யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/3/17

ஜியோ பிரைம் VS ஜியோ - எது பெஸ்ட்

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள்
என்ன ? சாதரன வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் சலுகைகள் மற்றும் பிளான் விபரங்களுடன் ஒப்பீட்டு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

ஜியோ பிரைம் VS ஜியோ
ஜியோ4ஜி சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிரைம் உறுப்பினர் திட்டத்தின் கீழ் ரூ.99 ரீசார்ஜ் செய்யும் பிளான் இன்று முதல் ஜியோ இணையதளம் ,மைஜியோ ஆப் மற்றும் ரீசார்ஜ் மையங்களில் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ரூ. 99 கொண்டு ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்ன நடக்கும் ? உங்கள் ஜியோ கட்டணம் எவ்வளவாக இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.
முன்பு ஜியோ அறிமுகப்படுத்தி திட்டத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல்அடிப்படை ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம். அதுவே நீங்கள் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் எனில் இரு மடங்கு கூடுதல் சலுகையை பெறலாம்.

நீங்கள் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் எனில் உங்களுக்கு ரூ. 499 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2 GB அதிவேக டேட்டா அதன் பிறகு 128 Kbps  வேகத்தில் பொதிகளை பெறலாம் . நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் மட்டும் என்றால் 28 நாட்களுக்கு வெறும் 5 ஜிபி டேட்டா மட்டுமே பெறலாம். மற்ற விபரங்களை படங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கான தகுதி காண் (weitage mark) முறையை ரத்து செய்யக் கோரிக்கை:

தமிழகஅரசு நீட் (NEET) தேர்வினால் ஏழைகள் & கிராமத்தினர்
பாதிக்கபடுகிறார்கள் என்று ரத்து செய்தது.

அதேபோல் TET தேர்விலும்
தகுதிகாண் முறையினால்
பெருமளவில் தமிழக மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களின் நிலை:


 * அன்று அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியரின் பற்றாகுறை.    
*அப்பொழுது  சாப்பாட்டிற்கு கூட வழிஇல்லை, ட்யூசன் சென்றும் படிக்க முடியாதநிலை.
*செய்முறை மதிப்பெண்கள் மிக குறைவு.
*அன்று காலை மாலை வகுப்புகளும் இல்லை.
*90% அரசு பள்ளிகளில் 10,12ம் வகுப்பு, மாணவர்களின் முதல் மதிப்பெண்கள்  350, 750 மட்டுமே. இம்மதிப்பெணணுக்கும் கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிபாருங்கள்.
*அன்று தேர்வு எழுதும் போதும் வினாத்தாள் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
*நகரங்களில் சென்று படிக்கவும் போதிய வசதி இல்லை.
*பெருமளவு பெற்றோர் படிக்கவில்லை வீட்டுப்பாடம் செய்ய இயலாதநிலை.
* நோட்டுப்புத்தகம் கூட வாங்க முடியாத நிலை.
*கிராமப்புற மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று சிறுகசேமித்த அப்பணத்தின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி், கல்வி பயின்றுள்ளனர்.
*முக்கியமாக ஒன்று  'இன்று பள்ளிக்கு படிக்க செல்கிறார்கள், ஆனால் அன்று நாங்கள் பட்டினி என்னும் பசிப்பிணியை போக்க' பள்ளிக்கு சென்றோம்.

*இன்று இருக்கும் சமச்சீர் கல்வியும் அன்று இல்லை.

*இன்னும் கொடுமை என்னவெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பாடங்கள் இப்போது இல்லை. நாங்கள் TET தேர்விற்கு எல்லாமே புதியதாக படிக்க வேண்டிய கட்டாயநிலை.

*ஆனால் தற்போது சமச்சீர் படித்திருப்பவர்களுக்கு இதுவும் சாதகமாகவே அமைந்துள்ளது.
*இப்போது படிப்பவர்களுக்கு TET ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ! ஆனால் அப்போது .......?

*இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் மட்டுமே பெரும்பாதிப்படைவர்.
பள்ளித்தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன, என்று  TET தேர்வை கொண்டு வந்த அரசு, மீண்டும் பள்ளி மதிப்பெண்களை கணக்கில் கொள்வது எந்த விதத்தில் ஞாயம் ஆகும்.

*மாவட்ட தேர்ச்சி விகிதத்திற்காக,   தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைகள் சொல்லி கொடுப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக மாணவர்களே கூறுவது அதிர்ச்சியல்ல அனைவருக்கும் தெரிந்த அவளநிலை.
இப்படிபட்ட நிலை அன்று இல்லை.

தகுதிகாண் நடத்துவதன் மூலம் நாங்கள் TET தேர்வில் 150 க்கு 100மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை,
 *ஆனால் தற்போது படிக்கும் மாணவர்கள் தகுதிகாண் மூலம் TET தேர்வில் 90 விட குறைவான மதிப்பெண்கள் மட்டும் எடுத்து, சுலபமாக தகுதி பெற்று விடுகிறார்கள்.

*அன்று பல கடினமான சூழ்நிலைகளில் கல்வி கற்றனர்.

*தற்போது எல்லாேமே மாறிவிட்டன.
 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.
தமிழகஅரசின் பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.


*பனிரெண்டாம் வகுப்பில்  மதிப்பெண்கள்
90% :
அன்று 650/1200  கீழ், முதல் மதிப்பெண் 750.
இன்று 1000/1200 , முதல் மதிப்பெண்1199.

*தகுதி காண் மதிப்பெண்களை கொண்டுவந்த கல்வியாளர்களை தயவாய் கேட்டுக்கொள்வது, இதன் மூலம்  பல ஆயிரகணக்கான குடும்பங்கள் மற்றும் சந்ததிகள் சமூகத்தில் மேலே எழமுடியாமல் பாதிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

*ஏழைகளை நினைத்துப்பாருங்கள்.

மேற்கூரிய அனைத்தையும்
கருத்தில் கொண்டு  தமிழகஅரசு தகுதிகாண் முறையை ரத்து செய்ய வேண்டும்.

*தகுதிகாண் முறை குறித்து ஆலோசனை  நடைபெறுகிறது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

*எங்கள் வாழ்வு தமிழக அரசு கையில்


*ஏழைகள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உடனடிநடவடிக்கை எடுக்குமாறு  மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

IGNOU - GENUINENESS CERTIFICATE FEE HIKE Rs.100/- to 200/-

இக்னோ உண்மைத்தன்மை சான்று கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வால் ரூபெல்லா தடுப்பூசிக்கு சிக்கல்

திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி ஒன்று முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்தனர்.இது குறித்து அரசு விளக்கம் தந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.கிராம புற பள்ளிகளில் இன்னும் பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால், மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுபட்ட பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வால் சிக்கல் : தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. மார்ச் 8ல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால் தேர்வு மையம் உள்ள பள்ளிகளில் காலையில் மாணவர்கள் நுழைய முடியாது. பகல் 2 மணிக்குத்தான் மாணவர்கள் வருவார்கள். தேர்வு நடக்கும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினரும் நுழைந்து தடுப்பூசி வழங்க முடியாது. இந்த சிக்கலால் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளால் பள்ளிகளில் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இந்நிலையில் மார்ச் 14 வரை இந்த திட்டத்தை நீட்டித்தும் பயனில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம், என்றார்

பள்ளி குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில், குழந்தைகள் கடத்தல், பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நர்சரி பள்ளிகளில் படிக்கும், 10 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், அவர்களை தனியாக விடக்கூடாது என்றும், பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் பெற்றோரை அழைத்து, ஆலோசனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளை, பெற்றோரே வந்து அழைத்து செல்ல வேண்டும்; தினமும் ஒரு உறவினர், நண்பர் என, யாரையாவது பள்ளிக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது; ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் குழந்தைகள் என்றால், அதன் டிரைவர் பற்றிய முழு தகவலையும், பெற்றோர்
உறுதி செய்ய வேண்டும் என, பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

பிளஸ் 2 தேர்வு துவங்கியது : அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்குமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.பிளஸ் 2 தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில், 407 உட்பட மொத்தம், 2,434 மையங்களில் தேர்வு நடந்தது. அனைத்து மையங்களிலும்,
மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர்; முதலில், பிரார்த்தனை நடந்தது. பின், தேர்வு நடைமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்வு துவங்கியதும், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு, 'சீல்' உடைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று, மொழி பாடத்திற்கான முதல் தாள் தேர்வு நடந்தது. அதாவது, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச், மலையாளம், ஹிந்தி, உருது, அரபிக், சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் ஆகிய, 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பணிகளை, அமைச்சர் செங்கோட்டையன், செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்,'' என்றார்.

'நீட்' தேர்வு விலக்கு கிடைக்குமா? : அமைச்சர்களுக்கே குழப்பம்

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது. வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்க்க, மே, 7ல், 'நீட்' தேர்வு நடக்கிறது.


இதற்கான விண்ணப்ப பதிவு, ஜன., 31ல் துவங்கி, மார்ச், 1ல் முடிந்தது. ஆனால், தமிழகத்தில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவே உள்ளனர்,'' என்றார். 'தேர்வு உண்டா' என, தெரியாததால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதில் அளிக்காமல் மவுனமாக உள்ளார். எனவே, தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு, விலக்கு கிடைக்காதோ என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதில், தெளிவான நிலை தெரிந்தால் தான், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் என்றும், பெற்றோர் தெரிவித்துஉள்ளனர்.

சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த அதிரடி..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வரவில்லை.
இந்நிலையில் ஜியோவின் அடுத்த அதிரடியாக அதிவிரைவில் 5ஜி சேவை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கதிகலங்கி உள்ளன.
ஜியோவின் 4ஜி இலவச சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் தயாரித்து வழங்கவுள்ளதாகவும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ஜியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம்! - பள்ளி கல்வி அமைச்சர்

காலி ஏற்படும் 3 ஆயிரம் ஆசிரிய பணியிடங்களில், முந்தைய TNTET  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம் செய்யமுதல் அமைச்சரிடம் கலந்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்தார்

கற்றல் கையேடு +12

2/3/17

ஊதியக் குழு; விரிவான விளக்கம்...

ஆண்டுதோறும் நம்மிடையே வந்து, நம்மை அமைதிப்படுத்தி, அலங்கரித்து, அழகு பார்க்கும் கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான் பண்டிகைகளைப் போல், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து அரசு ஊழியர்களை அடுத்த தளத்துக்கு இட்டுச்செல்ல அமைக்கப்படும் வைபவம் தான் ஊதியக்குழு!

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாளில்
நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

TRB - TET - 2017 : விண்ணப்பங்களை விற்பனை செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெறும் நாட்கள் தொடர்பான தருமபுரி CEO செய்தி வெளியீடு.

TRB - TET - 2017 : விண்ணப்பங்களை விற்பனை செய்தல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெறும் நாட்கள் தொடர்பான திண்டுக்கல் மாவட்ட CEO செய்தி வெளியீடு.



ஏடிஎம்களில் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று HDFC, ICICI வங்கிகள் அறிவிப்பு...

டெல்லி: ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் ரொக்கப் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்க
ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிகள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் இலவசம் என்றும், அதில் பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது என இரண்டும் அடங்கும் என்றும் அதற்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் தொகையைப் பொருத்துக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் ஐசிஐசிஐ வங்கியும் ஐந்தாவது பணப் பரிவர்த்தனையில் இருந்து 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அதிகபட்ச பணப் பரிவர்த்தனை வரம்பு எதையும் அந்த வங்கி குறிப்பிடவில்லை. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல்

அமலுக்கு வந்துவிட்டதாக ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் அறிவித்துள்ளன.


இந்த2 வங்கிகளும் ஏற்கனவே 5 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் ரூ.100 கட்டணம் வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியரிங் நுழைவு தேர்வு 2018ல் நாடு முழுவதும் அமல்

இன்ஜினியரிங் படிப்பில் சேர, 2018ல், பொது நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்படும்' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்
கவுன்சில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங், மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுத வேண்டியதில்லை. மருத்துவ படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு தமிழக அரசின் சார்பில், விலக்கு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும், இன்ஜினியரிங் படிப்புக்கு, பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னை வந்துள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுதே, இதுகுறித்து கூறியதாவது:

மாநில அரசு கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள், தனியார் பல்கலைகள் என, பல சேர்க்கை முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனால், மாணவர்கள் பல்வேறு நுழைவு தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது.

இந்தநிலையை மாற்ற, இன்ஜினியரிங் படிப்பில், அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரி, பல்கலைகளை இணைத்து, அவற்றில் சேர்வதற்கு, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்த உள்ளோம். இதற்காக, மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். வரும், 2018 - 19ம் கல்வி ஆண்டில், இந்த நுழைவு தேர்வு நடத்தப்படும்.

அதேபோல், கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணத்தை வரைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

தமிழக பாடத்திட்டம் சரியில்லை முன்னாள் முதல்வர் பன்னீர் ஆதங்கம்

தமிழக பாடத்திட்டம், மத்திய அரசுக்கு இணை யாக இல்லை' என,
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மாணவ, மாணவியருக்கு இலவச கல்வி சேவை அளிக்கும், 'அம்மா கல்வியகம்' எனும் புதிய இணையதள துவக்க விழா, நேற்று நடந்தது. அதை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.விழாவில் பேசியதாவது:

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு முன்னாள் செயலர், அஸ்பயர் சுவாமிநாதன்: இந்த இணையதளத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மேற்படிப்பு சேரவும், நுழைவுத் தேர்வு எழுதவும், இலவச பயிற்சி பெறலாம். திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன், வேலைவாய்ப்பு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்: ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கு பயிற்சி பெற, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தற்போது துவக்கப்பட்டுள்ள இணையதளத்தில், இலவசமாக பயிற்சி பெறலாம்.

மேலும், ஐ.ஏ.எஸ்., தேர்வு, வங்கித் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு போன்றவற்றுக்கும், இணையதளம் மூலம் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம்.

முன்னாள் அமைச்சர் பொன்னையன்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தரமான பாடத்திட்டம் உள்ளது. ஆனால், மாநில அரசு பள்ளிகளில், நல்ல பாடத்திட்டம் இல்லை. தரமான பாடத்திட்டத்தை, அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: ஜெ., ஆட்சியில், மாநில வருவாயில்,

நான்கில் ஒரு பங்கு கல்விக்கு ஒதுக்கப்பட்டது. மாணவர் களுக்கு, 16 வகையான கல்வி உபகரணங்களை, இலவசமாக வழங்கினார்.
ஐ.ஐ.டி., போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்கப்படுகிறது. இதனால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. தமிழக பாடத்திட்டம், மத்திய அரசு பாடத்திட்டத்திற்கு ஏற்ற வகையில் இல்லை.

இந்நிலையில், தற்போது துவக்கப்பட்டுள்ள, இலவச இணையதள சேவை, மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கிராமப்புற மாணவர்கள், நேரடியாக பயிற்சி பெறும் சூழலை, இந்த இணையதளம் ஏற்படுத்தி உள்ளது.


நீட்' தேர்வுக்கும், இந்த இணையதளம் மூலம் பயிற்சி பெறலாம். வேலைவாய்ப்பு பெறவும் கல்வியகம் உதவும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

இணையதள முகவரி


இலவசகல்வி சேவைக்காக துவக்கப்பட்டுள்ள, 'அம்மா' கல்வியகத்தின் இணையதள முகவரி, www.ammakalviyagam.in இந்த இணையதளத்தில், முதலில், தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவற்றுக்கு தனித்தனியே, பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய தேர்தல் பிரிவினருக்கு உத்தரவு

ஜன., 5ல் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலை அடிப்படையாக
கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தல்: கடந்தாண்டு, அக்., 17, 19ல் இரு கட்டங்களாக, உள்ளாட்சி தேர்தல் நடக்க இருந்தது. இதை எதிர்த்து, தி.மு.க., தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. தற்போது, 'மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஜன., 5ல் மத்திய தேர்தல் கமிஷன் வெளியிட்ட, இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் பெற்று, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
ஓட்டுச்சாவடிகள்: அடுத்த கட்டமாக, ஓட்டுச்சாவடிகளை தயார்படுத்துதல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: புறநகர் பகுதியில், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி, நகர் பகுதியில், 1,400 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம் தயார்படுத்தப்படும். புதிதாக வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் என, இரண்டும் இருப்பதால், ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து முடித்ததும், தேவையான ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம்

பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். மாணவர்கள், நம்பிக்கையோடும், தளராத மனதோடும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கல்வியிலும், சமூக விழிப்புணர்ச்சியிலும், தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு, ஜெ., காட்டிய நல்வழியில், அரசு பாடுபடும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, 'கேரியர் கைடன்ஸ் கவுன்சிலிங்' என்ற பெயரில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்படும். 32 மாவட்டத் தலைநகரங்கள்; 124 நகராட்சிகள்; 385 ஊராட்சி ஒன்றியங்கள் என, 541 இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஏப்., 6, 7 ஆகிய நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள் குறித்தும், போட்டித்தேர்வு குறித்தும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆலோசனைகள் வழங்கப்படும்.அரசை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக, ஜெ., ஆட்சியில் சிறப்பான முறையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். தமிழகம், கல்வித் துறையில், இந்தியாவில் முதன் மாநிலமாக திகழ்வதற்காக, புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்.பாடத்திட்டங்களை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒருவாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும். தேர்வுத் துறையில் காலியிடங்களை நிரப்புவது குறித்து, பரிசீலனை செய்யப்படும்.மாணவ, மாணவியர் எதிர்காலத்திற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்கள், நிதி நிலைக்கேற்ப நிரப்பப்படும்.

டெட்' தேர்வு விண்ணப்பம்: ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும் ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம் டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு

ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,
அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.