யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/2/18

TNTET: புதிதாக தேர்ச்சிப் பெற்றவர்களையும் கலந்து 13,000 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - செங்கோட்டையன்

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை

'சிவகங்கை: அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள்
அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகின்றன. ஆனால் அங்கன்வாடி மையங்களுக்கு இல்லை.பெரும்பாலான மையங்களில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையே உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு அம்மை, கொப்புளங்கள் போன்ற வெப்ப நோய் தாக்குகின்றன. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்லும் நிலை உள்ளது. இதையடுத்து கோடை விடுமுறை கேட்டு அங்கன்வாடி மைய ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆண்டில் 300 நாட்களும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இணை உணவு கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விடுமுறை விட அரசு தயக்கம் காட்டியது. கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அலுவலகம் முன்பு பிப்., 6 முதல் பிப்., 8 வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.பிப்., 1 சங்க நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதிய முரண்பாடுகளை களைவதாகவும், மையங்கள் மூடாதபடி மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் விடுமுறை விடப்படும் என, தெரிவித்தனர். விரைவில் விடுமுறைக்கான அரசாணை வெளியாக உள்ளது.

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே,
26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு, இன்று துவங்குகிறது.
நாட்டின் உயரிய மருத்துவ கல்வி நிறுவனங்களாக, மத்திய அரசின், 'எய்ம்ஸ்' கல்லுாரிகள் செயல்படுகின்றன. மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள, இந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நுழைவு தேர்வு எழுதி, தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 26 மற்றும், 27ல் நடத்தப்படும் என, எய்ம்ஸ் நிறுவனம் அறிவித்துஉள்ளது. அதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்குகிறது. இந்த ஆண்டு, கணினி வழியில் மட்டுமே, நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தேர்வில் பங்கேற்க, இன்று முதல் மார்ச், 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வர், குண்டூர் உட்பட, ஒன்பது இடங்களில் உள்ள கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, இந்த நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.aiimsexams.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று
வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது.
அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பரில் நடந்தது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பல்கலையின் தேர்வுத்துறையில், மாணவர்களின் மொபைல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மொபைல் எண்களுக்கு, மாணவர்களின் தேர்வு முடிவுகள், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா தெரிவித்துள்ளார். 'எந்தெந்த கல்லுாரிகள் சார்பில், தேர்வு கட்டணம் செலுத்தவில்லையோ, அந்த கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

pay matrix single page

மாவட்ட கருவூலத்திற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்க கிடப்பில் போடப்பட்ட முதன்மை செயலர் பரிந்துரை!!!

மதுரை, பிப். 5--மதுரை மாவட்ட கருவூலத்தில் ஊழியர் பற்றாக்குறையால் ஒருவர் 4 ஆயிரம் 
ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கும் அவலம் நிலவுகிறது. கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக, மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட கருவூலத்தில் 1980 க்கு முன்பு வரை தேவையான ஊழியர்கள் இருந்தனர். இங்கிருந்த ஊழியர்கள் 1980 ஜன., 24 துவங்கப்பட்ட திண்டுக்கல் கருவூலம், 1987 செப்., 1 துவக்கப்பட்ட மதுரை சம்பளக்கணக்கு அலுவலகம், 2000 அக்., 1 துவங்கப்பட்ட தேனி கருவூலத்திற்கு பிரித்து அனுப்பப்பட்டனர். புதிய அலுவலகங்கள் துவங்கிய போதெல்லாம் இங்கிருந்து ஊழியர்கள் மாற்றப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் எண்ணிக்கை மட்டும் 44 ஆயிரம் உள்ளது. மாதந்தோறும் 100 பேர் ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற துவங்குகின்றனர். தற்போது ஒரு கருவூல அலுவலர், ஒரு உதவி அலுவலர், 10 கணக்கர்கள், 5 கண்காணிப்பாளர்கள் தான் பணிபுரிகின்றனர். இவர்கள் 44 ஆயிரம் ஓய்வூதியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் சம்பளம் உட்பட அனைத்துப் பணிகளையும் கவனிக்கின்றனர். ஒரு கணக்கர் குறைந்தது 4 ஆயிரம் ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒரு ஊழியர் 750 ஓய்வூதியர்களின் பணிகளை கவனிக்கிறார். எனவே கூடுதல் ஊழியர்களை நியமிக்க ஏதுவாக மாவட்ட கருவூலத்தை ஓய்வூதிய அலுவலகமாக மாற்ற வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை.மூத்த குடிமக்கள், ஓய்வூதியர் நலச்சங்க தலைவர் காளிதாஸ் கூறியதாவது: ஓய்வூதிய வழங்கும் அலுவலகத்தின் அவசியத்தை உணர்ந்து கருவூலத்துறை முதன்மை செயலர் ஜவஹர் நிதித்துறையினருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் நிதித்துறையில் அவரது பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதிய பணிகளில் மந்தம் நிலவுகிறது. நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

தேர்வு முறையில் பழைய நிலையே தொடரும்’: சி.பி.எஸ்.இ.,

சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில்,
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 6 - 8ம் வகுப்பு வரை, ஒரே மாதிரியான தேர்வு முறையை அமல்படுத்தவும், மதிப்பீட்டு முறையிலும் ஒரே நடைமுறையை பின்பற்றவும், அந்த வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு, பெற்றோர், மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
எனினும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட முறையில், 10ம் வகுப்புக்கு மீண்டும் பொதுத் தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், மாணவர்களின் தன்னம்பிக்கையையும், திறனையும் மேம்படுத்தவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, சி.பி.எஸ்.இ.,யின் அறிவிப்புக்கு, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல கமிஷன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இத்திட்டம் கைவிடப்படுவதாக, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சமூக வலை தளங்களில் பரவும் ரயில்வே வேலை குறித்த தகவலை நம்ப வேண்டாம்!!!

வேலைவாய்ப்பு : பொறியியல் பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் பணி!

                                                  


இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில்
காலியாக உள்ள சயின்டிஸ்ட்/இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 106

பணி இடம் : பெங்களூரு

பணியின் தன்மை : சையின்டிஸ்ட்/இன்ஜினியர்

வயது வரம்பு : 35க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ. 56100/-

கல்வித் தகுதி : பிஇ/பிடெக்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம் : ரூ.100/- இதனை ஆன்லைன் வழியாகவும், அல்லது அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.

கடைசித் தேதி : 20.02.2018

மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/sites/default/files/advtsciengrsc2018detailedforweb.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Hero Motocorp நிறுவனத்தில் 6577 வேலைக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளது!!!

வேலையின் பெயர்:  Manager and various Roles


சம்பளம் : Rs.55,000/- per month.

தேர்வு முறை: Written test

Apply Link: https://goo.gl/SSncek

கல்வி:  Any Degree

கடைசி நாள்: 20.03.2018

மேலும் தகவலுகள்
https://goo.gl/SSncek
www.sstaweb.com

I.T SOFTWARE 11.0


Click here

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம். 05/02/2018 SSTA-பொதுச்செயலாளர் பேட்டி

                                                       

ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - 
போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்* *(SSTA)*
Vikatan 5 Feb. 2018 18:36
  Vikatan

ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை. கை நிறைய சம்பளம். அதையும் வாத்தியார்கள் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க" என்றெல்லாம் பொதுப்புத்தி மக்களின் மனதில் ஊடுறுவிக்கிடக்கிறது. ஆனால், இடைநிலை ஆசிரியர்களின் புலம்பலும் வேதனையும் வேறுமாதிரியாக இருக்கின்றன. இடைநிலை ஆசிரியர்கள் என்பவர்கள், 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்கள். இப்படி வேலை செய்யும் இந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது என்று இவர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதுபற்றிய விவரங்களை இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) என்ற அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் நம்மிடம் விவரித்தார்.
"2009-க்குப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட 21,000 இடைநிலை ஆசிரியர்கள் இருக்கிறோம். எங்களில் 1.6.2009-க்கு முன் வேலையில் சேர்ந்தவர்களுக்கு அடிப்படை ஊதியம் 11,170 என்றும் 1.6.2009-க்குப் பின்னால் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,000 என அடிப்படை ஊதியத்தில் 3,170-ஐ குறைத்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் இருவேறுபட்ட அடிப்படை ஊதியங்களை இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வருகிறோம். இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையக் கோரி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பித்து இந்த வருடம் ஜனவரி

மாதம் வரை பல்வேறு போராட்டங்களைச் சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்திவிட்டோம். அரசும் எங்களை அழைத்து 8 நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியது. முடிவில், 2009-க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்ய பரிந்துரைக்கப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தது.
ஆனால், இன்றுவரை உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த அதே ஊதிய முரண்பாடுகளை இந்த ஊதியக் குழுவிலும் தொடர்ந்துள்ளது. இதனால் ஒரு நாள் இடைவெளியில் வேலையில் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகள் வருடாந்தர ஊதிய வித்தியாசம் ஏற்படுகிறது. இந்தத்தொகை முரண்பாடு பல லட்சங்களைக்கொண்டதாக இருக்கிறது. தற்போது தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று நியமனம் பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு துப்புரவுப் பணியாளர்கள் பெறும் ஊதியமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய முரண்பாட்டைக் களையவும் அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டியும் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு கடந்த 6.1.2018 அன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தோம். ஆனாலும், அரசு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையவில்லை. இதனால், அடுத்தகட்டப் போராட்டங்களை நடத்துவதற்குத் தயாராகிவிட்டோம். வருகிற மார்ச் மாதம் துப்புரவு பணியாளர்கள் ஊதியத்தைப் போன்றே இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதை மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தும் வகையில் DPI வளாகத்தில் துப்புரவு செய்யும் போராட்டமும் இரண்டாம் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலக முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம்" என்றார் ஜே.ராபர்ட்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

4/2/18

ITI/டிப்ளமோ தகுதிக்கு காரைக்குடி CECRI-ல் பல்வேறு பணிகள் காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் (CECRI) சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தில் காலியாக உள்ள 17 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 17

பணியிடம்: காரைக்குடி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி:  Fitter – 01

பணி:  Welder – 02

பணி:  Wireman – 01

பணி:  Ref. & A/C Mechanic – 03

பணி:  Draughtsman (Civil) – 01

பணி:  PASAA  – 03

பணி:  Plumber – 01

பணி:  Carpenter  – 01

பணி:  Mechanical Engineering – 01

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ITI/டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது:  14 வயது பூர்த்தியடைந்திருக்க  வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://www.cecri.res.in  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு  செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து நேர்,நேர்முகத்தேர்வின்  போது சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 21.2.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

Central Electrochemical Research Institute, Karaikudi

கூடுதல்  விவரங்கள் அறிய  http://www.cecri.res.in/Portals/0/Careers/APP-02-2018_AdvtCopy.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அரசு ஊழியர்களின் வெளிநாட்டு வேலைக்கு செக்: நீதிமன்றம் அதிரடி!!!

அரசு ஊழியர்கள் வெளிநாட்டில் பணிபுரிவது தொடர்பாக 
அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்க அனுமதிக்கும் அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பரகத் அலிகான். இவர் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லா விடுமுறையில் 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி அளிக்கும் அரசாணையின் அடிப்படையில் துபாய் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்தார். அனுமதி கிடைப்பதற்கு முன்பு வெளிநாட்டு வேலையில் சேர்ந்து பணிக்காலம் முடிந்து மீண்டும் அரசு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் அனுமதி கிடைப்பதற்கு முன்பு பணியில் சேர்ந்தற்காக பரகத் அலிகானுக்கு ஊதிய உயர்வு நிறுத்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 4 ஆண்டுகள் அவரது பெயர் வட்டாட்சியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதனிடையே இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் துணை ஆட்சியர் பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகள் சம்பளம் இல்லா விடுமுறையில் வெளிநாட்டில் வேலைபார்க்க அனுமதி வழங்கி தமிழக அரசின் பொதுத்துறை 20.5.1991-ல் அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இளைஞர்கள் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கும் போது, அரசு ஊழியர்களை 3 ஆண்டுகள் விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்க அனுமதி வழங்கி விட்டு நாடு திரும்பியதும் மீண்டும் அரசு பணியில் சேர அனுமதிப்பது ஏன் என்பது தெரியவில்லை.

அரசு ஊழியர் ஒருவர் தாய் நாட்டிலும், வெளிநாட்டிலும் இரு வேலை பார்ப்பது எப்படி? என்பதை தீவிரமாக பார்க்க வேண்டும். இதனால் அரசு ஊழியர்களை வெளிநாட்டில் வேலை பார்க்கும் அரசாணையின் அடிப்படையில் எத்தனை பேர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்? இந்த அரசாணை எப்படி செல்லத்தக்கது? எத்தனை பேர் வெளிநாட்டு வேலையை முடித்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்? வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் அதிகபட்ச கால வரம்பு எவ்வளவு? தமிழகத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்? ஆகிய கேள்விகளுக்கு மாநில பொதுத்துறை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்!!!

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் பயிற்சி!

                                                

தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் நிரப்பப்படவுள்ள தொழில்பழகுநர் 
பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 737

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கடைசி தேதி: 23.02.2018

மேலும் விவரங்களுக்கு http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1516796744237-001-CW-PER-ActApp%20Notification-2018-SIGNED%20COPY.pdf
என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

பணிபுரியும் பெண்களுக்கான பட்ஜெட்!

                                                

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பில்,பணிபுரியும் 
பெண்களுக்கான வருங்கால வைப்பு நிதி 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாகப் பெண்களும் ஆண்களும் தங்களது சம்பளத்திலிருந்து 12 சதவிகிதத்தைச் செலுத்துகின்றனர். இந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பெண்கள் தங்களது சம்பளத்திலிருந்து செலுத்தும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியானது 12 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களது வீட்டுக்கு எடுத்துச்செல்லும் சம்பளத்தின் அளவு உயரும் என்பதால் பணிபுரியும் பெண்கள் இந்த பட்ஜெட் அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் மொத்த பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு 40 சதவிகிதமாக இருக்கிறது. அதேநேரம் இந்தியாவில் அவர்களின் பங்களிப்பு 24 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்று பொருளாதார வல்லுநர்களும் தொழில் துறை நிபுணர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த பட்ஜெட்டில் வெளியாகியுள்ள வருங்கால வைப்பு நிதி அறிவிப்பு அதற்கு ஒரு பாதையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நீட் தேர்வு: மாணவர்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்!!!

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் 
என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பட்ஜெட் விளக்க ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாதார நிபுணர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு முன் தமிழிசை செளந்தரராஜன் நிருபர்களிடம் கூறியது:
தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு கோரிக்கை. நீட் தேர்வு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த முறை நடத்தப்பட்டது. இதன் மூலம் தெருக்கோடியில் உள்ள மாணவர்களுக்குக் கூட நீட் மூலம் இடம் கிடைத்து மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, மறுபடியும் நிச்சயமற்ற தன்மையை வைத்துக் கொண்டு மாணவர்களை யாரும் குழப்பக்கூடாது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் மாநில பாடத் திட்டமும் நீட் தேர்வில் சேர்த்துக் கொள்ளப்படும் என மிகத் தெளிவாக கூறி உள்ளார். மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற நன்றாக படிக்கச் சொல்வதே சரி. இதில் அரசியல் கூடாது.
தமிழ் ஓங்கி ஒலிக்கும்: தமிழ் உணர்வு பாஜக-வுக்கு அதிகம் உள்ளது. வைகோ உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், இனிமேல் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது.
தமிழ் மொழி முதுமொழி; தெய்வமொழி. பாஜக ஆட்சியில் தமிழ் நிச்சயமாக தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கும். பாஜக தலைவர்கள் யாரும் தமிழ் பற்றில் வைகோவுக்கு குறைந்தவர்கள் அல்ல என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

பதவி உயர்வில் இழுபறி கல்வித்துறையில் அதிருப்தி!!!

பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிப்பு இயக்குனருக்கு அமைச்சு பணியாளர்கள் 'நோட்டீஸ்'