யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/1/16

ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்

மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.


இந்த தேர்வு, அடுத்த மாதம், 21ல் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முதுநிலை பட்டதாரிகள், சிசெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாக, மாநில அரசின் சார்பில் நடத்தப்படும், 'செட்' தேர்வு அறிவிப்பை, அன்னை தெரசா பல்கலை அறிவித்துள்ளது; இதற்கான தேர்வு நாளும், பிப்., 21 என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால், மத்திய அரசின் பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா அல்லது, மாநில அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வை எழுதுவதா? என, பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.


இது குறித்து, 'நெட், செட்' சங்க ஆலோசகர் பேராசிரியர் சாமிநாதன் கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு பின், செட் தேர்வு நடக்க உள்ளது. தற்போது அதை எழுதாவிட்டால், அடுத்த தேர்வுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அதனால், பட்டதாரிகளின் வயது அதிகமாகி வேலையில் சேர முடியாது. எனவே, தமிழக அரசின் செட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


பதிவாளரிடம் விசாரணை
செட் தகுதித் தேர்வு பொது அறிவிக்கையில், தேதியை தவறாகக் குறிப்பிட்டது குறித்து, அன்னை தெரசா பல்கலை பதிவாளர் கலாவிடம், உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா, நேற்று விசாரணை நடத்தினார். 'அறிவிக்கையில் தவறு நடந்தது எப்படி; அறிவிக்கை பைலை கையாண்டவர்கள் யார்?' என, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், செட் தேர்வுக்காக தனியே உருவாக்கப்பட்ட, http:/www.setexam2016.in/ இணையதளத்தில், சரியான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பிப்., 21ல் செட் தேர்வு நடக்கவுள்ளது. ஜன., 20 முதல், பிப்., 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.


பொது பிரிவினருக்கு, 1,500 ரூபாய்; பிற்படுத்தப்பட்டோருக்கு, 1,250 ரூபாய்; பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, 500 ரூபாய் என, தேர்வு கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் இ-சேவை மையத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டண தொகை ரூ.1ல் இருந்து ரூ.1000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.10ம், 

மின் கட்டண தொகை ரூ.1001ல் இருந்து ரூ.3,000க்குள் இருந்தால் சேவை கட்டணம் ரூ.20ம்,  மின் கட்டண தொகை ரூ.3001ல் இருந்து ரூ.5,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.30ம், மின் கட்டணம் ரூ.5001ல் இருந்து ரூ.10,000க்குள் இருந்தால் அதற்கான சேவை கட்டணம் ரூ.50ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் கேட்டுள்ளார்!!!

CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.

CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு  CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

வாடகை வீட்டில் குடியிருக்க விரும்பாத அரசு ஊழியர்கள்

சென்னை:''அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்ட, தமிழக அரசு தேவையான கடன் வழங்கியதால், வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை,'' என, வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:மார்க்சிஸ்ட் - டில்லிபாபு: அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, வாடகை குடியிருப்பு கட்டிக் கொடுக்க அரசு முன்வருமா?வைத்திலிங்கம்: ஆறாவது ஊதியக் குழு மூலம் கிடைத்த சம்பள உயர்வு மற்றும் தமிழக அரசு வழங்கிய வீட்டுக்கடன் ஆகியவற்றால், அரசு ஊழியர்கள், சொந்த வீடு கட்டி குடியேறி 

வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருக்க, அவர்கள் விரும்புவதில்லை. இதனால், சென்னை, கோவையைத் தவிர, பிற பகுதிகளில், அரசின் வாடகைக் குடியிருப்புகள் காலியாக உள்ளன. எனவே, புதிதாக வாடகை குடியிருப்புகள் கட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படவில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.

'நெட்' தேர்வில் யோகா பாடம் சேர்ப்பு

சென்னை,:தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில், 161 மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.

அதில், 42 பேர் முனைவர் பட்டமும், 106 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்; 14 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலை துணைவேந்தர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின், யு.ஜி.சி., எனும் பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் அளித்த பேட்டி:யோகா பட்டப்படிப்புக்காக, யு.ஜி.சி., அளிக்கும், 400 கோடி ரூபாய், 44 பல்கலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 'நெட்' எனப்படும் உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில், யோகா பாடமும் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதெடார்பாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்தி:
சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக பிற பள்ளிகளில் உள்ள சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்கள், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும். அனைத்து பிரிவினரும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 21 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், பழங்குடியினர் 18 முதல் 40 வயதிற்குள்பட்டவராகவும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 முதல் 40 வயதிற்குள்பட்டவாகவும் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்துடன், கல்விச்சான்று அல்லது பள்ளி மாற்றுச் சான்று, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.  அனைத்து பணியிடங்களும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இனச் சுழற்சி முறை மற்றும் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடையே 3 கி.மீ. சுற்றளவு தூரம் ஆகியற்றின் அடிப்படையிலும் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.   விண்ணப்ப படிவங்கள், அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.

காலிப்பணியிடம் மற்றும் இன சுழற்சி விவரங்கள் குறித்தும் விண்ணப்பம் வழங்கப்படும் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.29ஆம் தேதிக்குள் அந்தந்த அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

கடந்த, 2015 நவ., டிச., மாதங்களில் நடந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் நேற்று மாலை, 5:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், www.b-u.ac.in என்ற இணையதளத்தில் தங்கள் பதிவெண்களை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

மேலும், மறு மதிப்பீடு, மறு கூட்டல் ஆகியவற்றுக்கு, விண்ணப்பிக்க, பிப்., முதல் தேதி, இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாடி ரீமா ரோஸ் தெரிவித்துள்ளார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி

அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குருப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (Aeronautical Quality Assurance) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க், ஓட்டுநர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Stenographer-GradeII
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்தில் 10 நிமிடங்களுக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், சுருக்கெழுத்தில் எழுதியதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களுக்குள்ளும், ஹிந்தியில் 65 நிமிடங்களுக்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk(LDC)
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Civilian Motor Transport Driver (Ordinary Grade)(CMTD (OG)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTaskingStaff:(MTS)
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு: 23.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பில் எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dgaeroqa.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் ஏதாவதொரு மண்டலங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
லக்னோ மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA, DGAQA,
Min of Defence,
C/OHAL, LUCKNOW, PIN:226016.
கொல்கத்தா மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
6, Esplande East, Kolkata-700069.
பெங்களூரு மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
Vimanapura Post, C/OHAL, Bengalauru-560017.
ஹைதராபாத் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
RDAQA,
DGAQA, Min of Defence,
HALPost, Hyderabad-500058.
நாசிக் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
DDG, (Nasik),
DGAQA, Min of Defence,
C/OHAL, Ojhar-422207.
ஜபல்பூர் மண்டலத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
CO, AQAW(A),
DGAQA, Min of Defence,
Khamaria, Jabalpur-482005.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016

பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு

அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 1,068 தொடக்கப் பள்ளிகள்; 302 நடுநிலைப் பள்ளிகள், 162 உயர்நிலைப் பள்ளிகள்; 146 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,678 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகங்களை,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள துாய்மைக் காவலர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து, ஊரகப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை, மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க, மாவட்ட நிர்வாகம்,ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.அதன்படி, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளான மகளிர் குழுக்களிடம், பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.

வழிகாட்டி நெறிமுறை:

ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் இருப்பினும், புதிய ஆட்களை கல்வி குழுவினர் நியமிக்க வேண்டும் பள்ளியின் கிராமக் கல்விக் குழு கணக்கில், வட்டார வளர்ச்சி அலுவலரால் ஊதியப் பணம் விடுவிக்கப்படும்பள்ளி தலைமை ஆசிரியரால், சம்பந்தப்பட்ட மகளிர் குழுக்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்முதற்கட்டமாக, ஒன்றிய பொது நிதியில், மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கல்வி குழு வங்கி கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அவர்களுக்கு மாத ஊதியத்துடன் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தேவைப்படும் பணமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தக்க பணியாளர்களின் ஊதியம், துப்புரவுக்குத் தேவைப்படும் பொருட்கள் கொள்முதல் செய்ய வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார். 

13/1/16

B.Ed., 2 ஆண்டு பயிற்சி :பணி புரியும் பள்ளியில் விடுப்பு ஏதும் எடுக்காமல் பயிற்சி எடுக்கலாம்.



3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க, 'தினமலர் ' செய்தி எதிரொலியாக கல்வித்துறை சார்பில், நேற்று திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பட்டதாரி ஆயிரம் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதில், 2002--2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை.இதனால் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.'தினமலர் ' செய்திஇதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, பணிமூப்பு பட்டியல் தயாரிக்க திருத்தப்பட்ட உத்தரவை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த உத்தரவில் '31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலையில் இருந்து பட்டதாரியாக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக்கல்விக்கு மாற்றமானவர் களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில் 2000--2001 என குறிப்பிட்டதை 2001--2002 என திருத்தம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நிம்மதிதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் திவ்யநாதன், துணைத் தலைவர் முகிலன் ஆகியோர் கூறுகையில், 'கல்வி இயக்குனர் கண்ணப்பன்மேற்கொண்ட இந்நடவடிக்கையால் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்,' என்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாது என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் படி இந்த உயர்வு அளிக்கப்படுகிறது. 

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு முறையே ஜனவரி மற்றும் ஜூலை 1 தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 119 சதவீதமாக உள்ளது.இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் அறிக்கை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5மாநில தேர்தலுக்கு பின்னரே இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.7வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி 125 சதவீத அகவிலைப்படி உயர்வு அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி மாதத்தில் கணக்கிடப்படும் நுகர்வோர் விலைக்குறியீடும் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக ஜனவரியில் கொடுக்க வேண்டிய அகவிலைப்படியும் 6 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும். இதனால் ஒட்டு மொத்த அகவிலைப்படி 125 சதவீதத்தை தாண்டிவிடும் அபாயம் உள்ளது.இது 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு முரணாக இருக்கும் என்பதால் ஜனவரி அகவிலைப்படி உயர்வை தள்ளிப்போட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அரசிடம் அனுமதி பெற்று உயர்கல்வி பெற வேண்டும்!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்,துறை அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பின் உயர்கல்வி பயில வேண்டும். இதற்காக அரசு ஊக்க ஊதிய உயர்வை வழங்கி வருகிறது.அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில்பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிச் செயலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம்முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என, அரசு தற்போது அறிவித்துள்ளது.


இதனால் பள்ளிச் செயலர்களிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள்கவலையில் உள்ளனர்.முறையாக கல்வித்துறையினரிடம் அனுமதி பெற்ற ஆசிரியர்களுக்கு அடிப்படைஊதியத்துடன் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.தற்போது பள்ளி செயலர்களிடம் மட்டுமே முன் அனுமதி பெற்று உயர்க்கல்வி முடித்தபட்டதாரி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

மாநில தலைவர் இளங்கோ, திண்டுக்கல் மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது:அரசு பள்ளிகளில் ஒரு கல்வி தகுதிக்கு 6 சதவீத ஊக்க ஊதியம், இரண்டு கல்வி தகுதிக்கு (முதுநிலைபடிப்பு) 12 சதவீத ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.பள்ளிச் செயலரிடம் மட்டுமே அனுமதி பெற்று உயர்கல்வி படித்தவர்கள் மட்டுமே தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியமின்றி தவித்து வருகின்றனர். அதனால் பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு கோரிக்கை அனுப்பி உள்ளோம், என்றனர்.

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை ...

போகிப் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் டி.ராமராஜ் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் 812 தொடக்கப் பள்ளிகள், 209 நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,021 பள்ளிகள் உள்ளன. இதில் 1,05,705 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். 


இந் நிலையில் தமிழர்களின் வாழ்வினை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஓர் உன்னத பண்டிகையான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி துவங்குகிறது. அப்பண்டிகை நாளின் முதல் நாளான ஜனவரி 14ஆம் தேதி போகிப் பண்டிகை. அன்றைய தினம் தமிழர்கள் அனைவரும் தங்களது வீடுகளைச் சுத்தம் செய்து, வண்ணம் தீட்டி, காப்பு கட்டி, பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப, போகிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். மேலும், பெற்றேர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து மகிழ்வர். பெரும்பாலான ஆசிரியர்கள், நகர்ப்புறங்களில் இருந்து, தங்கள் சொந்த கிராமத்துக்கு சென்று பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவர்.

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவியரும் சொந்த ஊருக்கு சென்று தங்கள் பெற்றேர் மற்றும் சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்வர்.
இந் நிலையில், ஜனவரி 15ஆம் தேதி தைப்பொங்கல், 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் இந்த இரண்டு நாட்களும் தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை அன்று அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் வேலைநாளாக செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வித்துறை சார்பில் வழங்கியுள்ள நாட்காட்டியில் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்தவர்கள். பொங்கல் பண்டிகை கொண்டாடும் பொருட்டு அவரவர் மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது விடுமுறை இல்லாததால், பல்வேறு சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் படிக்கும் பல மாணவ, மாணவியர் வெளி மாவட்டங்களில் உள்ள அவரவர் சொந்த ஊருக்கு பண்டிகை நேரத்தில் பயணம் மேற்கொள்வதில் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. மாணவ, மாணவியர் பொங்கல் பண்டிகையினை மனமகிழ்வுடன் சிறப்புடன் கொண்டாடவும், விடுப்புநாள் இல்லாது பேருந்துகளில் செல்வதால் ஏற்படும் சிரமங்களினாலும் அத்தகைய சூழ்நிலையை தவிர்க்க ஜனவரி 14ஆம் தேதி நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, அதனை ஈடுசெய்யும் வகையில் வேறொரு சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக அறிவிக்கும் ஆவன செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு தடை: மத்திய, மாநில அரசு தரப்பு வாதங்களின் விவரம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசின் புதிய அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.அப்போது, விலங்குகள் நல வாரியம் சார்பில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே இருக்கும் அறிவிக்கையை மீற முடியாது என்று வழக்குரைஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில், ஜல்லிக்கட்டுக்கான அறிவிக்கையில் காளை வதை பற்றி கவனத்தில்கொள்ப்பட்டுள்ளது என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது.மத்திய அரசின் வாதத்தில், ஜல்லிக்கட்டுக்கு தேவையெனில் உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதிக்கலாம். ஜல்லிக்கட்டு ஸ்பெயினில் நடைபெறுவது போன்று காளை வதை சண்டையல்ல என்று ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக வாதாடியது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட அமர்வு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதிய அரசாணை வருமா??? புது வாழ்வு கிடைக்குமா???? உரிமை முடியாதபள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல் எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள் பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.

தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்டபள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!

15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின்தொடர் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்டபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களின்குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளபள்ளிகளுக்கும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவலால்தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்க வேண்டும்.வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதிசெய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும், அனைத்துநாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்விஇணையதளங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் வேண்டுகோள்வைக்கவும் வேண்டுகிறேன்.

அனைவருக்காகவும்
கடலூர் செந்தில் (எ)சி.செந்தில்குமார்,
(9487257203),
கலியமலை ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி,
கடலூர் மாவட்டம்.

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா: அரசு நிதி ஒதுக்கீடு

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழு, கிராமக் கல்விக் குழுவினரின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், மாணவ, மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொண்டு வரவும், பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு விழா நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டு அனைத்து அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அரசு உத்தரவிட்டது. இதற்காக, அந்தந்தப் பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுவதில்லை.ஆனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவே இருந்ததால் அங்கு ஆண்டு விழா நடத்தப்படவில்லை.எனவே, நிகழாண்டு தொடக்கப் பள்ளிகளில் 100 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 150 மாணவர்களுக்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மட்டும் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் 150 பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்காக, தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ரூ.5,000-மும், நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.6,000-மும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால், பிப்ரவரி மாதத்துக்குள் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

11/1/16

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? ஜாக்டோ சார்பில் பிப். 14-இல் கருத்தாய்வு

ஆசிரியர்களின் தொடர் போராட்டம் ஏன்? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் பி.கே. இளமாறன் தெரிவித்தார்.
 சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குழுவின் ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
 இதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4-இல் நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டமானது வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், ஆசிரியர் போராட்டம் ஏன்? என்பதை விளக்கும் வகையில் சென்னையில் பிப்ரவரி 14-இல் கருத்தாய்வு மாநாடு நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுப்போம். தேர்தல் அறிக்கையில் கோரிக்கைகளை இடம்பெறச் செய்வோம் என்றார்.