யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/18

விண்வெளியில் இந்திய வீரர்கள் நடத்தப்போகும் 10 சோதனைகள்; இஸ்ரோ அதிரடி!

பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மனிதரை விண்வெளிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவித்த 90 நாட்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), குறைந்த பூமி கோளப்பாதையில் (LEO) இந்திய விண்வெளி வீரர்களை கொண்டு நடத்தப் போகும் ஆய்வுகளின் சுருக்கமான பட்டியலை வெளியிட்டு உள்ளது.

உயிரியல் காற்று வடிகட்டிகள் மற்றும் பயோ சென்சர்கள், மற்றும் உயிர் ஆதரவு மற்றும் உயிரியல் கழிவு மேலாண்மை ஆகியவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களை கண்காணிப்பதற்கான மைக்ரோ-உயிரியல் பரிசோதனைகளுக்கான மருத்துவ உபகரணங்களை பரிசோதனை என குறைந்தபட்சம் 10 பரிசோதனைகளையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.



10 என்றால் 10 பகுதிகளில் மட்டும்மல்ல, இன்னும் நீளும்!

நாங்கள் ஆர்வமாக உள்ள 10 பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளோம், அதற்காக இந்த பகுதிகளில் மட்டும் தான் சோதனைகளை செய்வோம் என்று அர்த்தமில்லை" என்று ஒரு ஐஎஸ்ஓ அதிகாரி கூறியுள்ளார். "மேலும், இந்த பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் நடக்கும் குறிப்பிட்ட சோதனைகளுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து உதவிகளை பெறுவோம்," என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

உள்ளீடுகள் தேவைப்படுகிறது!

சமீபத்தில், குறைந்த பூமி கோளப்பாதை (லியோ) அடிப்படையிலான மைக்ரோ-ஈர்ப்பு சோதனைகளுக்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டதும், "இஸ்ரோ ஒரு மனித விண்வெளித் திட்டத்தைத் திட்டமிடுவதுதால், குறைந்த பூமி கோளப்பாதையில் உள்ள நுண்ணிய ஈர்ப்பு மண்டலத்தில் சோதனைகளை நடத்த, தேசிய அறிவியல் சங்கத்திலிருந்து உள்ளீடுகள் தேவைப்படுகிறது," என்று இஸ்ரோ கூறி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம்!

குறைந்த பூமி கோளப்பாதையின் மைக்ரோ ஈர்ப்பு தளங்களில் நிகழ்த்தப்பட உள்ள குறிப்பிட்ட சோதனைகள் ஆனது சாத்தியமான குறுகிய காலத்திற்கான - ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் - செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அல்லது, விஞ்ஞானிகள் நுண்ணிய ஈர்ப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அல்லது தேவைப்படும் ஒரு முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம் என்றும் அறிவித்துள்ளது.

பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்!

மேலும், சோதனைக்காக முன்மொழியப்பட்ட சுற்றுப்பாதையானது பூமிக்கு சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள பூமியின் எல்லைக் கோளப்பாதை ஆகும் என்றும், சோதனைகள் நடத்தப்படும் உறைவிடம் ஆனது, சாதாரண அறை வெப்பநிலை (தற்காலிகமாக 0-4 டிகிரி செல்சியஸ்) மற்றும் அழுத்தம் நிலைகளை (தற்செயலாக கடல் மட்டத்தில் ஒரு வளிமண்டல அழுத்தத்தை சுற்றிய) கொண்டிருக்கும், அதாவது பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

பயணம் தொடங்கும் போதும், திரும்பும் போதும்!

இருப்பினும், உறைவிடத்திற்கு வெளியே வைக்கப்பட வேண்டிய பேலோடுகள் ஆனது இயல்பான விண்வெளி சூழலுக்கு உட்பட்டிருக்கும். அதாவது - வெப்பம், வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதால், சோதனைகளுக்காக வடிவமைக்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆனது தொடக்கம் மற்றும் திரும்பும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் ஒலியியல் சுமைகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

தேவைப்பட்டால் தரையில் இருந்து கட்டளைகள்!

இந்த சோதனைகளுக்காக இஸ்ரோ இரண்டு விதமான பேலோடுகள் / கருவிகளை - உள் மற்றும் வெளிப் -த் திட்டமிடுகிறது. இதன் வழியாக தொலைதூர சோதனைகளை நடத்துவதற்கான விருப்பமும் கிடைக்கும். தேவைப்பட்டால் அவர்கள் தரையில் இருந்து கூட கட்டளைளை நிகழ்த்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் செலவு மதிப்பீடு என்ன?

இதற்காக உருவாக்கம் பெறும் மனித விண்வெளி வானூர்தி திட்டம் ஆனது, சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு இஸ்ரோ ஆய்வகங்களில், பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் துணை அமைப்புகள் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயுட்காப்பு மற்றும் மனித-மதிப்பீட்டு முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகளிலும் வேலைகள் நடைபெறுகின்றன. இதற்கான ராக்கெட் (லான்ச் வெயிக்கில்) சார்ந்த பணிகள் அடுத்த சில மாதங்களில் பிரதான கவனத்தினை பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்

ஆன்லைனில்' ஆசிரியர் பயிற்சி: 'கூல்' எனப்படும் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டம் அறிமுகம் :

ஆசிரியர் பயிற்சியை, 'ஆன் லைன்' எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், 'கூல்' என பெயரிடப்பட்டு உள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், 'டிஜிட்டல்' மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதற்கான திட்டங்களை, 'கைட்' எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, கூல்
எனப்படும், ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி பெறுவோர், 45 மணி நேர கம்ப்யூட்டர் பயிற்சியை பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந் நிலை யில், கூல் எனப்படும் ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய உள் ளோம். இந்த பயிற்சியில், ஆசிரியர்கள், மாணவர் கள், பொதுமக்களும் பங்கேற்கலாம். முதல்கட்ட மாக, ஆசிரியர்களுக் கான பயிற்சி வகுப்புகள், அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேருவதற்கு, 5,000ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.முதல்கட்டமாக, 2,500 பேருக்கு, ஆறு வார பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், அடிப்படை கம்ப்யூட்டர் பயன்பாடு, படங்களை திருத்துவது, வீடியோவை திருத்துவது, மலையாளத்தில், 'டைப் பிங்' செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது,

கல்வியியல் தொடர்பான இணைய பக்கங் களை எப்படி பயன்படுத்துவது போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியை மேற்கொள் வோருக்கு, சான்றிதழ் அளிக்கப்படும். அடுத்த கட்டமாக, மாணவர் கள், பொதுமக்களுக்கான பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு: பாடத் திட்டம் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் :

பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனேயே வேலைவாய்ப்புப் பெறக்கூடிய வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்குந்தர் கல்விக் கழகத்தின் பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்விக் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல் தலைமை வகித்தார். கல்விக் கழகச் செயலாளர் எஸ்.சிவானந்தன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நினைவு வளைவைத் திறந்து வைத்துப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல வரும் கல்வி ஆண்டு முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களை மிஞ்சும் அளவில் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 4 சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் சரியாக கற்க முடியவில்லை எனில் யூடியூப் மூலமாக மீண்டும் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஆன்லைன் மூலமாக 26 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 413 தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 3 மாதங்கள்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 8 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1,000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் 1.60 லட்சம் பேர் பொறியியல் படித்தவர்களும், அகில இந்திய அளவில் பல லட்சம் பேரும் வேலைஇன்றி உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில் 12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை கிடைக்கும் எனும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தமிழக அரசு பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கவுள்ளது என்றார்.
தொடர்ந்து, பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசு வழங்கிப் பேசினார்.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர்களின் உருவப் படங்களைத் திறந்துவைத்தார்.
இதையடுத்து, பவள விழா மலரை அமைச்சர்கள் வெளியிட்டனர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன், சூர்யா கல்லூரித் தலைவர் ஆண்டவர் ராமசாமி, மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கே.சி.பழனிசாமி, மனோகரன், ஜெகதீஷ், கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என்.மோகன்ராஜ் நன்றி கூறினார்
எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம், அரசுக்கு இல்லை. அதேநேரம், சில பள்ளிகளில் ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள் உள்ளனர். அதுபோன்ற பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்கள் சம்பளம், பிற பணியாளர்கள், பராமரிப்பு செலவு, மாணவர்களுக்கான செலவை பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.அதுபோன்ற பள்ளிகளில், கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசை குறை கூறி வரும் அமைப்புகள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி பவள விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயில, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், வருமாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கான வகுப்புகள் கூடுதலாக்கப்படும். மாநில அளவில் ஆண்டுக்கு, 1.60 லட்சம் இளைஞர்களும், தேசிய அளவில், 80 லட்சம் இளைஞர்கள் வரை, பி.இ., படித்துவிட்டு, உரிய வேலை கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். அதுபோன்ற நிலையை, தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் மாற்றும்.நடப்பாண்டு, எட்டு வாரங்களுக்கு மேல், 'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படும். தற்போது, அதற்கான பயிற்சி துவங்கி விட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான, 3,744 இடங்களில், 1,000க்கும் மேற்பட்ட இடங்களை, அரசு பள்ளி மாணவர்கள் கைப்பற்றுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.

புயலால் சேதமடைந்த பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்: கே.ஏ. செங்கோட்டையன் :

கஜா புயலால் சேதமடைந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு  பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் பள்ளி விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசைப் பொருத்தவரை எந்தப் பள்ளியையும்  மூடும் எண்ணம் இல்லை.
அதே நேரத்தில் பள்ளிகளில் 2, 3 மாணவர்கள் இருந்தால் அதன் நிலை என்ன என்பதை அரசு ஊழியர் சங்கங்கள்தான் எங்களுக்குக் கூற வேண்டும்.  ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு செலவு ஆகிறது, அங்குள்ள பல்வேறு பணியாளர்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது, 2 மாணவர்கள் படித்தால் ஓர் ஆண்டுக்கு ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு என்பதை அவர்கள்தான் கூறவேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் ஏழை, எளிய குழந்தைகளை அழைத்து வந்து படிக்க வைக்க வேண்டும். அதற்கான ஆக்கத்தையும், ஊக்கத்தையும் செய்ய இந்தச் சங்கங்கள் முன்வர வேண்டும்.
கஜா  புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பணிக்காக தஞ்சை மாவட்டத்துக்கு என்னை முதல்வர் நியமித்துள்ளார். அங்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் எவ்வளவு பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்திருந்தாலும் அதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
சேத விவரங்கள் எவ்வளவு  என்பதை  நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர்தான் கூற முடியும் என்றார்

நீட்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம் :

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ - மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் கல்வி நிறுவனங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சிறப்பு பயிற்சி வழங்குகிறது. அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள, நீட் தேர்வுக்கு, நவ., 1ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், கடைசி நேர பிரச்னைகளை தவிர்க்க, பதிவுகளை விரைந்து முடிக்குமாறு, மாணவர்களை தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியுள்ளது

கஜா'வால் பாதித்த பள்ளிகள்: சீரமைக்க சிறப்பு குழுக்கள் :

கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, பள்ளி கல்வி கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தாக்கிய, கஜா புயல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், நாகை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.தனியார் நிறுவனங்கள், வீடுகள் மட்டுமின்றி, மின் கட்டமைப்புகள், சாலைகள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில், பள்ளி, கல்லுாரி களில், உள் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.பல இடங்களில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஜன்னல்கள், மேற்கூரைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் மாணவர் விடுதிகளும், கழிவறைகளும் இடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்த சேதங்களை விரைவில் சரி செய்து, மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுள்ள, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை சீரமைக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துஉள்ளது.'ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பாக, தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டங்களுக்கு பலன் இல்லாததால், நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. ஆனால், சங்க நிர்வாகிகள் இடையே, கருத்து ஒற்றுமை ஏற்படாததால், போராட்ட தேதி மாற்றப்பட்டது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நவ., 16ல் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், நவ., 27க்கு பதில், டிச., 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதற்காக, மாநில அளவில், 20 ஒருங்கிணைப்பாளர்கள் இடம் பெறும் குழுவும், மாவட்ட வாரியாக, ஆறு பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட உள்ளது. இன்றும், நாளையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது; 25ல், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது.வரும், 26 முதல், 30ம் தேதி வரை, மாவட்ட அளவில் போராட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பின், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக, ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.

19/11/18

இடைநிற்றலை தவிர்க்க பங்களிப்பு திட்டம்; மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்' தயாரிக்க ஏற்பாடு!

விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை குறைக்க 100 அரசு பள்ளிகளில் மாணவர் பங்களிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்கவும், கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒரு பாடத்திற்கு 5 பேர் என தனி குழு அமைக்க வேண்டும். இம்மாணவர் குழுவினர் ஏதாவது ஒரு தலைப்பில் 'பிராஜெக்ட்' உருவாக்க வேண்டும்.


உதாரணத்திற்கு கணிதம் பாடத்தில் 'அல்ஜிப்ரா' கடினமாக இருக்கும். அவற்றை எளிதாக விடைகாணும் வகையில் பிராஜெக்ட் தயார் செய்திடலாம்.


இது தவிர சமூகம், குடும்பம், வீடு, உணவு போன்ற ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல மற்றும் தீய அம்சங்களை அதில் விவரிக்க வேண்டும்.


பிராஜெக்ட் வழிகாட்டுதலுக்கு பள்ளிவாரியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுக்கள் டிசம்பருக்குள் பள்ளி அளவில் பிராஜெக்ட் வழங்கி, ஜனவரியில் கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.


பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் சிறந்த பிராஜெக்ட்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை அமல்படுத்தவும் அரசு நடைமுறைப்படுத்தும்.

இதுபோன்றவற்றில் மாணவர்கள் ஈடுபாடு அதிகரித்தால் இடைநிற்றல் குறைந்து சமூகத்திற்கு பயனுள்ள வரைவு திட்டம் கிடைக்கும்,' என்கின்றார்.

*எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உதவி இயக்குனர் விசாரணை!*


மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவதற்கான தேவைகள் குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் (திட்டம்) சபிதா விசாரணை நடத்தினார்.


இங்கு 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


இதற்காக மாணவர்கள் விடுதி, வகுப்பறைகளுடன் கூடிய ஆடிட்டோரியம், நவீன நுாலகம் கட்டுமான பணிகள் படிப்படியாக நடக்க உள்ளது.


மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப பேராசிரியர் பணியிடமும் நிரப்ப வேண்டும். இதற்கான பணிகள் எந்தளவிற்கு நடக்கிறது என்பது குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் சபிதா விசாரணை நடத்தினார்.


மருத்துவமனையில் ஜப்பான் நிதி 320 கோடி ரூபாயில் ஆப்பரேஷன் தியேட்டர் உட்பட 4 மாடி கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும் விசாரித்தார்.

TNPSC - குரூப் 2 தேர்வு: உத்தேச விடைகளை மறுத்து 900 பேர் இணையத்தில் மனு: வரும் 20 வரை அவகாசம்

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மறுத்து சுமார் 900 பேர் இணையதளத்தில் மனு செய்துள்ளனர். மேலும், இதற்கான கால அவகாசம் வரும் 20-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.


தமிழகத்தில் குரூப் 2 தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாள்களுக்குள்
வினாத்தாள்களுக்கான உத்தேச விடைகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. ஒவ்வொரு முறையும் உத்தேச விடைகளை மறுக்கும் வாய்ப்பானது அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகவே வழங்கப்படும்.
அதாவது, உத்தேச விடைகளை மறுப்பதற்கான ஆதாரங்களை அஞ்சல், மின்னஞ்சல் போன்றவற்றின் வழியாக அனுப்பி அவை பரிசீலிக்கப்பட்டு சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த நடைமுறைக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக அவகாசம் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையாக இணையதளத்திலேயே பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுவரை எத்தனை பேர்: தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக இணையதள வசதியை (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ற்ங்ஸ்ரீட்) டி.என்.பி.எஸ்.சி. உருவாக்கியுள்ளது. இந்த இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். (பெயர், பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வுப் பாடத்தின் பெயர், வினா எண்). இத்துடன், தேர்வர்கள் குறிப்பிடும் விடையையும், அதற்கான ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதாரமாகக் குறிப்பிடும் புத்தகத்தின் தலைப்பு, புத்தக ஆசிரியரின் பெயர், பதிப்பாளர் பெயர், புத்தகப் பதிப்பின் ஆண்டு, பதிப்பு எண், பக்க எண் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.

கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியைப் பயன்படுத்தி இதுவரை 900 பேர் வரை உத்தேச விடைகளை மறுத்து செய்துள்ளனர். உத்தேச விடைகளை மறுப்பதற்கான வாய்ப்புக்கு வரும் 20-ஆம் தேதி கடைசி என டி.என்.பி.எஸ்.சி., ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வினை 6 லட்சம் பேர் எழுதினர். அவர்களில் இதுவரை 900 பேர் மட்டுமே உத்தேச விடைகளை மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில் மேலும் சிலர் உத்தேச விடைகளை மறுத்து ஆதாரங்களுடன் மனு செய்வார்கள் எனத் தெரிகிறது.

நாகையை அச்சுறுத்தும் மற்றொரு புயல்

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.


எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.


கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.


எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.


கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

6 நோய்களை குணப்படுத்த தினமும் இந்த காய்களை சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்

நம்முடைய வாழ்க்கையில் நவீன வசதிகள் பெருக பெருக உடல் நலத்தை இழந்துவருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.


இந்தத் தலைமுறையினர் தான் முப்பது வயதிலிருந்து நாற்பது வயதிற்குள் பலவிதமான நோய்களால் தாக்கப்படுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் சரியான உடல் உழைப்பு இல்லாததும், சத்துள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாகும்.

முருங்கைக்காய்- ஆஸ்துமா

முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது.எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோய்கள் குணமடைகின்றன.

முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.



எலுமிச்சை- தைராய்டு பிரச்னைகள்

எலுமிச்சைப் பழத்தில் நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய ஆரோக்கியமான சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.
எலுமிச்சைப் பழத்தில் கால்சியம், பொட்டாசியம், விட்டமின் C, நார்ச்சத்து, சிட்ரிக் அமிலம் போன்ற சத்துக்கள் அதிகமாகக் காணப்படுகிறது.

தைராய்டு பிரச்னைகள் வராமல் தடுக்க எலுமிச்சை பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.



வெண்டைக்காய்- இரத்த அழுத்தம்

காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காய் மனிதனுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

வெண்டைக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் மிக அதிக அளவில் போலிக் அமிலமும் உள்ளது. வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் அது ரத்த அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க உதவும்.



புடலங்காய்- தூக்கமின்மை

புடலங்காயில் விட்டமின்கள் A, B, C, மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின், நார்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது.

சிலருக்கு படுத்தவுடன் உறக்கம் வராது. அல்லது ஆழ்ந்த தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள். உணவில் புடலங்காய் சேர்த்து சாப்பிட்டுவந்தால் இத்தகைய உறக்கமின்மை பிரச்னை தீரும். .

சர்க்கரை, இதய நோய்கள், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.



கோவக்காய்- உடல்பருமன்

கோவக்காய் தவிர அதன் இலைகள், பழங்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. கோவக்காய் இலையின் சாறு மார்பு சளியை கரைக்கும் தன்மை கொண்டது. இருமலை குறைக்கும். வயிற்று புண், மூட்டு வலியை குணப்படுத்தும்.

உடம்பில் சேரும் அதிகப்படியான கொழுப்பை கரைக்கவல்லது கோவைக்காய். கோவைக்காயில் இயற்கையாகவே கொழுப்பை வெளியேற்றும் தன்மை இருப்பதால், வளர்சிதை மாற்றத்தால் உண்டாகும் உடல்பருமன் போன்ற பிரச்சனை நீங்கும்.



பீர்க்கங்காய்- சர்க்கரை வியாதி

பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாகற்காய்க்கு பதிலாக பீர்க்கங்காயை சாப்பிடலாம். பீர்க்கங்காய் இலையிலிருந்து சாறு எடுத்து அதனை சூடாக்கி தினமும் ஒரு டீஸ்பூன் அருந்தி வர சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.

UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி

UPSC- TNPSC போட்டி தேர்வுகளுக்கு, 'டிவி' வழி இலவச பயிற்சி :
சென்னை மாநகர முன்னாள் மேயர், சைதை துரைசாமி நடத்தி வரும், மனித நேயம் அறக்கட்டளை சார்பில், இந்திய அளவில் முதல் முறையாக, அனைவரும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 'டிவி' வழியே, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இது குறித்து, சைதை துரைசாமி விடுத்துள்ள அறிக்கை: பொருளாதாரம் மற்றும் சமுதாய நிலையில், பின்தங்கிய மாணவர்களை, அரசு உயர் பதவிகளில், அதிக அளவில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 13 ஆண்டுகளாக, மனிதநேய இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரை, யு.பி.எஸ்.சி., -- டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதிகள் தேர்வுகளில், 3,226 பேர்; வங்கி தேர்வு, ரயில்வே, காவல் துறை பணி, குரூப் - 4 தேர்வு உள்ளிட்ட, பல்வேறு பணிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெறறுள்ளனர்.

தற்போது, கிராமப்புற மாணவர்களிடமும், போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு

ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்கள், சென்னை வந்து தங்கி பயிற்சி பெற, குறைந்தபட்சம், 2.50 லட்சம் ரூபாய் செலவாகிறது. அப்படி செலவு செய்தாலும், அனைவராலும் முதல் முயற்சியில் வெற்றி பெற முடிவதில்லை.

முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர்

எண்ணிக்கை, 10 பேரை கூட தாண்டுவதில்லை.
எனினும், ஆண்டுதோறும் படிக்க விரும்புவோர் எண்ணிக்கை, அதிகரித்துக் கொண்டே வருகிறது. அனைவருக்கும் இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சி, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து தருவது, மனிதநேய மையத்திற்கு, இயலாத காரியமாகி

விடுகிறது.

எனவே, அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தேர்வுக்கு தயாராகும் வகையில், இலவச பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மார்ச் முதல், 'டிவி' வழியே, இலவசமாக போட்டித் தேர்வுக்கு, பயிற்சி அளிக்க உள்ளோம்.

மாணவர்கள், வேலையில் உள்ளவர்கள் என, அனைத்து தரப்பினரும், வீட்டிலிருந்தபடியே பயிற்சிக்கு தயாராகலாம். இவ்வாறு பயிற்சி பெறுவோருக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இதில் வெற்றி பெறுவோர், போட்டித் தேர்வுக்கு தயாராக, தங்குமிடம், பயிற்சி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

இது குறித்த முழு விபரங்களைப் பெற, மனிதநேய அறக்கட்டளையின், mntfreeias.com என்ற, இணையதளத்தை பார்வையிடவும். மேலும் விபரங்களுக்கு, 044 - 24330095 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளவும்.

'டிவி' வழியே நடத்தப்பட உள்ள, பயிற்சிகளை பெற இயலாத நிலையில், கிராமங்கள் அல்லது மாணவ- - மாணவியர் இருந்தால், அவர்களுக்கு உதவ விரும்பும், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனிதநேய அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு, உதவிகளைப் பெறலாம்.

இது தொடர்பாக, ஆலோசனை கூற விரும்புவோர், தங்கள் ஆலோசனைகளை, manidhanaeyamgmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு, அவர்
கூறியுள்ளார்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது :பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாததால் குழந்தைகளின் கல்வி குறைகிறது':சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வரமுடியும்,'' என, அமைச்சர் கருப்பணன் பேசினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில், நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: அரசு பள்ளிகளில், ஒரே ஒரு குறை உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். இன்று ஆசிரியர்களின் ஒத்துழைப்பு நன்றாக உள்ளது. பெற்றோரின் ஒத்துழைப்பு இருந்தால், குழந்தைகள் எதிர்காலத்தில் நன்றாக வரமுடியும். குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும், பெற்றோர் சரி என ஏற்றுக்கொள்கின்றனர். இதுதான் அவர்கள் செய்யும் முதல் தவறாக உள்ளது. பெற்றோர் குழந்தைகளுக்கு செல்லம் கொடுக்கின்றனர். தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், என்ன நடவடிக்கை வேண்டுமானலும் எடுங்கள் என மாதம் ஒரு முறை ஆசிரியரை, பெற்றோர் சந்தித்து முறையிட வேண்டும். அப்படி செய்தால், ஆசிரியர்கள், குழந்தைகளை நன்றாக பயில செய்வர். வேண்டும் என்றே ஆசிரியர்கள் எவரும் குழந்தைகளை கண்டிப்பதில்லை.பெற்றோர் ஒத்துழைப்பு குறைவதால் தான், குழந்தைகளின் படிப்பு குறைகிறது. இவ்வாறு அவர் பேசினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, முறைகேட்டில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வாங்கிய, கல்வித்துறையினர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பொதுத்தேர்வு முடிவுகளில் மாநிலத்தில், முதல், 10 இடங்களுக்குள் வேலூர் மாவட்டம் இடம்பெற, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரு சில பள்ளிகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, காலாண்டு தேர்வு, மாதாந்திர தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அரக்கோணம் அடுத்த, திருமால்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களின், தமிழ் விடைத்தாள், இரண்டு விதமான பேனாக்களால் எழுதப்பட்டிருந்தன. மேலும், 20 மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றதால், வேறு மாணவர்களைக் கொண்டு, சரியான விடை எழுத வைத்து, கூடுதல் மதிப்பெண் வழங்கியது, தெரியவந்தது. இதேபோல், மாவட்டம் முழுவதும், 120 அரசு பள்ளிகளில் நடந்துள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களை அழைத்து, இதுபோல செய்யமாட்டோம் என, எழுத்து மூலமாக உறுதி பெற்று, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Flash News : இடைநிலை ஆசிரியர்கள் தனியாக மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு


FLASH NEWS: கனமழை - நாளை 6 + 1 மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும்

                                        Image result for gaja
நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  விடுமுறை
மயிலாடுதுறை கோட்டத்தில் நிலைமைகேற்ப தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம்
தஞ்சை  மாவட்டம்  (பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு) பள்ளி கல்லூரி  விடுமுறை
திருவாரூர் மாவட்டம்  பள்ளி   விடுமுறை - ஆசிரியர்கள் கண்டிப்பாக  பள்ளிக்கு வரவேண்டும் - ஆட்சியர் 
திண்டுக்கல்  - கொடைக்கானல் வட்டத்தில்  பள்ளி   விடுமுறை
புதுச்சேரி மாவட்டம்  பள்ளி   விடுமுறை

16/11/18

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்!

பள்ளிக்கல்வி துறை சார்பில் குழந்தைகள் தினவிழா மற்றும் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டி.ஜெகநாதன், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் எஸ்.ஜெயந்தி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ச.கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார்கள்.

அதேபோல், திருச்செந்தூர் நூலகத்தின் நூலகர் மாதவன் உள்பட 33 பேருக்கு சிறந்த நூலகர் விருதும், நூலக விழிப்புணர்வை ஏற்படுத்திய 31 மாவட்ட வாசகர் வட்ட தலைவர்களுக்கு நூலக ஆர்வலர் விருதும், மாநில அளவில் அதிக உறுப்பினர்கள், அதிக புரவலர்கள் மற்றும் அதிக நன்கொடைகள் பெற்ற 12 நூலகங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் ஒப்புதலோடு அடுத்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 2 வெவ்வேறு விதமான பள்ளி சீருடைகளை அறிமுகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தலா 4 சீருடைகள் வழங்கப்படும். வருகிற டிசம்பர் மாத இறுதியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்படும்.

அதேபோல், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு திட்டங்களையும் நிறைவேற்றும்போது வழக்கு போடுகிறார்கள். அது முடிய 6 மாத காலம் ஆகிவிடுகிறது. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வகுப்பு அறைகளும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி கொடுக்கப்பட இருக்கிறது.

அறிவியல் வளர்ந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனை அறிந்து கொள்ள ரூ.20 லட்சம் செலவில் 671 பள்ளிகளுக்கு ‘அட்டல் டிங்கர் லேப்’ டிசம்பர் மாதம் இறுதிக்குள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘பயோ மெட்ரிக்’ திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அமல்படுத்துகிறது. அதை அமல்படுத்த அரசிடம் நிதி இல்லை என்றாலும், தனியார் நிறுவனம் மூலம் அதை செயல்படுத்த இருக்கிறோம். ஆண்டுக்கு ரூ.3 கோடி செலவில் 100 மாணவர்களை தேர்வு செய்து மேலைநாடுகளின் அறிவியல், பண்பாடு, கலாசாரத்தை புரிந்து கொள்ள அங்கு அனுப்ப இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக தமிழ் வழி கல்வியில் படித்த ஆசிரியர்கள், ராணுவத்தில் பணியாற்றிய ஆசிரியர்கள், விதவை பெண்களாக தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கோட்டாட்சியர், சார்பு ஆட்சியர் மூலம் சான்றிதழ் பெற்று அனுப்ப 4 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் அதை அனுப்பவில்லை என்றால் பொதுப்பிரிவில் இருக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆசிரியர் தேர்வுகள் (டி.ஆர்.பி.), பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு அறிவிப்பு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும். நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நிறைய இடங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. முறையான பயிற்சி வழங்காதது, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சரளமாக மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர அடுத்த வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்