யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/11/16

8ம் வகுப்பு தனி தேர்வருக்குஜன., 4ல் தேர்வு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, ஜன., 4ல், பொதுத் தேர்வு துவங்குகிறது.எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு, 2017 ஜன., 4 முதல், 9 வரை, பொதுத் தேர்வு நடக்க உள்ளது; 8ம் தேதி விடுமுறை. 
இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?

ரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது. 
அதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு
செய்யப்படுகின்றன. ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற அலைபேசி , 'ஆப்' மூலமும், அந்த விபரங்களை பதியலாம்.ஆனால், பலர், ஆதார் விபரத்தை பதிவு செய்யாமல், அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஆதார் எண் பதியாத, 1,500 ரேஷன் கார்டுகளை, மாவட்ட உணவு துறை அதிகாரிகள் ரத்து செய்தாக, தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை, உணவு வழங்கல் உயரதிகாரிகள் மறுத்தனர்.
இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், பலர், ஆதார் விபரம் பதிவு செய்யாமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது உண்மை; அதற்காக, ஆதார் பதியாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதாக வெளியாகும் தகவலை, மக்கள் நம்ப வேண்டாம்.
டிச., முதல், ஆதார் பதிவு செய்யாத வீடுகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய உள்ளனர். எனவே, இதுவரை ஆதார் பதியாமல் உள்ளவர்கள், விரைவில், அந்த விபரத்தை வழங்கினால், விரைவாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


எத்தனை பேர் (கோடியில்)
ரேஷன் கார்டில் உள்ள

உறுப்பினர்கள் - 7.72
ஆதார் பதிவு
செய்தவர்கள் - 5.27
ஆதார் பதியாதவர்கள் - 2.45
அலைபேசி எண்
பதிவு செய்தவர்கள் - 1.68 

செவ்வாயில் தண்ணீர் 'நாசா' கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சூரிய குடும்பத்தில் உள்ள சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான சூழல் உள்ளதா என்பதை ஆராய்ச்சி செய்யும் பணியில் சில நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம்(நாசா) தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது செவ்வாய்க்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்து வரும் தகவல்களை ஆய்வு செய்கிறது.
இந்நிலையில், செவ்வாயில் உடோபியா பிளனிசியா பகுதியில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் தடிமனில் மணல் ஈரப்பகுதி உள்ளதாகவும், அது 12,100 கன கி.மீ., பரப்பளவுக்கு உள்ளதாகவும் 'நாசா' விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பரப்பளவு அமெரிக்காவின் சுப்பீரியர் ஏரியின் பரப்பளவை விட பெரியது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும் செவ்வாய் ஆராய்ச்சிக்கென 'மங்கள்யான்' விண்கலத்தை அனுப்பியுள்ளது.

AEEO., அலுவலகங்களில் ஆசிரியர் - அதிகாரிகள் மோதல்

தொடக்க பள்ளிகளில், ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பாடம் நடத்தாமலும், 'ஓபி' அடிப்பதாக, புகார்கள் உள்ளன. பள்ளிக்கு வராத நாட்களிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, முழு ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.
அதனால், ஆசிரியர்களின் பணப்பலன், ஊக்க ஊதிய நிலுவை தொகை போன்றவற்றை, ஏ.இ.இ.ஓ., எனப்படும், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், உடனடியாக அனுமதிப்பதில்லை. சில ஏ.இ.இ.ஓ.,க்கள், தாங்கள் ஆசிரியராக இருந்த போது, எந்த
சங்கத்தில் இருந்தனரோ, அதற்கு சாதகமாக செயல்படுவதும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற விவகாரத்தால், கோவை - சூலுார், புதுக்கோட்டை, அரிமளம், விராலிமலை, பொன்னமராவதி, காங்கேயம் ஆகிய இடங்களில், ஏ.இ.இ.ஓ., அலுவலக பணியாளர்களை, ஆசிரியர் சங்கத்தினர் சிறை பிடித்து, போராட்டம் நடத்தியுள்ளனர். கோவையில் இந்த பிரச்னைக்காக, இரண்டு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுஉள்ளனர். மற்ற மாவட்டங்களில், உயரதிகாரிகளின் விசாரணைக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர், ராஜேந்திர பிரசாத் மற்றும் பொதுச் செயலர், சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:
நிர்வாக பணிகளில், ஏ.இ.இ.ஓ.,க் களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. அதை சமாளிக்க முடியாத ஆசிரியர்கள் சிலர், பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அதனால், அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னைக்கு, அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். 

சம்பளத்தைரொக்கமாக வழங்க முடிவு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தில், 10 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க, சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், நாட்டில் பண புழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், மூன்று மற்றும் நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சம்பளத்தில், 10ஆயிரம் ரூபாய் மட்டும், ரொக்கமாக வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.

DSR - Image Format



ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை

ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாட்டில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், திருவள்ளூர் மாவட்ட மாநாடு, பொன்னேரியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் நடந்த மாநாட்டில், கதிரவன் முன்னிலை வகித்தார்.

பொன்னேரி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்து, மாநாட்டு அரங்கம் வரை நடந்த ஆசிரியர்கள் பேரணியை முன்னாள் மாநில தலைவர் இளங்கோ துவக்கி வைத்தார். திருவள்ளூர் தொகுதி எம்.பி., வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர்.

மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதிய குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய இழப்பை களைய வேண்டும்; புதிய கல்வி கொள்கையை தேவையான மாற்றங்களுடன் அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என,தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரும்பலகையில் திறனாய்வு தேர்வு பின்நோக்கி செல்லும் கல்வித்துறை

மாணவர்களின் கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துமாறு, வெளியிட்ட அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜன் உத்தரவுப்படி, ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, கடந்த 15ம் தேதி முதல், தினசரி தேர்வு நடக்கிறது.

வகுப்பு நேரத்தில், பாடவாரியாக தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டது. வினாத்தாள் தயாரிக்கும் பணிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது.மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மையம் வாயிலாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களின், 'இ-மெயில்' முகவரிக்கு, வினாத்தாள் அனுப்பப்பட்டது. ஆன்லைனில், வினாத்தாள் பள்ளிக்கு வந்ததால், அச்சிட்டு மாணவர்களுக்கு விநியோகிக்க, போதிய நிதியில்லை என, ஆசிரியர்கள் புகார் அளித்தனர்.
வினாத்தாள் அச்சடிப்பு குறித்து, தகவல் இல்லாததால், கல்வித்துறை அதிகாரிகளும் மவுனம் சாதித்தனர். இந்நிலையில், கடந்த, 21 ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து, உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


10 கேள்விகள்
இதில், 'சி.சி.இ., எனும் தினசரி கற்றல் திறனாய்வு தேர்வு வினாத்தாளை, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு அளிக்க வேண்டாம். வினாக்களை கரும்பலகையில் எழுதி போட்டு, மாணவர்களின் நோட்டில் விடை எழுதுமாறு அறிவுறுத்தி, மதிப்பிட வேண்டும்' என குறிப்பிட்டுள்ளது.
இந்த வினாத்தாளில், பாடவாரி யாக, 10 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். ஒரே வரியில் சிந்தித்து விடையளிக்கும் படியாக, கேள்விகள் இருப்பதால், பெரும் ஆதரவை பெற்றது. இதற்கு, மாணவர்களுக்கு பிரத்யேக வினாத் தாள் வழங்காமல், கரும்பலகை யில் எழுதி போட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கற்றல் தினறாய்வு தேர்வு வினாக்களை, கரும்பலகையில் எழுதி நடத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களின் புரிதலுக்காக, வண்ணங்கள் அறிதலுக்கான கேள்விகள் உள்ளன.
இதை, கரும்பலகையில் எழுதி அறிவது சிரமம். மேலும், பொருத்துதல், இணையற்ற படங்களை கண்டறிய, ஓவியம் வரைய வேண்டியுள்ளது. இதை மாணவர்களும், நோட்டில் வரைந்து விடையளிக்க வேண்டும்.
ஓய்வு நேரம் இல்லை
தேர்வு நடத்த, 10 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தினசரி விடைகளை திருத்தி, மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, செயல்வழி கற்றல் அட்டைகளை நிரப்புவதால், அதிக எழுத்துப்பணியால் திண்டாடுகிறோம்.
இதில், திறனாய்வு தேர்வை நடத்தி, மதிப்பாய்வு செய்தால், ஓய்வு நேரம் கிடைக்க வழியில்லை. இதற்கு பதிலாக, வினாத்தாளிலே விடையளிக்கும் படியாக தேர்வுத்தாள் வடிவமைத்து, பள்ளிகளுக்கு வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிப்பாடல்கள்

26/11/16

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

அச்சு பிழையால் 'கலர்' மாறிய புதிய நோட்டு செல்லும்

மும்பை:'புதிதாக வெளியிடப்பட்ட, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், அச்சுப் பிழையால் வண்ணம் மாறியுள்ளது; அந்த நோட்டுகள் செல்லும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த, பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவித்த மத்திய அரசு, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த நோட்டுகளில், சிலவற்றில் வண்ணம் மாறியுள்ளது உள்ளிட்ட புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
புதிய நோட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் வந்துள்ளதாகவும், இதனால் குழப்பம் ஏற்படுவதுடன், கள்ள நோட்டு அச்சடிக்க வாய்ப்பு ஏற்படும் என, பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

புதிதாக அச்சடிக்கப்பட்டுள்ள நோட்டுகளில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இரு வகையான வண்ணங்களில் நோட்டுகளை வெளியிடவில்லை; 10 லட்சம் நோட்டுகளில், ஒரு நோட்டில் இவ்வாறு சில குறைபாடுகள் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

அவ்வாறு வெளியான நோட்டுகள் செல்லும்; அவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால், அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தி, மாற்று நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

நான்கு அச்சகங்கள்

நம் ரூபாய் நோட்டுகள், நாட்டின் நான்கு பகுதிகளில் உள்ள அச்சகங்களில் உருவாகின்றன. மத்திய பிரதேசத்தின், தேவாஸ், மஹாராஷ்டிராவின், நாசிக்கில் உள்ள அச்சகங்கள், மத்திய அரசின் கீழுள்ள பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணய வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. 

கர்நாடக மாநிலம் மைசூரு, மேற்கு வங்கத்தின் சல்போனி ஆகியவை, ரிசர்வ் வங்கியின், ரூபாய் அச்சடிப்பு நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.

கறுப்பு பண 'டிபாசிட்டா?': அதிரடிக்கு அரசு தயார்

புதுடில்லி:கறுப்புப் பணத்தை வங்கியில், 'டிபா சிட்' செய்வோருக்கு, 60 சதவீத வரி மற்றும் அபராதம் விதிப்பது குறித்து, மத்திய அமைச்ச ரவை கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர வைக் கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 நோட்டுகள் அனைத்தையும் திரட்ட, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதிக வரி விதிக்கப்படும் என்ற பயத்தில், அதை அழிப்பதை தடுக்கும் வகையில், தகுந்த வரியை விதிப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து செலுத்தும் திட்டத் தில், 'வரி மற்றும் அபராதமாக, 45 சதவீதம் விதிக் கப்படும்'என, அறிவிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாதோர், தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்யும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி, வரி மற்றும் அபராதமாக, 60 சதவீதம் வசூலிப்பது குறித்து கூட்டத்தில் முடி வெடுக் கப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக, நடப்பு பார்லி., கூட்டத் தொடரிலேயே, வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டலில்' கட்டணம் ஆராய நிபுணர் குழு

புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரசுக்கு டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவது குறித்து ஆராய, நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி விபரம்: அரசு - மக்கள் இடையிலான பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறையில் மேற்கொள்வது குறித்து ஆராய, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'நிடி ஆயோக்' தலைமை செயலர் அமிதாப் காந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு, எந்தெந்த துறைகளில், எந்தெந்த பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறைப்படி செய்ய முடியும் என ஆலோசனை வழங்கும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?

பெலகாவி: “பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை அமைச்சர் தன்வீர் செய்ட் தெரிவித்தார்.மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் அருண் சஹாபுரா, சோமண்ணா பேவினமடா, காங்கிரசின் தர்மசேனா ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் தன்வீர் செய்ட் கூறியதாவது:மாநிலத்தில், 1ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றி அமைப்பதற்கு, வெவ்வேறு மொழிகளில் வல்லுனர்கள் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இது பற்றி, பர்கூரு ராமசந்திரா தலைமையிலான கமிட்டியுடன் விவாதிக்கப்படுகிறது. இக்கமிட்டி, அடுத்த மாதம், 8 அல்லது, 9ம் தேதியில் தாக்கல் செய்யும்.அந்த அறிக்கையை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கமிட்டி அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டாகிறது. இக்கமிட்டி, இதுவரை எந்த இடைக்கால அறிக்கையும் அளிக்கவில்லை. அறிக்கை தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளதாக, தெரிவித்துள்ளனர்.கமிட்டி தலைவர் பர்கூரு ராமசந்திரப்பா, கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருப்பதால், அறிக்கை அளிப்பது தாமதமாகிறது.பாடப்புத்தகங்களை அச்சிட ஆறு தொகுப்புகள் கொண்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதால், அடுத்த கல்வி ஆண்டு புதிய பாடப்புத்தகங்களை கொண்டு வருவது சாத்தியமில்லை.எனவே, 2018 - 19ம் ஆண்டிலிருந்து புதிய பாடப்புத்தகங்கள் செயல்பாட்டுக்கு வரும். மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் வகையில், பாடப்புத்தகங்கள் அமைக்கப்படும். வல்லுனர் கமிட்டி, அரசுக்கு அறிக்கை அளித்த பின், ஆசிரியர்கள் தொகுதியின் எம்.எல்.சி.,க்களுடன் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்து, ஆலோசனை பெறப்படும்.மாநிலத்தில் எந்த அரசு பள்ளியும் மூடப்படாது. இவ்விஷயத்தில் யாருக்கும் சந்தேகமோ, அச்சமோ வேண்டாம். பெற்றோரும், மாணவர்களும் பயப்பட வேண்டாம்.அரசு பள்ளிகள் அபிவிருத்தி செய்யப்படும். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, 28 அம்சங்கள் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஏழைகள், வசதியானவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அரசு கடிவாளம் போடும். தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி கற்பிப்பு திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வீடு ஒப்படைக்க தாமதமா? வருது புதிய கட்டுப்பாடு!

உறுதி அளித்த தேதியில், வீட்டை ஒப்படைக்காவிட்டால், கட்டு மான நிறுவனங்கள், 10.9 சதவீத வட்டியுடன், பணத்தை திருப்பி தர வேண்டும். அதற்கேற்ற வகையில், புதிய ரியல் எஸ்டேட் சட்ட விதிகள், அடுத்த ஆண்டு மே மாதம் அமலுக்கு வருகின்றன.
வீடு, மனை விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்த, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு இயற்றியுள்ளது. முதற்கட்டமாக, யூனியன் பிரதேசங்களில், இந்த சட்ட விதிகள் அமலாகியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட, பிற மாநிலங்களில், 2017 மே முதல், இந்த விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவை, நடைமுறைக்கு வந்தால், மத்திய அரசு இறுதி செய்துள்ள வரைவின்படி, விற்பனை பத்திரங்கள் இருக்க வேண்டும்.
விதிமுறைகள் என்ன?
l கட்டுமான நிறுவனம், விற்பனை பத்திரத்தில் குறிப்பிட்ட தேதியில், பணிகளை முடித்து, பணம் செலுத்தியோரிடம், வீட்டை ஒப்படைக்க வேண்டும்l தாமதமானால், வீடு வாங்கியவர் செலுத்திய தொகைக்கு, 10.9 சதவீத வட்டி அளிக்க வேண்டும்l தாமதத்தால் விற்பனை ஒப்பந்தம் ரத்தானால், 45 நாட்களுக்குள், கட்டுமான நிறுவனம் பெற்ற தொகையை திருப்பித்தர வேண்டும்l 'ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டாம்' என, பணம் செலுத்தியவர் விரும்பினாலும், தாமத காலத்திற்கு வட்டி தொகையை பெற, அவர் தகுதி பெறுவார்l மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை காரணங்களால், கட்டுமான பணிகள் தாமதமானால், அத்தகைய சூழலில், பில்டர் அபராதம் செலுத்த வேண்டியதில்லைl வீடு வாங்குவோர், உரிய காலத்தில் தொகையை செலுத்தாவிட்டால், ஒப்பந்தத்தை, பில்டர்கள் ரத்து செய்யலாம் l ஒரு குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்குவோருக்கு, அதில், எத்தனை வீடுகள் கட்டப்படுகின்றன, பரப்பளவு, பொது பயன்பாட்டு இடங்கள், வாகன நிறுத்துமிட ஒதுக்கீடு போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்l புதிய பத்திரத்தை பதிவு செய்யும் போது, இந்த விதிகளை கட்டுமான நிறுவனங்களும், வீடு வாங்குவோரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த விதிகள், பணத்தை வாங்கி, மக்களை அலைக்கழிக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமையும்.

தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு

சென்னை:'தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின், directordge.tn@nic.in என்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 மறுகூட்டல் 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு, மறுகூட்டல் முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கான முடிவு, நேற்று வெளியானது.
தேர்வுத் துறை யின், www/tndge.in என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம். 'பதிவெண் இல்லாதவர்கள், ஏற்கனவே உள்ள மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை என, எடுத்துக் கொள்ள வேண்டும். 'மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்ககம் கூறியுள்ளது.

ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது. இதற்கு, டிச., 1 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும், 132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
குஜராத்தியில் எழுதலாம் : ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர். 

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும் வகையில்,
அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார். இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில்... மாற்றலாம்!:டிச., 30 வரை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யலாம்:பணப்புழக்கத்தை சீராக்க மத்திய அரசு நடவடிக்கை

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும், 'செல்லாத நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, பணம் பெற்றுக் கொள்ளலாம்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது போல, முன்னரே அறிவிக்கப்பட்ட படி, டிசம்பர், 30 வரை, பழைய நோட்டுகளை வங்கி களில், 'டிபாசிட்' செய்தும், புதிய கரன்சியாக எடுத்துக் கொள்ளலாம்.


கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்தை ஒழிக்க, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 8ல் அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுகளை, நவ., 24ம் தேதி வரை, வங்கிகளில் மாற்றிக் கொள்ள அவகாசம் தரப்பட்டது; டிச., 30 வரை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதலில், 'ஒரு நாளைக்கு, 4,000 ரூபாய் வரை மாற்றலாம்' என, அறிவிக்கப்பட்டது; பின், 2,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. மேலும், ஒருவர், ஒருமுறை மட்டுமே பணத்தை மாற்றும் வகையில் விரலில் மை வைத்து, விதிமுறை கடுமையாக்கப்பட்டது.


பணப் புழக்கம் குறைவு


வங்கிகளில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டதால், பணப் புழக்கம் குறைந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. எனினும் குறிப் பிட்ட சில சேவைகளுக்கு, டிச., 15ம் தேதி வரை, பழைய, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம்என, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 


இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:


செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து, பணம் பெறுவதற்கான அவகாசம் முடிந்து விட்டது. இனி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, டிச., 30 வரை, வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த முடியும்.


அரசின் நோக்கம்


ஏற்கனவே அறிவித்த படி, செல்லாத ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி கவுன்டர்களில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளாக பெற லாம். ஒருவர், அதிகபட்சமாக, 2,000 ரூபாய் மட்டுமே மாற்ற முடியும். 

பணப் புழக்கத்தை சீராக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வங்கி கணக்கு இல்லா தோர், இனியா வது வங்கி கணக்கு துவக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கிளை, மாநில தலைநகரங்களில் மட்டுமே உள்ளது.மற்ற பகுதிகளில் வசிப்போர், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டு களை, வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்து, பணமாக மாற்றலாம் என்பது மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழி.

டிஜிட்டல் பரிவர்த்தனை

லோக்சபாவில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பதிலில் கூறியதாவது:கரன்சி பணப் புழக்கத்தை குறைத்து, 'டெபிட், கிரடிட் கார்டு கள்' மூலம் பரிவர்த்தனை செய்வதை ஊக்கு விக்க, அரசு தீவிரம் காட்டுகிறது. கார்டு பணப் பரிவர்த்தனையை ஊக்குவித்தால் தான், கறுப்புப் பணம் கட்டுக்குள் வரும். எல்லா தரப்பு மக்களிடமும் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்த னையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 

ஆன்லைனில், 'ஷாப்பிங்' செய்வதை ஊக்கு விக்க, அரசு விரும்புகிறது. கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை ஏற்கப்பட்டுவிட்டால் வரி வரு வாயை பெருக்க முடியும். மின் கட்டணம் முதல் ஷாப்பிங் வரை, எல்லா வித பரிவர்த் தனைகளையும், ஒரே ஒரு எண் மூலம் செலுத் தும் ஒருங்கிணைந்த முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டில், 80 கோடி டெபிட் கார்டுகள் உள்ளன. இதில், 40 கோடி கார்டுகள், ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன. கார்டு பரிவர்த்தனை மூலம் கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும்; மோசடிகளை யும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.