யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/9/16

ஆதார் எண்ணுடன் மாணவர் சான்றிதழ் பதிவு: பல்கலைகளுக்கு மத்திய அரசு புது உத்தரவு.

அனைத்து பல்கலைகளும், கல்லுாரிகளும், மாணவர்களின் பட்ட சான்றிதழ்களை, ஆதார் எண்ணுடன், மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், மாநில பல்கலை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், சமீபத்தில், டில்லியில் நடந்தது.
இதில், தமிழகம் உட்பட அனைத்து மாநில பல்கலைகளுக்கும், மத்திய அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அனைத்து பல்கலைகள், கல்லுாரிகள், மாணவர்களின் பட்ட சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்களை, மத்திய அரசின், 'தேசிய அகாடமிக் டெபாசிட்டரி' அமைப்பின், இணையதளத்தில், பதிய வேண்டும். மாணவர்களின் ஆதார் எண்ணும் அதில் இடம்பெற வேண்டும். சான்றிதழ்களிலும், ஆதார் எண்ணை குறிப்பிட முயற்சிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் பல்கலைகள், கல்லுாரிகள் மற்றும் மாணவர்களுக்கு தனித்தனியே, ஒருங்கிணைந்த பதிவு எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை பயன்படுத்தி, மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும், டிஜிட்டல் சான்றிதழ் பெறலாம்.இந்த முயற்சியால், வேலைவாய்ப்பு நிறுவனங்கள், போட்டி தேர்வு நடத்தும் அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைனில் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ் பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வுவிண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெறவிரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலையில், காஞ்சி வளாகத்தில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு, 2016ம் ஆண்டிற்கான, மத்திய தேர்வாணையக் குழுவின், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், முதன்மைத் தேர்வு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள், மூன்று வேலை நாட்களில் வழங்கப்படும்.இப்பயிற்சி மையத்தில் படித்தவர்களும், தனியே தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றவர்களும் என, மொத்தம் 225 மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவர்.பயிற்சிக் காலத்தில், கட்டணமில்லா விடுதி வசதி உண்டு; மாதம், 3,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும்.

80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி

51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51 கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். 
இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது.புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலை, ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா அரசு கலைகல்லுாரியில் அனைத்து கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் லோகநாதன், பொது செயலாளர் சிவராமன் கூறியதாவது: முதல்வர் காலிப்பணியிடத்தால் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 10 ஆண்டுக்கு முன்பு அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு நியமிக்கப்படவில்லை.

மாணவர்களே வகுப்பறை, வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.1998-ல் பணி உயர்வு பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணி மூப்பை எதிர்நோக்கியுள்ளனர். பணிமூப்பு பட்டியல் வெளியிடாததால், துறை தலைவர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. 3200-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை படுத்த வேண்டும், என்றனர்.

பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது. 
அரசு தேர்வுத்துறை சார்பில்,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள்நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும்சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன.இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும்,'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும்.இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.

இந்த முறையை, அனைத்து பாடங்களுக்கும் அமல்படுத்துவது குறித்து, அரசு தேர்வுத்துறை ஆலோசித்து வருகிறது. அதன்படி, 2017 மார்ச்சில் நடைபெற உள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது; அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததும், இந்த திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.

விரிவுரையாளர் வினாத்தாள் 'அவுட்' தேனி பெண் சிக்கினார்

ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு மதுரையில் நடந்த தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் கேள்விகளை அனுப்பிய தேனி பெண் பிடிபட்டார்.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், மதுரையில் ஒன்பது மையங்களில், இந்த தேர்வு நேற்று நடந்தது. தனியார் பள்ளி ஒன்றில் தேனியை சேர்ந்த ராகப்பிரியா, ஆங்கில பாடத் தேர்வு எழுதினார்.அரை மணி நேரம் கடந்த நிலையில், சட்டைக்குள் வைத்திருந்த அலைபேசியை எடுத்த போது பிடிபட்டார். 
இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் விசாரித்தார்.அப்போது, ராகப்பிரியா முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்; அவரது அலைபேசியில் உள்ள தகவல்களை கண்காணிப்பாளர் ஆய்வு செய்த போது, வினாத்தாள் பக்கங்களை புகைப்படம் எடுத்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பியது தெரிந்தது.விசாரணை நடத்திய போதே, வினாக்காளுக்கான விடை 'வாட்ஸ் ஆப்'பில் வந்ததை கண்டு, கண்காணிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கல்வி ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் குப்புசாமி, தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தலைமையிலான குழு அங்கு விசாரணை நடத்தியது.

பின், அலைபேசியை பறிமுதல் செய்து ராகப்பிரியாவை வெளியேற்றினர்.இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.'குரூப்'பில் விடை : தேர்வு துவங்கிய அரை மணி நேரத்துக்குள், வினாக்களை ராகப்பிரியா அனுப்பியுள்ளார். இதனால், அந்த 'வாட்ஸ்ஆப் குரூப்'பில்உள்ள மற்ற தேர்வர்களும் விடையை பார்த்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசாமல், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து மட்டும், அரசு குழு பேசியது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில், 2003க்கு பின், அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது; இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட, பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன.எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.கடந்த, 2011 மற்றும், 2016 சட்டசபை தேர்தலின் போது, 'பழைய ஓய்வூதியதிட்டம் அமல்படுத்தப்படும்' என, ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்; எனவே, அதுகுறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிசாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவினர்,இரு தினங்களுக்கு முன், ஒன்பது அரசு ஊழியர் சங்கங்கள்,ஆசிரியர் சங்கங்களை சந்தித்து பேசினர். நேற்று முன்தினம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் உட்பட, ஒன்பது சங்கங்களின் நிர்வாகிகள், குழுவினரை சந்தித்து பேசினர்.அனைத்து தரப்பினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அரசு குழுவினர், 'புதிய திட்டத்தில், மாற்றங்கள் செய்தால் போதாதா?' என கேட்டுள்ளனர்; அரசின் நிதி நெருக்கடியை எடுத்துரைத்துள்ளனர்.இதன் காரணமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை, அரசு செயல்படுத்துமா என்ற சந்தேகம், சங்க நிர்வாகிகளிடம் ஏற்பட்டு உள்ளது. அரசு குழுவினர், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேசாமல், புதிய திட்டத்தின்அம்சங்களையே பேசியதால், கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தினர், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, சங்க நிர்வாகிகள் கூறியதாவது:அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில சங்கம்:அரசின் நிதி நிலைமையை எடுத்துரைத்தனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், என்ன மாற்றம் செய்யலாம் எனக் கேட்டனர். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதை, ஆதாரங்களுடன் எடுத்துரைத்தோம். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.பி.ஆரோக்கியதாஸ், ஒருங்கிணைப்பாளர்,

'டேக்டோ' கூட்டுக் குழு: மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவிக்கவில்லை. லோக்சபாவில், அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே, புதிய ஓய்வூதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படும். மேலும் இது, லஞ்சத்திற்கு வழி வகுக்கும். எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, குழுவிடம் கூறினோம்.

'ஜேக்டோ' கூட்டுக் குழுஒருங்கிணைப்பாளர்: 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் குறைகளை நீக்கி, எப்படி தொடரலாம்...' என, குழுவினர் ஆலோசனை கேட்டனர். ஆனால், 'புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே தேவையில்லை; அதில்,எத்தனை திருத்தம் செய்தாலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு எந்த பலனும் கிடையாது.'எனவே, பழைய பென்ஷன் திட்டம் தான் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தேவை' என்பதை, உறுதியாக கூறிவிட்டோம்.

எஸ்.என்.ஜனார்த்தனன், மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்:தமிழக அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசின், பி.எப்., ஆணையத்தில் செலுத்த வேண்டும். அந்த தொகையை மீண்டும் பெற, தமிழக ஊழியர்கள் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இதில், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம்கிடைக்கும் என்ற விகிதாச்சாரம் கூட கூறப்படவில்லை. ஊழியர்களின் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் வருமானம் நிரந்தரமாக இருக்காது. ஊழியர்களுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்ற உறுதியானதகவல்கள் இல்லை. எனவே, புதிய பங்களிப்பு திட்டமே வேண்டாம் என, கூறி விட்டோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Minorities Welfare Department - Announcement of New Schemes by the Honble Chief Minister

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.எட்.பயில்வது குறித்து RTI - மூலமாக பெறப்பட்ட தகவல்.. Posted: 18 Sep 2016 05:16 AM PDT IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016

*IGNOU- DATE SHEET FOR TERM END EXAMINATION DECEMBER - 2016*
FIRST & SECOND YEAR
.
08.12.16-  THU - ES-331
09.12.16-   FRI-   ES-332
10.12.16-   SAT-  ES-333
12.12.16-  MON- ES-341
14.12.16-  WED-  ES-342
15.12.16-   THU-  ES-343
16.12.16-    FRI-   ES-344
19.12.16-   MON- ES-345
2012.16-    TUE-   ES- 334
22.12.16-   THU-   ES-335
23.12.16-    FRI-    BESE-065
24.12.16-    SAT-   ES-361
26.12.16-    MON- BESE-066
27.12.16-    TUE-   ES-362
28.12.16-    WED-  ES-363
29.12.16-    THU-   ES-364

18/9/16

சிவில் சர்வீசஸ் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

இந்திய அரசு துறைகளின் உயர் பதவிகளான, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, 24 வகை பதவிகளுக்கு, 1,049 காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும், முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடந்தது. 
இந்த தேர்வுக்கு, 11.36 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; ஆனால், 6.24 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். தேர்வில், 33 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். அதன்படி, யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய பொது பணியாளர் தேர்வாணையம், முதல்நிலை தேர்வு முடிவை வெளியிட்டது; இதில், 15 ஆயிரத்து, 445 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தற்போது, தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், தங்களது விருப்ப பாடத்தின் படி, நவ., 12ல் நடக்கும், முதன்மை தேர்வை எழுத வேண்டும்; அதில், தேர்ச்சி பெறுவோர், நேர்முக தேர்வில் பங்கேற்க வேண்டும்; நேர்முக தேர்வுக்கு பின், இறுதி பட்டியல் வெளியாகும்.

மும்பை பள்ளிகளில் யோகா: தடை விதிக்க கோர்ட் மறுப்பு

மும்பை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு யோகாமற்றும் சூரிய நமஸ்கார பயிற்சிகளை அளிப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க மும்பை கோர்ட் மறுத்துள்ளது.மும்பை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா மற்றும் சூரிய நமஸ்காரப் பயிற்சிகளை அளிக்க மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதனை எதிர்த்து மசூத் அன்சாரி என்பவர் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.இதில் பல்வேறு மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் சூரிய நமஸ்காரத்தை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்திருந்தார்.

மேலும் மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.அந்த மனு மீது நேற்று நடந்த விசாரணையில், சூரிய நமஸ்காரம் என்பது வெறும் பெயர்தான் எனவும், அதனை உடற்பயிற்சியாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் கோர்ட் தெரிவித்தது. வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், மாநகராட்சியின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

பரபரப்பாக செயல்பட்ட அரசு அலுவலகங்கள்

தமிழகத்தில், 'பந்த்' நடத்தப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள எழிலக வளாகம், மின் வாரியம் உள்ளிட்டஅரசு அலுவலகங்கள், வழக்கத்தை விட, நேற்று பரபரப்பாக செயல்பட்டன.இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது:
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு சற்று தாமதமாக தான் வருவோம். ஆனால், இன்று தாமதமாக வந்தாலோ, விடுப்பு எடுத்தாலோ, 'பந்த்'க்கு ஆதரவு தெரிவிப்பதாக, உயரதிகாரிகள் கருதுவர்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு கல்லூரி மாணவர் பயிற்சி திட்டம் : பயிற்றுனர் இல்லாததால் பாதிப்பு.

அரசு கல்லுாரி மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சி திட்டத்திற்கு, பயிற்றுனர் கிடைக்காததால், செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு கல்லுாரி மாணவர்களில், இறுதி ஆண்டு படிப்போருக்கு, பணியில் சேர வசதியாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது; இதன்படி, 30 அரசு கல்லுாரிகளில், ஆண்டுக்கு, 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல், கூடுதலாக, 32 கல்லுாரிகளில் பயிற்சி அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது; இதற்காக, ஒவ்வொரு கல்லுாரிக்கும் ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் வீதம், 1.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மென் திறன் பயிற்சி வழங்க, பயிற்றுனர்கள் இல்லாத குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சி அளித்து வந்த தனியார் நிறுவனங்களுடன், ஒப்பந்தத்தை நீட்டிக்காததால், இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தில், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மன்றத்தின் உறுப்பினர் செயலரான, கல்லுாரி கல்வி இணை இயக்குனர், சேகர் பங்கேற்கவில்லை; நந்தனம் கல்லுாரி முதல்வர், அமுதா பாண்டியன், மென் திறன் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி பங்கேற்றனர்.

அப்போது, அரசு ஒதுக்கிய நிதியில், குறிப்பிட்ட தொகையை கல்லுாரிகளுக்கு அளித்து விடுவதாகவும், கல்லுாரிகளே பயிற்சியாளரை நியமித்து, மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்படியும் ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், 'எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல், மென் திறன் பயிற்சி திட்டத்தை செயல்படுத்த முடியாது; பயிற்சியாளர்களை நியமிப்பதுடன், அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்' என, கல்லுாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, எந்த முடிவும் சொல்லாமல், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி கட்டண கமிட்டிக்கு அடுத்த வாரம் புதிய தலைவர்

சுயநிதி பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணய கமிட்டிக்கு, புதிய தலைவரை நியமிக்கும் நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. கடந்த, 2009ல், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்ததும், நீதிமன்ற உத்தரவுப்படி, சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டியை, தமிழக அரசு அமைத்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள்; ஆசிரியர், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
பணிகள் முடக்கம் : கமிட்டியின் முதல் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் நியமிக்கப்பட்டார்; பல்வேறு காரணங்களால், அவர் பதவி விலகினார். பின், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்கும்மேலாக, கட்டணம் குறித்து விசாரணை நடத்தினார்; ஆட்சி மாற்றம் வந்ததும், 2012ல் பதவி விலகினார்.பின், 2012 ஜனவரியில், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு, கல்விக் கட்டண கமிட்டி தலைவரானார்; மூன்று ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த அவர், 2015 டிசம்பர் 31ல் ஓய்வு பெற்றார்.அவரை தொடர்ந்து, கமிட்டியின் சிறப்பு சட்ட அதிகாரி மனோகரனும், கடந்த மார்ச்சில் ஓய்வு பெற்றார். அதனால், கட்டண கமிட்டியின் பணிகள் முடங்கின. இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டண கமிட்டி தலைவரை நியமிக்காமல், இனியும் தாமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியது. மூன்று வாரங்களில் தலைவரை நியமிப்பதாக, தமிழக அரசு உறுதி அளித்தது.

முன்னாள் நீதிபதிகள் : இதையடுத்து, பள்ளிக்கல்வி, சட்டத்துறை இணைந்து, புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. 'ஏற்கனவே தலைவராக பதவி வகித்த சிங்காரவேலு உள்ளிட்ட முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.அடுத்த வாரம், தலைவர் நியமிக்கப்பட்டு விடுவார்' என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளாட்சி தேர்தல் அடுத்த வாரம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு, அடுத்த வாரத்திற்கு தள்ளிப் போடப்பட்டு உள்ளது.தமிழக உள்ளாட்சி தேர்தலை, அடுத்த மாதம், 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேர்தல் செலவிற்காக, 183 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது. 
தேர்தல் தேதி, நேற்று அறிவிக்கப்படும்என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'பந்த்' காரணமாக, தள்ளிப் போடப்பட்டுள்ளது. வரும், 20ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாக, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரிகள்தெரிவித்தனர்.

கேம்பஸ் இன்டர்வியூ' : அண்ணா பல்கலை 'டிப்ஸ்

அண்ணா பல்கலை சார்பில், சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரிகளின், இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' தேர்வு நடந்து வருகிறது. 
அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் இணைப்பு பெற்றுள்ள, 550க்கும் மேற்பட்ட தனியார் இன்ஜி., கல்லுாரிகளுக்கும், விரைவில் கேம்பஸ் தேர்வு நடக்க உள்ளது. 'கேம்பஸ் தேர்வில் பங்கேற்பது எப்படி; தனியார் நிறுவன அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி' என, மாணவர்களுக்கு வழிகாட்டும் புத்தகத்தை, அண்ணா பல்கலையின் தொழில் நிறுவன இணைப்பு மையமான, சி.யூ.ஐ.சி., வெளியிட்டுள்ளது.இந்த விபரங்களை, www.annauniv.edu/pdf/AU-CUIC என்ற இணையதள முகவரியில் பெறலாம்.

செப். 23க்குள் அங்கீகாரம் பி.எட்., கல்லூரிகளுக்கு 'கெடு'

தனியார் பி.எட்., கல்லுாரிகள், செப்., 23க்குள், மாணவர்கள் பட்டியலை தாக்கல் செய்ய, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்விதொடர்பான, பி.எட்.,பி.பி.எட்.,எம்.எட்., படிப்புகளுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், நேற்றுடன் மாணவர் சேர்க்கை முடிந்தது. 
தனியார் கல்லுாரிகளிலும் மாணவர் சேர்க்கையை நிறுத்த, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.ஆனால், ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கை நடத்த, இரண்டு வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, தனியார் கல்லுாரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், அனைத்து தனியார் கல்லுாரிகளும், செப்., 23க்குள், மாணவர்களின்பட்டியலை தாக்கல் செய்து அங்கீகாரம் பெறும்படி, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவிட்டுள்ளது..

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் கால் சேவைமறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டித்துள்ளது. 
 இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்துபவர்களை  தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்தது. இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை வங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வழங்க வேண்டும். ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்களை துண்டித்துள்ளது.

ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது. ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது.இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது.கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ்கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது.டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது.தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது

தொடக்கப் பள்ளிக்காக ரூ.30 லட்சம் மதிப்பு நிலத்தை கொடுத்த தலைமை ஆசிரியர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட துளுவ புஷ்பகிரி கிராமத்தில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது.35 ஆண்டுகளுக்கு முன்பு, அரசிடம் இந்தப் பள்ளியை ஒப்படைத்தது நிர்வாகம். அதன் பிறகு, பள்ளிக் கல்வித் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்குகி றது. 
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.அவர்களை வழி நடத்தும் பணியில் 2 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இடவசதி தடையாக இருந்தது. அங்குள்ள தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை பள்ளிக்கு எழுதிக் கொடுத்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி. சந்தை மதிப்பில் தற்போது அந்த இடம் ரூ.30 லட்சமாகும்.சில தடைகளைத் தாண்டி, பள்ளிக் கட்டிடம் எழுந்துள்ளது.கொடிக் கம்பம் அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. மாநில நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச் சுவரை கட்டிக் கொடுத்துள் ளது.ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட் சித் துறை. பள்ளிக் கட்டிடம் கட்டும் பணியை கட்டிடக் குழு மேற் பார்வை செய்து வருகிறது.

இது குறித்து கட்டிடக் குழுவில் உள்ளவர்கள் கூறும்போது, “கல்வி ஆர்வலர்களின் நிதி உதவியால் சுமார் ரூ.12 லட்சம் வரை செலவிடப் பட்டு பணி நடைபெற்றது. மேலும், ரூ.5 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நிதிக்காக காத்திருக்கிறோம். நவீன கணினி வழிக் கல்வி, யோகாசனம் மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செயதுள்ளோம். எங்கள் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றனர்.இதுகுறித்து பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி கூறும்போது, “அந்தப் பள்ளியில் படித்தவன் நான். ஆரம்பக் கல்வியை தொடங்கி, ஆசிரியராக உயர்ந்து நிற்கிறேன். அதற்கு அடித்தளமிட்டது, நான் படித்த இந்தப் பள்ளியாகும்.

 அந்த பள்ளிக்கு இடம் தேவைப்படுகிறது என்பதை அறிந்தேன். சுற்றுப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில், எனது 20 சென்ட் நிலத்தை எழுதித் கொடுத்துள்ளேன் ” என்றார்.வருவாய் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் இந்த காலத்தில், ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிக்காக 30 லட்சம் மதிப்புள்ள தனது நிலத்தை தானமாக கொடுத்த தலைமை ஆசிரியர் கோவிந்தசாமியின் நடவடிக்கையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'

அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. 
தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும். இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.

ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார்எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

Alagappa University - Invitation - One Day Induction Programme for the I year B.Ed(DDE)., students (2016-2018) on 18-09-2016