யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/1/17

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

TNPSC:குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது.இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று, இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்!

  ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிப்பு என்ற விஷயம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் மாநில முதலைமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரை அறிக்கையானது கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.

25/1/17

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன்இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.


இந்த புதிய அம்சமானது, பயனர்களின் எந்த இணைப்பும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் கூட பிற கருவிகளை ஒரே கூகுள் அக்கவுண்ட் மூலம் இணைக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் கூகுளின் இந்த அம்சத்தை Wi-Fi மற்றும் Hotspot அம்சத்தின் ஒரு பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்.
இந்த சிறப்பு அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை இணைத்துள்ள கூகுள் அக்கவுண்ட்டில் அவர்களின் Tablets-ஐயும் இணைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!

தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய் 750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் . தமிழகத்தில் பல
இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில் 750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில் ....நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகை ஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில் விசாரணைக்கு வரும் .....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......
தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.

ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.


அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

'பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 


மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், இன்று முதல், ஜன., 29 வரை, தங்கள் ஹால் டிக்கெட்டை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம்.இதற்கு, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்த வேண்டும். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்றவை குறித்து, தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாதோருக்கு, தேர்வு எழுத அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி அப்கிரேட் செய்தி போலியானது: மக்களே உஷார்!

ரிலையன்ஸ் ஜியோவில் உங்களது தினசரி டவுன்லோட் அளவை அதிகரிக்க வேண்டுமா? ஜியோ 4ஜி அப்கிரேஷன் என்று வரும் செய்தி போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது வெறும் போலி மட்டும் அல்ல என்றும், இந்த செய்தியின் மூலம், மக்களின் முக்கிய தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள், உங்களது தினசரி இணைய பயன்பாட்டை 1 ஜிபியில் இருந்து 10 ஜிபிக்கு அதிகரிக்க வேண்டும் என்றால் இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என்று ஒரு லிங்க் வருகிறது.

அதனை க்ளிக் செய்தால் அதில், பயனாளரின் பெயர், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை கேட்கப்படுகிறது. அனைத்தையும் பதிவு செய்து சப்மிட் செய்தால், இந்த லிங்க்கை உங்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் அல்லது குறைந்தது 10 வாட்ஸ் அப் குரூப்பில் பகிரவும் என்று வாசகம் வருகிறது.
அந்த லிங், போலியான சலுகைகளை அறிவித்து, பயனாளர்களை உள்ளே நுழைய வைப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த லிங்கில், ரிலையன்ஸ் அல்லது ஜியோவுக்கு இந்த லிங்க் எந்த வகையிலும் தொடர்பில்லை என்றும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இதுபோன்ற போலியான லிங்குகளை நம்பி, பயனாளர்கள் தங்களது தகவல்களையும், அதை நண்பர்கள் குழுவிலும் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம்: வணிகர் சங்கம்.

மார்ச் 1 முதல் பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட வெளிநாட்டு குளிர் பானங்களை விற்கமாட்டோம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.


மேலும் இதுகுறித்து விழுப்புரத்தில் அவர் கூறியதாவது: -பீட்டா என்ற அமெரிக்க அமைப்பு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த நாட்டு குளிர்பானங்களை குடிக்க மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் கோஷமாக முன் வைத்தனர்.

அவர்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால் நிகழ்ந்த மற்றொரு நன்மையாக இது பார்க்கப்படுகிறது.

சுமார் 10 வருடங்கள் முன்புவரை உள்ளூரில் குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்து பல வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வந்தனர். சோடாக்களையும் விற்று வந்தனர். ஆனால் இப்போது பன்னாட்டு குளிர்பானம் வந்த பிறகு மொத்தமாக உள்ளூர் குடிசை தொழில்கள் அழிந்துபோயின என்பது குறிப்பிடத்தக்கது.

SMC மூன்று நாட்கள் பயிற்சி பற்றிய செய்தி வருகின்ற *( 30.1.2017) ( 31.1.2017) ( 1. 2. 2017)*- மொத்தம் மூன்று நாட்கள் *( 3 DAYS ) பயிற்சி* நடைபெற உள்ளது .

SMC மூன்று நாட்கள் பயிற்சி* நடைபெறும் இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

மேற்கூறிய பயிற்சிக்கு
தங்கள் பள்ளியின் சார்பில்
*( 1 ) பள்ளியின் தலைமை ஆசிரியர்*
*( 2 ) SMC தலைவர் - பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்*
*( 3 ) ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்*


 ( அல்லது )
 *ஏதேனும் SMC உறுப்பினர்*

ஆக *மொத்தம் மூன்று பேர் ( 1  HM +  2 SMC members )*
 இப்பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் .

*மேற்கூறிய பயிற்சிக்கு வரும் போது  ஈராசிரியர்பள்ளியில்*
*( 1 HM + 2 SMC members ) - Total 3 members*

*அதற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள பள்ளியில்*
*( 1 HM + 3 SMC members) - Total 4 members*

அனைவரும் தங்கள் *STAMP SIZE SIZE PHOTO*
 இல்லாத நபர்களுக்கு *PASSPORT SIZE PHOTO*  எடுத்து வர வலியுறுத்தவும் .

SMC பயிற்சி நடைபெறும் இடங்கள்  ஆசிரியர் பயிற்றுநரைத் BRTE தொடர்பு கொண்டு    
 தெளிவு பெற வேண்டப் படுகிறது.

குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

சென்னை: அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது. இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று,
இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

திடீர் விடுமுறைகளால் தேங்கிய பாடங்கள்

பொங்கலுக்கு பின் அறிவிக்கப்பட்ட, திடீர் விடுமுறைகளை சமாளிக்க, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, தினமும் கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பரில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மறைவு வரை, பல நாட்கள் திடீர் விடுமுறை அளிக்கப்பட்டது. பின், 'வர்தா' புயல் தாக்குதலால், பள்ளிகளுக்கு, மூன்று நாட்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டது.
பின், ஜனவரியில் நிலைமையை சமாளிக்கலாம் என, பள்ளி நிர்வாகத்தினர் முடிவு செய்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நிற்காமல், ஜல்லிக்கட்டு போராட்டம், பந்த் மற்றும் கலவரம் என, நான்கு நாட்கள் வரை, பள்ளிகள் முறையாக இயங்கவில்லை.அதனால், பல பள்ளிகளில் பாடங்கள் நடத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருப்புதல் தேர்வு மற்றும் சிறப்பு பயிற்சியும் நடத்த முடியவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க, தினமும் வழக்கமான காலை, மாலை சிறப்பு வகுப்புகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் பாடம் நடத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், சிறப்பு வகுப்புகளை நடத்த, பள்ளிகள் முடிவு செய்துஉள்ளன.

அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு மற்றும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பணிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாமலும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு பணிகளை முடிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவிகிதம் குறைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பொதுவாக, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்குவது மட்டுமே அங்குள்ள பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை பணி. கல்வி உரிமை சட்டப்படி, அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு, பேரழிவு மீட்பு நடவடிக்கை, தேர்தல் பணிகள் ஆகியவற்றில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால், அத்தகைய கல்வி பணியில் இருக்கும் ஆசிரியர்களை கால்நடை மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ரேஷன் கார்டு சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் பொதுப் பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அந்த ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் நேரம் குறைவதுடன், மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதில் நாட்டம் குறைந்துவிடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. இதன்மூலம் வரும் பொதுத் தேர்வில் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகளவில் குறையலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து 10 மற்றும் பிளஸ் 2 பள்ளி மாணவர்களிடம் பேசியபோது, ‘அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி தவிர, மற்ற பணிகளில் முழு நேரத்தையும் செலவிடுகின்றனர்.

கடந்த அரையாண்டு தேர்வுகளில் நாங்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை. மூன்றாம் பருவ பாடங்களும் நிறைவு பெறவில்லை. இதே நிலை நீடித்தால், பொதுத் தேர்வில் பெயிலாகி விடுவோம் என்ற அச்சம் மாணவர்களிடம் நிலவி வருகிறது. இதனால் எங்களை தனியார் டியூஷன் சென்டர்களில் அதிக பணம் செலவழித்து பெற்றோர் சேர்த்துள்ளனர். நாங்கள் தொடர்ச்சியாக அலைவதால், எங்களுக்கு பாடங்களில் உரிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று மாணவர்கள் கூறுகின்றனர். இதேபோல் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி பணி மட்டுமல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது உள்ளிட்–்ட அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. ‘தனியார் பள்ளிகளில் பொது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களை கூடுதலாக ஒரு மணி நேரம் அமரவைத்து சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் எங்களுக்கு ஒரே நாளில் அனைத்து பாடங்களையும் படிப்பதால் கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது’ என்று தனியார் பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சாராத மற்ற பணிகளை வழங்கி, அவர்களின் கல்வி நேரம் வீணடிக்கக்கூடாது’ என பிரதமர் நரேந்திரமோடி ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் குழு சமீபத்தில் ஆய்வு நடத்தி மத்திய மனிதவள அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், ‘பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி அல்லாத மற்ற பணிகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும். அவர்களின் கவனம் கல்வியை தவிர, வேறு எதிலும் செல்லக்கூடாது’ என்று குழு பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கான புதிய பணி விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் முதல் வாரத்தில் துவங்கும் என்று தமிழக கல்வித்துறை ஏற்கெனவே அட்டவணை வெளியிட்டுள்ளது.‘இன்னும் ஒரு மாதமே நடுவில் உள்ள நிலையில், பொது தேர்வுக்கு தயாராகும் அனைத்து பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்க, சம்பந்தப்பட்ட கல்வித்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?’ என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். விடை கிடைக்குமா?

NMMS EXAM - Instruction Regarding Director Proceedings..

'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாகசெயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.இதுதொடர்பாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் அரசு பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறைகள் நிறுவப்பட்டு வருகின்றன.சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்த குடும்பங்களைச்சார்ந்த குழந்தைகள் பயன் பெறும் வகையில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தி வருகிறது என ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு

தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

காலியிட விவரம்: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 170 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 167 செ.மீ.,) இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., மார்பு விரிவாக்கம் குறைந்த 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் உயரம் 159 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 157 செ.மீ.,)இருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:தேர்வு செய்யப் பட்ட 284 அஞ்சல் நிலையங்களில், ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ. 135.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மதிப்பெண் விவரம்: மொத்த மதிப்பெண்கள் 100 ( எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள்,என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள்)

தேர்ச்சி முறை: முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முழு விவரங்களுக்கு:http://www.tnusrb.tn.gov.in/