யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/4/17

பள்ளிப் பாடத்தில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்க்கை வரலாறு: வெங்கய்ய நாயுடு யோசனை

தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் படைத்த கீர்த்தனைகள் பள்ளி பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு யோசனை கூறினார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் சேவா அறக்கட்டளை மற்றும் சேவா சமிதி சார்பில் கர்நாடக சங்கீத இசை மேதை தியாகராஜ சுவாமிகளின் 250-ஆவது ஜயந்தி விழா மற்றும் மும்மூர்த்திகள் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசியது: இளம் தலைமுறையினர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். பல விதமான பாரம்பரியங்களைக் கொண்ட நாம் இந்தியர்களாக ஒன்றுபட்டு இருக்கிறோம். ஆனால் அந்நியர்களின் படையெடுப்பு, சுரண்டல் காரணமாக நமது பாரம்பரியத்தை இழந்திருந்தோம். தற்போது அதிலிருந்து மீண்டு பாரம்பரியத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.

குற்றமாகப் பார்க்கப்படும் பாரம்பரியம்: நாட்டிலேயே தமிழகம் மட்டும்தான் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. ஹிந்து என்ற சொல் நமது பாரம்பரியத்தில் அங்கம் வகிக்கும் முக்கியமான சொல். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த வார்த்தை அரசியலுக்காக குற்றமாகப் பார்க்கப்படுகிறது.

இசை மனதுக்கு ஆத்ம திருப்தியை வழங்குவதோடு, சாந்தம், பரவசம், ஆன்மிகம் போன்றவற்றை நமக்கு அளிக்கிறது. அத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தை தியாகராஜர், சியமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் ஆகியோர் நமக்கு வழங்கியுள்ளனர். இத்தகைய பாரம்பரிய சிறப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தியாகராஜ சுவாமியின் அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்யும் என்ற அமைச்சர் வெங்கய்ய நாயுடு விழா மலரையும் வெளியிட்டார்.

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீ விஜயேந்திர ஸ்வாமிகள் ஆகியோர், இசை பாரம்பரியமாக இருந்து வருகிறது. வட மாநிலத்தவரும் கற்றுக் கொள்ளும் வகையில் இத்தகைய சிறப்பு மிக்க சங்கீதத்தைப் பரப்ப வேண்டும். அத்துடன் பக்தி மார்க்கங்கள் வளர வேண்டும் என்றனர்.

தனியார் பள்ளி மாணவர் சேர்க்கை: அரசு இ-சேவை மையம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் விண்ணப்பிக்க விரும்புவோர், அரசு இ-சேவை (இணைய சேவை) மையங்களை நாடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உரிய முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்-லைன் முறை பின்பற்றப்படுகிறது.

என்னென்ன இணைப்பு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது மாணவரின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் ஆவணம் 400 கே.பி.,க்கு மிகாமல் இருப்பது அவசியம்.
இதனை கிராமப்புறங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டில் இருந்தபடியே செய்வது சிரமம். இந்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, அரசு இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கும் நடைமுறையை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
என்ன செய்ய வேண்டும்: அரசு இ-சேவை மையத்துக்குச் சென்று விண்ணப்பிப்பதற்கு முன்பாக, நாம் தேர்ந்தெடுத்துள்ள பள்ளிகளின் பட்டியலை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்கும்போது ஐந்து பள்ளிகள் வரை விருப்பம் தெரிவிக்கலாம்.

எனவே, இணைய சேவை மையத்துக்குச் சென்று பள்ளிகளைத் தேர்வு செய்வதற்குப் பதிலாக, வீட்டிலேயே பள்ளிகளைத் தேர்வு செய்து பட்டியலிடுவது சிரமத்தைத் தவிர்க்கும்.
இ-சேவை மையங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எடுத்துச் சென்றால் அங்கேயே ஸ்கேன் செய்து, நிர்ணயிக்கப்பட்ட அளவில் அதனை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
மேலும், அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கும்போது நாம் சரியான முறையில் தகவல்களைத் தெரிவித்து அவை உரிய வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்த பிறகே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.

TNTET - 2017 தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல்

ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், தாள்-1 தேர்வுக்கு, 8,171 பேரும், தாள்-2 தேர்வுக்கு, 15 ஆயிரத்து, 671 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்காக, 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பில், 1,300 ஆசிரியர்கள், பிற துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஈரோட்டில் கடந்த, இரு நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது: தேர்வு எழுதுவோர், தங்கள் உடையில், உடலில் மறைத்து ஏதேனும் எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்டறியும் விதமாக, உடலை தடவி பார்த்து முழுமையாக பரிசோதனை (பிரிஸ்கிங்) செய்யப்படும். தமிழகத்தில் தேர்வுக்கு இம்முறையை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஆண்களுக்கு ஆண் போலீசாரும், பெண்களுக்கு பெண் போலீசார், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவியர் பயன்படுத்தப்படுவர்.

 தேர்வு எழுதுவோர் மட்டுமின்றி, அறை கண்காணிப்பாளர்களும் எலக்ட்ரானிக் வாட்ச், பேஜர், மொபைல்போன், கால்குலேட்டர் மட்டுமின்றி கர்சீப்பையும் அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது.ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள், வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கப் பெறாதவர்கள், வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து, பெற்று வந்தால் தேர்வு எழுதலாம். தேர்வு நடக்கும் அறைக்குள், மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

TET தகுதி தேர்வு அரசாணைக்கு முன்பு ஏற்பட்ட காலிப்பணியிடம்: ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

பிறப்பிப்பதற்குமுன்பே காலிப்பணியிடத்தை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதால், ஆசிரியர் நியமனத்துக்குகல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும்தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பதவி இடம் கடந்த 2011-ம்ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி காலியானது. இந்த பதவியை நிரப்ப அதேஆண்டு அக்டோபர் 7-ந்தேதி பள்ளி நிர்வாகம், உதவி தொடக்கப்பள்ளிஅதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பியது. இதையடுத்து அந்தபதவியை நிரப்ப, உதவி தொடக்கப்பள்ளி அதிகாரி கடந்த 2012-ம் ஆண்டுஜனவரி 31-ந்தேதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து வேலைவாய்ப்புமையத்தில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் கேட்கப்பட்டன. பள்ளிநிர்வாகமும் காலிப்பணியிடம் குறித்து பொது விளம்பரம் வெளியிட்டது. இதன்பின்னர் நடந்த நேர்முகத் தேர்வில், சரவணபாபு என்ற ஆசிரியர்கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டார். அன்றேஅவர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

ஒப்புதல் அளிக்கவேண்டும்.

இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் கேட்டு, மாவட்ட தொடக்கல்விஅதிகாரிக்கு, பள்ளி நிர்வாகம் கடிதம் அனுப்பியது. ஆனால், '2000-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, பள்ளிக்கூடத்தில் ஆண், பெண் விகிதாச்சாரம் முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கூறி, அந்த பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அதிகாரி மறுத்துவிட்டார்.இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் பணிநியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த மாவட்ட தொடக்கக் கல்விஅதிகாரியின் உத்தரவை ரத்து செய்தார். ஆசிரியர் பணி நியமனத்துக்குஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தகுதி தேர்வு

இந்தஉத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தொடக்கக் கல்விஇயக்குனர், நாகப்பட்டினம் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர்மேல்முறையீடு செய்தனர்.இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள்சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், 'மத்திய அரசுகடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி, தகுதி தேர்வு மூலமே ஆசிரியர்கள் நியமனம்நடைபெறவேண்டும் என்று தமிழக அரசு 2011-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதை தனி நீதிபதி கவனிக்கத்தவறிவிட்டார். எனவே, அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்றுகூறியிருந்தார்.

நாடவில்லை

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.என்.ரவிசந்திரன், 'தகுதி தேர்வுமூலமே ஆசிரியரை தேர்வு செய்யவேண்டும் என்ற அரசாணை 2011-ம்ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த காலிப்பணியிடம் அதற்கு முன்பே ஏற்பட்டு, அந்த இடத்தை நிரப்பஅரசிடம் அனுமதிக்கேட்டு அதே ஆண்டு அக்டோபர் மாதமே பள்ளிநிர்வாகம் மனு கொடுத்து விட்டது' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-ஆசிரியர் சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காததைஎதிர்த்துத்தான் இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆசிரியர்தகுதி தேர்வு மூலம், இவரை தேர்வு செய்யவில்லை என்று இந்தஐகோர்ட்டை நாடவில்லை.

நிரப்பலாம்

அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்று அரசுஉத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பே, ஏற்பட்ட காலியிடத்தில்தான்ஆசிரியரை பள்ளிநிர்வாகம் நியமித்துள்ளது.மேலும், ஆண், பெண்ஆசிரியர்கள் விகிதாச்சாரம் தொடர்பாக பக்தவச்சலம் என்பவர்தொடர்ந்த வழக்கில், பெண்களை கொண்டு நிரப்பவேண்டிய அரசுபணியிடத்துக்கு தகுந்த பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ஆண்களை கொண்டு நிரப்பலாம்' என்று இந்த ஐகோர்ட்டு ஏற்கனவேஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.எனவே, சரவணபாபு நியமனத்துக்குதொடக்கக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்கவேண்டும். தனி நீதிபதியின்உத்தரவில் எந்த குறைபாடுகளும் இல்லை. அவரது உத்தரவை உறுதிசெய்கிறோம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

23/4/17

ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2017 - 18 -தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை- 2



25ம் தேதி வேலை நிறுத்தம் அரசு பணியாளர்கள் ஆதரவு

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர், செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:

எட்டாவது ஊதியக் குழு பணிகளை முடித்து, ஊதிய உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு ஆணைகள் வெளியிடும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும், 20 சதவீத, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, அரசுப் பணியாளர்கள் அனைவரும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்

சென்னை:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. 


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர். 

ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர். 

இந்நிலையில், இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர். 

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ இணையதளத்தில் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு | மே 7-ல் நடக்கும் நீட் தேர்வுக் கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோயம் புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில்

275 பொறியியல் கல்லூரிகளை மூட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் தகவல்.

இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில்சார்பில், ‘மின் னணு வழி கற்றல்: சவால்களும், வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத் தில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்த அனில் டி.சஹஸ்ர புத்தே செய்தியாளர்களிடம் கூறிய தாவது:சில கல்வி நிலையங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்குக்கூடபாடத்திட்டத்தை மாற்றாமல் வைத் துள்ளனர். தற்போதுள்ள சூழ லுக்கு ஏற்ற தரமான பாடத் திட்டங் களைக் கற்பிக்காததால், அந்த நிறுவனங்களில் படித்த மாணவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்ப தில் சிரமம் ஏற்படுகிறது.எனவே, பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்ற வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.இந்தியாவில் 275 பொறியியல் கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை மூட விருப்பம் தெரி வித்து விண்ணப்பித்துள்ளன. மாணவர்கள் சேர்க்கை குறை வாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.மின்னணு வழி கற்றல் முறைக் காக மத்திய அரசு உருவாக்கி யுள்ள ‘ஸ்வயம்’ என்ற ஆன்லைன் கல்வி முறையில் தற்போது 280பாடங்கள் உள்ளன. மேலும் 350 பாடங்கள் அதில் இணைக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பாடங்கள் ஆன்லைனில் இருக்கும்.

பொறியியல் கல்விக் கான பாடங்கள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பாடங்களையும் ஆன்லைனில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.சில கல்வி நிறுவனங்களில் உரிய அனுமதி இல்லாத பாடங் களை நடத்துவது குறித்த புகார் கள் வந்துள்ளன. அந்தப் பாடப் பிரிவுகளை நடத்த தடை விதிக் குமாறு, அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.சென்னை அல்லது கோவை யில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாடங்களைக் கற்பிக்க பிரத் தியேக மையம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.இந்த பயிற்சி முகாமில் ஏஐசிடிஇ இயக்குநர் மன்பரீத் சிங்மன்னா, கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, பிரிட்டிஷ் கவுன்சில்தலைமை நிர்வாகி பருல் குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்: மின் ஆளுமை முகமை அறிவிப்பு.

இ-சேவை மையங்களில் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப் பித்தல் மற்றும் திருத்தங்கள் செய் வதற்கான வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அறிவித் துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின்கீழ், கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் வாயிலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை அவர்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கமாகும்.இச்சேவை மையங்கள் மூலம், வருமானம், சாதி, இருப்பிடம், கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கான சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள், பல்வேறு உதவித் திட்டங்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், இதில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம், மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் குடிநீர் வாரியத் துக்கு செலுத்த வேண்டிய குடி நீர் வரியையும் செலுத்தலாம்.இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதல் சேவைகளை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வரும் 24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை தொடர்பான சேவைகள் பெற பொதுமக்கள் தங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : அடுத்த மாதத்தில் நடத்த திட்டம்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவிஉயர்வு கவுன்சிலிங், அடுத்த மாதம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங், ஆண்டுதோறும் நடத்தப்படும். 
இதில், இடமாறுதல் கவுன்சிலிங், கோடை விடுமுறை காலமான, மே மாதத்தில் முடிக்கப்படும். இடமாறுதல் பெற்றவர்கள், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் போது, புதிய பணியிடங்களில் சேருவர்.ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை அல்லது ஆகஸ்டில் தான் நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு பாதி பாடத்தை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது. மாணவர்களும் சரியான கற்பித்தல் இன்றி, தேர்வுக்கு திணறினர்.

இந்நிலையில்,இந்த ஆண்டு முதல், மீண்டும் மே மாதத்தில், இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் புதிய செயலர், உதயசந்திரன் உத்தரவுப்படி, இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர்கள் கண்ணப்பன் மற்றும் இளங்கோவன் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, ஏப்ரல், 24 முதல் மே, 5 வரை, இடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். மே, 19ல் பொது மாறுதல் கவுன்சிலிங் துவங்குகிறது. தலைமை ஆசிரியர்கள் இட மாறுதல்; அந்த இடங்களில் பதவி உயர்வில் வருவோருக்கான மாறுதல்; பின், ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், இடமாறுதல் பெறுவோர், கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, புதிய பணியிடங்களில் சேருவர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு புறக்கணிப்பு : முதுநிலை ஆசிரியர்கள் முடிவு.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) பணியில், தகுதி குறைவான பணி ஒதுக்கீடு செய்துள்ளதால், தேர்வுப் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு ஏப்.,29 அன்றும், 2ம்தாள்தேர்வு ஏப்.,30ம் தேதியும் நடக்கிறது.இத்தேர்வு பணியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல முதுநிலை ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நியமனம் செய்யப்படுவதால், பல ஆண்டுகளாக முதுநிலை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் மூத்த முதுநிலை ஆசிரியர்கள், பணியில் இளையோரான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கீழ், துறை அலுவலர்களாக பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் துறை அலுவலர்களான பட்டதாரி ஆசிரியர்களின் கீழ் அறைக் கண்கணிப்பாளராகவும் செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆசிரியர் தகுதி தேர்வு பணிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும், என மாநிலக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

சங்க மண்டலச் செயலாளர் கதிரேசன், மாவட்டத் தலைவர் சலேத்ராஜா கூறியதாவது: அனுபவத்திலும், தகுதியிலும் குறைந்தவர்களுக்கு கீழ் பணி செய்ய அறிவுறுத்துவது எந்த நிலையிலும் ஏற்பதற்குஇல்லை. அதனால் சங்க கூட்டத்தில் 'டெட்' தேர்வை புறக்கணிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.

தொடக்கக்கல்வி பொது மாறுதல் 2017 - 2018 | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தொடக்கக்கல்வி | பொது மாறுதல் 2017 - 2018 ஆம் கல்வி ஆண்டில் | | ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் | | பொது மாறுதல்- கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 
(நாள்: 20.04.2017) ||தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 20.04.2017) | | புதிய மாறுதல் விண்ணப்ப படிவம் விரைவில் வெளியிடப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு | தொடக்க கல்வி துறை ஆசிரியர்கள் புதிய விண்ணப்பத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

Lab Asst Appointment - Chennai District Selected Candidates List

DEE - Elementary Education Teachers Transfer Form - 2017 -18 (New)

தொடக்கக் கல்வி இயக்ககம் -2017-2018 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /மாநகராட்சி /அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் /பட்டதாரி /இடைநிலை /உடற்கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும்புதிய விண்ணப்பம்.


பள்ளிகளுக்கு விடுமுறை பயறு வாங்க அவசரம் ஏன்?

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மையங்களுக்கு, பயறு வகைகள் வாங்க, நுகர்பொருள் வாணிபக் கழகம் அவசரம் காட்டுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சத்துணவு மையங்கள் உள்ளன. இவற்றில், வாரத்துக்கு ஒரு நாள், ஒரு மாணவருக்கு, தலா, 20 கிராம் கருப்பு கடலை அல்லது பச்சை பயறு வழங்கப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, பயறு வகைகளை வாங்கி, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வாணிபக் கழகம், 600 டன் கருப்பு கடலை; 500 டன் பச்சை பயறு வாங்க அவசரம் காட்டி வருகிறது.

இது குறித்து, வாணிபக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பள்ளிகள் துவங்கும் சமயத்தில், பயறு வாங்கினால், சப்ளை செய்வதில் தாமதம் ஏற்படும். எனவே, தற்போது, ஐந்து கோடி ரூபாய்க்கு, இரு வகையான பயறு வாங்க, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. அதில், நிறுவனங்கள் பங்கேற்க, மே, 19 கடைசி நாள். அடுத்த மாத இறுதிக்குள் பயறு வாங்கப்பட்டு, ஜூனில் பள்ளி திறக்கும் முன் சப்ளை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்லைன்' கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.

ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள் சேர்க்கப்படும்,'' என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார்.

'ஸ்வயம்' திட்டத்தில், தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற, அனில் சஹஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:

சில கல்வி நிறுவனங்கள், 15 ஆண்டுகளாக பாடத்திட்டங்களை மாற்றிஅமைக்காமல் இருப்பது, மாணவர்களின் வேலைவாய்ப்புகளுக்கு சவாலாக அமைகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப, கல்வி நிறுவனங்களின் பாடத்திட்டங்கள் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., வரையறை செய்யும் பாடத்திட்டத்தை, 70 முதல், 80 சதவீதம் பயன்படுத்தி, மற்றதை, பல்கலைகளே நிர்ணயிக்கலாம். நாடு முழுவதும், 275 இன்ஜி., மற்றும் தொழில்
நுட்பக் கல்வி நிறுவனங்கள், தானாக முன்வந்து மூட விண்ணப்பங்கள் அளித்து உள்ளன.
'ஆன்லைன்' மூலம் கல்வி கற்பதற்காக, அமைக்கப்பட்ட, 'ஸ்வயம்' திட்டத்தில், 280 பொறியியல் பாடப்பிரிவுகள் மட்டும் சேர்க்கப்பட்டு உள்ளன.

மேலும், 350 பாடங்களுக்கான வரையறைகள் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மருத்துவம், சட்டம் என, பல்வேறு துறைகளில், 2,000 பாடங்கள், 'ஸ்வயம்'
திட்டத்தில் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் - ஆசிரியர் கழக முறைகேடுகள் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ள மறுப்பு.

தமிழக அரசு பள்ளிகளில் செயல்படும், பி.டி.ஏ., என்ற பெற்றோர் - ஆசிரியர் கழகத்துக்கு, பல
ஆண்டுகளாக தேர்தல் இல்லாமல், முறைகேடாக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், உறுப்பினர்கள் இடம் பெறுவர். மாணவர்களின் பெற்றோர் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், செய-லர், பொருளாளர் போன்றோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், அரசியல்வாதிகள், செல்வாக்கான அதிகாரிகள், உள்ளூர் அரசியல் செல்வாக்கு கொண்ட தலைமை ஆசிரியர்கள் ஆகியோரின் பிடியில், பெற்றோர் -
ஆசிரியர் கழகம் சிக்கியுள்ளது.

எது நடக்கிறதோ இல்லையோ, பெற்றோர் - ஆசிரியர் கழகம் பெயரில், ரசீது அச்சடித்து, மாணவர்களிடம் வசூல் நடக்கிறது. வெளியில், நன்கொடையும் வசூலிக்கின்றனர்.இந்த தொகைக்கு, தணிக்கையும் இல்லை; கண்காணிப்பும் இல்லை. தலைமை ஆசிரியரும், பி.டி.ஏ., தலைவரும் என்ன கணக்கு சொல்கின்றனரோ, அதை பெற்றோர் நம்ப வேண்டும்.

அதேபோல், உள்ளூர் அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்கவர்கள், கவுரவ பதவிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை பயன்படுத்துகின்றனர்.விதிகளின்படி, அந்த பள்ளியில், தங்கள் பிள்ளை கள் படித்தால் மட்டுமே பதவி உண்டு. பேரன், பேத்தி பெற்ற பிறகும், பலர் பதவியை விடாமல் உள்ளனர்.

பெற்றோர் கூறுகையில்,'அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவதற்கு,பெற்றோர்- ஆசிரியர் கழகம் சரியாக இயங்காதது தான், முதல் காரணம். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்
படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளை, பெற்றோர் - ஆசிரியர் கழகம், 'கவனிப்பதால்' அவர்களும் கண்டு கொள்வதில்லை' என்றனர்.

புதிய தொழில் பள்ளிகள் 30ம் தேதி கடைசி நாள்

புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

தனியார் தொழில் பள்ளிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத, 54 நீண்ட கால தொழில் பிரிவுகள்; 36 குறுகிய கால பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன.புதிதாக தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும், ஜன., 2 முதல் ஏப்., 30 வரை, விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த ஆண்டு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், விண்ணப்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.