யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/12/16

குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த உணவுகளை சாப்பிடுங்க

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தான மிட்டாய்

சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்

சிறந்த 25 பொன்மொழிகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டாரபகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்புமற்றும்

தமிழ் இலக்கண இலக்கியம்

தவளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன்

தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும்

தேசிய கீதம் - விளக்கம்

புதிய வருமான வரி திட்டம் 
4 லட்சம் வரை வரி இல்லை 
4 லட்சம் முதல் 10 லட்சம் =10% வரி
10 லட்சம் முதல் 15 லட்சம் =15%வரி 
15 லட்சம் முதல் 20 லட்சம் =20%வரி
20 லட்சத்திற்கு மேல் 30%வரி

INCOME TAX SLABS TO BE REVISED

Upto Rs. 4 lacs salary  = NIL tax
From 4 lacs to 10 lacs =  10% tax
From 10 lacs to 15 lacs = 15% tax
From 15 lacs to 20 lacs = 20% tax
Above Rs. 20 lacs          = 30% tax

- Source: CNBC awaazTV

போலீஸ் ஸ்டேஷன்களில் இனி ‘ரிசப்ஷனிஸ்ட்’..! 3,647 பெண் போலீசார் நியமனம்!!

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரிடம் கரடுமுரடான அணுகுமுறையை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல் நிலையங்களுக்கு புகாரளிக்க வருவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. மேலும்,
காவல் நிலையங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், காவல் நிலையங்களில் புகாரளிக்க வருவோரை இன்முகத்துடன் வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிய, 1,007 பெண் போலீசார் உள்ளிட்ட 3,647 பேர் காவல்நிலை வரவேற்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமிக்கப்பட்டுள்ள வரவேற்பாளர்களுக்கு, சென்னை காவலர் பயிற்சி பள்ளி, மாவட்டம், மாநகர தலைமை அலுவலகங்களில் 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், புகாரளிக்க வருவோரை வரவேற்று, குறைகளை கனிவுடன் கேட்டறிந்து மேலதிகாரிக்கு தெரிவிக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் தேவைகளை உணர்ந்து, நல்ல முறையில் அணுக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பாண்டியராஜன் பெருமிதம்!!

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை பெற்றுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 10,000 சதுர அடியில் ரூ.1.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன் ஆகியோர் திங்கள்கிழமை திறந்து வைத்தனர்.

பின்னர் விழாவில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது: தற்போதைய சூழலில் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் 5 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை 1 சதவீதம் அதிகரித்துள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 100 மாணவர்களில் 99 பேர் 6 -ஆம் வகுப்பையும், 95 சதவீதம் பேர் 10 -ஆம் வகுப்பையும், 80 சதவீதம் பேர் பிளஸ் 2 வகுப்பையும் நிறைவு செய்கின்றனர்.அமெரிக்காவில் கூட கல்லூரி படிப்பை 100 -க்கு 30 சதவீதம் பேர் மட்டுமே நிறைவு செய்யும் நிலையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 சதவீதம் பேர் கல்லூரி படிப்பை நிறைவு செய்கின்றனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இதை 50 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பள்ளிக் கல்வியில் மதிப்பெண்ணுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் மாணவர்களின் கற்கும் திறனை வெளிப்படுத்தச் செய்வது, படிப்பு தவிர தனித்திறனை வளர்க்கும் செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பிளஸ் 2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்தைஅறிமுகப்படுத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன என்றார் அவர். விழாவில் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலெக்ஸாண்டர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்பு..? மறுப்பு தெரிவித்துள்ள அரசு !!

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும். எதிர்க்கட்சியினர் நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பை
எதிர்த்து வரும் நிலையில் வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக இந்தியா டூடே சேனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



எப்போது அறிவிக்கப்படும்

உத்திர பிரதேச மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மத்திய அரசு வருமான வரி உச்சவரம்பை மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய வருமான வரி உச்சவரம்பு எப்படி இருக்கலாம்?

இந்திய டூடேவின் அறிக்கை படி 4 முதல் 10 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரியும், 10 லட்சம் வரியும், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 15 சதவீத வரியும், 15 முதல் 20 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 20 லட்சத்திற்கும் அத்திக்காக்க சம்பளம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டி வரும் என்று கூறப்படுகின்றது. இந்த புதிய வரி உச்சவரம்பு அமல்படுத்தப்பட்டால் வரி செலுத்துனர்கள் பெரிதும் பயனடைவர்.

Income Tax Slabs     

Income Tax Slabsநடப்பு வருமான வரி உச்சவரம்புபுதிய வருமான வரி உச்சவரம்புSlab (Rs. Lakh)Tax Rate (%)Slab (Rs. Lakh)Tax Rate (%)0-2.5No Tax0-4No Tax2.5-5104-10105-102010-151510 +3015-202020+30


நடப்பு வருமான வரி உச்சவரம்பு எப்படி உள்ளது?

இப்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீத வரியும், 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டும்.


மறுப்பு தெரிவித்துள்ள அரசு

இது குறித்து அரசு தரப்பு செய்தி தொடர்பாளர் ஃபிராங்க் நோரோன்ஹாவை கேட்ட பொழுது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரம் ஏஎன்ஐ இது வதந்தி ஆதாரமற்ற செய்தி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.


அருண் ஜேட்லி

டிசம்பர் 14-ம் தேதி மத்திய அமைச்சர் அருண் கேட்லி 2018 ஆண்டு பட்ஜெட்டில் பொது மக்களின் நேரடி வரி மற்றும் மறைமுக வரி இரண்டும் குறைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


நேரடி வரி மற்றும் மறைமுக வரி

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லது என்று அறிவித்ததை அடுத்து மறைமுக வரியை விட நேரடி வரி அதிகரித்து உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவிக்கின்றனர்.



அதே நேரம் மறைமுக வரி 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TRB REGULARISARTION ,TRB மூலம் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணிநாள் முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவே தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை*

எவ்வளவு வேண்டுமானாலும் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் : அருண் ஜெட்லி விளக்கம் !!

வரும் 30ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 ஆகிய பழைய நோட்டுகளை வங்கிகளில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால், ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய்களை மாற்றுவதற்கான கால

அவகாசம் முடிந்த நிலையில், அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு இம்மாதம் 30ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த சூழலில் பழைய ரூபாய் நோட்டுகளை இனி அதிகபட்சமாக 5000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘இம்மாதம் 30ம் தேதி வரை வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம். சில பகுதிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு சில சலுகைகள் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு விட்டது. மற்றபடி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கட்டுப்பாடு கிடையாது.
எனினும், ஒருவரே பல முறை தொடர்ந்து பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய வரும் போது சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, 5000 ரூபாய்க்கு அதிகமாக டெபாசிட் செய்யும் போது, காலதாமதத்திற்கான விளக்கம் கேட்கப்படும். மேலும், பழைய நோட்டுகளை ஒரு வங்கிக் கணக்கில மொத்தமாக ஒரேயொரு முறைதான் செலுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். சிறுவியாபாரிகளின் ஆண்டு வரவு செலவில்(டர்ன் ஓவர்) 8 சதவீதம் வருமானமாக கணக்கிடப்பட்டு, வரி விதிக்கப்பட்டு வந்தது. இதை 6 சதவீதமாக குறைக்க வருமான வரிச் சட்டப்பிரிவு 44ஏடி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.

வீடு, நிலம் விற்க முடியாமல் மக்கள் தவிப்பு !!

மொழிப் பாடத்திற்கு முன்னுரிமை இல்லை !!! - தமிழாசிரியர்கள் வேதனை

கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் !!

கருப்புப்பணம் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறி மத்திய நிதியமைச்சக புலனாய்வுத்துறை ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருந்தது.

வெள்ளிக்கிழமையன்றுதான் அந்த மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நான்கே நாட்களில் 4 ஆயிரம் புகார்கள் மின்னஞ்சலில் குவிந்திருக்கின்றன. மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் எனும் அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக நிதியமைச்சக புலனாய்வுத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி 
தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று மத்திய நிதியமைச்சக புலனாய்வு அமைப்பு blackmoneyinfo@incometax. gov.in எனும் முகவரியைக் கொடுத்து, கருப்புப்பணம் குறித்த தகவல்கள் இருந்தால் இந்த மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.
அதில் இருந்து அந்த முகவரிக்கு மின்னஞ்சல்கள் குவியத் தொடங்கின. இதுவரையில் நான்காயிரம் மின்னஞ்சல்கள் வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த மின்னஞ்சல்கள் மூலம் வரும் தகவல்கள் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் கணக்கில் வராத பழைய மற்றும் புதிய நோட்டுகள் சுமார் 100 கோடி வரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமரின் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் நிறைய டெபாசிட்டுகள் செய்யப்பட்டுள்ளன. முறையான கணக்குகளுடன் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தல் பெரும் தொகை ஏதேனும் டெபாசிட் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் வங்கிகள் நிதியமைச்சக புலனாய்வுத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஸ்வைப் மிஷின்' மூலம் காஸ் பில் : புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு !!

ஸ்வைப் மிஷின்' மூலம், காஸ் சிலிண்டர் பில் செலுத்தும் முறை, புத்தாண்டு முதல் அமலுக்கு வர இருக்கிறது. 'ரூபாய் நோட்டுகள்
செல்லாது' என்ற அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பணமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


ஏற்கனவே, பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு, 'ஸ்வைப் மிஷின்' மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் முறையை, அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் அமல்படுத்தி உள்ளன. இனி, வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் வாங்கும் போது, அதற்கான பணத்தை, 'ஸ்வைப் மிஷின்'கள் மூலம், வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த முறை, புத்தாண்டு முதல் படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிகளிடம், 'ஸ்வைப் மிஷின்' கேட்டு காஸ் ஏஜென்சிகள் விண்ணப்பித்துள்ளன. இனி, காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் ஒவ்வொரு ஊழியரின் கையிலும், 'ஸ்வைப் மிஷின்' இருக்கும். காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் போதே, இந்த மிஷின் மூலம் அதற்குரிய பில் தொகையை பெற்றுக் கொள்வர்.

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் !!

ஆசிரியர் நியமன தகுதி தேர்வில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆலோசனை கூட்டம்


பெரம்பலூரில் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தாஜ்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் அருள்ஜோதி வாழ்த்தி பேசினார். மாநில பொது செயலாளர் குமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

ஆசிரியர் நியமன தகுதி தேர்வான டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற தேர்வுகளில் பி.எட் கணினி அறிவியல் படித்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற பாடப்பிரிவுகளுக்கு இணையாக கணினி அறிவியல் பாடம் பிரதான திட்டமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் கணினி அறிவியல் பாடத்திற்கென கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

காலிபணியிடம்

இந்த நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வி இணை இயக்குனரின் (தொழிற்கல்வி) ஆணைப்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் 1-11-2016 அன்று கணினி அறிவியல் ஆசிரியர் பணி காலியிடம் குறித்து அறிக்கை கோரப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. எனவே பி.எட் கணினி அறிவியல் தகுதியுள்ள ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நியமனம் செய்ய வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் மாநில துணை செயலாளர் புகழ், தலைமை ஆலோசகர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மருது நன்றி கூறினார்.