியானது.

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்கை

தடுப்பூசிகள் போடப்பட்டிருந்தால் மட்டுமே 
பள்ளிகளில் குழந்தையைச் சேர்க்க அனுமதிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போலியோ, அம்மை, காசநோய் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது எனவும் கூறினார்.

DGE-+1 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு -2018 தேர்வு கூட அனுமதி சீட்டுகள் பதிவிறக்கம் செய்திட தலைமையாசிரியர்களை அறிவுறுத்தக் கோருதல்!!!

22/2/18

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149 கோடியில் கட்டடங்கள் திறப்பு!!!

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.149.58 கோடி மதிப்பிலான கட்டடங்களை முதல்வர்
எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலிக் காட்சி மூலம் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் திருவாரூர் வலங்கைமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி நாகப்பட்டினம், நாமக்கல், திருவள்ளூர், திருவாரூர், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.46.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், கழிவறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்துக்கான கூடுதல் கட்டடம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், திருப்பூர், திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 58 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.97.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என மொத்தம் ரூ.149.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!!!

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான 
கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்குக் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து ஜனவரி 23ஆம் தேதி அன்று சிஐடியு மற்றும் பிஎம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டன. இதனையடுத்து ஜனவரி 22ஆம் தேதியன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர்நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்ட இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து சிஐடியு உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 16ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதனால், பெரிதளவில் அரசுப்பணிகள் பாதிக்கப்படவில்லை என்றாலும் கோரிக்கைகள் வலுத்துக்கொண்டே சென்றது. இந்த நிலையில், தற்போது 2.57 காரணி ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 22ஆம் தேதி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை கட்!!!

தோட்டக்கலை பதவிக்கான TNPSC தேர்வு ரத்து!!!

பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது!!!

வெளியானது குரூப்2 நேர்காணல் தேர்வு இறுதி முடிவு!!!

10,+2.வகுப்பில் கேள்விகள் குறைப்பு!!!

அரசின் பணியிடங்களை தனியாருக்கு விட முடிவு-ஊழியர்கள் கடும் அதிர்ச்சி!!!

அண்ணா பல்கலை"யில் பட்டதாரிகளுக்கு வேலை!!!

Power Gridல் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை!!!

RTE சட்டப்படி ஆண்டு முழுவதும் BLO election duty செய்ய வழிவகை உள்ளதா?

கள ஆய்வில் ஈடுபடும் பெண் ஆசிரியர்கள் தங்கள் பணி
முடித்து செல்ல இரவு ஆகிவிடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிறது.*

*✍BLO பணி , ஆசிரியர் பணி , வீட்டில் உள்ள பணிகள் இம்மூன்றும் ஒரு சேர இணைந்து ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை கொடுத்து அடுத்த நாள் பள்ளியில் நடத்தப்பட வேண்டிய பாடங்கள் திட்டமிடுதல் பணி பாதிக்கப்படுவதுடன்...*

*✍கற்றல் இருந்தால் கற்பித்தல் பணி சிறக்கும் என்பார்கள் ..*....

*✍இங்கு திட்டமிடவே நேரம் இல்லை என்கிற பொழுது ஆசிரியர்களுக்கு புதிய வகைகளை கற்க ஏது நேரம்....*

*✍13 வகை பணியாளர்கள் BLO பணிக்கு உட்படுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை தந்துள்ளது....*

1. சத்துணவு அமைப்பாளர்
2. தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள்
3. கிராம நிர்வாக அலுவலர்
4. ஊராட்சி செயலாளர்
5. மின் கணக்கீடு செய்பவர்
6 அஞ்சலக ஊழியர்
7. துணை செவிலியர் & பேறு கால உதவியாளர்
8. சுகாதார பணியாளர்கள்
9. மதிய உணவு பணியாளர்
10. மாநாகராட்சி தண்டர்
11. கிராம பணியாளர்கள்
12. மேல்நிலை/ கீழ்நிலை எழுத்தர்
13. ஆசிரியர்கள்

*✍ஆனால் மேற்கண்ட பட்டியலில் ஆசிரியர்களை மட்டுமே இந்த மாவட்டத்தில் பயன்படுத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம்..*..

*✍தென் மாவட்டங்கள் முழுவதும் கல்வி நலன் பாதிக்கப்படாதவாறு....அம்மாவட்டங்களில் ஆசிரியர்களை தவிர்த்து ஏனையினோர்க்கு இப்பணியினை வழங்கி , அம்மாவட்டங்களின் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை காத்துள்ளனர்...*..

வன அதிகாரி பணிக்கு UPSC தேர்வு அறிவிப்பு!!!

24 ல் TNPSC தேர்வு-ஏற்பாடுகள் தீவிரம்!!!

அரசு உதவித் தொகை மீண்டும் தபால்துறை மூலம் வழங்க நடவடிக்கை!!!